புதன், 30 நவம்பர், 2016

பதுக்கியவர்களுக்கு பணமா?-ராகுல்!


கணக்கில் காட்டாத கருப்புப் பணம் வைத்திருப்போர், டிசம்பர் 30ஆம் தேதிக்குள் அதை வருமான வரித் துறையிடம் அறிவித்து, 50 சதவிகிதம் வரி செலுத்தலாம். மீதி 50 சதவிகிதத்தில் 25 சதவிகிதம் பணம், வரி செலுத்துபவர்களுக்கு திரும்பத் தரப்படும். எஞ்சிய 25 சதவிகிதம் 4 ஆண்டுக்கு திரும்பப் பெற முடியாத, வட்டி இல்லாத மத்திய அரசின் திட்டங்களில் முதலீடு செய்யப்படும். மேற்கண்ட அம்சங்களை உள்ளிட்ட வருமான வரி திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேறியது. இதை கடுமையாக விமர்சித்துள்ளார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி. நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பதுக்கியவர்களுக்கே மீண்டும் 50 சதவிகித கருப்புப் பணத்தை அரசு வழங்கவுள்ளது” என்று கூறினார். இந்நிலையில், மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “வீரர்கள் உயிரிழந்தால் அவையில் அஞ்சலி செலுத்துவது வழக்கமாகும்.

தற்போது பேருந்திலோ, ரயிலிலோ யார், எந்த குலம்? என்று பார்ப்பதில்லை.இதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி ,ஸ்டாலின் !


திமுக-வின் அடுத்த தலைவராக ஸ்டாலின் ஒளிவுமறைவின்றி, வெளிப்படையாக அரியணை ஏறுவார் என்று, அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறினார்.
திமுக இளைஞரணி சார்பில் நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமையேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ‘அன்றைய காலகட்டத்தில் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் சமஸ்கிருதத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த நிபந்தனையை தகர்த்து, எல்லோரும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பனகல் அரசர். தற்போது பேருந்திலோ, ரயிலிலோ பயணிக்கும்போது யார், எந்த குலம்? என்று நாம் பார்ப்பதில்லை. இதுதான் நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் வெற்றி. 1937ஆம் ஆண்டு வரை நீடித்த நீதிக்கட்சி ஆட்சியில், சமூக நீதி சார்ந்த திட்டங்கள்மூலமாக கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் நம்முடைய உரிமைகள் மீட்கப்பட்டுள்ளன.

இளங்கோவன் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முக்கிய காங்கிரஸ் பிரமுகருமான இளங்கோவன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கோவை கே.எம்.சி.எச். மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கோவையில் நடைபெற்ற கொங்கு மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு மாலை 6.30 மணியளவில் திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக கோவை பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மம்தா லாலு சந்திப்பு காலத்தின் கட்டாயம்?


மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களிடம் தொடர்ந்து மோடிக்கு எதிராகப் போராடுமாறு பேசி வருகிறார். மேற்குவங்கத்தில் மோதிக்கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுடன்கூட மம்தா பேசுகிறார். ஆனால் அகில இந்திய அளவில் ஒரு வலுவாக கூட்டணி இன்னும் உருவாகவில்லை. இந்நிலையில், நேற்று ராஷ்டிர ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று திடீரென சந்தித்துள்ளார்.
தலைநகர் பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் வீட்டுக்கு இரவு 8 மணியளவில் மம்தா பானர்ஜி சென்றார். அங்கு லாலு பிரசாத்துடன் அவரது மனைவி ராப்ரி தேவியும் உடன் இருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது: ‘நான் இங்கு லாலு பிரசாத்தை பார்ப்பதற்கு வந்திருக்கிறேன். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவரது உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன்.

தியேட்டரில் எழுந்து நிற்பதெல்லாம் தேசபக்தியாகிவிடாது’: எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் கருத்து

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இழிவுபடுத்தப்படுவதாக, போபாலை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் ஷ்யாம் நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து திரையரங்குகளிலும் படம் திரையிடுவதற்கு முன்பாக தேசிய கீதத்தை கண்டிப்பாக இசைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், தேசிய கீதம் இசைக்கப்படும் போது திரையில் தேசிய கொடி திரையிடப்பட வேண்டும் எனவும்
அப்போது, திரையரங்கில் இருக்கும் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் அனைத்து திரையரங்குகளிலும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மிடில் கிளாஸ்: பலியாகப்போகும் சாத்தானின் அழிவுகால சேனைகள்

thetimestamil.com :ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து மோடி ஊடகங்களில் வாந்தியெடுத்தபோது எங்கள் அருகாமையில் உள்ள தெருக்களில் பட்டாசுகள் வெடித்தன. அதன் பிறகு வந்த உறவுக்காரர்கள் நால்வரின் தொலைபேசி அழைப்புக்கள் பெரும் பரவசத்தை சுமந்து வந்தன. அதன் மோசமான பின்விளைவுகளைப் பற்றி அறிந்துகொள்ளக்கூட அவர்கள் தயாரில்லை. ஒரு ரஜினி ரசிகன் அவர் படம் வெளியானால் எத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்துவானோ அவைதான் இந்த மத்தியதர வர்கத்தின் உடனடி எதிர்வினையாக இருந்தது. அவர்களின் ஆகப்பெரும்பாலானாவர்கள் இதனை அறிவுபூர்வமாக அணுகத் தெரியாதவர்களாக இல்லை. மாறாக அப்படி அணுக விருப்பமற்றவர்களாக இருந்தார்கள். அறிவீனத்தைவிட அறிவின்மீதான விருப்பமின்மை கொடூரமானது. அறிவின் மீது ஆர்வமற்ற மிடில் கிளாஸ், அவர்கள் அறிவு மற்றும் விருப்பத்தினை தீர்மானிக்கும் வெகுஜன ஊடகங்கள், ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசு இந்த கூட்டணிதான் இப்படியொரு பேரழிவு துவங்கிய பிறகும் நாட்டை அமைதியாக வைத்திருக்கிறது.

12 சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவன் ஏற்கனவே 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவன்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த பப்பு என்ற நபர் கடந்த 2004ம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்த அவர், திருந்தி வாழலாம் என்று எதிர்பார்த்த நிலையில், மற்றொரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு நிதின் திவாரி நிருபர்களிடம் கூறியதாவது:- நவம்பர் 26-ம் தேதி 12 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்து ஜான்பூர் மாவட்டம் கேராகட் பகுதியில் உள்ள புதரில் வீசியது தொடர்பாக பப்பு என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இதற்குமுன் 10 ஆண்டு தண்டனை பெற்ற வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி நேரில் ஆஜராகி சாட்சி அளித்ததால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த முறை சாட்சி சொல்ல வந்துவிடக்கூடாது என்பதற்காக சிறுமியை கற்பழித்துவிட்டு கொலை செய்துள்ளார்.

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு ரூ.2000 கோடி நிதி!

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா, வணிக விசா நடைமுறைகளை எளிதாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், அசாம், பீகார், இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மேலும் சில சமுதாயத்தை சேர்க்க வகை செய்யும் சட்டத்திருத்தத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த 36384 குடும்பங்களுக்கு 2000 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5.5. லட்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, நஷ்டத்தில் இயங்கி வரும் இன்ஸ்ட்ரூமென்டேசன் லிமிடெட் கோட்டா அலகினை மூடவும், பாலக்காடு அலகினை கேரள அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.மாலைமலர்.காம்

நாடா :சென்னை,மற்றும் 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை

நடா புயல் எதிரொலி: சென்னை உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறைநடா புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை அளிப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. சென்னை: சென்னை அருகே மையம் கொண்டுள்ள ‘நடா’ புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது. இந்தப் புயல் காரணமாக சென்னை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாடா' புயல் எச்சரிக்கை: 15 அறிவுறுத்தல்கள் !

tamilthehindu.com :நாடா' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
15 அறிவுறுத்தல்கள்
1. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.
2. ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.
3. புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.
4. கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

அனைத்து திரையரங்குகளிலும் திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பு திரையில் தேசியகொடியுடன் தேசிய கீதம் இசைக்க வேண்டும். அதுசமயம் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும். அனைத்து மாநில ங்களுக்கும் உத்தரவு குறித்து நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.நக்கீரன்.இன் வீடுகளில்  திருட்டு விசிடியில்  படம் பார்ப்பவர்களும்  தேசியகீதம் பாடவேண்டுமா? தெரியல்லையே தெரியல்லையே ?

கோபாலபுரத்தில் அழகிரி - ஸ்டாலின் சந்திப்பு!

திமுக தலைவர் கலைஞருக்கு இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. அப்போது மு.க.ஸ்டாலினும், செல்வியும் உடனிருந்தனர். பரிசோதனையின் போது அவர்கள் வெளியே நின்றனர். அந்த நேரம் பின்வாசல் வழியாக மு.க.அழகிரி தனது மனைவியுடன் வந்தார். ஸ்டாலினும் அழகிரியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டார்கள். பின்னர் மருத்துவர்கள் கலைஞருடன் ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த ஆலோசனையில் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், செல்வி, காந்தி அழகிரி உடனிருந்தனர். பின்னர் மு.க.அழகிரி தனது மனைவியுடன் பின்வாசல் வழியாக புறப்பட்டுச்சென்றார். மு.க.ஸ்டாலின் முன்வாசல் வழியாக புறப்பட்டுச்சென்றார். திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பின் ஸ்டாலினும் அழகிரியும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. nakkheeran.in

நாடு முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் பட்டினியுடன் பணமில்லாமல் சொந்த மாநிலங்களுக்கு திரும்புகின்றனர்

thehindu.com
சனிக்கிழமை அதிகாலை 3 மணி. தில்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில், நான்கு மணி நேரம் தாமதமாக வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஃபராக்கா நிலையத்தை வந்தடைந்தது. சில மணி நேரங்களிலேயே, தில்லிக்கு வேலைக்குச் சென்றிருந்த நூற்றுக்கணக்கான காண்டிராக்ட் ஊழியர்கள் கடலால் ரயில் நிலையம் நிறைந்தது. நெரிசலான ரயில் பெட்டிகளிலிருந்து இறங்கி இருளுக்குள் மறைந்தனர்.
வீடு திரும்பியவர்களுள் மூன்று இளைஞர்கள் அர்ஷத் ஷெய்க், கௌசர் ஷெய்க், ராஹுல் ஷெய்க். ஃபராக்கா பகுதியில் இருக்கும் காசி நகரைச் சேர்ந்தவர்கள். வேலைக்கெனச் சென்று, நாற்பதே நாட்கள் ஆகிய நிலையில் வீடு திரும்பியிருக்கிறார்கள். தங்கள் காண்டிராக்டர் உடனான ஒப்பந்தத்தின்படி, அவர்கள் இன்னும் இரண்டு மாதங்கள் வேலை செய்திருந்தால், பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பாதித்திருக்கலாம் என விளக்குகிறார்கள்.

மாதர் திரையுலகு 13- அபர்ணா சென்!

minnamalam.com :ஜா.தீபா :இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதை அடிக்கடி உலகத்துக்கு நினைவுபடுத்துகின்றன வங்காளத் திரையுலகம். நாடகத்திலிருந்து தன்னை அதிகம் மாற்றிக்கொள்ளாத திரைப்படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தான் வங்காளத் திரையுலகம் புதிய திரைப்பட மொழியைத் தனதாக்கியது. அந்தத் திரைப்படங்கள் அரசியல் பேசின, சித்தாந்தங்களை விமர்சித்தன, அதிகமும் தணிக்கைத் துறைக்கு வேலை தந்தன.
ஆனாலும்கூட வங்காளத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஒரு பெண் இயக்குநர் உருவாவதற்கு தொண்ணூறு ஆண்டு காலம் ஆனது. 1980இல் அபர்ணா சென் தனது பிரபலமான 36, chowrangi lane படத்தை இயக்குகிறார். இந்த முதல் படம் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கவனஈர்ப்பைப் பெற்றது. வங்காளத்தினர் மட்டும் ‘அபர்ணா இயக்கிய படமா இது?’ என்று கூடுதல் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஏனெனில் அபர்ணா அப்போது நடிப்புலக ‘சூப்பர் ஸ்டாராக’இருந்தவர்.

மெட்ரோ ரயில் சேவையை தனியார் மயமாக்க அதிமுக முயற்சி: ஸ்டாலின் கண்டனம்

மெட்ரோ ரயில் சேவையை தனியார் மயமாக்கும் அதிமுக அரசின் முயற்சி கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மெட்ரோ ரயில் சேவையை தனியார் மயமாக்கும் அதிமுக அரசின் முயற்சி கடும் கண்டனத்துக்குரியது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை, மோனோ ரயில் திட்டம் கொண்டு வருவதாகக் கூறி அதிமுக அரசு கிடப்பில் போட்டது. திமுக நடத்திய போராட்டத்தால் மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

பணத்தை எடுப்போம் ! வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம்


வங்கியில் பணத்தை எடுப்போம் ! வங்கிக் கணக்கை முடிப்போம் !!
கடுகு டப்பா சேமிப்பையும் வழிப்பறி செய்யுது, மோடி அரசு !
கார்ப்பரேட் முதலாளிக்காக கொள்ளை போகுது, நமது பணம் !
;அன்புடையீர் வணக்கம், ;இந்தியாவில் 86 சதவீத பணப்புழக்கமாக இருந்தரூ. 500, 1000 நோட்டுக்களை செல்லாது என்ற மோடிஅரசின்திடீர் அறிவிப்பு சுனாமியைவிட பயங்கரமான விளைவுகளை நாடு முழுவதும் ஏற்படுத்திவருகிறது. ரொக்கப்பண தட்டுப்பாட்டால் இலட்சக்கணக்கான சிறுதொழில்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. கோடிக்கணக்கான மக்களும், தொழிலாளர்களும் வேலை இழந்து வறுமையில் சாகும் நிலை ஏற்படும் என அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். முதலீட்டுக்கு, அதிக வட்டி, இரட்டிப்பு பலன். ஒருமுறை பணம் கட்டினால் மாதா மாதம் பணம் வீட்டுக்கு வரும், நகை பாலிசு, இப்படி பல பல நூதன கொள்ளைகள் தொடர்கின்றன. குடும்ப பெண்கள் முதல் படித்தவர்கள் வரை பலரும் ஏமாந்துகொண்டுதான் வருகிறார்கள். இவை போன்றதுதான், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும்.

மோடிக்கு வக்காலத்து வாங்கிய பெண்ணுக்கு செருப்படி பதில் கொடுத்த தமிழ் பெண்கள் இந்த அசிங்கம் தேவையா?



19 வயது மாணவன் அபிஷேக் கைது ! பா.ஜ.க கருப்பு பணத்தை அம்பலப்படுத்தியதால் பாஜக அரசு !

abhishekமோடி அரசின் பண மதிப்பிழப்பு(demonetization) நடவடிக்கையை விமர்சித்து பதிவிட்டதற்காக மாணவர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது மத்திய பிரதேச பா.ஜ.க அரசு.  அபிஷேக் மிஸ்ரா என்ற அந்த 19 வயது மாணவர் மத்தியபிரதேச மாநிலம் சத்தர்ப்பூரைச் சேர்ந்தவர்.
அபிஷேக் மிஸ்ரா
பல சமூக பொருளாதார விசயங்களைக் குறித்து தனது வலைதளம் மற்றும் யூடியூப் பக்கங்களில் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறார் அபிஷேக். மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக யூடியூப் வீடியோக்களை வெளியிட்டு வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார் அபிஷேக். அவரது யூடியூப் தளம் சுமார் 85,000-த்திற்கும் மேற்பட்டோரால் பின் தொடரப்படுகிறது. மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குபிறகு மக்கள் பணமில்லாமல் தவித்தவேளையில் மத்தியபிரதேச பா.ஜ.க தலைவர் ஒருவரின் காரிலிருந்து கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகியிருக்கிறது. அது குறித்து தனது கருத்தை பதிவாக வெளியிட்டுள்ளார் மாணவர் அபிஷேக்.

கேடி பில்லா கில்லாடி ரங்கானா அது நீங்கதான் மோடி அண்ணே !

bigஎன்னண்ணே இப்படி பண்ணீட்டீங்க…குடுகுடுப்பைக்காரன் மாதிரி நடுராத்திரியில வந்து 500,1000, ரூபா நோட்டெல்லாம் ‘செல்லாது…செல்லாது’ன்னு நாட்டாமை தீர்ப்பு வாசிச்ச மாதிரி சொல்லிட்டுப் போயிட்டீங்க. இங்க ஊரே கதிகலங்கிப் போச்சுசுண்ணே!  காலையில எழுந்திருச்சு காபி குடிக்கப் போறவன், வண்டிக்கு பெட்ரோல் போடுறவன், கல்யாணம் -கருமாதி செலவுக்கு கடன் வாங்கினவன், முதல் நாள் மகளிர் குழு கடன் வாங்குன பொம்பளைக இப்படி எல்லாரும் கிறுக்குப் பிடிச்சமாதிரி ஆயிட்டாங்க. உசிரக்குடுத்து நாயா பேயா உழைச்ச காசை திடீர்னு ஒரு நாள் ராத்திரியில செல்லாதுன்னா மனுசன் என்ன பாடுபவான்னு உங்களுக்கு தெரியாதுண்ணே. அதெல்லாம் மனுசனா பொறந்தவனுக்குத்தான் தெரியும்! பேங்குல குடுத்து மாத்திக்கலாங்குற விஷயம் தெரியுறதுக்கே ரெண்டு, மூணு நாளாகிப்போச்சு!
ஏன்டா இப்படி கிறுக்குத்தனம் பண்றீங்கன்னு கேட்டா, “நாங்க கருப்புப்பணத்தை பிடிக்கப் போறோங்”குறான் உங்க ஆளு. அதென்னடா புதுசா கருப்புப்பணம்? அது எங்கடா இருக்கு?னு கேட்டா, “சட்டவிரோதமா சம்பாதிக்கிற பணம், அரசுக்கு வரிகட்டாம ஏய்க்கிற பணம்தான் கருப்புப் பணம்”னு விளக்கம் சொல்லுறான். நீ சொல்ற ஆளுக எல்லாம் ஊருக்குள்ள நெஞ்ச நிமித்திக்கிட்டு திரியுறானே…நேரா போயி பிடிக்க வேண்டியதுதானே. வரி கட்டாதவன் யாருன்னு தெரியாமவாடா இத்தனை நாளா ஆட்சி செஞ்சீங்க? அதை விட்டுட்டு சும்மா இருக்குறவன் உசிரை ஏன்டா வாங்குறீங்க?னு மடக்குனா, உடனே “தேசம், பக்தி, தீவிரவாதி, பாரதமாதா” அப்படீனு சம்பந்தமில்லாம உங்கள மாதிரியே உளறுறானுக! நான் உழைச்ச காசுக்கும் உங்க பாரதமாதாவுக்கும் என்னண்ணே சம்பந்தம்?

BJP கே.டி. ராகவன் மறைக்கும் கருப்புப் பண ஊழல் – ஆதாரங்கள்

எஸ்.வி. சேகரின் அம்பலப்படுத்தலுக்கு முன்தினம் வரையிலும் சீனிவாசனின் ஃபேஸ்புக் சுயவிவரத்தில் கூட ‘எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் இயக்குனர்’ என்பது குறிப்பிடப்பட்டிருந்ததையும், அதன் பின்னர் அது நீக்கப்பட்டதையும் எஸ்.வி. சேகர் அதே ஃபேஸ்புக் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
S-Ve-Shekhar-postதிரு. கே டி ராகவனுடைய சகோதரன் இயக்குநராக இருந்து குஜராத் அரசிடமிருந்து ஆர்டர் வாங்கி சொன்ன வாக்கை காப்பற்றாமல் பலரை ஏமாற்றி கோர்ட் ஆர்டர் மூலமாக மூடப்பட்டதற்கு காரண கர்த்தா இந்து மத காவலன் (அவரே சொல்லிக்கொள்வது) தனி மனித ஒழுக்க சீலன் !! என்னை குறை சொல்வது மல்லக்காய் படுத்து எச்சல் துப்பிக் கொள்வதற்கு சமம்.”
இதை சொன்னது வேறு யாரும் அல்ல பா.ஜ.க-வின் தலைவரும் நடிகருமான எஸ்.வி சேகர்.  ஒரு பா.ஜ.க  தலைவரே மற்றொரு தலைவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறாரே என்று நீங்கள் அதிர்ச்சியடையலாம். அதன் பொருட்டு இந்த முன்கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம்.

எஸ்.வி.சேகருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு
பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் பதவியில் இருப்பவர் இந்த கே.டி.ராகவன். இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். சுமந்த் சி ராமன், மாத்ருபூதம்,  பெருமாள் மணி, பானு கோம்ஸ் போன்ற அரசியல் விமர்சகர் என்ற முகமுடியுடன் வரும் அதிகாரப்பூர்வமற்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பேச்சாளர்களுக்கு நடுவில் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க. வின் சொந்த முகத்துடன் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து வருகிறார்.

சென்னையை நோக்கி புயல் 2-ந்தேதி கரையை கடக்கும் என்று அறிவிப்பு

புயல் செல்லும் திசையையும், கனமழை பெய்யும் இடத்தையும் விளக்கும் படம்.
காற்றழுத்த தாழ்வு நிலையை காட்டும் படம். புதுடெல்லி, சென்னையை நோக்கி வரும் புயல் 2-ந்தேதி கரையை கடக்க இருக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. 2-ந்தேதி கரையை கடக்கிறது சென்னைக்கு தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது சென்னையில் இருந்து 1,070 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 1,030 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 720 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வடமேற்கு திசையை நோக்கி நகர தொடங்கும்.

இந்தியாவில் இப்போது Govt sponsored கியூ மரணங்கள்.. ஏதாவது ஒரு ஜனநாயக நாட்டில் இதுபோல் நடந்திருக்கிறதா?

மோடி செய்தது பொருளாதார ரீதியில் சரியா தவறா என்பதையெல்லாம் கூட விடுங்கள். நான் கேட்பது மிக மிக மிக எளிமையான கேள்விகளை தான்.
அரசின் அவசரக் குடுக்கைத்தன ஆணையினால், ஏற்பாடுகளை ஒழுங்காகச் செய்ய வக்கற்ற தன்மையினால் 70க்கும் அதிகமான ஏழை/வயதான குடிமக்கள் க்யூவில் மரணித்திருக்கிறார்கள்.
1) அந்த 70 பேரில் அம்பானி குடும்பத்தையோ அதானி குடுபத்தையோ சேர்ந்தவர்கள் யாராவது இருந்திருந்தால் இந்த அரசும், அரசுசார் ஊடகங்களும் இப்படியேதான் அதை பாராமுகமாக எதிர்கொள்ளுமா?
2)இந்தியாவில் இப்போது நடப்பதை போல Govt sponsored மரணங்கள் வேறெதாவது ஜனநாயக நாட்டில் நடந்திருக்கிறதா? பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் என தேசபக்தர்களுக்கு பிடிக்காத தேசங்களில் கூட Govt sponsored deaths என்பதை கேள்விப்பட்டதே இல்லையே!! ஹிட்லர் காலத்தில் குளிக்கலாம் வாருங்கள் என யூதர்களை அழைத்துப்போய் விஷவாயுவை ஷவர் வழியாக திறந்துவிடுவார்கள். இங்கே தேசநலன் என்ற பெயரில் கியூவில் நிற்க வைத்து சாகடிக்கிறார்கள்.

அரபு நாடுகளில் கண்ணீர் சிந்தி உழைக்கும் பணத்துக்கும் மோடி அரசு புடுங்க போகிறது சேவை வரி

வெளிநாடுகளில் வேலை செய்யும் நண்பர்கள் கவனத்திற்கு : நாம் நம் தாய் நாடு , குடும்பம் , நண்பர்கள் ,சொந்தங்கள் மற்றும் சொந்த ஊரை விட்டு கடல் கடந்து இங்கு வந்து நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரு பிச்சைகார கும்பல் அரசாங்கம் என்ற பெயரில் நம் பணத்தை கொள்ளை அடிக்க ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது .. அந்த திட்டம் தான் 12.36 % சேவை வரி . அதாவது நம் இந்திய ரூபாய் மதிப்பில் ,
ரூ . 100 க்கு – ரூ .12.36.
ரூ. 1000 க்கு – ரூ . 126.36
ரூ. 10000 க்கு – ரூ. 1236.
ரூ. 100000 க்கு – ரூ. 12360. சேவை வரியாக செலுத்த வேண்டும் ..
நம்ம அரசாங்கம் நமக்கு எந்த சேவை பண்ணி கிளிச்சானுங்கனு இந்த சேவை வரி கேக்குரானுங்கனு .தெரியல. வெளிநாடுகளில் சம்பாதிக்க வரும் அனைவருமே தன்னுடைய குடும்ப தேவைகளுக்கு தான் இங்கு வருகிறோம். அதுவும் கூலி வேலை செய்யும் சகோதரர்கள் எவ்வளவு பாதிக்க படுவார்கள். நாம் இங்கிருந்து அனுப்பும் பணத்திற்கு நாம் ஏற்கனவே இங்கு சேவை வரியாக 14 முதல் 20 ரியால் , திர்ஹம் கொடுக்கிறோம் . இந்த சேவை வரி மூலம் நமது அரசாங்கத்திற்கு ஒரு வருடத்திற்கு 350 முதல் 400 கோடி வரை கிடைக்கிறது .. இருந்தாலும் நமது அரசாங்கம் இது போதவில்லை இவர்களிடம் இருந்து மேலும் பிடுங்கவேண்டும் இந்த சேவை வரி திட்டத்தை அமல் படுத்தி உள்ளது.

செவ்வாய், 29 நவம்பர், 2016

சுப்பர் சிங்கர் போட்டியை புலம்பெயர் தமிழர்கள் நாசமாக்கியது போல டைம் சஞ்சிகையின் சிறந்த மனிதர் போட்டியை நாசாமாக்கிய இந்திய என் ஆர் ஐக்கள்

இரவு பகலாக விழித்திருந்து சுப்பர் சிங்கர் போட்டிக்கு தங்களது  பாடகர்களுக்கு லட்சகணக்கில்  இணையதள வாக்குகளை  போட்டு அதை ஒரு கேலிகூத்தாக்கியது போலவே சங்பரிவார்கள் Time சஞ்சிகை நடத்தும் சிறந்த மனிதர் போட்டியை மாஞ்சு மாஞ்சு ஒட்டு போட்டு  கோமாளி கூத்தாக்கிவிட்டது  பாஜக NRI பரிவாரம் முன்பு bbc யின் உலக சிறந்த பாடல் போட்டியின் போதும் இந்த புலி ஆதரவாளர்கள் எதோ ஒரு புலி பாட்டை இன்டர்நெட் வாக்குகள் மூலமே முதலாவதாக வரவழைத்தனர், அதற்கு பின் bbc அந்த மாதிரி போட்டிகளையே நிறுத்தி விட்டது .

இதுவரை நடந்துள்ள வாக்கெடுப்பு விவரங்கள் வருமாறு:

* இந்திய பிரதமர் நரேந்திர மோடி 21 சதவீதம்
* விக்கிலீக்ஸ் வலைதளத்தின் நிறுவனர் ஜுலியன் 10 சதவீதம்
* அமெரிக்க அதிபர் ஒபாமா 7 சதவீதம்
* ரஷ்ய அதிபர் புடின் 6 சதவீதம்
* அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டெனால்ட் டிரம் 6 சதவீதம் என இணையதளம் மூலம் வாசகர்கள் ஓட்டளித்துள்ளனர். வாஷிங்டன்: பிரபல ஆங்கில பத்திரிகையான ''டைம்'' நடத்தி வரும் 2016-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என்ற பட்டத்திற்கான கருத்து கணிப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உள்ளார்.பிரபல ஆங்கில பத்திரிகையான '' டைம்'' ஆண்டு தோறும் சிறந்த மனிதர் என்ற பட்டத்தை அளித்து வருகிறது.

என்னாச்சு மோடி உங்களுக்கு? ​பயமா இருக்கு எங்களுக்கு...! சோம்பு சினேகன் கவிதை

அம்பானிக்கு சொம்படிச்சீங்க
​அதானிக்கும் சொம்படிச்சீங்க
டாடா, டயருக்கு கூட பம்படிச்சீங்க
மக்களுக்கு மட்டும் ஏன் ஆப்படிசீங்க?
​​
​என்னாச்சு மோடி உங்களுக்கு?
பயமா இருக்கு எங்களுக்கு...!

நாடு நாடா சுத்துறீங்க
மக்களை ரோட்டுல நிறுத்துறீங்க
வேளைக்கொரு ஆடை உடுத்துறீங்க
நாங்க வேலைக்கு போகாம படுத்துறீங்க...!

என்னாச்சு மோடி உங்களுக்கு?
பயமா இருக்கு எங்களுக்கு...!

​மேட்டை வெட்டி போடாம
பள்ளத்தையெல்லாம் மூடாம
பள்ளத்தை மேலும் வெட்டி வெட்டி
சவக்குழிய ஏன்யா தோண்டறீங்க?