நான் சாக வேண்டும் என்று நினைக்கிறார்களா" - பத்மா.
பத்மாவின் கணவர் விவேக்:
''கடந்த பத்து வருடமாகவே பத்மாவுக்கு நெஞ்சுவலி இருக்கிறது. தலைமறைவாக
இருந்துகொண்டு, சிகிச்சையைத் தொடரமுடியாத காரணத்தால்தான், நீதிமன்றத்தில்
சரணடைந்தார். வெளியே இருந்தபோது, நெஞ்சுவலிக்கு எடுத்துக்கொண்ட மருந்துகளை,
சிறைக்குள்ளும் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. ஆனால்,
போலீஸார் பத்மாவுக்கு நெஞ்சுவலி இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. முறையான
மருத்துவ சான்றும் எங்களிடம் இல்லை. தற்போது, பத்மா சிறைக்குச்
சென்றபிறகு அவரது உடல்நிலை இன்னும் மோசமாகிவிட்டது. சரியான உணவும்
மருந்தும் அவருக்குக் கிடைக்கவில்லை. மருந்துகள் இருந்தாலும், அவற்றை
மெயின் கேட்டில் இருந்துதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்குள் வலி
தீவிரமாகிவிடும். இந்நிலையில் தான், பத்மா ஸ்டான்லி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
Swathi K :
"தேர்தலில் வெற்றி" பெறுவதை விட "கோஷ்டி மோதலை
சமாளிப்பது" தான் காங்கிரஸ் கட்சியில் கடினம்..
அதிலும் ராகுல் வெற்றி பெற்று விட்டார் என்றே நினைக்கிறேன்.. ராகுல் தலைமையில் காங்கிரசின் இன்னிங்ஸ் அருமையான ஆரம்பம்.. மூன்று மாநில வெற்றியை போலவே பாராளுமன்ற வெற்றியும் அமையும்.. வாழ்த்துக்கள்💐..
ராகுல்.
மூன்று மாநில முதல்வர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்து நிறைவேற்றப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.. நம்புவோம்..
அடுத்த 4-5 மாதங்கள் இவர்கள் செய்யும் ஆட்சி மிக முக்கியம்.. இவர்களின் சின்ன சின்ன தவறுகள், தோல்விகளுக்கு பிஜேபி காத்திருக்கிறது..
viaktan : இரண்டு முறை சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பனகல்
அரசரின் இயற்பெயர், ராமராய நிங்கார்.
பிறப்பால் ஜமீந்தார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்.
பிறப்பு: ஆந்திராவின் காளஹஸ்தி 1866-ம் ஆண்டு, ஜூலை 9 அன்று.
மறைந்தது : டிசம்பர்-16, 1928-ம் ஆண்டு
அவருடைய நினைவு நாளான இன்று அவரைப்பற்றிய குறிப்பு :..
இந்திய மத்திய நாடாளுமன்றத்தில் நிலச்சுவான்தார்கள், ஜமீன்களுக்கு
முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட உறுப்பினராக 1912 முதல்
1915 வரை பதவி வகித்தார்.
இதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட சென்னை திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் பனகல்.
டாக்டர் டி.எம்.நாயர், பிட்டி. தியாகராயர் செட்டியார் ஆகியோர்
“தென்னிந்திய நல உரிமை சங்கத்தை” ( நீதிக் கட்சி ) 1917-ல் தொடங்கினர்.
கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் அதில் தன்னை இணைத்துக் கொண்டார் பனகல்.
இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்துக்கு 1920-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார்.
முதல்வர் சுப்பராயலு ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.
உடல் நலம் காரணமாக சுப்பராயலு ரெட்டி அடுத்த ஆண்டே பதவியை விட்டு விலகிக் கொண்டார்.
ஆரூர் பாஸ்கர் :
எதிர்காலத்தில் "துபாய்-காவிரிப்படுகை" ஒப்பிடுக எனத்
தேர்வில் கேள்வி கேட்டால்,
துபாய்- பாலைவனத்தில் இயற்கை வளத்தை எடுத்து விற்றதால் சோலைவனம் ஆன இடம்.
காவிரிப் படுகை –சோலைவனத்தில் இயற்கை வளத்தை எடுத்து விற்றதால் பாலைவனமான இடம் என்று எழுதப்படலாம்.
பேராசிரியர் ஜெயராமன் எழுதிய மீத்தேன் அகதிகள் புத்தகத்தை வாசித்தப்பின்
அப்படிதான் எழுதத் தோன்றுகிறது. தஞ்சை திருவாரூர் போன்ற காவிரிப் படுகை
பகுதிகளில் இந்திய அரசு மீத்தேன் திட்டத்தை நிறுவி அதைத் தொடர்ந்து
விரிவுபடுத்தி வருகிறது. அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது
காவேரி டெல்டாவை வாழ்வாதரமாகக் கொண்ட பல லட்சம் பேர் விவசாயத்தைக்
கைவிட்டு, அவர்கள் அகதிகளாக தங்கள் வாழ்விடங்களைவிட்டு வெளியேறும்
சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்பதைத் தகுந்த தரவுகளோடு ஆணித்தரமாக
நிறுவும் நூல்.
மேற்கு உலகநாடுகள் கைவிட்ட சர்ச்சைக்கு நீரியல்
விரிசயல் போன்ற அபாயகரமான முறைகளைக் கையாண்டு நீராதாரத்தை முற்றிலுமாக
அழிப்பது. தமிழகத்துக்கு முறையாக வரவேண்டிய காவேரி நீரை விவசாயத்துக்கு தர
மறுப்பது. இராசயான, கதிர்வீச்சுப் பொருட்களைப் பயன்படுத்தி சூழலைக்
கெடுத்து விவசாய பூமியை மலாடாக்குவது போன்ற பல செயல்களால் அழிவின்
விளிம்புக்குத் தள்ளப்படும் காவேரிப்படுகை விவகாரம் அனைவரும் தெரிந்து
கொள்ளவேண்டிய ஒன்று என்பதையும் சொல்கிறது.
BBC :
2001ஆம் ஆண்டிற்கு
பிறகு முதல் முறையாக காங்கோ ஜனநாயக குடியரசில் (டி ஆர் காங்கோ)புதிய
அதிபருக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடக்க உள்ளது.
டி ஆர்
காங்கோவின் தற்போதைய அதிபரான ஜோசப் கபிலா பதவி விலகுவதையடுத்து, சர்ச்சைகள்
ஏதுமின்றி அந்நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு முயற்சிகள் நடைபெற்று
வருகின்றன.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று, அந்நாட்டு தலைநகர்
கின்சாசாவிலுள்ள தேர்தல் ஆணையத்தின் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில்
அந்நகரின் வாக்குப்பதிவுக்காக வைக்கப்பட்டிருந்த மூன்றில் இரண்டு மடங்கு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமாகிவிட்டன.
இந்த தீ விபத்திற்காக காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
கிட்டத்தட்ட
17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த தேர்தலின் பிரசாரத்தின்போது, மின்னணு
வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதே முக்கிய வாதமாக இருந்தது.
தினத்தந்தி : இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 15 பயங்கரவாதிகளுக்கு
ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை அந்த நாட்டின் ராணுவ
தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா நேற்று உறுதி செய்தார்.
பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் ராணுவ கன்டோன்மென்ட் பகுதிக்கு வெளியே கிறிஸ்தவ காலனி உள்ளது.
அங்கு கடந்த 2016-ம் ஆண்டு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 4 பேர் தாக்குதல்
நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் உள்ளூர்வாசி ஒருவர் கொல்லப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தாக்குதல்
நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரையும் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றனர்.
இதனால் அந்த கிறிஸ்தவ காலனியில் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.
தினத்தந்தி :அம்பத்தூரில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை,
அம்பத்தூரில் வீடு புகுந்து கொள்ளை
மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், முகப்பேர் ஆகிய பகுதிகளில் இரவு
நேரங்களில் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று
வந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரில், அம்பத்தூர் தனிப்படை
போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், பட்டரைவாக்கத்தில் நேற்றிரவு வாகன
சோதனையில் ஈடுபட்ட போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை மடக்கி
பிடித்து விசாரித்தனர்.
முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த அவரை,
அம்பத்தூர் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில்,
அந்த நபர், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்த அறிவழகன் என்பதும், அவர்
மீது வேளச்சேரி, கிண்டி குமரன் நகர் காவல் நிலையங்களில் 15 க்கும்
மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
Ajeevan Veer :
இன்றைய சிரிசேனவின் பேச்சில் தமிழர் கருத்தில் கொள்ள
வேண்டிய பகுதிகள் ....
போர் கால குற்றங்களில் ஈடுபட்ட படையினரை கைது செய்ய வேண்டாம் என்றேன்.
ஆனால் நான் சொன்னதை ரணில் தரப்பினர் காது கொடுத்துக் கேட்கவில்லை. அவர்களை
கைது செய்து தண்டித்தீர்கள். சிறையில் அடைத்துள்ளீர்கள். அதை செய்த நீங்கள்
சர்வதேச நாடுகளில் வாழும் புலிக் குற்றவாளிகளையும் கைது செய்து கொண்டு
வந்து தண்டிக்க அல்லது சிறையிலடைக்க முயன்றிருக்க வேண்டும். அதுவே நியாயம்.
அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். போரடிய படை வீரர்கள் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இதில் என்ன நியாயம்?
யுத்த காலத்தில் பிடிபட்டபுலிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க
முயல்கிறீர்கள். அது நியாயம் என்றால் அக் காலத்தில் குற்றம் செய்த
படையினரையும் விடுவிக்க வேண்டும். அதுவே நியாயமானதாகும். அதுவே சமமான ஒரு
செயலாகும். அதை அங்கீகரிக்க ரணில் தரப்பினரான நீங்கள் தயாராக இல்லை.
நக்கீரன் : ரஜினி, பிரபு, வடிவேலு, நாசர் உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதன் ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு இதோ
தேசிய தலைவர்களின் புடைசூழ, கருணாநிதி சிலைத் திறப்பு விழாவை
வெற்றிகரமாக அரங்கேற்றியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். நீண்ட
நாட்களாக தமிழகம் பக்கமே தலை வைத்துப்படுக்காமல் இருந்த சோனியா காந்தியை,
சிலை திறப்பை காரணமாக வைத்து, சென்னைக்கு வர வைத்து காங்கிரசுடனான
கூட்டணியை சிமென்ட் பூசி மேலும் பலப்படுத்தி இருக்கிறார் ஸ்டாலின்.
இவையனைத்தையும் விட, ‘ராகுல் காந்தியே வருக… நாட்டை காத்திட வருக…’ என்று
பிரதமர் வேட்பாளராகவே நேரடியாக அத்தனை தலைவர்களின் முன்பு பிரகடனப்படுத்தி
இருக்கிறார். அனேகமாக, தேசிய அளவில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக
முதலில் முன்மொழிந்த தலைவர் ஸ்டாலினாகத் தான் இருக்க முடியும்.
முன்னதாக, அண்ணா அறிவாலயத்தில் நடந்த கலைஞர் சிலை திறப்பு விழாவில்
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள, ரஜினி, பிரபு, வடிவேலு,
நாசர் உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். கமலஹாசன் கஜா புயல் பாதிப்பை பார்க்க போவதால் கலந்து கொள்ளவில்லையாம் . அதன் ஸ்பெஷல்
புகைப்படத் தொகுப்பு இதோ,
tamil.oneindia.com - shyamsundar :
சென்னை: இந்திய அரசியலில் கருணாநிதி பெரிய புரட்சியாளர் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சென்னை
அண்ணா அறிவாலயத்தில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை
திறக்கப்பட்டது. அவருக்கு அருகே திமுக தலைவர் அண்ணாவின் சிலை
திறக்கப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிலையை திறந்து
வைத்தார்.
இதையடுத்து
ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த விழாவில் பல மாநில அரசியல் தலைவர்கள்,
முதல்வர்கள் கலந்து கொண்டனர். கேரளா முதல்வர் பினராயி விஜயன் கலந்து
கொண்டார். அதில் கருணாநிதியின் பெருமைகளை அவர் எடுத்துரைத்தார்.
அவர்
பேசியதாவது, இந்திய அரசியலில் கருணாநிதி பெரிய புரட்சியாளர். அண்ணா
மற்றும் பெரியாரின் வழியை பின்பற்றி அரசியல் செய்தவர் கருணாநிதி. திராவிட
அரசியலின் ஊற்றுக்கண் கருணாநிதி.
LR Jagadheesan :
தமிழுக்கு
மத்திய அரசின் செம்மொழி அங்கீகாரம் பெற உதவியவர் .
தொடர்ந்து பொதுவெளியில் அவமதிக்கப்பட்டாலும் சோராமல் ஓயாமல்
இயங்கிக்கொண்டிருப்பவர்; அத்தகைய சோனியாவை திரும்பிப்போகச்சொல்லும்
தியாகசீலர்களே; நேர்மையாளர்களே; நியாயஸ்தர்களே டில்லிக்கான உங்களின்
தேர்வென்ன?
தன் கணவரை கொன்றதற்காக
தண்டிக்கப்பட்ட நளினியின் தூக்குதண்டனையை ஆயுளாக குறைக்கக்கோரியவர்;
தேடிவந்த பிரதமர் பதவியை ஏற்க மறுத்தவர்; ஜாதி, மத, தேச எல்லைகளை கடந்து
தன் காதலனை தேர்ந்தெடுத்தவர்; காதலித்து கரம்பிடித்தவரோடு
வாழ்க்கைப்பட்டுவந்த தேசத்தின் சுகதுக்கங்களில் அர்ப்பணிப்போடு தன் பங்கை
ஆற்றியவர்; ஒருவரின் ஜாதிபார்த்தே விதந்தோதும் இந்திய நாட்டில் ஜாதி
முத்திரை குத்த முடியாதவர்;
இந்துத்துவ கும்பல்களால் சுமங்கலி அமங்கலி அளவ
இந்தித்திணிப்பை
கடுமையாக எதிர்த்த திராவிட இயக்கத்தை எதிர்க்கிறேன் என்கிற பேரில்
“எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து
ஆங்கிலத்தை முற்றாக அகற்றச்சொன்னார்கள் சிலர்.
அவர்களைப்பார்த்து காமராஜர்
சொன்ன அனுபவ வார்த்தைகள்: “Englishஐ எடுத்துட்டா ஹிந்தி வந்து
குந்தும்னேன். ஹிந்தியை எதுக்கணும்னா English நாக்குத்தேவைன்னேன்”.
tamil.news18.com "குட்கா விற்பனை முறைகேடு வழக்கில் சிபிஐ அலுவலகத்தில்
ஆஜரான
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சுமார் 12 மணி நேரம் விசாரணை
நடத்தப்பட்டது. இதேபோல விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர்
ரமணா ஆகியோரிடமும் 9 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ-யின் 2-வது கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று
வருகிறது. குட்கா ஊழல் நடந்த காலகட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சராக
இருந்த பி.வி.ரமணா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவரையும் விசாரணைக்கு
ஆஜராகுமாறு சிபிஐ ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.
இதையடுத்து, சனிக்கிழமை ஆஜராக வேண்டும் என்று இறுதிக்கெடு விதிக்கப்பட்டது.
இன்று
காலை 8 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்குள் அமைச்சர்
விஜயபாஸ்கர் வாடகை காரில் ரகசியமாக சென்று ஆஜரானார். அவரைத் தொடர்ந்து காலை
10.30 மணி அளவில் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், முன்னாள் அமைச்சர்
பி.வி.ரமணா ஆஜராகினர்.
THE HINDU TAMIL :
பி.பி.ஸ்ரீநிவாஸ் குறித்து டாக்டர் ரங்கநாத் நந்தியால்
எழுதியிருக்கும் ‘மல்டி டேலன்ட்டட் சிங்கர் பி.பி.ஸ்ரீநிவாஸ்’ என்ற ஆங்கில
நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (டிசம்பர் 16) மாலை 4 மணிக்கு
நடக்கிறது. சிதார் மேதை பண்டிட் ஜனார்த்தன் மிட்டா வெளியிடுகிறார். இந்த
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜெமினி கணேசனின் மகள் டாக்டர் ஜெயா ஸ்ரீதர்
பங்கேற்கிறார்.
‘மனிதன்
என்பவன் தெய்வமாக லாம்’, ‘மயக்கமா கலக்கமா’, ‘பூஜைக்கு வந்த மலரே வா’,
‘வளர்ந்த கதை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா’ - இந்த பாடல் களை காதால்
கேட்கும்போதே, ஜெமினி கணேசனின் நடிப்பு நம் மனத் திரையில் ஓடத்தொடங்கி
விடும். ஜெமினி கணேசன் திரையில் வெளிப்படுத்திய காதல் பூரிப்பும், சோக
உணர்ச்சியும் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் இழைந்தோடும். ‘ஒரு வேளை
ஜெமினியேதான் பாடு கிறாரோ’ என்றுகூட எண்ணத் தோன் றும். அந்த அளவுக்கு
ஒருமித்து வசீகரப்படுத்தக்கூடியது
மின்னம்பலம் :
சபரிமலை கோயிலுக்கு சென்ற திருநங்கைகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
சபரிமலைக்கு
அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பல தரப்புகளில் ஆதரவும், எதிர்ப்புகளும்
எழுந்துள்ளன. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்களும், இந்துத்துவ
அமைப்புகளும் தொடர்ந்து போராடுவதும், காவல்துறையினர் அவர்களை கைது
செய்வதும் தினசரி வழக்கமாகிவிட்டது. எனினும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை
பின்பற்றுவதில் கேரள அரசும், முதல்வர் பினராயி விஜயனும் உறுதியுடன்
உள்ளனர்.
tamil.oneindia.com - shyamsundar:
சென்னை:
கருணாநிதியை நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம் என்று
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கருணாநிதி சிலை திறப்பு விழா
பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது. இதையடுத்து
ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கான
பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த விழாவில் பல மாநில அரசியல் தலைவர்கள்,
முதல்வர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர்
சோனியா காந்தி பேசியதாவது,:
இந்திய
அரசியலில் கருணாநிதி பெரிய புரட்சியாளர். அண்ணா மற்றும் பெரியாரின் வழியை
பின்பற்றி அரசியல் செய்தவர் கருணாநிதி. திராவிட அரசியலின் ஊற்றுக்கண்
கருணாநிதி. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மகிழ்ச்சியடைகிறேன்.
கருணாநிதி
பொது வாழ்க்கை தமிழகத்தின் வரலாறாக உள்ளது. தமிழகத்தின் முதல்வராக இருந்து
அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி.கருணாநிதி 5 முறை முதல்வராக
இருந்து தமிழகத்தை மொத்தமாக மாற்றியவர்.
அவர் இதுவரை ஒருமுறை கூட
தேர்தலில் தோற்றது இல்லை. இந்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது.
கருணாநிதிக்கு தமிழ் மீது பெரிய ஆசை இருந்ததுதமிழை வளர்க்க அவர் பெரிய
பாடுபட்டார். அவர் அற்புதமான பேச்சாளர்.
THE HINDU TAMIL:
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் சிலைத் திறப்பு விழா சென்னையில்
நடைபெற்றது, இதில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சோனியா, தலைவர் ராகுல் காந்தி
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில்
ராகுல் காந்தி பேசிய போது, “நான் கலைஞர் அவர்களை இரண்டாவது முறையாக
சந்தித்ததை நினைவுகூறுகிறேன். அதற்கு முன்னதாக அவருடைய வீட்டிற்கு சென்றது
கிடையாது. அவருடைய வீடு மிகவும் பெரியதாக இருக்கும் என்று நினைத்தேன்.
அங்கு அதிகமான பொருட்கள் இருக்கும் என்று நினைத்தேன்...” என்று கூறி அந்தச்
சந்திப்பைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார்.
“ஒவ்வொரு அரசியல்
தலைவர்களுக்கும் இரண்டு பக்கம் உள்ளது. மக்களின் குரலை மற்றும் தன் குரலை
மக்களுக்காக பிரதிபலிப்பது. தலைவர் கலைஞர் தமிழக மக்களின் குரலாகவே
வாழ்ந்தவர். மக்களுக்காக வாழ்ந்தார். தமிழக மக்களின் மகிழ்ச்சியையும்,
வலிமையையும் தன்னுடையதாக கருதியவர். முழுவாழ்க்கையையும் தமிழக மக்களுக்காக
அர்ப்பணித்தவர்.
நீங்கள் கலைஞரை நினைவில் கொண்டிருப்பீர்கள்,
நான் கலைஞரை இரண்டாவது முறையாக சந்தித்ததை நினைவுகூறுகிறேன்.
அதற்கு முன்னதாக அவருடைய வீட்டிற்கு சென்றது கிடையாது. அவருடைய வீடு
மிகவும் பெரியதாக இருக்கும் என்று நினைத்தேன். அங்கு அதிகமான பொருட்கள்
இருக்கும் என்று நினைத்தேன். பல ஆண்டுகள் அரசியலில் இருக்கும் தலைவரின்
வீடு மிகப்பெரியதாக இருக்கும் என்று சந்திரபாபு நாயுடுவை போன்று நானும்
நினைத்தேன். ஆனால் அவருடைய வீட்டிற்கு நான் சென்றபோது மிகவும் ஆச்சர்யம்
அடைந்தேன். அவருடைய எளிமை, நேர்மையை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன். பல
ஆண்டு முதல்வராக இருந்த அவரின் எளிமை மற்றும் அகங்காரம் இல்லாத தன்மையை
பார்த்து மிகவும் பெருமையடைந்தேன்.
tamil.indianexpress.com :
Karunanidhi Satue Inauguration Updates:
மறைந்த
திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல
சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம் அமைத்து அதன் மீது சிலை
அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் இருந்த அண்ணா சிலையும்
புதுப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு
விழாவுக்கு டி.ராஜா, முத்தரசன், திருமாவளவன், கி.வீரமணி, வைகோ, கவிஞர்
வைரமுத்து உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
நடிகர்கள் பிரபு, வடிவேலு,
விவேக், நாசர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர் விழாவிற்கு வருகை தந்த
அனைவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
பின்பு, கருணாநிதி
மற்றும் அறிஞர் அண்ணாவின் சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார். சிலை
திறக்கப்பட்ட பின்னர், ராகுல் காந்தி தனது செல்போனில் கருணாநிதியின் சிலையை
படம் பிடித்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, மெரீனா கடற்கரையில் உள்ள
கருணாநிதியில் சிலைக்கு சோனியா, ராகுல் அஞ்சலி செலுத்தினர். ஒய்.எம்.சி.ஏ
மைதானத்தில் பொதுக்கூட்டம் தொடங்கியது.
அப்போது, ‘சூரியன் மறைவதில்லை’
புத்தகத்தை சோனியா வெளியிட ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். புதுச்சேரி
முதல்வர் நாராயணசாமி பேசுகையில், “பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவாலாக
இருக்கிறார். மத்தியில் ஒரு மாற்றம் கொண்டுவருவோம். கருணாநிதியை
கவுரவிக்கும் எண்ணம் தற்போதைய தமிழக அரசுக்கு இல்லை. தேசிய அளவிலும்
ராகுலும், மாநிலத்தில் ஸ்டாலினும் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள்”
என்றார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட எங்கள் தமிழக மக்களுக்கு ஒரு ஆறுதல்
வார்த்தைக் கூட பிரதமர் மோடி தெரிவிக்கவில்லை. அவர் ஒரு சேடிஸ்ட் பிரதமர்.
சேடிஸ்ட் மனப்பான்மை கொண்ட பிரதமர். நாட்டுக்கு நல்லாட்சி அளிக்க, ராகுல்
காந்தியை பிரதமராக்க முன்மொழிகிறேன். ராகுல் காந்தியே வருக… நாட்டிற்கு
நல்லாட்சி தருக” என்று ஆவேசமாக பேசி முடித்தார் திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின்.
அண்ணா அறிவாலயத்திற்குள் 5 தொலைக்காட்சிகளின் போலி அடையாள அட்டையுடன் நுழைந்த நபரை பிடித்து விசாரணை- tamil.indianexpress.com :
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி
உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. பளிங்கு கற்களால் பீடம் அமைத்து
அதன் மீது சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் இருந்த
அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் இவ்விரண்டு சிலைகளும் திறக்கப்பட உள்ளன.
கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து
வைக்கிறார். இதற்கான விழா இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இதில் பங்கேற்கிறார்.
அதன்பிறகு மாலை 5.30 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு
நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின்
தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
நேற்று பிற்பகலில் தான், ராகுலும் கூட்டத்தில் பங்கேற்க போகும் தகவல்
வெளியானது. கடைசி நேரத்தில் ராகுலின் பயணத் திட்டம் திடீரென முடிவு
செய்யப்பட்டது.
மின்னம்பலம் :
சென்னை
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில், முன்னாள் முதல்வர் கலைஞரின்
சிலையை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்துவைத்தார்.
கலைஞர்
சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா
காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இன்று (டிசம்பர் 16) மாலை 4 மணிக்கு
சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்
கனிமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ப.சிதம்பரம், திருநாவுக்கரசர்,
நாராயணசாமி, முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோரும் வரவேற்றனர். சோனியா, ராகுல்
கார் செல்லும் வழிநெடுகிலும் திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு நின்று
உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கிண்டியிலுள்ள சோழா நட்சத்திர
விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த சோனியா, ராகுல் ஆகியோர் 5மணிக்கு
அண்ணா அறிவாலயம் புறப்பட்டனர். மூன்று மாநில வெற்றிக்குப் பிறகு, தமிழகம்
வரும் சோனியாவை பெண்கள் முளைப்பாரியுடன் வரிசையாக நின்று வரவேற்றனர்.
BBC : இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று,
ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த அக்டோபர் 26ஆம் தேதி திடீரென மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்தார். இதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் மகிந்த ராஜபக்ஷ நேற்று பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.
இந்த நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி செலயகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.
புதிய அமைச்சரவை நாளை, திங்கட்கிழமை, பதவியேற்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பது இது 5ஆவது முறையாகும்.
இன்று ஐந்தாவது முறையாக ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றிருந்தாலும், இதுவரை முழுமையாக ஐந்து வருடங்கள் பிரதமர் பதவியை வகித்ததில்லை.
ரணில் விக்மசிங்க முதன்முறையாக 1993ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
தினகரன் : நெல்லை: நடிகர் கார்த்திக் புதுகட்சி தொடங்கினார்.
நெல்லையில் கட்சியின் பெயரை அறிவித்தார்.நடிகர் கார்த்திக் கடந்த 2006ல்
பார்வர்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் மாநில தலைவர் பொறுப்பு
வழங்கப்பட்டது. பின்னர் 2009ல் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற
புதிய கட்சியை தொடங்கி அவரே அதன் தலைவராக இருந்தார். இந்த கட்சி அப்போது
நடந்த பொதுதேர்தலில் பாஜ கூட்டணியிலும் இடம் பெற்றது. தேர்தல் முடிந்ததும்
கட்சியும் காணாமல் போனது. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற
உள்ள நிலையில், புதிதாக அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி உள்ளதாக கார்த்திக்
அறிவித்துள்ளார்.
சவுக்கு :
தேர்தல்
முடிவுகள் தவிர்க்க முடியாததொரு தன்மையைக் கொண்டவை. அறிவிக்கப்பட்டவுடன்
அவை முடிந்துபோன விஷயமாகிவிடுகின்றன. தீர்ப்பு தொடர்பான எண்கள் விருப்பு
வெறுப்பின்றி ஆராய இடம் தருகின்றன. தேர்தல் முடிவைப் பற்றிப்
படிக்கும்போதும் தொலைக்காட்சியில் பார்க்கும்போதும் அவற்றை நாம் இருவிதமான
புரிதல்களை உணர்கிறோம்.
எனது நண்பர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில்
காலூன்றி நிற்கும் தத்துவவாதி. வாழ்நாளின் பெரும்பகுதியை கற்கள்,
கடிகாரங்கள், காலஅட்டவணை, தேர்தல்கள் போன்றவை பற்றி யோசிப்பதில் நேரத்தைச்
செலவழிக்கிறார். முடிவுகள் வெளியான நாளில் கவனத்துடன் தொலைக்காட்சி
பார்த்துக்கொண்டிருந்தார்; அவரருகே நான் அமர்ந்திருந்தேன். தேர்தல் செய்தி
அறிக்கைகளை அவர் ‘திசை தவறிய இனவரைவியல் (மானுடவியல் தொடர்பான ஆய்வு)’ என
வர்ணித்தார். தேர்தல் என்பது ஒருவிதமான கதை சொல்லும் கலை என்றும் முடிவுகள்
அதைச் சிதைப்பதாகவும் கூறினார். முடிவுகளின் தன்மை,
tamlthehindu : சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள
அறிக்கை: நிலத்தில் இருந்து விவசாயம் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்காக
எடுக்கப்படும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு
அறிவித்திருக்கிறது. நிலத்தடி நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன்
இந்த கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் கட்டண
முறை நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசின் மத்திய நிலத்தடி நீர் ஆணையம்
அறிவித்திருக்கிறது. நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது என்பது 1987ம்
ஆண்டில் உருவாக்கப்பட்டு 2012ம் ஆண்டில் திருத்தப்பட்ட தேசிய தண்ணீர்
கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். பாமக உள்ளிட்ட சில
கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் தண்ணீர்
கொள்கையை மத்திய அரசு இறுதி செய்தது.
tamil.eenaduindia.com : மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு ஒரு கவிஞன்
செலுத்தும் காணிக்கை, 'ஒரு மலையே சிலையானதுபோல' என்ற தலைப்பில் கவிப்பேரரசு
வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.<
அந்தக் கவிதையின் விவரம் பின்வருமாறு:
மலையடிவாரம் பார்த்து மழைச்சாரல் விழுதல் போல
கலையடிவாரம் பார்த்து கவிதை மலர்தல் போல
அலையடிவாரம் தன்னில் ஆட்படும் முத்தைப் போல்
ஒர் சிலையடிவாரம் தன்னில் சிந்தினேன் கண்ணீர் பூக்கள்
தலைமகன் பெரியாராலே தன்மானம் பெருமையுற்றாய்
கலைமகன் அண்ணாவலே கணித்தமிழ் புலமை பெற்றாய்
உலைக்களம் போல் உழைத்தே உயர்வினைப் பெற்றாய்
இன்று சிலையாகி நிறைத்தாய் பெற்றச் செல்வனால் சிறப்பு பெற்றாய்