சனி, 27 நவம்பர், 2010

ஜனாதிபதியுடனான பேச்சில் திருப்தியில்லை-தமிழ்அரங்கம்!

தமிழ் அரங்கத்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பூரண திருப்பதியில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இன்றையதினம் தமிழ் அரங்க பிரதிநிதிகள் வடகிழக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ விஸ்தரிப்பு, குடிபரம்பல், இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இதன்போது சில விடயங்களை செய்வதற்கு ஜனாதிபதி உறுதி தெரிவித்துள்ளபோதும், அது கூட நடந்து முடிந்ததன் பின்னரே தெரியும். இனப்பிரச்சினை தீர்வு விடயத்திற்கு சகல தமிழ்கட்சிகளையும் கொண்ட குழுவொன்றை அமைக்கவுள்ளதாகவும், அவ் குழு இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை ஆராயும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளர். இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நீண்ட விடயம் என்றும் இதனை கூறுகிய காலத்திற்குள் செய்யமுடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளாராம்.
இவ்வாறு பல குழுக்கள், மகாநாடுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றபோதும், அதில் காணமுடியாத இணக்கத்தை இனிமேல் அமைய போகும் குழுக்கள் மூலம் சாதிக்கலாம் என்பது கேள்வி குறியே. இவை எல்லாம் இழுத்தடிப்பதற்கான காரணிகளாகவே தென்படுகின்றன என்றும், ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றிய பின்னரே எது குறித்தும் நம்பிக்கை கொள்ளமுடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: