செவ்வாய், 18 ஜூன், 2024

அகதிகளை கிரீஸ் கடலோர காவல்படை கடலில் வீசியது” – நேரில் கண்ட சாட்சிகள் தகவல்

BBC Tamil  : மூன்று ஆண்டு காலப்பகுதியில், மத்தியதரைக் கடலில் டஜன்கணக்கான தஞ்சம் கோரிகள் இறந்ததற்கு கிரீஸ் கடலோரக் காவல்படை தான் பொறுப்பு என சாட்சிகள் கூறுகின்றனர்.
கடலோரக் காவல்படையினர் ஒன்பது தஞ்சம் கோரிகளை வேண்டுமென்றே கடலில் தூக்கி வீசினர் என்றும் சாட்சிகள் கூறுகின்றனர்.
கிரீஸ் கடல் எல்லையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாலோ,
கிரீஸ் தீவுகளை அடைந்த பிறகு மீண்டும் கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாலோ 40-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் அந்த ஒன்பது பேரும் அடங்குவர், என்று பிபிசி பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.

மோடி அரசின் நாடுகடந்த பயங்கரவாதம் பற்றி அவுஸ்திரேலியா ABC காணொளி How the Modi regime targets people overseas

 ராதா மனோகர் : அவுஸ்திரேலிய ஏ பி சி தொலைக்காட்சி நிறுவனம் மோடியை பற்றிய ஒரு ஆவண காணொளியை வெளியிட்டுள்ளது
ஆர் எஸ் எஸ் இன் நாடு கடந்த பயங்கரவாதம் பற்றியும் பாஜகவின் இந்த்துவ மதவெறி அரசியல் பற்றியும் பல செய்திகளை அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது
இந்த காணொளியை தவறவிடாமல் பாருங்கள்
மோடி குழுமத்தின் வண்டவாளங்கள் உலக அரங்கில் அம்பலமாகி விட்டது

அரியலூர மூட நம்பிக்கையால் சொந்த பேரனை கொன்ற வீரமுத்து

 tamil.oneindia.com  -  Mani Singh S :   அரியலூர்: அரியலூரில் பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை டிரம் தண்ணீரில் முக்கி கொலை செய்த தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர். சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்ததால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற மூடநம்பிக்கையால் பேரக்குழந்தையை அவர் கொலை செய்ததாக போலீசில் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து - ரேவதி தம்பதி. இவர்களுக்கு அனுசியா, சுகன்யா, சங்கீதா என்று 3 மகள்கள் இருக்கிறார்கள். இதில், அனுசியா உள்ளூரிலேயே திருமணம் ஆகி அங்கேயே வசித்து வருகிறார்.

பிரியங்கா காந்தி வயநாட்டில் (கேரளா) போட்டி! ராகுல் காந்தி ரேபரேலி நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்வார்


BBC தமிழ்  : மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். வயநாடு தொகுதியில் அவரது சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் இந்த முடிவின் பின்னணி என்ன?
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முந்தைய இரு தேர்தல்களைக் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டு கிட்டத்தட்ட இருமடங்கு இடங்களை வென்றது. காங்கிரசுக்காக நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்த ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் இருந்து மக்களவைக்கு தேர்வானார். இரு தொகுதிகளிலும் 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

நீட் மோசடி: பீகாரில் மாணவர்களிடம் ரூ.32 லட்சம் - வினாத்தாளை கசியவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம்

dinakaran.com - Lavanya :  பீகாரில் நீட் தேர்வுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்களிடம் 32 லட்சம் ரூபாயை பெற்று கொண்டு வினாத்தாளை கசியவிட்டதாக தரகர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது பெற்றோர்களையும், மாணவர்களையும், திடுக்கிட வைத்துள்ளது.
கடந்த மே 5ம் தேதி நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் ஜூன் 14ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாரும் சற்று எதிர்பாராத வகையில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஜூன் 4 தேதி அன்று நீட் தேர்வு முடிவுகள் திடீரென வெளியாகி பலத்த சந்தேகத்தை கிளப்பியது.
அந்த சந்தேகத்திற்கு பளு சேர்க்கும் விதமாக நீட் தேர்வில் நடத்தப்பட்ட முறைகேடுகள் மற்றும் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளியான வண்ணம் உள்ளன.

திங்கள், 17 ஜூன், 2024

மேற்கு வங்க ரயில் விபத்து 15 பேர் உயிரிழப்பு ! “மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - காங்கிரஸ் குற்றச்சாட்டு

 hindutamil.in :  புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று காலை மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.

இவிஎம் மெஷின் பாதுகாப்பானதா? எலான் மஸ்க் - ராஜீவ் சந்திரசேகர் இடையே வார்த்தைப் போர்


மின்னம்பலம் - Selvam :  ன்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும் என்று டிவிட்டர் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். மனிதர்கள் அல்லது ஏஐ தொழில்நுட்பம் மூலம்   இவை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து உள்ளது” என்று கருத்து பதிவிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களால் கைது செய்யப்பட்ட பெண்களுக்கு என்ன நடந்தது? - BBC News தமிழ்

காபூலில் நடத்தப்பட்ட போராட்டம்

bbc.com -  Parwana Ibrahimkhail Nijrabi : ஆப்கானிஸ்தானில் பெண்களின் வேலை, கல்வி மற்றும் பொது வெளியில் அவர்கள் நடமாடுவது தொடர்பான பல தடைகளை தாலிபன்கள் விதித்தனர். தொடக்கத்தில் சில பெண்கள் இந்தப் புதிய விதிகளை எதிர்த்து தெருக்களில் இறங்கிப் போராடினர்.
ஆனால், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் பிற முக்கிய நகரங்களில் 'உணவு, வேலை, சுதந்திரம்' என உரிமைகளைக் கோரியவர்கள், தாலிபன்களின் முழு பலத்தையும் வெகு விரைவில் உணர்ந்தனர்.

ஞாயிறு, 16 ஜூன், 2024

பாகிஸ்தானில் 72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை - முதியவர் போலீசாரால் கைது!

 தினத்தந்தி :  பாகிஸ்தானில்  பணத்திற்காக 72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை
பாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியில் 12 வயது சிறுமியை திருமணம் செய்ய இருந்த 70 வயது முதியவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கைபர் பக்துன்குவா,
பாகிஸ்தான் நாட்டில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. எனினும், முதியவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. 12 வயது சிறுமியின் தந்தை ஆலம் சையது என்பவர், 72 வயது முதியவரான ஹபீப் கான் என்பவரிடம் அந்நாட்டு மதிப்பின்படி, ரூ.5 லட்சம் பணம் பெற்று கொண்டு மகளை விற்றுள்ளார்.

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திரிகோணமலை ஹாசன் சலாமா - 15 வயது!

 hirunews.lk :  பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 15 வயது சிறுவன்!
திருகோணமலையைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர் நேற்றைய தினம் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் தனுஸ்கோடியில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ஹஷன் ஸலாமா என்ற குறித்த சிறுவன் முற்பகல் 11மணியளவில் தலைமன்னாரை அடைந்துள்ளார்.
இதன்படி பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் 8வது நபராக அவர் திகழ்கிறார்.

எலன் மஸ்க்கின் சம்பளம் 56 பில்லியன் டொலர் - எதிர்த்து நீதிமன்றம் செல்லும் பங்குதாரர்கள்

 tamil.goodreturns.in  :   உங்க பேராசைக்கு அளவே இல்லையா? – எலான் மஸ்க்கிற்கு குட்டு வைக்கும் பங்குதாரர்..!
அமெரிக்கா: எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டு வரக்கூடிய டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கிற்கு 56 பில்லியன் டாலர்களை மொத்த ஊதியமாக வழங்குவதற்கு முக்கிய பங்குதாரரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் சர்வதேச அளவில் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கக்கூடிய மொத்த ஊதியமாக 56 பில்லியன் டாலர்களை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கோவை - பழங்குடி மக்களின் 44.3 ஏக்கர் நிலத்தை ஜக்கி வாசுதேவ் ஆக்கிரமிப்பு நீதி கேட்க போன தோழர்கள் மீது ஜாக்கியின் அடியாட்கள் தாக்குதல்

 தமிழ்க்கவி  :  கோவை ஈஷா நிறுவனம் அராஜகம். தலைவர்கள், தோழர்கள் மீது தாக்குதல்!
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன் தலைமையில் சென்ற உண்மை அறியும் குழுவினர் மீது ஈஷா மைய அடியாட்கள் தாக்குதல்.
தமிழ்நாடு அரசே உடனடியாக நடவடிக்கை எடு!
கோவை பேரூர் வட்டம் இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் அமெரிக்க கவுண்டர் பழங்குடி மக்களுக்கு வழங்கிய 44.3 ஏக்கர் நிலத்தை ஜக்கி வாசுதேவின்  ஈசா பவுன்டேசன் நிறுவனம் ஆக்கிரமித்து பயன்படுத்தியது
இது தொடர்பாக கடந்த 2016 டிசம்பரில் அனைத்து முற்போக்கு இயக்கங்கள் இணைந்து பெரும் போராட்டம் நடத்தியதில்,
 கோவை தெற்கு வருவாய் கோட்டாச்சியர் தலைமையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு,
 44.3 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்றும்,
 நிலத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும் பேரூர் வட்டாச்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மலேசியா வாசுதேவன் - முத்தான ஐம்பது செய்திகள்

May be an image of 1 person and smiling

 Kana Praba :  மனசில் நிறைஞ்ச  மதுரக் குரலோன்  மலேசியா வாசுதேவன்
முத்தான ஐம்பது செய்திகள்!
எம் வாழ்வியலின் அங்கமாகிப் போனவர்களில் ஒருவர் மலேசியா வாசுதேவன் அண்ணன் இன்று அகவை எண்பதுக்குள் செல்கிறார்.
அவருடைய வாழ்வியலின் ஐம்பது செய்திகளைத் தரலாம் என்று தீர்மானித்து உழைத்ததை இங்கே பகிர்கிறேன்.
இந்தப் பதிவைத் தொகுத்து எழுத மூன்று மணி நேரம் பிடித்தது. ஆகையால் தயவு செய்து என் பெயரை நீக்கி விட்டு வாட்சாப், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பகிர வேண்டாம்.
முழுமையான பதிவை என் தளத்தில் படிக்கலாம்radiospathy.com
1. மலேசியா வாசுதேவன் பாடிய முதற் திரையிசை “பாலு விக்கிற பத்மா” பாடல் வி.குமார் இசையில் டெல்லி to மெட்ராஸ் (1972). புகழ்பூத்த கவிஞர் மாயவநாதன் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். மாயவநாதன்  இறந்த பின் அஞ்சலிக் குறிப்போடு படம் வெளியானது. மலேசியா வாசுதேவ் என்ற பெயரில் அறிமுகமானார்

சனி, 15 ஜூன், 2024

பாஜகவின் “கரசேவையை”த்தான் sick சீமான் செய்துகொண்டிருக்கிறார். அதுவும் சொந்த ஆதாயத்துக்காக!

May be an image of 2 people and text

LR Jagadheesan  :  பேசாப்பொருளை பேசத்துணிந்தேன்
இந்தியாவின் மதசிறுபான்மையினர் தொடர்பாக ஆர்எஸ்எஸ்/பாஜகவின் அடிப்படை கொள்கைக்கும் தமிழ்நாட்டின் மொழிவழி சிறுபான்மையினர் மற்றும் மதவழிசிறுபான்மையினர் தொடர்பிலான சீமானும் அவரது கட்சியும் முன்னெடுக்கும் அடிப்படை கொள்கைக்கும் என்ன பெரிய வேறுபாடு?
முந்தையது பாசிசமென்றால் பிந்தையதன் பெயர் என்ன?
முஸ்லீம்களுக்கென்று பாகிஸ்தான் பிரித்துக்கொடுத்தபின் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்த தனி உரிமையும் கிடையாது/கூடாது, அப்படி கேட்பவர்கள் பாகிஸ்தானுக்குப்போங்கள் என்கிற கோஷத்துக்கும்;
மொழிவழி மாநிலங்கள் பிரிந்தபின் தமிழ்நாட்டின் பிறமொழியாளர்கள் அரசியல் உள்ளிட்ட அதிகாரங்கள் எதிலும் பங்கேற்கக்கூடாது அப்படி கோருபவர்கள் ஆந்திராவுக்கு செல்லுங்கள் என்றும் இஸ்லாம் கிறிஸ்தவம் உள்ளிட்ட மாற்றுமதத்தவர்கள் முழுமையான தமிழர்கள் அல்ல என்றும் கூறும் சீமான் கட்சியின் அறிவிக்கப்பட்ட கொள்கைக்கும்
என்ன பெரிய வேறுபாடு?

நீட் சீட்டை 50 முதல் 70 லட்சங்களுக்கு விற்கிறது 2 கர்நாடக மருத்துவ கல்லூரிகள்

 James Vasanthan  :   (சமூக ஊடகத்தில் வந்த அதிர்ச்சியூட்டும் தகவல்)
கர்நாடகாவில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன!
ஒரு ஏஜண்ட் ஒருவரை அமர்த்திக் கொள்கிறார்கள்! அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா செல்கிறார்! அங்கிருந்து மருத்துவம் முதலாமாண்டு அல்லது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 300 பேர்களை அழைத்து வருகிறார்!
அவர்களை நீட் பரீட்சை எழுத வைக்கிறார்!
அவர்களும் ரேங்க் வாங்கி பாஸ் ஆகிறார்கள்!
அவர்கள் கௌன்சிலிங்க் எங்கு வேண்டுமென்றால் சித்தார்த்தா காலேஜையே சொல்கிறார்கள்!
முதல் ரவுண்ட் கவுன்சிலிங் வருகிறார்கள்!
அதற்கு ரெக்கார்ட் வெரிபிகேஷன் இல்லை என்பதால் நீட் மார்க்கை கொடுத்து சீட் பெறுகிறார்கள்!
பின் சேராமல் விடுகிறார்கள்! இதற்கு அவர்களுக்கு பைன் எதுவும் இல்லை!

தமிழ்நாட்டு உள் விவகாரங்களில் தலையிடலாமா? இலங்கை உள் விவகாரங்களில் தலையிடலாமா?

 Sundaram  :  திராவிட எதிர்ப்பு அரசியலை இணையத்தில் முன்னெடுத்து பரப்புரை செய்வதையே முழு நேர வேலையாகக் கொண்டிருப்பவர்கள் 99%பேர் இலங்கைத் தமிழர்... (புலம்பெயர்ந்தோர் மட்டுமன்றி இலங்கை வாழ் தமிழர்களும்)
ஏன் இந்த நிலைமை?
தமிழ்நாட்டு அரசியலில் இவர்களுக்கு என்ன அக்கறை?
இது இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் செயல் இல்லையா?

ராதா மனோகர்  : நீங்கள் கூறுவது உண்மைதான்
இதில் மறுபக்கத்தையும் பார்க்கவேண்டும்
இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகள் ஊடகங்கள் பல பெரிய பிரமுகர்கள் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் பாரதூரமாக தலையிடுகிறார்களே?
அதையும் கொஞ்சம் நிறுத்தவேண்டும்

வெள்ளி, 14 ஜூன், 2024

ATM-இல் பணம் எடுக்க இனி அதிக செலவாகும்: கட்டணம் உயர்கிறது!

 zeenews.india.com  -  Sripriya Sambathkumar :  ATM Withdrawal Charges: நாட்டில் டிஜிட்டல் பண பரிமாற்றம் வேகமாக அதிகரித்து வருகின்றது.
எனினும், இன்னும் ரொக்க பயன்பாடும் இருந்துகொண்டு தான் இருக்கின்றது.
பணத்தை அதிக அளவில் வீட்டில் வைத்துக்கொள்ளாமல், அவ்வப்போது ஏடிஎம் -களில் பணத்தை மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.
ஏடிஎம் இயந்திரத்திலிருந்து அடிக்கடி பணம் எடுக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நிர்ணயிக்கப்பட்ட இலவச வரம்பிற்கு மேல் ஏடிஎம் -இல் இருந்து பணம் எடுத்தால், இனி அதற்கு அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இது ஏடிஎம் பயனர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியான செய்தியாக வந்துள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட வாய்ப்புள்ளது !

மின்னம்பலம் -indhu  :  கேரள மாநிலம் வயநாட்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அங்கு பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகளின் படி, வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 6,47,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதேபோல், ரேபரேலி தொகுதியில் 6,68,649 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.

மதன் மோகன் - பல மதன மோகன ட்யூன்களின் சொந்தக்காரர் - Madan Mohan

 Janarthanan KB :   சில நண்பர்களுடன் சேர்ந்து மிக மிகச் சிரமப்பட்டு தான் தயாரித்த,
தானே இசையமைத்த படத்தை தன் தந்தைக்கு போட்டுக் காட்டுகிறார் அந்த இளைஞர்.
(தந்தையோ Filmistan பட நிறுவனத்தில் பார்ட்னர். இருந்தாலும் நடிக்கவும் இசையமைக்கவும் ஆசைப்பட்ட தன் மகனுக்கு எந்த ஆதரவும் தராமல் ஒதுக்கியிருந்தார்.)
படம் முடிந்ததும் ஏதும் சொல்லாமல் எழுந்து காருக்கு போய்விட்டார் தந்தை.  
மகன் சென்று பார்த்தால் அழுது கொண்டிருக்கிறார்:
‘உன் திறமையை நான் மதிக்காமல் போய் விட்டேனே!’ அந்த மகன்...
சமீபத்தில் நடந்த ஒரு தேர்ந்தெடுப்பில் இதுவரை வந்த காதல் பாடல்களில் மிகச் சிறந்தது என்று முடிவானது ‘Woh Kaun Thi?’ படத்தில் வரும் “Lag Jaa Gale” அந்த இசையமைப்பாளர்...

வியாழன், 13 ஜூன், 2024

140 தொகுதிகளில் மறுவாக்கு தேவை ! EVM மோசடியால் ஆட்சியை பிடித்த பாஜக

140 தொகுதிகளில் மறுவாக்கு தேவை !   

இ வி எம் மோசடியால் ஆட்சியை பிடித்த மோசடி பாஜக

பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோரமுடியாது.. AR ரஹ்மான் போல அவர் ஒப்பந்தம் போடல: எக்கோ வாதம்!

tamil.oneindia.com -Vignesh Selvaraj  :  சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது, ஏ.ஆர்.ரஹ்மான் போல அவர் ஒப்பந்தம் செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம் வைத்துள்ளது.
பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது. சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் வாதங்களை அடுக்கியுள்ளது.

அதானி குழுமம் 10,422 கோடி ரூபாய்க்கு பென்னா சிமெண்ட்-ஐ வாங்குகிறது

 மாலை மலர் :  அதானி குழுமம் பெரும்பாலான தொழில்களை நடத்தி வருகிறது. கட்டுமான தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் சிமெண்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. அம்புஜா சிமெண்ட் நிறுவனம் அதானி குழுமத்தை சேர்ந்ததாகும்.
இந்த நிலையில் அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு விளங்கும் பென்னா சிமெண்ட் நிறுவனத்தை 10,422 கோடி ரூபாய்க்கு வாங்க இருக்கிறது. பென்னா சிமெண்ட் நிறுவனம் வருடத்திற்கு 14 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி திறன் கொண்டது.

மோதி அமைச்சரவையில் உள்ள 20 அரசியல் வாரிசுகளின் குடும்ப பின்னணி

மத்திய அமைச்சரவையில் அரசியல் வாரிசுகள் யார் யார்?

BBC News :  பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சரவையில் சுமார் 20 வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் 20 அமைச்சர்களின் பெயர் பட்டியலை வெளியிட்ட ராகுல் காந்தி "பல தலைமுறைகளின் பாரம்பரிய மிக்க போராட்டம், சேவை, தியாகம் ஆகியவற்றை 'குடும்ப அரசியல்' என்று சொன்னவர்கள்,
தற்போது தங்களது விருப்பத்திற்கேற்ப அதிகாரத்தை 'வாரிசுகளுக்கு' வழங்கியுள்ளனர். சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இந்த வேறுபாட்டைத்தான் நரேந்திர மோதி என்கிறோம்." என ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார்.    ராகுல் காந்தி வெளியிட்ட பட்டியலின்படி தற்போது கேபினட் அமைச்சரவையில் ஒரு முன்னாள் பிரதமரின் மகன், ஒரு முன்னாள் பிரதமரின் பேரன், மூன்று முன்னாள் முதல் அமைச்சர்களின் மகன்கள், ஐந்து முன்னாள் மத்திய அமைச்சர்களின் மகன்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

விஜய்யை ஏமாற்ற சீமான் போட்டுள்ள திட்டம் அம்பலம்! விஜய் ரசிகர்கள் தவறாது பார்க்கவும்!

புதன், 12 ஜூன், 2024

தமிழிசையை பொதுவெளியில் அவமான படுத்திய அமித் ஷா! சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களை தவிர்த்தார்

 tamil.oneindia.com  - Shyamsundar :  சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நடந்து கொண்ட விதம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. Flash back video :
பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவில் உட்கட்சி மோதல் தொடர்பாக பாஜக தேசிய மேலிடம் அறிக்கை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை மற்றும் தமிழிசை இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து பாஜக நிலைக்குழு உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோரிடம் கட்சி மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.