புதன், 24 நவம்பர், 2010

After 30 Years கிழக்கில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்


கிழக்கு மாகாணத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக செய்கைப் பண்ணப்படாமல் வேளான்மைச் செய்கை இவ்வருடம் செய்கை பண்ணப்படுகின்றது. சுமார் 30 வருடங்களுக்கு மேல் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படாமலிருந்த பகுதிகளிலும் இம்முறை பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பரவலாக பெரும்போக நெற் செய்கை செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சு மானியத்திட்டத்தின் கீழ் விதைநெல் உரம் ஆகியவற்றை மானியமாக வழங்கியுள்ளதுடன் விவசாயிகளின் நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள வங்கிக் கிளைகள் அனைத்திலும் காரணமாக கடன் உதவிகள் வழங்கிவருகின்றது. இந்நிலை காரணமாக செய்கை பண்ணப்படாமல் இருந்த காணிகளிலும் நெற்செய்கை செய்யப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 57,120 ஹெக்டயரிலும், திருகோணமலை மாவட்டத்தில் 41,050 ஹெக்டயரிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: