வெள்ளி, 26 நவம்பர், 2010

நயன்தாரா: ’நம்பி வந்த என்னை மோசம் செய்து விட்டீர்களே’


           ஜெயம் ரவி-ஹன்சிகா மோட்வானியை ஜோடியாக வைத்து ’எங்கேயும் காதல்’ என்ற படத்தை பிரபுதேவா இயக்கி உள்ளார். விரைவில் திரைக்கு வர இருக்கிறது எங்கேயும் காதல். இதன் படப்பிடிப்பில் ஹன்சிகாவும் பிரபுதேவாவும் நெருக்கமாகி விட்டதாக கிசு கிசு பரவியது. வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தபோது இருவரும் சேர்ந்து சுற்றினர். ஓட்டல்களிலும் ஒன்றாக தங்கியதாக படக்குழுவினர் முணுமுணுத்தனர்.

ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஹன்சிகாவுக்காக சிறப்பு விருந்துக்கும் பிரபுதேவா ஏற்பாடு செய்தாராம். இந்த விருந்து விஷயம் நயன்தாரா காதுக்கு எட்டியதும் உடனடியாக கேரளாவில் இருந்து விமானம் பிடித்து ஐதராபாத் போய் இறங்கியுள்ளார். பிரபுதேவா-ஹன்சிகா இருவரையும் கையும் களவுமாக பிடித்து ஆவேசமாக திட்டி தீர்த்தார். பிரபுதேவாவுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
’நம்பி வந்த என்னை மோசம் செய்து விட்டீர்களே’ என்று நயன்தாரா தலையில் அடித்து அழுததாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரபு தேவா நயன்தாராவை கழட்டிவிட்டு ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்றும் ஆந்திர திரையுலகம் பேசிக் கொள்கிறது. 

ரமலத்தின் சாபம் சும்மா விடுமா நயன்தாராவை! அட, அதை விடுங்க... சிம்பு வீட்ல வெடி வெடிக்கிறாரே சத்தம் காதுக்கு கேக்குதா...            

கருத்துகள் இல்லை: