ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கைது ஏன்?

RISHAD BATHIUDEEN
BBC :அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார். ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் இன்று (ஏப்ரல் 24) அதிகாலை கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தின வெடிகுண்டு தாக்குதலில் தற்கொலை குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாகவும், அவர்களுடன் தொடர்புகளை பேணியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக அஜித் ரோஹண கூறியுள்ளார் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் சரத்துக்களுக்கு அமையவே, ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

சுப்புலட்சுமி ஜெகதீசன் தமிழ்நாட்டின் முதல் பெண் சபாநாயகர்?

தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகர் சுப்புலட்சுமி ஜெகதீசன்?

minnambalam : ஸ்டாலின் கொடைக்கானல் விசிட் முடிந்ததில் இருந்து, சில முக்கியமான தகவல்கள் திமுகவின் டாப் லெவலில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அடுத்த இவர் யார், அடுத்த அவர் யார் என்பதுதான் இந்த விவாதத்தின் முக்கியப் பொருள்.

திமுகவின் சீனியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான ஒரு பதவியை நினைத்தோ, குறிவைத்தோ தீவிரமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கையில், சில பேருக்குதான் தானாகவே பதவி தேடி வரும் நிலையும் உள்ளது.   திமுகவின் இப்போதைய துணைப் பொதுச் செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியின் சீனியர்களில் ஒருவர். அதுவும் பெண் சீனியர்களில் முதன்மையானவர். அடிப்படையில் ஆசிரியையான சுப்புலட்சுமி ஜெகதீசன் திராவிட இயக்கத்தின் மீது பற்றுகொண்டவர்.

எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனா 2-வது அலை காட்டுகிறது - உலக சுகாதார அமைப்பு

எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனா 2-வது அலை காட்டுகிறது - உலக சுகாதார அமைப்பு
dailythanthi.com ஜெனீவா உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் கேப்ரிஷியஸ் கூறியதாவது:- கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடப்படாததால், உலகம் முழுவதும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கவலை அளிப்பதாக உள்ளது.  வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதுடன், மக்கள் ஒன்றாக திரள்வதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரசால் எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்த முடியும் என்பதை, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை நினைவுபடுத்துகிறது என கூறினார்.

மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அரசு

dhinamalar : புதுடில்லி: மருந்து நிறுவனங்களிடம் வாங்கும், இரண்டு கொரோனா தடுப்பூசிகளும், மாநிலங்களுக்கு தொடர்ந்து மத்திய அரசு இலவசமாக வழங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், அதன் விலையை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, , மத்திய அரசுக்கு ரூ.150 ஆகவும், மாநில அரசுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயம் செய்து உள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தடுப்பூசியை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என கேரள முதல்வர் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கட்டுரை ஒன்றில், கோவிஷீல்டு மருந்து விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், சவுதி வங்கதேசம், தென் ஆப்ரிக்கா நாடுகள் கொடுத்த விலையை விட அதிகம். இந்தியாவிலேயே தயாரித்த மருந்து, ஆனால், இந்தியாவில் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதா . கொரோனா தடுப்பூசியை விலையை குறைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

கொரோனாவால் முழு இந்தியாவே திணறும் போது தமிழகம் மட்டும் திறமையாக கையாள்வது எப்படி? இந்தியா டுடேயின் நேரடி கள ஆய்வு காணொளி

Anbe Selva : வட இந்தியா ஏன் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது?? //மிக முக்கியமான பார்வை.. கட்டாயம் படிக்கவும்...

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த உயிர்கள்,
உத்தரபிரதேசத்தில் திறந்தவெளியில் எரியும் உடல்கள்,
மத்தியபிரதேச ஆம்புலன்ஸ், குஜராத்தில் உருகும் மின்மயானம்,
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் சமீப நாட்களில் மண்டையை குடைவது இதுதான்.
பிரிட்டிஷ் வெளியேறிய பிறகு வட இந்திய சமூகம் முழுமையாக தேங்கிப் போய் இருக்கிறது,
கெட்டி தட்டிப் போன சனாதன தர்மத்திற்குள் தளர்வை ஏற்படுத்தும் எந்த விதமான சிந்தனைப் போக்கும் அங்கே வளரவில்லை.
அப்படியே தென்னிந்திய வந்தால் இன்றைய ஆந்திர கர்நாடக கேரளாவை உள்ளடக்கிய அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் தான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தொடங்கியது,

நாம் தமிழர் தடா சந்திரசேகர், பழனி உள்ளிட்ட ஆபாச பேச்சாளர்களுக்கு கொளத்தூர் மணி எச்சரிக்கை

May be an image of 3 people and text
வணக்கம். அண்மைக்காலங்களில் நாம் தமிழர் என்கிற கட்சியைச் சார்ந்த சில யூடியூப் சேனல்களிலும்,சமூக வலைதளங்களிலும்,
அந்த கட்சியின் சில பொறுப்பாளர்களும், திராவிடர் இயக்கம் குறித்தும், என்னைக் குறித்தும் கீழ்த்தரமான சொற்களைப் பயன்படுத்தி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும்,
ஒருமையில் பேசுவதும், நிதானமின்றி சினமூட்டும் சொற்களை பயன்படுத்துவதும், நம்மை இழிவு படுத்துவதாக நினைத்துக்கொண்டு அவர்களின் கீழ்த்தரமான இயல்பை வெளிப்படுத்தி எழுதுவதும், பேசுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இந்துத்துவவாதிகளின் இப்பாணியை அவர்களின் நேச சக்தியான இவர்களும் கடைபிடிப்பதில் நமக்கு வியப்பு ஏதும் இல்லை.
இவற்றைப் பார்த்து கோபமுற்ற, சமூக வலைதளங்களில் இயங்கும்  நம்முடைய தோழர்களில் சிலர் அவர்களைப் போலவே கடும் சொற்களைப் பயன்படுத்தி விடையளிப்பது என்ற போக்கு தற்போது  தொடங்கியிருக்கிறது.
பந்தை அடிக்க முடியவில்லை என்றால் காலைத் தாக்கு என்ற முறைகேடான விதிகளின் படி நடந்து கொள்ளுகிற அவர்களுக்கு, அவர்களைப் போலவே கீழிறங்கி பதில் உரைப்பது என்பது நம்முடைய தரத்தைக் குறைத்துக் கொள்வதாகவே நான் கருதுகிறேன்.

சனி, 24 ஏப்ரல், 2021

தமிழ்நாட்டின் மருத்துவ வளர்ச்சியின் வரலாறு . கல்லூரிகளின் பட்டியல்

A Sivakumar : இனி யாராவது அதிகமாக தமிழ்நாட்டுல மருத்துவக்கல்லூரிகள் கட்டியது யார் என்றால் இதை பயன்படுத்தக் கொள்ள விழைகிறேன். திமுகவும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளும் >ஆங்கிலேயர் காலத்தில் உருவான மருத்துவக் கல்லூரிகள் : 3
♦ மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்
♦ ஸ்டேன்லி மெடிக்கல் காலேஜ்
♦ கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ்
காங்கிரஸ் ஆட்சியில் திட்டம் தீட்டி, MCI அனுமதி பெற்று, பட்ஜெட் ஒதுக்கி, அடிக்கல் நாட்டி, கட்டப்பட்டு திறக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகள் : 5
♦ மதுரை மெடிக்கல் காலேஜ்
♦ தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்
♦ கீழ்ப்பாக்கம் மெடிக்கல் காலேஜ்
♦ திருநெல்வேலி மெடிக்கல் காலேஜ்
♦ செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ்
திமுக ஆட்சியில் திட்டம் தீட்டி, MCI அனுமதி பெற்று பட்ஜெட் ஒதுக்கி, அடிக்கல் நாட்டி, கட்டப்பட்டு திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் : 5
♦ திருச்சி மெடிக்கல் காலேஜ்
♦ தூத்துக்குடி மெடிக்கல் காலேஜ்
♦ திருவாரூர் மெடிக்கல் காலேஜ்
♦ தர்மபுரி மெடிக்கல் காலேஜ்
♦ விழுப்புரம் மெடிக்கல் காலேஜ்

தமிழ்நாட்டு வளர்ச்சியை வடநாடுகள் நெருங்க இன்னும் பல ஆண்டுகள் தேவை .. குஜராத் உத்தரபிரதேசம்... ...

May be an image of text that says 'சங்கி கி சங்க'
A Sivakumar : *சமூகவளைதளங்களும் சங்கிகளும்* 1947ல் காங்கிரஸ் இந்த தவறை செய்தது
1958ல் பெரியார் இந்த தவறை செய்தார்
1960ல் திராவிடர் கழகம் இந்த தவறை செய்தது
1967ல் அண்ணா இந்த தவறை செய்தார்
1970ல் திமுக இந்த தவறை செய்தது
1997ல் கலைஞர் இந்த தவறை செய்தார்
2007ல் மு.க.ஸ்டாலின் இந்த தவறை செய்தார்
என்றெல்லாம் எதையாவது தூக்கிக்கொண்டு வந்து நம்மிடம் நாயடி பேயடி வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தவர்கள் தான் சங்கிகள்.   2014ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பின்பு ஆரம்பித்த இந்த யுத்தம் 2019ல் தமிழ்நாட்டில் முழுமையாக தோல்வி அடைந்த பின் ஏறத்தாழ நின்றே விட்டது.
நம்மை நோக்கி வரிசையாக கேள்வி கேட்டவர்கள் கூடவே குஜராத்தில் நாங்கள் இதை செய்திருக்கிறோம்,  மத்தியபிரதேசத்தில் நாங்கள் அதை செய்திருக்கிறோம் என்று கலர் கலராக கயிறு திரித்துக்கொண்டிருந்தார்கள்.
எல்லாமே பொய்...
நீங்க வெறும் சோற்றாலடித்தப் பிண்டங்கள் தான்...
வளர்ச்சியில் எங்களை நெருங்க இன்னும் 100 வருசமானாலும் முடியாது,

திருணமூல் காங்கிரசை அழிக்க தேர்தல் ஆணையம் சதி: வாட்ஸப் ஆதாரம் காட்டும் மம்தா?

திருணமூல் காங்கிரசை அழிக்க தேர்தல் ஆணையம் சதி: வாட்ஸப் ஆதாரம் காட்டும் மம்தா?

minnampalam : சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள் மூலம் திருணமூல் காங்கிரஸ் என்ற கட்சியையே அழிக்க தேர்தல் ஆணையம் சதி செய்கிறது என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்துக்கு என நூற்றுக்கணக்கான தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையிலும், அண்மையில் தேர்தல் ஆணையம் மூன்று சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்களை மேற்கு வங்காளத்துக்கு என்று நியமித்தது.

பிகார் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி அஜய் நாயக், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் விவேக் துபே, ம்ன்ரல் காந்தி தாஸ் ஆகியோர்தான் அந்த மூன்று சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள். மாநிலம் முழுதும் எங்கே எந்த நேரத்திலும் போலீஸ், துணை ராணுவப் படைகளை அனுப்பவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் இந்த மூன்று கண்காணிப்பாளர்களுக்கு முழு அதிகாரம் கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

NEP மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிப்பு” - மீண்டும் வேலையைக் காட்டிய மோடி அரசு!

May be an image of outdoors and text that says 'NEWS AMK JUSTIN புறக்கணிக்கப்பட்ட தமிழ்! புதிய கல்விக் கொள்கையை கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட 17 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டது மத்திய அரசு; தமிழ் மொழி இடம்பெறவில்லை! 24 APRIL 2021 191 071 08R'

kalaignarseithigal.com - Vignesh Selvaraj : மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தமிழ்நாட்டின் மீதும், தமிழர்களின் மீதும் விரோதப் போக்கை கையாண்டு வருகிறது. அதற்கு இன்னொரு சாட்சியாக, தேசிய கல்விக் கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 484 பக்கங்கள் கொண்ட வரைவை 2019 ஆம் ஆண்டு சமர்ப்பித்தது. வரைவை வெளியிட்ட மத்திய அரசு அதுதொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தது.

புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்களுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கை வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எனது ஆடையைக் கிழித்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார்!” - நடிகை ஜெனிபர் பரபரப்பு புகார்!

Actress Janifer complaint and press meet
nakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு :

சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் 23ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:"நான், எனது பெற்றோர் மற்றும் சகோதரி, சகோதரனுடன் வசித்து வருகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன். எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து 25.08.2019 அன்று திருமணம் செய்து கொண்டேன். பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டோம். விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தொலைக்காட்சி தொடர் துணை இயக்குநர் நவீன்குமார் என்னை காதலிப்பதாகக் கூறினார். அதற்கு, நான் எனது முதல் திருமணம் பற்றியும், விவாகரத்துப் பற்றியும் கூறினேன்.

கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது அரசு .. தமிழகத்தை மிரட்டும் கொரோனா..

May be an image of 1 person and text that says 'CORONA UPDATE SUN NEWS உலக சுகாதார அமைப்பு கருத்து! "கொரோனா வைரஸ் பேரழிவை உண்டாக்கும் என்பதற்கு இந்தியாவே சான்று; இந்தியாவின் நிலை கவலை அளிக்கிறது!" 24APRIL2021 SUNNETAIL SUNNEWS sunnewslive.in'
maalaimalar : தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப் 26- ந்தேதி முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருக்கின்றன. சென்னை:தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தனியார், அரசு பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.100%;"> *ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம்.
*ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது கட்டாயம்.
*கோல்ஃப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை.
*சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி.
 *திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.
*இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.
*அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
*உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி.
*உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.

குஜராத்தில் பா.ஜ.கவின் 25 வருட ஆட்சியில் ஒரு அரசு மருத்துவமனை கூட கட்டவில்லை” இதுதான் குஜராத் மாடல்’

 கலைஞர் செய்திகளை  :இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்துறையின் படுதோல்வியால், உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன.
பிற மாநிலங்களை விட பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பும், இறப்பும் அதிகரிப்பதற்கு மோசமான மருத்துவக் கட்டமைப்பே காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்டு வருவதாக பேசி வரும் பிரதமரின் சொந்த ஊரில் தான் கொரோனாவை கடுப்படுத்த முடியாமல் அம்மாநில அரசு திணறி வருகிறது.
மோடி முதன்முதலாக மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தேர்தல் பிரச்சாரங்களில், அனைத்து மாநிலங்களையும் குஜராத் போல மாற்றுவேன்.
இந்தியாவிற்கே குஜராத் ஒருமுன்மாதிரி மாநிலம் எனக் கூறி. ‘குஜராத் மாடல்’ என்ற வெற்று விளம்பரத்தை நாடுமுமுவதும் பரப்பி ஆட்சியைப் பிடித்தார்.
பிரதமர் மோடி பிறந்த குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க சுமார் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது.

உலகளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் . 3,45,147 பாதிப்புடன் தொடர்ந்து புதிய உச்சம்!

  Rayar A - /tamil.oneindia.com/ :  வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடம் பிடித்து தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,45,147 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 2,621பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 65,971 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 2,866 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா அதிகரிப்பு உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பராசபட்சம் இல்லாமல் கொரோனா தாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் 146,218,354 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 3,098,835 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 124,320,293 பேர் குணமடைந்துள்ளனர்.
பிரேசிலில் அதிக உயிரிழப்பு அமெரிக்காவில் கொரோனா கொஞ்சம் ஓய்வு எடுத்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாமே: உச்ச நீதிமன்றம் கேள்வி

May be an image of text that says 'ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு தகவல் BREAKING NEWS பாடம் கற்கவில்லை மத்திய அரசு சோனியா காந்தி மத்திய அரசின் கொள்கையால் மாநில அரசுகளும் பெரும் SÚN NEWS'

Vivekanadan T :  சென்னை அரசு பொது மருத்துவமனையில் கூட ஆக்சிஜன் சிறிய அளவில்  தயாரிக்கும் கட்டமைப்பு இருக்கிறது....
திராவிட இயக்க தலைவர்கள்  எங்களுக்காக செய்த சாதனை அது ....
ஆனால் மருத்துவ உள்கட்டமைப்பு என்பதையே அறியாத மத்திய பாசிச  ஆட்சியாளர்களால் ,
அரசு மருத்துவ நிறுவனங்களை செயல்படுத்தி தடுப்பூசிகளை தயாரிப்பதை மறுத்து,
தனியார் முதலாளிகளிடம் எல்லா ஒப்பந்தத்தை கொடுத்திவிட்டு,  
பின்பு மத்திய அரசுக்குக் கொடுக்கும் 50% தடுப்பூசிக்கு பழைய விலையான ரூ.150 வசூலிக்கப்படும் என்றும்,
மீதமுள்ள 50% தடுப்பூசிகளுக்கு மாநில அரசுகளுக்கு டோஸ் ஒன்றிற்கு ரூ.400 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு டோஸ் ஒன்றிற்கு ரூ.600 என்ற விலையிலும் விற்கப்படும் என்று சொல்லுவதை எப்படி எடுத்துக்கொள்வது ..?

உத்தர பிரதேசம்: வென்ட்டிலேட்டர் வசதி கிடைக்காமல் 6 பத்திரிகையாளர்கள் பலி

உத்தர பிரதேச அவலம்: வென்ட்டிலேட்டர் வசதி கிடைக்காமல் 6 பத்திரிகையாளர்கள் பலி

tamil.news18.com :உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது, கடந்த 10 தினங்களில் வென்ட்டிலேட்டர் கிடைக்காமல் கொரோனா தொற்றுக்கு 6 பத்திரிகையாளர்கள் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்துள்ளனர்.l
ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று 568 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் 306 பேரும், சத்தீஸ்கரில் 207 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 195 பேரும், குஜராத்தில் 135 பேரும், கர்நாடகாவில் 123 பேரும், ஜார்க்கண்டில் 106 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் உ.பி.யில் ஆறு பத்திரிகையாளர்களுக்கும் தொற்று ஏற்பட்டவுடன், மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை இங்கிலாந்தில் வாங்கிய முகேஷ் அம்பானி..

May be an image of 1 person, standing, fire, outdoors and text that says 'Tp Jayaraman 11m ஹலோ மிஸ்டர் மோடி, நான்தான் அம்பானி பேசுறேன் நாட்டில் உள்ள எல்லா சுடுகாட்டையும் தனியார் மயமாக்கி என்கிட்டே கொடுத்துடுங்க. கூடவே ஒரு பிணம் எரிப்பதற்கான ரேட்டை அம்பானியோட கம்பெனிதான் முடிவு பண்ணும்னு அறிவிச்சிடுங்க"'

tamil.goodreturns.i - Pugazharasi S  :   இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனர் முகேஷ் அம்பானி 79 மில்லியன் டாலர் மதிப்பில். இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக் பார்க் லிமிடெட் நிறுவனத்தினை வாங்கியுள்ளது.
இது வெறும் வணிகம் மட்டும் அல்ல, வரலாறு. 900 வருட வரலாற்று பாரம்பரியம் மிக்க ஒரு இடமாகும். இது ஒரு வரலாற்று சின்னமாகவும் கருதப்படுகிறது.
இது சிறந்த சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதோடு மட்டும் அல்ல, சிறந்த விளையாட்டு துறை வசதிகளையும் கொண்டுள்ளதாம். இதன் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 590 கோடி ரூபாய்க்கு மேல். இத்தனை கோடிகள் கொடுத்து வாங்கும் அளவுக்கு இந்த ஹோட்டலில் என்ன சிறப்பம்சம், வாருங்கள் பார்க்கலாம்.
என்னென்ன வசதிகள்?
இங்கிலாந்தில் உள்ள இந்த ஸ்டோக் பார்க் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த, ஹோட்டலில் இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படம் எடுக்கப்பட்டுள்ளதாம். 900 வருட வரலாற்றினை கொண்டு இருந்தாலும், இது 1908 வரையில் ஒரு தனியார் வீடாகவே இருந்து வந்துள்ளது. இந்த ஹோட்டலில் 49 சொகுசு படுக்கையறைகள் மற்றும் suite அறைகள் உள்ளன.

இது தவிர 27 துளையுள்ள கோல்ப் மைதானத்தினையும் கொண்டுள்ளது. 14 டென்னிஸ் கோர்ட், 14 ஏக்கரில் தனியார் கார்டன்கள் உள்ளதாம். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு உதவ தயார் - சீனா அறிவிப்பு

  malaimalar  :இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது தங்களுக்குத் தெரியும் என சீனா தெரிவித்துள்ளது. ிஜீங்: இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டி விட்டது.கொரோனாவால் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகிறார்கள்.அமெரிக்காவுக்கு அடுத்த படியாக கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் இதுவரை 1.6 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை.. நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்

நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் வானத்தைபோல தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறேன். நான் கடந்த 2019-ம் ஆண்டு சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கருத்து வேறுபாடு காரணமாக அவரை நான் பிரிந்து விட்டேன். விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இஸ்லாமிய நூல்கள் இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் ! இலங்கை அரசு அறிவிப்பு

 விடிவெள்ளி : (ஏ.ஆர்.ஏ.பரீல்)  : வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசு  புதிய விதிகளை விதித்துள்ளது.
புதிய விதி­க­ளுக்­க­மைய இறக்­கு­மதி செய்­வ­தற்கு முன்பு அதற்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். முன் அ-னு­ம­தி­யின்றி இஸ்­லா­மிய நூல்கள் இறக்­கு­மதி செய்ய முடி­யாது.
நிறு­வ­னங்­களோ, அமைப்­பு­களோ,தனி­ந­பர்­களோ இஸ்­லா­மிய நூல்­களை இறக்­கு­மதி செய்­வ­தென்றால் அதன் பிர­தி­யொன்று முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வேண்டும்.
அத்­தோடு நூலின் பெயர், நூலின் உள்­ள­டக்கம், ஆசி­ரி­யரின் பெயர், அவ­ரது பின்­னணி, நூலில் தீவி­ர­வாத கருத்­துக்கள் உள்­ள­டங்­கி­யுள்­ள­னவா-? அந்நூல் வெளி­நா­டு­களில் தடை செய்­யப்­பட்­டுள்­ளதா? எந்த நாட்­டி­லி­ருந்து நூல் இறக்­கு­மதி செய்­யப்­ப­ட­வுள்­ளது. எனும் விப­ரங்கள் இறக்­கு­ம­தி­யா­ளர்­களால் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும்.
மேலு­ம் புத்­தகம் விலை கொடுத்து கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­கின்­றதா? அல்­லது நன்­கொ­டை­யாகக் கிடைக்­கப்­பெ­று­கி­றதா? நன்­கொ­டை­யென்றால் நன்­கொ­டை­யாக வழங்­கு­ப­வரின் விப­ரங்கள் என்­ப­னவும் தெரி­விக்­கப்­ப­ட­வேண்டும்.

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

ஜெயலலிதாவின் அண்ணா நூலக பயங்கரவாதமும் ஜெயவர்த்தனாவின் யாழ் நூலக பயங்கரவாதமும்

No photo description available.

தோழர் புலியூர் : ஒரு இனத்தை அழிக்க முற்படுபவர்கள் முதலில் அந்த இனத்தின் மொழியை அழிப்பார்கள். அப்படித்தான் இலங்கையில், யாழ் நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்தியது ஜெ ஆர் ஜெயவர்த்தன  அரசு.
அதேபோல், கலைஞர் கட்டிய 'அண்ணா நூற்றாண்டு நூலகத்தை' பாழடையச் செய்தார் ஜெயலலிதா. குழந்தைகள் நல மருத்துவமனையாக இதை மாற்றப் போகிறேன் எனத் திமிராய்ப் பேசிய ஜெயாவை அடக்கிய நீதிமன்றம், நூலகம் தொடர வேண்டும் என்றது.

 178 கோடி செலவில் கட்டப்பட்ட, இந்தியாவின் பெரிய நூலகமான, தெற்காசியாவின் இரண்டாவது பெரிய நூலகமான, ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து படிக்கும் அளவிற்கு வசதிகள் கொண்ட மாபெரும் நூலகத்தை, நீதிமன்ற உத்தரவையும் மீறி திருமண நிகழ்விற்கு வாடகைக்கு விட்டார் பார்ப்பனத் திமிர் நிரம்பிய ஜெயலலிதா.
ஏராளமான போட்டித் தேர்வுகளுக்கு, மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவான விலையுயர்ந்த நூல்கள் செல்லரித்துப் போயின.
50000 க்கும் மேற்பட்ட நூல்கள் திருடு போயிருக்கின்றன. நூலகப் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாயையும் தன் போயஸ் தோட்டத்திற்குள் பதுக்கிக் கொண்டார் ஜெயா.

எங்கு திரும்பினும் ஓலம்... பிணங்களின் குவியல்; எரிந்து கொண்டேயிருக்கும் சுடுகாடுகள்!


May be an image of one or more people, people standing, road and text that says 'மும்பையில் தடுப்பூசி போடுவதற்காக வயதானவர்கள் காத்திருக்கின்றனர். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் கொரோனா பரிசோதனைக்காக தனைக்காக வந்தவர்கள் நீண்ட வரிசையில் காரில் காத்திருக்கிறார்கள். உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் டலங்கள், ஹிண்டன் நதிக்கரைமில் சடங்குக்காக வரிசையில் காத்திருக்கின்றன. உத்தர பிரதேசம், என்பூரிலுள்ள பைரவ் காட் இந்து மயானத்தில் ஒரே நேரத்தில் பல கொரோனா நோயாளிகளின் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. டெல்லியிலுள்ள மாயபுரியில் ஆக்சிஜன் நிரப்பும் மையத்தில் காலி சிலிண்டர்களுடன் வரிசையில் நிற்கிறார்கள் நோயாளிமின் உறவினர்கள். தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ரபரப்பால் டெல்லியில் ஆக்சிஜன்நி ஸ்டாக் இருக்கிறதா என்று முன்னெச் சரிக்கையாக விசாரிக்கிறார்கள் ஜம்முவில் கின் போது துக்கம் விழுந்த முதல் உதவி வளிக்கும் தடும்பத்தினர்'

tamil.samayam.com :கொரோனாவின் 2ஆவது அலையின்கீழ் இந்தியா தள்ளாடிக் கொண்டுள்ளது. பல மாநிலங்கள் அதிகரித்து வரும் தொற்றின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல் போராடி வருகின்றன. குறிப்பாக, இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக இருக்கிறது.

அம்மாநிலத்தில் கொரோனா தொற்றின் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வரும் போதிலும், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதுதான் நிதர்சனமாக உள்ளது. மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. கொரோனா தவிர வேறு சிகிச்சைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கே சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லை என்பதுதான் உத்தரப்பிரதேசத்தின் கள நிலவரம்.கான்பூரை சேர்ந்த நிரஞ்சன் பால் சிங்கின் 51 வயதான தந்தை கடந்த வாரம் இதே நாள் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைக்கழிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே உயிரிழந்தார். படுக்கை வசதி இல்லாத காரணத்தால் சுமார் 4 மருத்துவமனைகளில் அவருக்கு அனுமதி கிடைக்காமல் கடைசியாக ஆம்புலன்ஸிலேயே அவர் உயிரிழந்தார்.

ட்ராபிக் ராமசாமி தீவிர சிகிச்சை பிரிவில் . எப்படி இருக்கிறார்? - அரசு மருத்துவமனையில்

டிராபிஃக் ராமசாமி உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஆ. விஜயானந்த் -     பிபிசி தமிழுக்காக : சமூக ஆர்வலர் டிராபிஃக் ராமசாமியின் உடல்நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. எப்படியிருக்கிறார் டிராபிஃக் ராமசாமி?
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளை சட்டை, காக்கி உடுப்பில் வழக்குக் கட்டுகளோடு வலம் வரும் டிராபிஃக் ராமசாமியை பார்க்காதவர்கள் அரிது என்றே சொல்லலாம்.
சட்டையின் இரு பாக்கெட்டுகளிலும் வழக்குக் கட்டுகளை வைத்திருப்பது அவரது பழக்கம்.
ஹெல்மெட் விவகாரம், கட்அவுட் கலாசாரம், வரம்புமீறிக் கட்டப்படும் கட்டடங்கள், கட்டுப்பாடில்லாமல் சுற்றிய மீன்பாடி வண்டிகள் என டிராபிஃப் ராமசாமி கையாண்ட பொதுநல வழக்குகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது அவ்வளவு எளிதல்ல.

ஆக்சிஜனுக்காக ஸ்டேர்லைட்டை கைப்பற்றி ஏன் உற்பத்தி செய்யக்கூடாது? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஆக்சிஜனுக்காக ஏன் ஸ்டேர்லைட்டை கைப்பற்றி உற்பத்தி செய்யக்கூடாது? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

கலைஞர்செய்திகள் -Janani : கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாததும், ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படுவதும் அதனால் மக்கள் கொத்து கொத்தாக மடிவது கடந்த நாட்களாக இந்தியாவின் குரல்களாக உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கடுத்த படியாக மத்திய அரசும் ஆக்சிஜன் தேவைக்காக ஆலையை திறக்க உத்தரவிடலாம் என்று நேற்று நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று தொடங்கியது.

அர்விந் கெஜ்ரிவால் : டெல்லி ஆக்சிஜன் லாரிகளை.. உ.பி.யும் ஹரியானாவும் பிடித்து வைத்துக் கொள்கின்றன..

 Vigneshkumar - /tamil.oneindia.com :   டெல்லி: உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அரசு அதிகாரிகளும் போலீசாரும் ஆக்சிஜன் லாரிகளை பிடித்து வைத்துக் கொள்வதாக மத்திய அரசுக்கு டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கடிதம் எழுதியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் மிக மிக மோசமான நிலையில் உள்ளது.
கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
டெல்லியுள்ள சரோஜ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, டிராத் ராம் ஷா மருத்துவமனை, இங்கிலாந்து நர்சிங் ஹோம், ரதி மருத்துவமனை, சாண்டம் மருத்துவமனை,
ஹொலி ஃபேமலி மருத்துவமனை ஆகிய 6 தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கூறியுள்ளது.
அண்டை மாநிலங்கள் இந்நிலையில், டெல்லிக்கு வர வேண்டிய ஆக்சிஜன் லாரிகளை அண்டை மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.