செவ்வாய், 13 நவம்பர், 2012

மஞ்சு கிட்னியை ஏன் விற்றாள்?

வினவு
கொச்சிக்கருகிலுள்ள கலமசேரி எச்எம்டி காலனியில் தனது தாயுடன் வசித்து வரும் மஞ்சு (26), தேயிலை கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தாள். அங்கு வேலை பார்த்து வந்த விற்பனை பிரதிநிதி பினு பிரமோத் உடன் அவளுக்கு காதல் ஏற்படுகிறது. வீட்டை விட்டு வெளியேறிய மஞ்சுவும் பினுவும் 2005 இல் திருமணம் செய்து கொள்கின்றனர்.
ஒரு மகனும் பிறந்து விட்ட நிலையில் அவர்களது குடும்பத்தில் பணச்சிக்கல் ஏற்படுகிறது. பினு தனது மனைவி மஞ்சுவின் கிட்னி ஒன்றை தனது நண்பனுக்கு வழங்கி அதன் மூலம் ரூ.10 லட்சம் சம்பாதித்து கடனை அடைக்க திட்டமிடுகிறான். அதற்காக மஞ்சுவுடன் அவன் பேச ஆரம்பித்தவுடன் முதலில் மறுத்த மஞ்சு, இல்லையெனில் அவன் மகனை கொலை செய்து விடுவான் என மிரட்டவே சம்மதிக்கிறாள்.

Bihar cm நிதிஷ் குமார் பாகிஸ்தான் விஜயம்

 

Bihar’s Chief Minister Nitish Kumar, flanked by Sindh Chief Minister Qaim Ali Shah and members of the Sindh Assembly, lays a floral wreath at Mazar-e-Quaid during his visit on Saturday.
 பாகிஸ்தானின் சிந்த் மாகாணம் மற்றும் கராச்சி நகரில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், கடந்த 3 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.நேற்று கராச்சியிலிருந்து பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாத்திற்கு அவர் பயணமானார்.முன்னதாக, கராச்சி கவர்னர் இஷ்ரத்-உல்-இபாத் அளித்த வரவேற்பு விருந்தில் பங்கேற்ற நிதிஷ்குமார் பேசியதாவது:-

40 ஆ‌ண்டு‌க்கு ‌பிறகு இ‌ந்‌தியா வந்தார் ஆங் சான் சூ‌கி

yanmar"s opposition leader Aung San Suu Kyi makes a gesture of greeting upon her arrival at the Indira Gandhi international airport in New Delhi November 13, 2012.
மியான்மரிலஜனநாயகத்துக்காபோராடி வருமஎதிர்க்கட்சிததலைவரும
ஜனநாயகபபோராளியுமாஆங்சானசூகி 40 ஆ‌ண்டுகளு‌க்கு ‌பிறகு இ‌ந்‌தியா வந்துள்ளார அமைதிக்கான நோபலபரிசபெற்றவரும், ஆண்டகாலமமியான்மரிலவீட்டுசசிறையிலஅடைக்கப்பட்டவருமாஆஙசானசூகி கடந்த 40 ஆண்டுகளுக்கபின்னரடெல்லி வந்துள்ளார்.

டெல்லி விமாநிலையத்திலஅவருக்கடெல்லியிலவாழுமபர்மிமக்களஉற்சாவரவேற்பஅளித்தனர். காங்கிரஸதலைவரசோனியகாந்தியினஅழைப்பினபேரிலடெல்லி வந்துள்ஆங்சானசூகி ஒரவாகாலமஇந்தியாவிலசுற்றபயணமமேற்கொள்ளவிருக்கிறார்.Aung San Suu Kyi studied in India as a young woman

மலிவு விலை டேப்லெட் கணினி அறிமுகம்

ஆகாஷ் 2 என்ற மலிவு விலை டேப்லெட் கணினியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று அறி முகம் செய்து வைத்தார்.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மானிய விலையில் ஆகாஷ் டேப் லெட் கணினியை மத்திய அரசு கொடுக்கிறது. தற்போது ஆகாஷ் 2 டேப்லெட் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. டில்லியில் நேற்று இதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்தார். அவர் பேசுகையில், ஆரம்பக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில் இளைஞர்களின் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
ஆகாஷ் 2 டேப்லெட் ஒரு ஜிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட பிராசசர், 512 மெகா பைட் சேமிப்பு திறன், 7 அங்குல தொடு திரை கொண்டதாக இருக்கும். 3 மணி நேரம் இயங்கக் கூடிய வகையில் இதன் பாட்டரிகள் இருக்கும். இந்த டேப் லெட் கணினியை சி டேக் நிறுவனத் தின் ஒத்துழைப்புடன் மும்பை அய் அய்டி உருவாக்கியுள்ளது.டேட்டாவின்ட் நிறுவனம் இதை தயாரித்து சந்தைப்படுத்து கிறது.

INCA மாயன் மக்கள் உருவாக்கிய அடையாளங்கள்


மோட்டார் சைக்கிள் டைரி / அத்தியாயம் 14
Sacsayhuamán
இன்கா மக்களின் தலைநகரமாக இருந்த குஸ்கோ (Cusco) பெருவில் தென்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நகரம். யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக 1983ல் அறிவிக்கப்பட்ட குஸ்கோ, தற்போதைய பெருவின் வரலாற்றுத் தலைநகரமாகவும் திகழ்கிறது.
முற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இந்நகரை வந்தடைந்த எர்னஸ்டோ முதல் பார்வையிலேயே தன் மனத்தை பறிகொடுத்துவிட்டார். ‘பல யுகங்களின் மாயப் புழுதி’ படிந்த தெருக்களில் உற்சாகமாக நடைபோட்டார் எர்னஸ்டோ. இன்கா மக்களின் படைப்புக் கடவுள் விராகோச்சா தனது மக்களுக்காகப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்த பகுதி என்று இது நம்பப்படுகிறது. டவான்டின்சுயு (Tawantinsuyu)) என்னும் பெயரால் குறிக்கப்பட்ட இன்கா சாம்ராஜ்ஜியம், புதிய எல்லைகளைத் தேடி தன் பரப்பை அதிகரித்துக்கொண்ட போது, குஸ்கோவும் அதன் ஒரு பகுதியாக மாறியது.
12ம் நூற்றாண்டில் குஸ்கோவில் வசித்த மேய்ச்சல் நிலப் பகுதி மக்கள், மான்கோ கபாக் (Manco Capac) என்னும் தலைவரால் ஒன்றிணைக்கப்பட்டனர். குஸ்கோ அப்போது உருவான ஒரு நகரம். 1438ல் சாபா இன்கா என்பவர் (பூமியை உலுக்குபவர்) ஆட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கினார். அவரும் அவருடைய மகன் டுபாக் என்பவரும் இணைந்து பெரும்பாலான ஆந்திய மலைப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
‘பல யுகங்களின் மாயப் புழுதி’ என்று எர்னஸ்டோ வர்ணித்திருந்ததற்குக் காரணம் அதன் பழைமை மட்டுமல்ல, பழைமையின் எச்சங்கள் இப்போதும் காணக்கிடைத்ததுதான். உலகத்தின் மையமாக, பூமியின் தொப்புளாக குஸ்கோ திகழ்வதாக மாயன் மக்கள் கருதினார்கள். http://www.tamilpaper.net/?p=7114

ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள்! பொதுமக்கள், அனைத்து கட்சி கோரிக்கை எதிரொலி

சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு எத்தனை சிலிண்டர்கள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. இதை மத்திய அரசு சமீபத்தில் மாற்றி அமைத்தது.அதாவது 1 இணைப்புக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்களைத்தான் மானிய விலையில் வாங்கிக்கொள்ள முடியும் என்றும், அதற்கு மேல் உள்ள சிலிண்டர்களை சந்தை விலையில்தான் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசின் முடிவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

Lionair Flight 602 புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: இன்று மீட்பு நடவடிக்கை

The Sri Lanka Navy had discovered the wreckage of a Lion Air Antonov 24 aircraft in the deep seas off Iranathivu Island, 14 years after the plane was shot down by the LTTE using shoulder-fired missiles.
Navy spokesman Commander Kosala Warnakulasuriya said that on a request made by the Terrorists Investigation Division (TID), the Navy had dispatched a group of elite sea divers to the area where the wreckage was said to have been spotted. Thereafter the Navy had surveyed the sea-bed off the Iranathivu Island in the northern sea and located some parts of the plane that we can now confirm came from the Lion Air plane that went down 14 years ago,” he said.
Viruvirupu  புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் ஏர் விமானத்தை கடலில் இருந்து வெளியே எடுக்கும் மீட்பு நடவடிக்கை இன்று ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இலங்கையின் வட பகுதியில் உள்ள இரணதீவிற்கு அருகாமையில் உள்ள கடல் பகுதியில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்ட விமானம் மூழ்கியுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 50 பேர் கொல்லப்பட்டனர். இலங்கை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கடற்படைச் சுழியோடிகள் விமான இடிபாடுகளை கண்டு பிடித்தனர்.

எம்.ஜி.ஆர். ஆயிரக்கணக்கான ஆசிரியர்களையும் ஆசிரியைகளையும் சிறையில் தள்ளினார்.

'நாஸ்டா ஆச்சா?’ என்ற விசாரிப்புடன்தான் தேன்கனிக்கோட்டைப் பகுதி மக்கள் ஒருவரோடு பேச்சைத் தொடங்குவார்கள். நேரங்காலம், ஆள், அந்தஸ்து, இடம், பொருள் எதையும் கணக்கில் கொள்ளாமல் இப்படி விசாரிப்பார்கள். எப்போது பார்த்தாலும் இப்படி விசாரிக்கிறவர்களோடு இருந்த பழக்கத்தில், அங்கு இருந்த என்னைப்போன்ற வெளியூர்க்காரர்களும்கூட இப்படியாக நண்பர்களை விசாரித்து கேலிக்கு ஆளாவது உண்டு. ஆனால், யோசித்துப் பாருங்கள்... எவ்வளவு கரிசனமான வார்த்தைகள் இவை.
இந்த வார்த்தைகள் யாருடைய பசியையும் ஆற்றிவிடப் போவதில்லை. ஆனால், இப்படி அக்கறையாய் விசாரிக்க ஒருவரும் இல்லாது, நாதியற்றுப்போனோமே என்கிற கவலையில் எத்தனையோ பேர் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்கிறபோது இந்த விசாரிப்பை வெறும் வார்த்தைகள் என்று தள்ளிவிட முடியுமா? சகமனிதன் மீதான கரிசனம் வார்த்தைகளில் இருந்துதான் தொடங்கும் என்றால் அப்படியாவது தொடங்கட்டுமே. இதேபோன்றதொரு பழக்கம் மலேசியத் தமிழர்களிடமும் இருப்பதைக் காணமுடிகிறது. அவர்கள் 'பசியாறிட்டீங்களா?’, 'பசியாறியாச்சா?’ என்பதான கேள்விகளோடுதான் உரையாடலைத் தொடங்குகிறார்கள்.

லண்டனில் தமிழ் இளைஞன் சுட்டுக்கொலை?

பிராண்சில் கடந்த வியாழக்கிழமை புலிகளின் உள்வீட்டுப்பிணக்கில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் புறநகர்ப் பகுதியான லூசியம் எனுமிடத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை இவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் இவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர். ஆனால் மறுநாள் காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

2012ல் பிறக்கும் குழந்தைகளில் 3ல் 1 குழந்தை 100 வயது வாழும்

லண்டன்: 2012ம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் 100 வயது வரை வாழ்வார்கள் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2012ல் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் 100 வயது வரை வாழ்வார்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் 70 வயது வரை வேலை செய்வார்கள் என்றும் தங்கள் தாத்தா, பாட்டியை விட 8 ஆண்டுகள் தாமதமாகவே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.http://tamil.oneindia.in/

தமிழகத்தில் அடுத்த, 10 ஆண்டுகளில், 25 லட்சம் வீடுகள்

தமிழகத்தில் அடுத்த, 10 ஆண்டுகளில், 25 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்துக்காக, மாவட்டம்தோறும், 100 ஏக்கர் வரை, நிலம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலங்களை தேர்வு செய்யுமாறு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.தமிழகத்தில், "அனைவருக்கும் வீடு' என்ற நோக்கத்துடன், வீட்டு வசதி வாரியம், 1961ம் ஆண்டு துவங்கப்பட்டது. இவ்வாரியத்தின் மூலம் இதுவரை, நான்கு லட்சம் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு, 1.25 லட்சம் குடியிருப்புகளும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு, 93 ஆயிரம் வீடுகளும், நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, 72 ஆயிரம் வீடுகளும் இதுவரை ஒதுக்கப் பட்டுள்ளன.
புதிய திட்டம் இல்லை
Ravikumar Arunachalam - Chennai,இந்தியா

Ravikumar Arunachalam எந்த திட்டம் போட்டாலும் அதனால் மக்களுக்கு ஒரு பயனும் வர போவது இல்லை.அ.இ.அ .தி .மு .க அமைச்சர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் அடிக்க போகுது லக்கி prize .தமிழ்நாட்டு மக்கள் வீட்டில் முதலில் ஒளி ஏற்றட்டும் பின்பு வாழ்க்கை தானாகவே ஒளிரும்.எந்த திட்டம் நேரடியாக மக்களை சென்றடையுதோ அன்று தான் நமக்கு விடிவுகாலம்.யாருடைய நிலமெல்லாம் யாருடைய பேருக்கோ போக போகுது http://www.dinamalar.com/

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விறுவிறுப்பு இல்லை Flop

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமங்களுக்கான ஏலம் நேற்று துவங்கியது. இதில், 40 ஆயிரம் கோடி ரூபாயை, எதிர்பார்த்து மத்திய அரசு காத்திருக்கிறது. ஆனால், நேற்று ஏலம் துவங்கி, ஆரம்ப சுற்றுகளில் விறுவிறுப்பு காணப்படவில்லை.வழக்கு:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை, ஏலம் விடாமல், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டதால், அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக, குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டன.
 இதை தொடர்ந்து, மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக ராஜா இருந்த போது, வழங்கப்பட்ட, 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. http://www.dinamalar.com/

திங்கள், 12 நவம்பர், 2012

வைகோ ! நாஞ்சில் சம்பத்! இரு தீபாவளி பட்டாசுகள்


ஸ்டாலின் மீண்டும் உடலெடுத்துவிட்டார். ஆனால் அவர் ரஷ்யாவில் பிறக்கவில்லை.

www.ananthageetham.blogspot.com/      மிகவும் சுவாரசியமான ஆவி உலக சமாச்சாரங்கள் இந்த இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. உலக புகழ் பெற்ற பலரும் ஆவி உலகத்தில் எப்படி இருக்கிறார்கள் என்று அறிவதில் யாருக்குதான் சுவாரசியம் இருக்காது. நம்புவதும் விடுவதும் உங்கள் இஷ்டம் 
ஆபிரகாம் லிங்கனைப் (Abraham Lincoln) பற்றிப் பார்ப்போம். அவர் ஒரு பிரகாசமான ஆத்மா. எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டும் மென்மையான ஆத்மா. இங்கே நீண்ட காலம் தங்கியிருந்தபின் அவர் மீண்டும் உடலெடுத்துள்ளார். இப்போ நியூ ஓர்லீன்ஸ் (New Orleans) இல் வாழ்கிறார். அங்கே அவர் தெற்கத்திய இனப்பிரச்சனையின் எல்லா விதமான முகங்களையும் எல்லா விதமான வெளிப்பாடுகளுடன் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் இப்போ வயது வந்தவராகி விட்டார். அவர் இதற்குச் சரியான தீர்வு கிடைக்க பல்கலைக்கழகங்களுடனும், அறக்கட்டளை நிறுவனங்களுடனும் சேர்ந்து வேலை செய்கிறார்.
ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington)? அவர் சிறிதுகாலம் கண்ணில் படமாட்டார். ஏனெனில் சமீபத்தில் வியட்நாமில் ஒரு போராளியாக வாழ்ந்து முடித்தபின் இப்போ ஓய்வெடுக்கிறார். அவரது இறப்பானது அவ்வளவு அதிர்ச்சி நிறைந்ததாகையால், சிறிது காலத்துக்கு அவர் நித்திரை கொள்வார். ஒரேயொரு விஷயத்தைத் தவிர அவரது கடைசிப் பிறப்பின் அடையாளத்தை நாம் இதற்கு மேல் சொல்வதற்கு விரும்பவில்லை. அதாவது அவர் ஒரு படைப்பிரிவைத் தைரியத்துடன், எதிரிகளின் படைவரிசைகளின் பின்னே வழிநடத்திச் சென்றபோது கைப்பற்றப்பட்டுவிட்டார்.
"சார்லஸ் த கால் (Charles de Gaulle) ஐரோப்பாவினதும் மத்தியகிழக்கு நாடுகளினதும் வளர்ச்சிகளை ஆவலுடன் கவனிக்கிறார். அங்கே பழக்கப்பட்டது போல இங்கே வந்ததும் வராததுமாக அவர் தனது கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொண்டார். ல பெல் பிரான்ஸ் (La Belle France) என அவர் அழைக்கும் பிரான்ஸ் நாட்டுக்கு ஏதாவது துயர் வருமெனில் எப்பொழுதும் தீக்குதிரை போல நிற்பார்.  
இது A World Beyond என்ற ஆங்கிலப்புத்தத்தின் மொழிபெயர்ப்பு. இந்தப் புத்தகத்தின் எழுதுனர் ரூத் மோன்ட்கோமேரி (Ruth Montgomery) எனும் பெண்மணி. மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் அல்லது தெய்வங்கள் வந்து (கலை வந்து) கதைப்பதைப் போல மேற்கத்தைய உலகில் Automatic Writing என்று அழைக்கப்படும் ஆத்மாக்கள் எங்கள் மூலம் வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதப் பண்ணுவது என்ற ஒரு விடயம் உள்ளது. இப்புத்தகம் அப்படியாகத்தான் எழுதப்பட்டது. ஆர்தர் போர்ட் என்று இந்த எழுதுனருக்கு (Ruth Montgomery க்கு) தகப்பனை போல இருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்ட புத்தகம் இது
 www.ananthageetham.blogspot.com/

தருமபுரி..எல்லா ஜாதிக்காரர்களும் குற்றவாளிகளாக தெரிவார்கள்.

தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

எவ்வளவு அதர்மங்கள்; எவன்டா பேரு வைச்சான் ‘தர்ம’புரின்னு
காதல் திருமணங்களில், ஆண் ஆதிக்க ஜாதியாக இருந்து, பெண் தாழ்த்தப்பட்டவராக இருந்தால், அந்த திருணங்களை தன் ஜாதிக்கு ஏற்பட்ட கலங்கமாக ஆதிக்க ஜாதிக்காரர்கள் பார்ப்பதில்லை.
காரணம், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்வதை, தனது ஜாதி திமிர்களில் ஒன்றாக கருதுவது இந்து ஜாதி சமூக அமைப்பின் மனநிலை.
ஒருவேளை, தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் முடிப்பது பிரச்சினையானலும், அது மகனுக்கும் அப்பனுக்குமான சண்டையாக முடிந்து, மகன் வீட்டை விட்டு வெளியேறுவதோடு முடிந்துவிடும்.
மாறாக, பெண் ஆதிக்க ஜாதியாகவும், ஆண் தாழ்த்தப்பட்டவராகவும் இருந்தால், அந்த திருமணச் சண்டை குடும்ப சண்டையோடு முடிவதில்லை. அந்தச் சேரியில் உள்ள ஒட்டுமொத்தமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கொலைவெறி தாக்குதலாக வடிவம் பெறுகிறது.
இதுகாறும் ஜாதி மறுப்பு திருமணம் என்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எல்லாமே, பெண் ஆதிக்க ஜாதியை சேர்ந்தவராக இருப்பதாலேயே நடந்திருக்கிறது.
இந்த ஜாதி இந்து உளவியலின் அடிப்படையில்தான் சினிமாவில், இலக்கியத்தில் கூட ஜாதி மறுப்பு முற்போக்காளர்களாக தங்களை காட்டிக் கொள்ளும். ஆதிக்க ஜாதியை சேர்ந்த படைப்பாளர்கள், காதலில் ஆணை தன் ஜாதியாக அல்லது ஆதிக்க ஜாதியாகவும் பெண்ணை தாழ்த்தப்பட்டவராகவும் மட்டுமே காட்டுகிறார்கள்.http://mathimaran.wordpress.com/

மாஜி ஆண் மாஜி பெண் மலர்ந்தது சுவாரஸ்ய காதல்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
வாஷிங்டன்: உடல் மாற்றம் காரணமாக திருநங்கைகளாக இருப்பவர்கள் மற்றும் ஆபரேஷன் செய்து பாலினம் மாற விரும்புபவர்களுக்கான அமெரிக்க  அமைப்பு ‘துல்சா’. ஒக்லஹாமாவில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் கேத்தி ஹில் (18), அரின் ஆண்ட்ரூஸ்  (16). சிறு வயதில் இருந்தே இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் இடையே தற்போது காதல் மலர்ந்துள்ளது.
இருவருமே விரும்பி பாலின மாற்றம் செய்து கொள்ள முடிவு செய்தவர்கள். இதற்காக ஹார்மோன் தெரபி சிகிச்சையும் எடுத்துக்கொண்டனர்.  பிறவியில் அரின் ஆண்ட்ரூஸ் பெண்ணாக இருந்தவர்.  http://www.tamilmurasu.org/index.asp

சிறுதாவூர் பங்களாவில் தீபாவளி கொண்டாடும் ஜெயலலிதா

அடுத்த ஷாட் ரெடியானதும் அம்மா போயஸ் தோட்டத்துக்கு  வருவாங்க அவசரமா எதினாச்சும் தேவையின்னா ப்ரொடக்ஷன் பாய்கிட்ட ( அட நம்ப பன்னீர்ங்க)  சொல்லுங்க 

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில் தீபாவளியைக் கொண்டாடுகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் உள்ள பங்களாவுக்கு அடிக்கடி சென்று ஓய்வெடுப்பது முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கம். கடந்த செப்டம்பர் மாதம் அவர் அங்கு சென்று ஓய்வெடுத்தார். அப்போது அவர் அங்கிருந்தே அரசு பணிகளை செய்து வந்தார். அங்கு தங்கியிருந்த நேரத்தில் கோட்டை மற்றும் சென்னையில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக வந்து சென்றார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் சிறிதாவூர் பங்களாவுக்கு சென்றுள்ளார்.

வடிவேலு: எனக்கு நாந்தாங்க போட்டி, சந்தானமெல்லாம்... இது கடல் மாதிரிங்க

சென்னை: எனக்கு நாந்தாங்க போட்டி. சந்தானத்தையெல்லாம் போட்டியாக நினைக்கவில்லை. இது கடல் மாதிரிங்க, யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம்... என்று கூறியுள்ளார் நகைச்சுவைப் புயல் வடிவேலு.
மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறார் வடிவேலு. ஒரே சமயத்தில்ல பல படங்களில் அவர் புக் ஆகியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் இந்த இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கையைப் புரிந்து கொண்டேன் என்று தத்துவார்த்தமாக பேசியுள்ளார் வடிவேலு.
இதுதொடர்பாக ஒரு பத்திரிகைக்கு வடிவேலு அளித்துள்ள பேட்டியில்,
நான் சினிமாவை விட்டு விலகி விடவில்லை. இன்னும் இந்த துறையில்தான் இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். தற்போது புதிய உத்வேகத்தோடு மீண்டும் நடிக்க வந்துள்ளேன்.

ஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி .. தங்கள் பங்காளியை தாங்களே

எத்தனை பேரை ஓட ஒட சுட்டீர்கள். வன்னியில் தங்கள் உயிரைக்காக்க தப்பி ஓடியவர்களைச் சுட்டார்கள் புலிகள். அதெல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டாகப் படவில்லை. பரிதி மட்டும் தன்னுடைய உயிரைக் காக்க ஓடினாரோ? பரிதிக்கு மட்டும் பரிதாபப்படுகிறீர்கள். உங்களுடைய ஆட்கள்தான் பரிதியைக் கொன்றார்கள்.
பிரபாகரன் சுடும்போது ஏன் என்னைச் சுடுகிறீர்கள் என்று அல்பிரெட் துரையப்பா கேட்டார். நீங்கள் துரோகி பட்டம் கொடுத்து சுட்டுக் கொன்றவர்கள் எல்லோரும் நிமிர்ந்து நின்று குண்டு வாங்கினார்களோ? தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிக் கொண்டுபோன பாலா ஐயரை ஓட ஓடச் சுட்டீர்கள். பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே வரும்போது விமலேஸ்வரனை சைக்கிளில் வைத்து துரத்திச் சுட்டவர்கள் புலிகள். புத்தளத்தில் தன் பிள்ளைகளுடன் வந்து கொண்டிருந்த பவான் என்பவரை சுட்டு கொன்றுவிட்டு உங்கள் அப்பா செத்துப் போனார் என்று அம்மாவிடம் சொல்லுங்கள் என்று சொன்ன கொடூரம் நாங்கள் மறந்துவிடவில்லை. கேதீஸ் லோகநாதனை ஓட ஓட சுட்டவர்கள் புலிகள். ஒரு பெண், ஒரு டாக்டர்,ஒரு பேராசிரியை என்றும் பாராமல் ராஜினி திராணகமவைச் சுட்டவர்கள் புலிகள். வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரம் செய்த பெண்ணை பொம்மை வெளியில் வைத்து துரத்தித் துரத்தி சுட்டார்கள் புலிகள்.வசந்தன் என்னைச் சுடாதே என்று கெஞ்சக் கெஞ்ச ஆலய வழிபாட்டிற்குச் சென்ற மகேஸ்வரன் எம்பியை சுட்டவர்கள் புலிகள். கதிகாமர்,பத்மநாபா போன்றவர்களைச் சுட்டுக் கொன்றபோது விருந்துண்டு மகிழ்ந்தீர்கள். பேசச் சென்றபோது உள்ளே அழைத்து தேனீர் கொடுத்தவர் அமிர்தலிங்கம்,நயவஞ்சகமாக நடித்து அமிதலிங்கத்தையும்,யோகேஸ்வரனையும் அவர்கள் மனைவியரின் முன்னால் சுட்டுக் கொன்றவர்கள் புலிகள். யோகேஸ்வரனின் மனைவி சரோஜினியைக் கொன்றவர்கள் புலிகள். பாரிஸ்  சபாலிங்கம் வீட்டுக்கு அண்ணே ஒரு உதவி என்று கேட்டு கதவை அவர் திறந்ததும் மனைவி மகன் முன்பாகவே  சுட்டு கொன்றீர்கள்  இராணுவம் போல் வேடமிட்டுச் சென்று மகேஸ்வரி வேலாயுதத்தை அவர் தாயார்,சகோதரர்களின் முன்னால் வைத்து சுட்டுக் கொன்றவர்கள் புலிகள். அதிபர் ஆனந்தராஜா,அதிபர் இராசதுரை,அதிபர் சிவகடாட்சம் என்று புலிகள் ஓட ஓடச் சுட்டுக் கொன்றவர்களின் பட்டியலை எழுத இங்கு பக்கங்கள் போதாது.

யோகா குரு ராம் தேவ் 5 கோடி.. வருமான வரித்துறை நோட்டீஸ்

ரூ. 5 கோடி வரிப்பணம் கட்ட யோகா குரு ராம் தேவ் நிறுனத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

வரி ஏய்ப்பு தொடர்பாக 5 கோடி ரூபாய் அபராதம் கட்ட யோகா குரு பாபா ராம்தேவ் அறக்கட்டளைக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா ட்ரஸ்ட் ஆகியவை சார்பாக ஹரித்துவாரில் நடத்தப்பட்ட சிவ்ரிஸ் யோகா முகாம்களில் கலந்துகொண்டவர்களிடம் வியாபார நோக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அதில் 5.14 கோடி ரூபாய் சேவை வரி கட்டுவதிலிருந்து இந்நிறுவனம் நழுவியுள்ளது என்றும், அதை உடனடியாக கட்ட வேண்டுமெனவும் கூறி மத்திய ஆயத்தீர்வை புலனாய்வு இயக்குனரகம் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது 2007 -2008 மற்றும் 2011-2012 காலகட்டத்தின்போது நடந்த முகாம்களின் போது கட்டப்பட வேண்டிய சேவை வரித்தொகை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.http://www.nakkheeran.in/

ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்க பெயரினை மாற்ற கெஜ்ரிவால் முடிவு

புதுடில்லி: ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பெயரினை மாற்ற சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக காந்தியவாதி அன்னா ஹசாரேவின் கோரிக்கையை ஏற்று தனது இயக்கத்திற்கு புதிய பெயர் வைக்க உள்ளார்.
ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற அமைப்பில் காந்தியவாதி அன்னா ஹசாரேயின் கீழ் குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவில் உறுப்பினராகவும் ஹசாரேயின் வலது கரமாக இருந்தார் அரவிந்த் கெஜ்ரிவால் .இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் டில்லியில்நடந்த உண்ணாவிரதப்போராட்டத்திற்கு பின் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பு அரசியல் கட்சியாக மாற்றிட முடிவு செய்யப்பட்டது.இதற்கு ஹசாரே எதிர்ப்பு தெரிவித்தார். தான் அரசியல் கட்சி துவக்குவதில் விருப்பமில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து ஹசாரே குழு இரண்டாக பிரிந்தது. ஹசாரேவும் தனது குழுவை கலைத்தார்.http://www.dinamalar.com/

2050 ஆம்ஆண்டில் பிரிட்டனில் திருமணம் என்ற ஒன்று இருக்காது

பிரிட்டனில் முறையாக திருமணம் செய்து கொண்டு வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் முறையாகத் திருமணம் செய்யாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.பிரிட்டனின் சமூக நீதிக்கான மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுத்தர குடும்பங்களில் தான் திருமணம் செய்து கொண்டு வாழும் முறையை அனைவரும் பின்பற்றி வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது பிரிட்டனில் தற்போது 50 சதவிகித பேர் மட்டுமே முறையாக திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்நிலை தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டில் திருமணம் செய்து வாழ்வோரின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும்.< இதற்கு பிரிட்டன் குடும்ப வாழ்க்கையை பலப்படுத்த தெளிவற்ற திட்டத்தை கையாள்வதே காரணமாகும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 11 நவம்பர், 2012

2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நாளை துவங்குகிறது

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் ரத்து செய்ததை தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நாளை துவங்குகிறது. இந்த ஏலத்தில் அரசிற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாக கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்குவதில், பெரும் ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறி, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. யூனிநார்(22), வீடியோகான்(21), லூப்(21), ஐடியா(13) சிஸ்டெமா ஷியாம்(21), எடிசாட் (15), எஸ் டெல்(6) மற்றும் டாடா டெலிசர்வீஸ்(3 சி.டி.எம்.ஏ.,) நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள்,

சர்ச்சைக்குரிய ஸ்ரீரங்கம் பிராமணாள் கபே இழுத்து மூடப்பட்டது!

திருச்சி:ஸ்ரீரங்கத்தில் சர்ச்சைக்குரிய பிராமணாள் கபேயை இழுத்து மூடுமாறு கட்டிட உரிமையாளர் உத்தரவிட்டதால் கடை காலி செய்யப்பட்டுவிட்டது.
ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணய்யர் என்ற ஹோட்டலின் பெயர் பலகையில் 'பிராமணாள் கபே' என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கு எதிராக பெரியார் திராவிடர் கழகத்தினர் மறியல் போராட்டம் நடத்தி சிறைக்குப் போனார்கள். திராவிடர் விடுதலைக் கழகமும் போராட்ட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் போட உதவிய HSBC மீது விசாரணை

இந்தியர்கள் கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் போட உதவிய எச்.எஸ்.பி.சி வங்கி மீது விசாரணை புதுடெல்லி: இந்தியர்களின் கருப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் போட உதவிய எச்எஸ்பிசி வங்கி மீது விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியில் தங்கள் கருப்பு பணத்தை போட்டு வைத்திருந்த இந்தியர்கள் 700 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பிரான்ஸ் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=30702