செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

திமுக மீது ஏன் சேறு வாரி வீசுகிறார்கள்? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பண்பாட்டின் எழுச்சிக்கும் காரணமான ஒரு இயக்கம்

அழகப்பண்ணே, சமூக இணைய தளங்களில் தேர்தல் காலத்தில் எல்லாம் பார்ப்பனீய லாபியால் தவறாமல் உலவ விடப்படும் தலைவர் கலைஞரின் சொத்து மதிப்புப் பட்டியலைக் காட்டியபடி வந்து பக்கத்தில் அமர்ந்தார்.
பாருங்க கருணாநிதி எவ்வளவு ஆயிரம் கோடி சொத்து சேத்திருக்கார்!!!
நானும் வாங்கிப் பார்த்தேன், ஐ.டி ல இருக்குற நம்ம பார்ப்பனத் தம்பிகளும், பெரிசுகளும் இன்னமும் கலைஞர் மேல் எவ்வளவு கான்டாக இருக்கிறார்கள் என்று அதைப் பார்த்ததும் புரிந்தது, இந்த ஆள ஒழிச்சாத்தான் தமிழ்நாட்டுல நம்ம இழந்த பெருமையா மீட்க முடியும், மறுபடியும் சாமி சாமின்னு நம்ம காலைக் கழுவி தீத்தம்னு இந்த சூத்திரப் பயலுகளா குடிக்க வைக்க முடியும்னு நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கானுங்க.
கொஞ்சம் தீவிரமா நடுப்பகுதிக் கணக்குகளைப் படித்துப் பார்த்தேன்,
கலைஞரின் அக்கா மகனின் பேரனின் காதலியின் தாய் மாமாவுக்கு திருநெல்வேலிக்கு அருகே புத்தளம் கடற்கரைத் தோட்டம் - மதிப்பு - 10 லட்சம்
கலைஞரின் ஒன்று விட்ட சித்தப்பாவின் தம்பி மகனுக்கு காது குத்திய செலவு - மதிப்பு - 2 லட்சம்
கலைஞரின் திருவாரூர் வீட்டின் பரண் மீது தூசி படிந்து கிடக்கும் விறகு மற்றும் அதை வெட்ட ஆன செலவு - மதிப்பு - 1.5 கோடி
கலைஞர் 1924 இல் இருந்து இன்று வரை முடிவெட்டிக் கொள்ள ஆகிய செலவு - 5 லட்சம்

இதோ வருகிறேன் நெடுவாசல்: போலீஸ் அடிச்சா திருப்பி அடி: கமல் கொந்தளிப்பு


அடிச்சா திருப்பி அடி அப்போ தான் அரசியல் வாதி அடங்குவான் கமல்
முல்லையில் தண்ணீர் கேட்டால்.
கேராளக்காரன் அடிக்கிறான்
காவேரியில் தண்ணீர் கேட்டால்
கர்நாடக்காரன் அடிக்கிறான்
செம்மரம் வெட்டுறானு
ஆந்திராக்காரன் அடிக்கிறான்
தீவிரவாதி இனம்னு
இலங்கைக்காரன் அடிக்கிறான்
தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ்நாட்டுகாரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்…..!!!!
முல்லையில் வந்த தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை
காவேரியில் வந்த தண்ணீரை
சேமிக்கவில்லை
காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை
குளமேதும் வெட்டவில்லை

நயன்தாரா .. கதாநாயகிக்கு முக்கியத்துவம் ... டோரா படத்துக்கு பெரும் வரவேற்பு

நயன்தாரா நடிப்பில் தாஸ் ராமதாமி இயக்கியுள்ள 'டோரா' திரைப்படத்தின் டீசர் கடந்த 17ஆம் தேதி வெளியான நிலையில் பத்தே நாட்களில் இந்த டீசர் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த டீசருக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்களது விருப்பத்தை பதிவு செய்துள்ளனர்.
கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்திற்கு இவ்வளவு வரவேற்பா என கோலிவுட் வட்டாரமே வியப்பில் ஆழ்ந்துள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில், தம்பிராமையா, ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இவர்களுடைய இசையில் அனிருத் 'ரா ரா ரா' என்ற பாடலை பாடியுள்ளார். மின்னம்பலம்

ஜல்லிகட்டு போராட்ட குழுவுக்கும் புதிய அரசியல் கட்சிக்கும் தொடர்பு இல்லை !


'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்ததாகக் கூறி, அரசியல் கட்சி துவக்கியுள்ளவர்கள், மாணவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துகின்றனர். அவர்களுடன், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை' என, உண்மையான போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். தங்களுக்கு கட்சி துவக்கும் திட்டம் எதுவும் இல்லை என, வெளிப்படுத்திய அவர்கள், புதிய கட்சி துவக்கியோரின் பின்னணி குறித்தும், சந்தேகம் கிளப்பி உள்ளனர். தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, ஜன., 17ல், சென்னை, மெரினாவில், இளைஞர்கள் போராட்டம் துவக்கினர். முதலில், ௫௦ பேருடன் துவங்கிய போராட்டம், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆதரவால், பெரிய அளவிலான போராட்டமாக மாறியது. அரசியல் கட்சித் தலைவர்களை அனுமதிக்காமல், அமைதி வழியில் போராட்டம் நடந்ததால், பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

அமெரிக்க இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கிய ஆலோசனைகள்

 கன்சாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள ஒலாதே பகுதியில் இந்திய என்ஜினியர் சீனிவாச குச்சிபோதலா சுட்டுக் கொல்லப்பட்டார். இனவாத பிரச்சனையால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது ஆகியவை குறித்து சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் முக்கியமான ஒன்று பொது இடங்களில் தாய் மொழியில் பேசக் கூடாது என்பது. தெலுங்கானா அமெரிக்க தெலுங்கு அசோசியேஷனின் பொதுச் செயலாளர் விக்ரம் ஜங்கம் வெளியிட்டுள்ள பரிந்துரைகளில் கூறப்பட்டிருப்பதாவது,
1.பொது இடங்களில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
 யாராவது உங்களை வம்புக்கு இழுத்தால் சண்டை போடாமல் அங்கிருந்து சென்றுவிடவும்.

எடப்பாடி பழனிச்சாமிக்கும் சசிகலாவுக்கும் இடையே பனிப்போர் ஆரம்பம்.

1) பதவி ஏற்ற பிறகு சசிகலாவை எடப்பாடி சந்திக்கவில்லை.
2) தினகரன் மூலம் சசிகலா ஒப்புதல் அளித்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிட மாற்றல் பட்டியலை நிராகரித்தார் எடப்பாடி.
3) தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனை மாற்றிவிட்டு, நடராஜன் ஆதரவாளர் சண்முகத்தை நியமிக்குமாறு மாஃபியா கும்பல் கூறியதை எடப்பாடி ஏற்க மறுத்துவிட்டார்.
4) மாஃபியா கும்பலை கட்சியில இருந்து ஒட்டுமொத்தமாக விலக்கி வைக்க எடப்பாடி திட்டம். பன்னீரை சேர்த்துக்கொள்ளவும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது ,
5) உள்ளாட்சித் தேர்தலில் சிறிதளவாவது வெற்றியை பெற மாஃபியா குடும்பத்தை வெளியேற்றுவது அவசியம் என எடப்பாடி கருதுவதாக தகவல்.
6) சசிகலா பினாமி ஆட்சி என கூறுவதை அறவே வெறுக்கிறார் எடப்பாடி.
7) இது ஒருபுறம் இருக்க செங்கோட்டையன், ஜெயகுமார், தம்பிதுரை தனி குழுவாக செயல்படுவது சசிகலாவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
8. சசிகலா ஆதரவு MLAக்கள் தங்கள் தொகுதிக்குள் நுழையமுடியாத சூழ்நிலையில் அவர்களும் தங்கள் எரிச்சலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒருபுறம் மாஃபியா கும்பலை வெளியேற்ற எல்லா வேலைகளும் கணஜோராக நடைபெற்று கொண்டுள்ளது. இன்னொருபுறம், தொண்டர்கள் நிலமைதான் திருவிழாக்கூட்டத்தில் காணாமல் போன குழந்தை நிலமையில் உள்ளது.  முகநூல் பதிவு.. தினகரன் அரசு

169 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்ட சாதனை மனிதர் ‘நெல்’ ஜெயராமன் புற்றுநோயால் அவதி...

நெல் ஜெயராமன் hinduநெல் ஜெயராமன் நெல் ஜெயராமன் தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளாக பயணம் செய்து, 169 அபூர்வ நெல் வகைகளை மீட்டெடுத்த ‘நெல்’ ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்.
 1,000 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமும் கொண்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப் படுகிறது. காலனி ஆதிக்க காலம் தொடங்கியதில் இருந்து, நமது பாரம்பரிய நெல் வகைகள் படிப் படியாக மறைந்தன. குறிப்பாக கடந்த 50 ஆண்டுகளில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால்தான் பாரம்பரிய நெல் ரகங்கள் பெருமளவு அழிந்ததாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப் போற்றப்பட்ட நம்மாழ்வாரின் இயக்கத்தில் இணைந்திருந்த ‘நெல்’ ஜெயராமன், பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் பணியைத் தொடங்கினார்.

சுப.வீரபாண்டியன்: மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு நெடுவாசல் ....

அரசோ, அதிகாரமோ யாராயிருந்தாலும் இனி எதனையும் உடனே முடிவெடுத்து விட முடியாது என்கின்ற அளவிற்கு மக்களிடம் விழிப்புணர்ச்சி பெருகியுள்ளது என்றே கூற வேண்டும். அதற்கு நெடுவாசல் இன்னொரு எடுத்துக்காட்டாய் எழுந்து நிற்கின்றது. மக்கள் திரண்டு போராடுகின்றனர். அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். இளைஞர்கள் அங்கு கூடுகின்றனர். இரண்டு மூன்று நாள்களாய் எல்லாச் சாலைகளும் நெடுவாசல் நோக்கியே நீள்கின்றன. எனினும் உணர்ச்சி வயப்பட்டு உடனே அந்த இடத்தில் போய் நின்றுவிடுவதில் எனக்கு ஒரு தயக்கம் இருக்கவே செய்தது. இப்போதெல்லாம் எங்கு மக்கள் திரண்டாலும் உடன் அந்தப் போராட்டத்தை ஆதரித்து விட வேண்டும், அந்த ஜோதியில் நாமும் கலந்து விட வேண்டும் என்ற ஒரு போக்கு எழுந்துள்ளது. இதுவும் நல்லதில்லை. மாற்றுக் குரல்களைச் செவி மடுப்பவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். இந்தச் சிக்கல் என்பது முதன்மையாக மக்கள் நலன், சுற்றுச் சூழல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆகிய மூன்று தளங்களில் நிலை கொண்டுள்ளது.

டெல்லி கல்லூரி மாணவிக்கு ரேப் மிரட்டல்! பாஜகவின் (ABVP) அகில பாரத் வித்யா பரீக்ஷத்தின் பாலியல் பயங்கரவாதம்?


அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்  எனும் மாணவர் அமைப்பு பாஜகவுடன் தொடர்பு உடையதாகும். டெல்லியைச் சேர்ந்த மாணவியான குர்மீஹர் கவுர் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேச்சு சுதந்திரத்தைக் குலைப்பதாகவும், இவர்களுக்கு எதிரான கருத்தை யார் முன் வைத்தாலும் தேசத் துரோகிகள் என அவர்களை  ஏ.பி.வி.பி அமைப்பு அடையாளப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு அந்த அமைப்பினர் தொடர்ந்து அந்தப் பெண்ணை மிரட்டி வந்திருக்கின்றனர். மேலும் சிலர், 'அவரை கற்பழித்தது விடுவோம்' என்றும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வக்கிர உணர்வோடு ஆபாச மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.& குர்மீஹர் கவுர் என்பவர் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரின் மகளாவார். இவரது தந்தை ராணுவ பணியில் இருந்த போது நாட்டுக்காக உயிர்நீத்தவர். "எனது தந்தை கார்கில் போரில் கொல்லப்பட்டபோது  எனக்கு வயது வெறும் இரண்டு தான். ஆரம்பத்தில்  நான் பாகிஸ்தான் மீதும், முஸ்லீம்கள் மீதும் வெறுப்பு கொண்டிருந்தேன். ஆனால் ஆண்டுகள் உருண்டோட, என் தந்தைக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த பகையும் இல்லை என்பதையும், போர் என்பது என் தந்தையின் உயிரைப் பறித்ததையும் உணர்ந்தேன்.

Hydrocarbon project.. Sientists + oil companies wont speak about the disadvantages .. just money minded.


Markandey Katju :
An email I received. The sender has asked me not to mention certain details :
Dear Sir,
I am Nishithan doing Masters in the Department of Chemical Engineering, IIT Madras. I saw your post on facebook asking for the opinion of a scientist whose specialty is on hydrocarbon project. I am no scientist but I have read in detail about this technology and I have given a technical presentation in IIT Madras before 4 years when I was an Undergrad, so I know about this project in detail and I like to explain to you about this project in brief.
The original name is Shale gas Technology. Here it was first introduced as methane extraction and now changed to hydrocarbon extraction. Shale gas/Natural gas/Methane/Hydrocarbon are all the same.It got the name Shale gas as it is a gas trapped in the shale regions(sedimentary rocks) below the earth.It is nothing but the natural gas whose major component is methane.Hydrocarbon is the general name for any compound containing carbon and hydrogen (methane, ethane, propane..etc). Petrol, Diesel, Kerosene, LPG and other crude oil derivatives are all hydrocarbons.

மீதேன் திட்டத்தை எதிர்த்த புதுகோட்டை எம் எல் ஏ எஸ் .பி.முத்துகுமரன் கொலை செய்ப்பட்டாரா?

கடந்த 2012ம் ஆண்டு புதுக்கோட்டை எம்எல்ஏ எஸ்.பி.முத்துக்குமரன், நெடுவாசல் மண்ணின் மைந்தனாக உருவெடுத்தவர். கார் விபத்தில் பலியானார்.
இவர் சட்டசபையில் தனது தொகுதி சார்பாக அதிக கேள்விகளை எழுப்பிய சிறந்த எம்எல்ஏ என சபாநாயகரால் பாராட்டுகளை குவித்தவர். மிகவும் நேர்மையான மனிதராகவும் இருந்த அவர், மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு மிக பலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த போராட்டத்தை தடுக்க நினைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, எஸ்.பி.முத்துக்குமரன் விபத்தில் பலியானாரா? அல்லது மீத்தேன் திட்டத்தை எதிர்த்ததற்காக விபத்து ஏற்படுத்தி கொல்லப்பட்டாரா என பல சந்தேகங்களை எழுப்பியது. இந்த விபத்து தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டம் 279, 337 மற்றும் 304ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சசிகலா சிறை வசதிக்கு காவிரி உரிமை பேரம் பேசப்பட்டது???

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை என தீர்ப்பு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். சிறையில் சசிகலாவுக்கு விஐபி சலுகைகள் வேண்டும் என்று கேட்டதாகவும், அதற்கு கர்நாடக அரசு எந்த சலுகைகளும் வழங்க முடியாது என்று மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும், சசிகலாவின் அக்கா மகன் தினகரன், சிறையில் சசிகலாவிற்கு பல்வேறு வசதிகள் செய்துதர முயற்சி செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் சசிகலாவிற்கு எந்த சலுகையும் கிடையாது என்று சொன்ன கர்நாடகா அரசு, தற்போது சசிகலாவிடம் பேரம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், சிறையில் சசிகலாவுக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறோம். ஆனால் காவேரி ஆற்றின் குறுக்கே நாங்கள் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்று கர்நாடக அரசு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மெரீனாவில்.. எதிர்ப்போம் எதிர்ப்போம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம்’ ‘அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே


புதுக்கோட்டையில் நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு என்ற பெயரில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மாணவர்களிடையே எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் 5000 அடி ஆழத்திற்கு துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்கள் 11 நாட்களாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராடும் கிராம மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒன்று கூடியது போல மாணவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் சிலை அருகில் கூடினர். அந்த இடத்திலேயே போராட்டத்தை தொடங்கவும் முயற்சி செய்தனர்.
யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று மாணவர்கள் கடற்கரையில் ஒன்று கூடியதால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மத்திய மந்திரி தர்மேந்த்ரா : மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறுத்தம்!

மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். புதுடெல்லி: தமிழகத்தின் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை சந்தித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார். அப்போது, நெடுவாசல் திட்டம் மற்றும் அதற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து பேசியுள்ளார். பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏதேனும் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா? என அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். மக்கள் விரும்பாவிட்டால் திட்டத்தை செயல்படுத்த விரும்ப மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். < இவ்வாறு அவர் கூறினார்.மாலைமலர்

திங்கள், 27 பிப்ரவரி, 2017

சவுக்கு சங்கர் பேட்டி! தமிழகத்தின் ஜூலியன் அசாஞ்சேயின் முதல் டிவி பேட்டி!



பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்தார்.. . நம்புறோம்.

இவர்கள் என்ன  பேசினார்கள் என்ற விபரம் எல்லாம் நாம் எழுதினாலும் அவை எல்லாம் வெறும் உல்டா என்பதை வாசகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் . இந்த படம் கூறும் செய்தி மற்றும்  இதில் உள்ளவர்களின் பாடி லாங்குவேஜ் எல்லாம் ரொம்ப தெளிவாக பல உண்மைகளை காட்டுகிறது.. 

திண்டுகள் சீனிவாசன் : அம்மா அப்போலோவில் 3 வகை இருப்புக்கள் கொடுத்தார் நன்றாக பேசுவார் ...



ஹானர்ஸ் செல்வகுமார் .. அன்பு வழியை தேர்ந்தெடுப்பவர்களுக்கு தோல்வியே இல்லை

யுவகிருஷ்ணா:“நீங்க இந்த கல்லூரியில் படிக்க முடியாது” கல்லூரி முதல்வர் சொன்னதுமே கண்கள் இருண்டது செல்வகுமாருக்கு. “
ஏன்?”
“காரணத்தை தனியா சொல்லணுமா? உங்களுக்கே தெரியாதா?”
“பரவாயில்லை. சொல்லுங்க”
“இந்தப் படிப்பு மின்னியல்/மின்னணுவியல் சம்பந்தமானது. நிறைய லேப் ஒர்க் இருக்கும். நடக்க முடியாத உங்களால் ஏதாவது விபத்து நடந்தா பெரிய பாதிப்பு ஏற்படும்”
சிறுவயதில் இருந்தே கனவில் கட்டிய மண்கோட்டை கண் முன்பாக சிதறுவதை கண்டு மனசு உடைந்தார் செல்வா.
லால்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முதலாவதாக வந்த மாணவன். அன்றைய திமுக அரசு அறிமுகப்படுத்தி இருந்த ஒற்றைச்சாளர முறையில் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்திருந்தது. கல்லூரியில் சேருவதற்காக போனபோதுதான் இந்த இடி.
இராமச்சந்திரன் - ஜோதி தம்பதியினரின் மூத்த மகன். செல்ல மகனுக்கு செல்வகுமார் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். அவர்களது மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. போலியோ பாதிப்பு காரணமாக செல்வாவின் இரு கால்களும் பாதிப்படைந்தது. திருச்சி ஆர்.சி. மேனிலைப் பள்ளியில் சேர்ந்தபோது அவரின் படிப்பு சுமார்தான். அப்பள்ளி தாளாளராக இருந்த தாமஸ் அடிகளார், செல்வாவை பார்த்து கனிவுடன் சொல்கிறார்.

கிரிமினல் அரசாங்கம் ... விவசாயி வாழ்வு கேள்விகுறி ... தரகு முதலாளிகள் பன்னாட்டு கம்பனிகளுக்கு ராஜபோகம்

செக்கானுர் கதவணை உடைந்து வீணாக வெளியேறும் காவிரி நீர்.
காவிரிக்காக கர்நாடகவோடு மல்லுக்கட்டுகிறோம். ரொம்ப சரி, ஆனால், இங்கே என்ன செய்கிறோம்?” _ நாங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜீவானந்தனைச் சந்தித்து வறட்சியையும் விவசாயிகளின் சாவுகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, இப்படியொரு கேள்வியை அவர் என்னிடம் கேட்டார்.

“காவிரி மற்றும் அதன் கிளை நதிகளின் வாய்க்கால்களும், டெல்டா மாவட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளும் தூர் வாரப்படாமல் புதர்ச் செடிகள் மண்டியும், சிதிலமடைந்தும் கிடப்பது; தூர் வாருவது என்ற பெயரில் நடந்துவரும் ஊழல்; மேட்டூருக்குக் கீழே நீரைச் சேமித்து வைக்க போதிய எண்ணிக்கையில் தடுப்பணைகளோ, கதவணைகளோ இல்லாமல் இருப்பது; தமிழகத்தின் காவிரிப் படுகையில் நடந்துவரும் மணல் கொள்ளை” – என நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு காட்டிவரும் அக்கறையின்மை, அலட்சியம் என்ற கிரிமினல்தனத்தைச் சாடுவதாக இருந்தது, அவரது கேள்வி.
இந்தக் கேள்வி தமிழகம் முழுவதற்குமே பொருந்தக்கூடியது என்ற போதும், காவிரிப் படுகையைப் பொருத்தமட்டில் மிகுந்த முக்கியத்துவமுடையது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி மொத்த காவிரி நதி நீரில் தமிழகத்தின் பங்கு 419 ஆயிரம் மில்லியன் கனஅடி (டி.எம்.சி.) ஆகும். இதில், கர்நாடகா தமிழகத்திற்குத் தர வேண்டிய பங்கு 192 ஆ.மி.க.தான். மேட்டூருக்கு மேல் பகுதியில் கிடைக்கும் நீரின் அளவையும் சேர்த்தால், மேட்டூருக்கு ஆண்டொன்றுக்கு வந்து சேரும் நீரின் அளவு 217 ஆ.மி.க. மீதமுள்ள 202 ஆ.மி.க. நீரும் மேட்டூருக்குக் கீழே தமிழகத்தின் பகுதிகளில் கிடைக்கும் நீர் ஆகும்.

அரசு அலுவலகங்களில், பாட நூல்களில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயர் நீக்கம்..

ஜெயா படத்திற்கு கரி பூசி தடை!
குற்றவாளிகள் நம்மை ஆள்வது நமக்கு அவமானம், கொள்ளையர்களை எதிர்த்து போராடாமல் இருப்பதும் குற்ற செயலுக்கு ஒப்பானது.  – மக்கள் அதிகாரம் காக்கையை குயில் என்றும், பித்தளையை தங்கம் என்றும், கொள்ளைக்காரியை புரட்சி தலைவி என்றும் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது மறுத்தாவது பேசுவீர்களா? இல்லை கண்டுக்கொள்ளாமல் சென்று விடுவீர்களா? ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு, ஜெயாவின் படத்தை பிடித்துக் கொண்டே தர்மம் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே இறுதியில் வெல்லும் என்று இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடிக்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
ஜெயா வழியில் ஆட்சி தொடரும் என்று கூறுகின்றனர் தற்போதைய அதிமுக ஆட்சியளார்கள். இது இந்த அளவில் மட்டும் நிற்கவில்லை. திருடர்களே ஆட்சி செய்ய முடியும், திருடர்களே அதிகாரத்திற்கு வரமுடியும், திருடர்களே உத்தமர்களாகவும், தேசப்பக்தர்களாகவும் காட்டிக்கொள்ளமுடியும். இந்த ஆபத்தை உணர்ந்து மக்களுக்கு சுரணையூட்டுவது நமது கடமை.
வெட்கமே இல்லாமல் இன்று மக்களின் வரி பணத்தில் ஜெயாவிற்கு பிறந்த நாள் விழா எடுக்கும் நிலையில், நாங்கள் அம்மாவின் பொன்னான ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என பேசி குற்றாவளிகளையே யோக்கியர்களாக காட்டுகின்றனர் அதிமுக-வினர். இதனை எந்த சட்டமும், நீதி மன்றமும் கண்டிக்க போவதுமில்லை. எந்த எதிர்க்கட்சிகளும் இதை தீவிரமாக எதிர்த்து போராடப் போவதுமில்லை. ஜெயாவின் படத்தை நாங்கள் சட்டமன்றத்தில் வைக்கபோவது உறுதி என்று சவால்விட்டு பேசுகிறார்கள் ஜெயாவின் அடிவருடிகள்.

நெடுவாசல் விவசாயிகளின் போராட்டம் ! – மக்கள் அதிகாரம்

நாடு முழுவதற்குமான கார்ப்பரேட் தொழில்களுக்கான மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster) தமிழகத்தை மாற்றும் பெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதியாக நமது காட்டுவளம், கடல் வளம், நீராதாரம் அனைத்தையும் சூறையாடுகின்றனர். – மக்கள் அதிகாரம்
சென்னை மெரினா, மதுரை அலங்காநல்லூர்-தமுக்கம், கோவை வ.உ.சி. மைதானத்தில் திரண்ட மாணவர்கள், இளைஞர்களின் வீரம் செறிந்த போராட்டம், தமிழர்களின் பண்பாட்டு உரிமையை மீட்பதற்கானது. அப்போதே அதை விவசாயப் பெருமக்களின் வாழ்வுரிமைக்கான எழுச்சியாக வளர்த்தெடுப்பதற்கான முயற்சியை தீவிரவாத சமூகவிரோதிகளின் ஊடுறுவல் என்ற பெயரால் போலீசு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி ஒடுக்கியது. ஆனால் அடங்காது, அத்துமீறும். இது வேறு தமிழகம்.
இன்று நெடுவாசலில் இயற்கை எரிவாயுக் கொள்ளை-அழிவுத் திட்டத்திற்கு எதிராக விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும் கொதித்தெழுந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைய முடியாதவாறு, மெரினாவையும், தமுக்கத்தையும், வ.உ.சி மைதானத்தையும் முற்றுகையிட்டு எவ்வாறு தாக்கினரோ, அதே போல நெடுவாசல் கிராமத்தை சுற்றிவளைத்து போலீசும் அதிரடிப்படையும் உளவுப்படையும் குவிக்கப்பட்டுள்ளன.

சன்னி பவார் .. மும்பை சேரியில் இருந்து ஆஸ்கார் வரை ....

அமெரிக்காவில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் மும்பையில் உள்ள சேரி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சன்னி பவார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சேரி பகுதியில் ஒரேயொரு அறை உள்ள வீட்டில் வசித்து வரும் சன்னி பவார்(8) லயன் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சன்னி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்த ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்டார். கோட்சூட் கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்த சன்னி பவார் சிவப்பு கம்பளத்தில் நடந்தார். அவர் நம்பிக்கையுடன் நடந்து வந்த விதம் ஹாலிவுட் நட்சத்திரங்களை கவர்ந்துள்ளது. சன்னி விழாவை தொகுத்து வழங்கிய ஜிம்மி கெம்மல் சன்னி இருந்த இடத்திற்கு வந்து அவரை தூக்கி அனைவருக்கும் காண்பிக்க அரங்கமே அதிர்ந்தது. அப்போது இனிப்புகள் அடங்கிய பைகள் காற்றில் பறந்து வந்தன. லயன் கிங் பிரபல ஹாலிவுட் படமான லயன் கிங்கில் சிங்க ராஜா முபாசா, ராணி சராபிக்கு சிம்பா பிறந்தவுடன் அதை ரபிக்கி காட்டு விலங்குகளுக்கு அறிமுகம் செய்து வைத்த காட்சியை தான் ஜிம்மி சன்னியை வைத்து நடித்தார்.

நெடுவாசல் போராட்டம் ! திமுக ரகுபதியை தடுத்தவர்கள் பின்னணியில் தீயசக்திகள்?


நெடுவாசல் உரிமை போராட்டத்தை அனைத்து திமுக வினரும் உளமார ஆதரிக்கிறார்கள்...அதில் பங்கேற்றுவருகிறார்கள்.....உண்மை அப்படி இருக்க... போராட்டத்தில் பங்கேற்றுள்ள சிலர் ...திமுக எம் எல் ஏ வை உள்ளே வரக்கூடாது என்று தடுத்திருக்கிறார்கள்... இது நியாயமா ? சரத்குமார் கட்சி இன்னும் பல திரைப்பட துறையினர் ...பல கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட பொது மக்களின் போராட்டத்துக்கு திமுக ஆதரவளிப்பது குற்றமா ? போராட்டக்காரர்களுக்கு திமுக மீது அப்படி என்ன வன்மம்? மக்கள் பிரச்சினை எதுவானாலும் முதலில் குரல் கொடுத்து மக்கள் கவனத்தை...அரசின் கவனத்தை ஈர்ப்பது திமுக தானே... கூட்டம் சேர்ந்த பிறகு ஒரு அறிக்கை விட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் ஈனபுத்தி கொண்ட கட்சி அல்லவே திமுக .. திட்டமிட்டு திமுகவை விலக்கியத்தால் தான் இன்று கிரிமினல்கள் பினாமி ஆட்சி நடக்கிறது ...என்பதை இந்த முற்போக்குவாதிகள் ? எப்போது புரிந்துகொள்வார்கள்.? தமிழர்களை ஒன்று சேரவிடாமல் தடுப்பதில் யாரையுடைய சதி? தமிழ் இளைஞர்கள் மாணவர்கள் பொதுமக்கள் தொடர்ந்து சுயநலவாதிகளின் பொய்யில் மயங்கி ஏமாந்துகொண்டே இருக்காமல் உண்மையை உணர வேண்டும். முகநூல் பதிவு சென்னை தாமோதரன் .

மீதேன்.. 46 ஆண்டுகளாக துர்க்மேனிஸ்தானில் எரிகிறது ... பேரழிவுகள் தமிழகத்துக்கு வேண்டுமா?

trolljaya2.:   மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள்.... 'நரகத்தின் நுழைவாயில்களாவும்' மாறலாம் ! சோவியத் நாட்டின் துர்க்மெனிஸ்தானின் டெர்வீஜ் என்னும் கிராமத்தின் நிலத்தடியில் மீத்தேன் உட்பட சில ஹைட்ரோ கார்பன் எரிவாயுக்கள் உள்ளதாக 1971 ம் ஆண்டு சோவியத் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆழ்துளை இட்டு அவற்றை எடுத்து பயன்படுத்த எண்ணித் துளையிட்டனர். துளையிட்டுக்கொண்டு இருந்த போது துளைக்கருவி உடைந்து போனதில் நிலத்தினுள் இருந்து வெடித்து வெளியேறிய வாயுக்கள் 230 அடி அகலத்துக்கு ஒரு பெரிய பள்ளத்தை நிலப்பரப்பில் உருவாக்கிவிட்டது. சிறு அளவிலான துளை என்றால் அடைத்து விடலாம், மேற்கொண்டு விஷவாயுக்கள் வெளியேறாமல் தடுத்துவிடலாம். 230 அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டால் அதில் இருந்து வெளியேறும் விஷ வாயுவை எப்படி கட்டுப்படுத்துவது என்று கை, கால்களை பிசைந்து, மண்டையை போட்டு குழப்பிக்கொண்ட அந்த விஞ்ஞானிகளில் ஒரு 'அறிவாளி ஐடியா மணி' ஒரு ஐடியா கொடுத்தார்.; நெருப்பு வைத்துவிட்டால், அந்த பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறும் வாயுக்கள் எரிந்து தீர்ந்துவிடும் என்பதே அந்த ஐடியா மணி கொடுத்த சூப்பர் ஐடியா.

நெருப்பும் வைத்து விட்டார்கள்....ஒரு ரெண்டு நாட்களில் வாயு தீர்ந்துவிடும் என்று நம்பினார்கள். ஒரு வாரம், ம்ஹூம், ஒரு மாதம் ம்ஹூம்...ஒரு வருடம் ம்ஹூம்....இன்றயை தேதி வரை 46 ஆண்டுகளாக நிற்காமல் எரிந்து கொண்டிருக்கிறது அந்த "மீத்தேன்" கிணறு.

சிவசேனா இஸ்லாமிய வாக்குகளையும் பெற்று உள்ளது ...


மின்னம்பலம். இந்துத்வா சித்தாந்தத்தை பின் தொடரும் சிவ சேனா கட்சி, இஸ்லாமிய வாக்குகளையும் வென்றிருக்கிறது.
மேலும், சிவ சேனா கட்சி தங்களுடைய உண்மையான நலம் விரும்பிகள் என பாண்ட்ரா மற்றும் ஜோகேஸ்வரி பகுதியில் வென்ற இரண்டு இஸ்லாமிய வேட்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். பாண்ட்ராவில் வெற்றி பெற்ற 35 வயதான சிவ சேனா வேட்பாளர் ஹஜி ஹலிம் கான், சிவ சேனா ’இஸ்லாமிய எதிர்ப்பு கட்சி’யாக உருவகிக்கப்படுவதற்கு மக்களில் சில பிரிவினரே காரணம் என தெரிவித்தார்.