சனி, 27 நவம்பர், 2010

முதலாவது பெண் உப வேந்தர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு !

- நமது யாழ் நிருபர்
யாழ் பல்கலைக்கழகத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான உப வேந்தரை தெரிவு செய்ய இன்று நடைபெற்ற தேர்தலில் திருமதி அரசரட்ணம் அவர்கள் 15 வாக்குகளை பெற்று முதலாவதாக தெரிவாகியுள்ளார். அடுத்த இரண்டு தெரிவாக தற்போதைய துணை வேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கமும், பேராசிரியர் ரட்ணஜீவன் கூலும் தலா 9 வாக்குகள் பெற்று தெரிவாகியுள்ளனர். இம் மூவருள் ஒருவரை ஜனதிபதி அவர்கள் துணை வேந்தராக தெரிவு செய்வார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன், தினக் குரல் மற்றும் வீரகேசரி பத்திரிகைகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பும், சீறீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் மற்றும் புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழ் தேசிய வாதிகளும் பகிரங்கமாக பேராசிரியர் கூலுக்கு ஆதரவாக பகீரத பிரச்சாரம் செயது வந்திருந்த நிலையில் இத் தேர்தலில் திருமதி அரசரட்ணம் தெரிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: