சனி, 24 ஏப்ரல், 2021

தமிழ்நாட்டு வளர்ச்சியை வடநாடுகள் நெருங்க இன்னும் பல ஆண்டுகள் தேவை .. குஜராத் உத்தரபிரதேசம்... ...

May be an image of text that says 'சங்கி கி சங்க'
A Sivakumar : *சமூகவளைதளங்களும் சங்கிகளும்* 1947ல் காங்கிரஸ் இந்த தவறை செய்தது
1958ல் பெரியார் இந்த தவறை செய்தார்
1960ல் திராவிடர் கழகம் இந்த தவறை செய்தது
1967ல் அண்ணா இந்த தவறை செய்தார்
1970ல் திமுக இந்த தவறை செய்தது
1997ல் கலைஞர் இந்த தவறை செய்தார்
2007ல் மு.க.ஸ்டாலின் இந்த தவறை செய்தார்
என்றெல்லாம் எதையாவது தூக்கிக்கொண்டு வந்து நம்மிடம் நாயடி பேயடி வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தவர்கள் தான் சங்கிகள்.   2014ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த பின்பு ஆரம்பித்த இந்த யுத்தம் 2019ல் தமிழ்நாட்டில் முழுமையாக தோல்வி அடைந்த பின் ஏறத்தாழ நின்றே விட்டது.
நம்மை நோக்கி வரிசையாக கேள்வி கேட்டவர்கள் கூடவே குஜராத்தில் நாங்கள் இதை செய்திருக்கிறோம்,  மத்தியபிரதேசத்தில் நாங்கள் அதை செய்திருக்கிறோம் என்று கலர் கலராக கயிறு திரித்துக்கொண்டிருந்தார்கள்.
எல்லாமே பொய்...
நீங்க வெறும் சோற்றாலடித்தப் பிண்டங்கள் தான்...
வளர்ச்சியில் எங்களை நெருங்க இன்னும் 100 வருசமானாலும் முடியாது,
என்று எங்களைப் போன்ற திராவிட சிந்தனையாளர்கள், திமுகவினர் ஒரே குரலில் சொல்லி வந்தோம்.
சங்கிகள் சொன்னது முழுப் பொய் என்பதையும், நாங்கள் சொன்னது உண்மை என்பதையும் கொரோனா எனும் பேரிடர் வந்து நிரூபித்திருக்கிறது.
என்ன ஒரு சோகம் என்றால்...குஜராத் 15 ஆண்டுகள், மத்தியப்பிரதேசம் 15 ஆண்டுகள் வீணாக்கியது    போதாதென்று,
இவர்களை இருமுறை நம்பிய பாவத்துக்கு ஒட்டுமொத்த நாடும் முழுமையாக 7 ஆண்டுகளை இழந்துவிட்டது.
நம்மிடம் வந்து மோதி மூக்குடைந்து போவதையே வழக்கமாக கொண்டிருந்த சங்கிகள்,
தங்கள் பக்கங்களில், தாங்கள் ஆதரித்த தலைவரும் கட்சியும் தங்களை நம்பி வாக்களித்த மாநிலங்களை நடுத்தெருவில் நிறுத்தியிருப்பதை குறித்து மூச்சுக்காட்டாமலிருப்பதையும், எல்லாமே சுகமாக இருப்பது போல போலிச்சித்திரம் வரைய முயல்வதையும் பாருங்களேன்.
நாம் இத்தனை நாள் எத்தகைய ஈழிப்பிறவிகளிடம் சிக்கியிருந்தோம், சிக்கியிருக்கிறோம் என்பது புரியும்.

கருத்துகள் இல்லை: