செவ்வாய், 29 மே, 2012

CBI: ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஜெகன் மீது சி.பி.ஐ., புகார்


Srinath - Seattle,யூ.எஸ்.ஏ

அதாவது ஜெகன் மோகன் ரெட்டியும், அவரது தந்தை ராஜசேகர ரெட்டியும் காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு ஆட்சியை நடத்திக் கொண்டிருந்த வரை ஏழைகளின் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை. கொள்ளை என்பதே அறியாமல் இருந்திருந்தனர். ஆனால், இவரது தந்தை மண்டையைப் போட்டவுடனும், ஜெகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியின் தகிடுதத்தங்களுக்கு ஒத்துழைக்க மறுத்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிராக ஏழைகளின் சொத்தைக் கொள்ளையடித்து நாட்டு மக்களை பஞ்சத்தில் தவிக்கவிட்டு விட்டார் என்று சிபிஐ தனது விசாரணையின் மூலம் ஒரு மிகப் பெரும் உண்மையை வெளியில் கொண்டுவந்து நாட்டு மக்களைப் பஞ்சத்தில் இருந்து மீட்டு விட்டதற்காக ஒரு ஜே போடலாம். சும்மா சொல்லக் கூடாது. மத்திய அரசாங்க அதிகாரிகள் வெவரமாத்தான் இருக்குறாங்க. அதெல்லாம் சரி. போபர்ஸ் பீரங்கி, 2G , காங்கிரஸ் கட்சித் தலைவியின் கறுப்புப் பண விசாரணைகள் எவ்வளவு தூரம் போய்க்கொண்டு இருக்கு. அடத் தூ... இதெல்லாம் ஒரு பொழப்பு. இவனுங்கள நம்பி 120 கோடி ஜனங்க இருக்குறாங்க பாரு. அவனுகள சொல்லணும்.
ஐதராபாத்: ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, ஐதராபாத் சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் மூன்று நாட்கள் நடந்த விசாரணைக்குப் பின், நேற்று முன்தினம் இரவு, சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெகன் மோகன், நேற்று ஐதராபாத் சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 14 நாட்கள் தங்களின் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, சி.பி.ஐ., வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

திங்கள், 28 மே, 2012

நித்தியானந்தாவுக்கு மதுரை புதிய மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

மதுரை, மே 28- நான் திருவண்ணாமலைக்குப் போனதும் இல்லை, நித்தியானந்தாவைப் பார்த்ததும் இல்லை. இந்த நிலையில் என்னை தனக்குத் தெரியும் என்று நித்தியானந்தா கூறுவது தவறு.
இப்படிப்பட்ட தவறான தகவல்களை அவர் வெளியிடக் கூடாது என்று மதுரை புதிய மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள அன்ஷுல் மிஸ்ரா கூறியுள்ளார்.

விகடன்-மதன் லடாய்:அம்பிகளின் காரியவாதக் குடுமிபிடிச் சண்டை!

 விகடனிலிருந்து மதன் நீக்கப்பட்டது குறித்து வாசகர்கள் அறிந்திருக்கலாம். அந்த நீக்கம் ஏன் என்பதை அவர்களது வாயாலேயே முதலில் பார்த்து விடுவோம்.
ஹாய் மதன் கேள்வி – பதிலுக்கு வந்த கேள்வியும் அதற்கு மதன் அளித்திருக்கும் பதிலும் இந்த பாரதப்போரின் துவக்கம்.

அம்பேத்கர் கார்ட்டூனும் கருத்துரிமைக் காவலர்களும்

இம்மானுவேல் பிரபு
என்.சி.இ.ஆர்.டி. தயாரித்த 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம் பற்றிய பாடத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கார்ட்டூன் பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. அந்தக் கார்ட்டூனில் அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம் மிக மெதுவாக நத்தை வேகத்தில் நடைபெறுகிறது என்பதைக் குறிக்கும் விதமாக ’அரசியலமைப்பு’ என்று எழுதப்பட்ட ஒரு நத்தை மீது சாட்டையுடன் அம்பேத்கர் அமர்ந்திருக்க, அவரை வேகமாகச் செல்லும்படி சாட்டையுடன் நேரு விரட்டுவதாக அமைந்துள்ளது. இருவரைச் சுற்றியுள்ள மக்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ஷங்கர் பிள்ளை தனது கார்ட்டூன்ஸ் வீக்லி இதழில் 1949ல் வரைந்த அந்தக் கார்ட்டூன்,

அஸ்வின் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர் BCCI கிரிகெட் வாரிய சீனிவாசனின் மகன்

 Son Accuses Bcci Chief Money Laundering எங்க அப்பா பெருமளவில் பண மோசடி செய்துள்ளார்-பிசிசிஐ சீனிவாசன் மகன் புகார்

மும்பை: எனது தந்தையும், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான என்.சீனிவாசன் பெருமளவில் பண மோசடி செய்துள்ளார் என்று சீனிவாசனால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அவரது மகன் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார்.
அஸ்வின் ஓரினச்சேர்க்கை பழக்கமுடையவர் என்று கூறப்படுகிறது. இவரது நண்பர் அவி முகர்ஜி. இருவரும் நெருங்கிப் பழகி வருகின்றனர். மும்பையில் சேர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். தாங்கள் கல்யாணம் செய்து கொண்டதாகவும் முன்பே அறிவித்தவர் அஸ்வின். சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு பாருக்கு 'தண்ணீர் குடிக்க'ச் சென்றபோது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார் அஸ்வின்.இந்த நிலையில்தனது தந்தை மீது சரமாரியாக புகார்களைக் கூறி வருகிறார் அஸ்வின். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியா சிமென்ட்ஸ் அதிபரான எனது தந்தை சீனிவாசன் என்னை நீண்ட காலமாக கொடுமைப்படுத்தி வந்தார்.

ஆந்திராவில் காங்கிரஸ் தன் தலையில் தானே மண்ணை

 Y S Jagan Arrest Congress Hits Self Destruct Button நம்மை நாமே நாறடித்துக் கொள்வது எப்படி?... காங். கற்றுத் தரும் பாடம்!

ஹைதராபாத்: யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது என்பது பழமொழி. நம்மை நாமே நாறடித்துக் கொள்வது என்பது புதுமொழி. இந்தப் புதுமொழியை இந்திய அரசியலுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது காங்கிரஸ்.
ஆந்திராவில் காங்கிரஸ் இத்தனை காலம் தாக்குப் பிடித்து, உயிரோடு இருந்ததற்கு முக்கியக் காரணமே மறைந்த ராஜசேகர ரெட்டி என்பது ஆந்திராவில் ப்ரீகேஜி படிக்கும் குழந்தைக்குக் கூட தெளிவாகத் தெரியும்.
முற்றிலும் ராஜேசகர ரெட்டியின் சொந்த செல்வாக்கால்தான் ஆந்திராவில் காங்கிரஸார் தாக்குப் பிடிக்க முடிந்தது, தழைத்தோங்க முடிந்தது. சந்திரபாபு நாயுடு என்ற பெரிய இமயமலையை தகர்த்துத் தவிடுபொடியாக்கி காங்கிரஸை உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்தவர் ராஜேசகர ரெட்டிதான்.

ஜெகன் கைது: தாயார் திடுக் புகார் “இது சோனியா காந்தியின் லீலை”

Viruvirupu
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தார் (2,000 கோடி என்பது கணிப்பு. 365 கோடிக்கு அவர் பெயரில் சொத்து உள்ளது) என்ற குற்றச்சாட்டில், மூன்று நாட்கள் விசாரித்தபின் பின், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, நேற்று இரவு சி.பி.ஐ.-யால் கைது செய்யப்பட்டார். ஜெகன் கைது செய்யப்படுவதற்கு சற்றுமுன், அவரை கைது செய்யும் விஷயத்தை சி.பி.ஐ., நாடாளுமன்ற சபாநாயகருக்கும், மத்திய மாநில அரசுகளுக்கும் முறைப்படி அறிவித்தது.ஜெகன் குற்றவாளி என்பதால் கைது செய்யப்படவில்லை.

வரலாறு காணாத மக்கள் எதிர்ப்பு-சகாயம் மீண்டும் மதுரை கலெக்டராவாரா?

 Sagayam Be Madurai Collector Again
நேர்மையான, கண்டிப்பான அதிகாரி என பெயர் எடுத்த மதுரை கலெக்டர் சகாயம் திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா மதுரை கலெக்டராக நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பும் ஏற்றுக் கொண்டார்.
இந்த மாறுதல் மதுரை மாவட்டத்தில் பொது மக்கள், அரசியல் கட்சிகள், சமூகநல அமைப்புகள் என பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை தி.மு.க.-வினர் உதடுகளில்(விஜயகாந்த்) “மச்சானை பாத்தீங்களா?”

Viruvirup
விஜயகாந்தின் தே.மு.தி.க. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தமக்கு ஆதரவு தருமாறு தி.மு.க.-வை கேட்கலாம் என்று தெரிகிறது. இதைப் பற்றி தலைமை மட்டத்தில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்ற போதிலும், தே.மு.தி.க. தலைமையால் தட்ட முடியாத குரல் ஒன்று, தி.மு.க.-வின் கதவுகளை தட்டுவோம் என்று கூறியிருக்கிறது.
தே.மு.தி.க. தலைமையால் தட்ட முடியாத குரல் என்றதும் நீங்களும் தட்டுத் தடுமாறாமல் ஊகித்திருப்பீர்களே… ஆம். அக் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் சுதீஷின் குரல்தான் அது.  இன்னமும் நெருக்கமாக சொல்வதானால், விஜயகாந்த் மச்சான்!

கடத்தலின் ‘உள் ரகசியம்’ அவுட்?சினிமாவாக தயாராகும்


Viruvirupu

ஆழ்கடலில் நடந்த சமீபகாலத்திய அதி சாகசச் செயல் என்று வர்ணிக்கப்பட்ட அட்வென்சர் ஒன்று, தற்போது கோர்ட்டுக்கு இழுக்கப்பட்டுள்ளது. மெர்ஸ்க் அலபாமா கப்பல் 3 வருடங்களுக்குமுன் சோமாலியக் கொள்ளையரிடம் சிக்கியதும், அதன்பின் அதிரடியாக மீட்கப்பட்டதும்தான் அந்த அட்வென்சர்.
இந்தக் கடத்தல்-மீட்பு எந்தளவுக்கு பாப்புலர் என்பதற்கு உதாரணம் வேண்டுமா? இதை மையமாக வைத்து ஹாலிவூட் திரைப்படம் ஒன்று உருவாகும் அளவுக்கு பாப்புலர். அதுவும் டாம் ஹான்க்ஸ் ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு, சம்பவம் பிரபல்யம்.

இப்போதெல்லாம், சோமாலியக் கொள்ளையர்கள் விவகாரம் என்றாலே ஹாலிவூட்டில் டபுள்-ஓகே!

கமலஹசனின் own பேஸ்புக் www.facebook.com/kamalhaasan.theofficialpage

ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக்ஸ்பாட் என பல்வேறு சமூக இணையதளங்களில் திரைநட்சத்திரங்களும் இணைந்து பொதுமக்களுடன் பொழுதுபோக்குவது இப்போதைய வழக்கமாக இருக்கிறது. 
சினிமாவில் அறிமுகமாகும் திரைக் கலைஞர்கள் முதல் முன்னணி ஹீரோ ஹீரோயின்கள் வரை இந்த வலைதளங்களில் உறுப்பினராக சேர்ந்து தங்களது அன்றாட நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்கள் பெயரில் ரசிகர்கள் சிலரே ஒரு அக்கவுண்ட் துவங்கி அவர்களை பற்றிய தகவல்களை பகிர்ந்துவந்தனர். 
ஃபேஸ்புக்கில் கமல்ஹாஸன் பெயரில் பல அக்கவுண்டுகள் ஆரம்பிக்கப் பட்டதால் இதில் கமல்ஹாஸனின் உண்மையான அக்கவுண்ட் எது என்று ரசிகர்கள் குழும்பியிருந்தனர்.

உங்கள் ஓராண்டு ஆட்சியின் சாதனை?’ – நிருபர்கள்; ‘அப்புறம் அப்புறம்…’ – ஜெயலலிதா!

சென்னை: முதல்வராகப் பதவி ஏற்ற கையோடு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதி, ‘என்னை கண்ட இடத்தில் நிறுத்தி பேட்டி கேட்டு நச்சரிக்கக் கூடாது. நானே வாரம் ஒரு முறை உங்களைச் சந்திப்பேன்,” என்றார்.
அதன்படி ஒரே ஒரு வாரம் மட்டும் சந்தித்தார் ஜெயலலிதா. அப்புறம்… வழக்கம் போல, அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டார்.
இந்த ஒரு வருடத்தில் இப்போதுதான் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதுகூட அவராக வரவழைத்து சந்திக்கவில்லை. வீட்டு வாசலில் நிருபர்கள் காத்திருந்து சந்தித்தனர்.
நான்கே கேள்விகள்தான். அதில் ராசா ஜாமீன், ப சிதம்பரம் விவகாரங்களுக்கு ஆர்வத்துடன் பதிலளித்தவர், ஆட்சி பற்றிய கேள்விகளுக்கு சுரத்தின்றி பதிலளித்துவிட்டு, காரில் ஏறுவதிலேயே குறியாக இருந்தார்.

பிச்சை கேட்கும் தமிழகம்... நடிகை கமென்ட்

பெங்களூர்: முதலில் தண்ணீர் பிசசை கேட்டார்கள், பிறகு மின்சாரம். அதையெல்லாம் கொடுத்தோம். இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் கருணை பிச்சை கேட்டார்கள். அதையும் கொடுத்தோம் என ஏளனமாக தமிழகத்தை பற்றி கமென்ட் அடித்திருக்கிறார் நடிகை தன்யா.
காதலில் சொதப்புவது எப்படி, 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தன்யா. பெங்களூரை சேர்ந்தவர். தமிழ் சினிமா மூலம்தான் நடிகையாக இவர் அறிமுகமானார். இவர் இணையதளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். 
இணையதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

பாதுகாப்பிற்கு தமிழக போலீசாரை அனுப்பவா? முல்லை பெரியாறு அணை

சென்னை:""முல்லை பெரியாறு அணை பகுதிக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையை, மத்திய அரசு அனுப்பி வைக்கத் தவறினால், அணை பாதுகாப்பிற்கு தமிழக போலீசாரை அனுப்பி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை,'' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமரிடம் முன்னதாக எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு பதிலாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஞாயிறு, 27 மே, 2012

ஜெகன்மோகன் ரெட்டி கைது! ஆந்திராவில் சிபிஐ காங்கிரஸ் கையில்

ந்திராவில்  ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை சிபிஐ இன்று (27.05.2012) கைது செய்தது. முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக அவரிடம் கடந்த 3 நாள்களாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ஜெகன்மோகன் ரெட்டி, சிபிஐ தன்னிடம் சம்பந்தமில்லாத பல கேள்விகளை கேட்டாலும் அதற்கெல்லாம் பொறுமையாக பதில் அளித்துவந்ததாகத் தெரிவித்தார். ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறிவிடுவார்கள் என்பதற்காக அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தேன் என்று தெரிவித்திருந்தார். இன்று  (27.05.2012) காலை முதலே அவர் கைது செய்யப்படக்கூடும் என்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இந்த நிலையில் மாலை  (27.05.2012)  7 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஆந்திராவில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இரு அதிமுகவினர் டிஸ்மிஸ் நடராஜன் வீட்டு திருமணத்திற்கு சென்றது கட்சி கட்டுப்பாடை மீறும் செயல்

Viruvirupu கடந்த 23, 25-ம் தேதிகளில் நடைபெற்ற நடராஜன் குடும்ப திருமணங்களில் வெளிப்படையாகவும், ரகசியமாகவும் தலையைக் காட்டிவிட்டு வந்த அ.தி.மு.க. புள்ளிகள், தலையில் துண்டு போட்டுக் கொண்டு நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை கட்சியில் இருந்து நீக்கும் முடிவை எடுத்திருக்கிறார் ஜெயலலிதா.
முதல் கட்டமாக இருவர் மட்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மாரியம்மன் கோவில் ஊராட்சித் தலைவர் தனசேகர், தஞ்சை நகராட்சி, 26-வது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரன் ஆகிய இருவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் ஜெயலலிதா.

ராமதாஸை சி.பி.ஐ. இன்று தமது இடத்துக்கு அழைத்து ரகசிய விசாரணை!


Viruvirupu வெளியே சொல்லப்படாமல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றொரு தடவை சி.பி.ஐ. அதிகாரிகளால் ரகசியமாகவிசாரிக்கப்பட்டிருக்கிறார், டாக்டர் ராமதாஸ். மீடியாவின் கண்களில் படாமல் டாக்டர் ஐயா விசாரணைக்கு செல்ல முயன்ற இரண்டாவது அட்டெம்ப்டு இது.
ஆனால், இம்முறையும் கதை லீக்காகி, எங்கள் காதுகள்வரை வந்து விட்டது.
இன்று நடந்த விசாரணைக்காகவும் சென்னைக்கு வர வைக்கப் பட்டுள்ளார் பா.ம.க. நிறுவனர். சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் வைத்து குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் விசாரிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், கடந்த தடவைபோல முதல்நாளே சென்னையில் வந்து தங்கி, விசாரணைக்கு முகம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
தமது வழமையான வாகனத்தில் வராமல், டார்க் கிரே கலர் லேன்ட் க்ரூசர் ஒன்றில் விசாரணைக்காக வந்து இறங்கியிருக்கிறார் அவர்.

பெண்களே புகார் கொடுங்கள்.ஆபாச வீடியோக்கள்.. செல்ஃபோன், டி.வி.டி.கள் இண்டெர்நெட்களில்

எத்தனையோ ஆபாச வீடியோக்கள்.... செல்ஃபோன், டி.வி.டி.கள் இண்டெர்நெட்களில் உலவிக்கொண்டிருக்கின்றன. இதுபோன்ற ஆபாச காட்சிகளில் ஓ.கே. சொல்லிவிட்டு ஈடுபடும் பெண்கள் ஒரு ரகம்.
அது பிஸினஸ். பெண்களுக்கே தெரியாமல் ரகசிய கேமரா பொருத்தி அந்தரங்கங்களை படம் பிடிப்பது இன்னொரு ரகம். ஆனால், நண்பர் ஒருவர் காண்பித்த ஆபாச வீடியோக்கள் நம்மை வேதனையுடன் "“உச்'’கொட்ட வைக்கிறது. இன்னமும் பெண்கள் இப்படி இருக்கி றார்களே என்கிற கோபமும் ஆதங்கமும் எரிமலையாய் வெடிக்கிறது.
அவர் காண்பித்த முதல் வீடியோ... அந்த பெண்ணுடன் அந்தரங்கமாய் இருந்துவிட்டு... தனது வக்கிரபுத்தியை கொஞ்சம் கொஞ்சமாக தொடர ஆரம்பிக்கிறது அந்த வாலிபன் கையி லிருந்த செல் ஃபோன். ஆம்... செல்ஃபோனிலுள்ள கேமராவை ஆன் செய்தவன்... அவளின் ஆடையில்லா உடலை படம் பிடிக்க ஆரம்பிக்கிறான். அவள் அதிர்ச்சியாகி.... ""ஏய் என்ன பண்ற நீ?'' என்கிறாள்.
""சும்மாதான்... நீ இல்லாம தனிமையில இருக்கும்போது பார்த்து ரசிக்கத்தான்.''’’

ஓவியர் ரவிவர்மா உருவாக்கிய இந்து கடவுள்கள்

http://noelnadesan.com/
சிவாஜிகணேசன் நடித்த சரஸ்வதி சபதத்தில் வந்த நடிகைகள் சாவித்திரி, தேவிகா, கே.ஆர்.விஜயாவை வணங்கி வழிபட்டான்
R.Raja Ravi Varma
பதினாலு வயதுப்பருவத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் காலத்தில் நடந்த சம்பவம் ,நினைவுக்கு வருகிறது. நியூபோடிங் எனப்படும் பாரிய மண்டபத்தில் வரிசைவரிசையாக கட்டில்களும் இரண்டு பக்கங்களில் சிறிய அலுமாரிகளும் அமைந்திருந்தன. அப்படி ஒரு அலுமாரி ஒவ்வொரு மாணவனுக்கும் சொந்தமானது.
உருவாக்கிய  இந்து கடவுள்கள் 
ஒரு நாள் நவராத்திரி காலம். காலை ஆறுமணியளவில் எனது பக்கத்துகட்டில் மாணவன் பயபக்தியாக ஒரு படத்தின் முன்பு நின்று ‘வெள்ளை கலையுடுத்து, வெள்ளைப் பணிபூண்டு..” என்ற சரஸ்வதி தோத்திரத்தை பயபக்தியுடன் பாடிக்கொண்டு நின்றான். நெற்றியில் திருநீறு, நெஞ்சில் சந்தனம். பொடியன் பக்திப்பழமாக தோற்றமளித்தான்.
எட்டிப் பார்த்தேன். அழகான மூன்று சினிமா நடிகைகள் அந்த படத்தில் இருந்தனர். சாவித்திரி, தேவிகா, கே.ஆர்.விஜயா என்ற நடிகைகள் மூவரினதும் படத்தை ஒன்றாக்கி படமாக்கப்பட்டிருந்தது.
அவனிடம் கேட்டேன் ‘சினிமா நடிகைகளிடம் இவ்வளவு பக்தியா?”
கெட்டவார்த்தையால் பேசிவிட்டு ‘நவராத்திரி காலத்தில் விடிய எழும்பி சரஸ்வதி தோத்திரம் பாடினால் படிப்பு மூளையில் பதியும் என்று அம்மா சொன்னா” என்றான்.
‘இது சிவாஜிகணேசன் நடித்த சரஸ்வதி சபதத்தில் வந்த நடிகைகள்” என்றேன்.

AMBANI வாஸ்து இந்திய ஏழ்மை Century FOX

இந்தியா போன்ற நாட்டில் பணம் படைத்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக 5 பேர் இருப்பதற்காக,1000 கோடி ரூபாயில் "அன்டில்லா " என்கிற அரண்மனையை விடப் பெரிய மாளிகையைக் கட்டி அதற்கு 70 லட்சம் ரூபாய் மின் கட்டணம் கட்டிக் கொண்டு பின் வாஸ்து சரியில்லை என்று சொல்லி கட்டிய வீட்டில் குடியிருந்தும் குடியிருக்காமல் இந்திய ஏழ்மையை எள்ளி நகையாடும் விதமாக வாழ்க்கை நடத்தும், அந்த பணத் திமிரை வெளிக்காட்டுவதில் சிறிதும் தயக்கம் காட்டாத அம்பானிக்களையும் ஊதாரித்தனத்திலும் தாந்தோன்றித்தனத்திலும் அவர்களை விட எதிலும் சற்றும் சளைக்காத மல்லையாக்களையும் மற்றும் அது போன்ற பணத்திமிர் பிடித்தலைபவர்களையும் "எல்லா விதத்திலும் " கிண்டலும் கேலியும் செய்வதில் எனக்கு எந்த தயக்கமோ ,வருத்தமோ கிடையாது என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.

கி அ அ அனானி.

கலைஞரை சந்திக்க ராசா அனுமதி கோருகிறார்


 Raja Willing Meet Karunanidhi

மணமகன் தற்கொலை ஜோசியரால் முதலிரவு தள்ளிப்போனதால்

சென்னை: ஜாதகத்தில் கட்டம் சரியாக இல்லை என்றுகூறி முதலிரவை தள்ளிப் போடுமாறு ஜோசியர் கூறி வந்ததால் அதிருப்தி அடைந்த புது மாப்பிள்ளை ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து விட்டார்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பாலாஜி. 22 வயதேயான இவர் மின்சார ரயிலில் முறுக்கு விற்று வந்தார். அதே போல ரயிலில் முறுக்கு விற்று வந்த ஒரு பெண்ணுக்கு பாலாஜியைப்ப பிடித்துப் போக தனது மகள் சித்ராவை அவருக்கு மணமுடித்து வைக்க விரும்பினார். பாலாஜியும் சம்மதம் தெரிவிக்கவே, சித்ராவுக்கும் அவருக்கும் கடந்த 18ம் தேதி கல்யாணம் நடந்து முடிந்தது.

காஞ்சி சங்கர மடத்தை அரசுடமையாக்க கோரிக்கை!

காஞ்சி சங்கர மடத்தை அரசுடமையாக்க வேண்டும் என்று தமிழக மனித உரிமைகள் கழகம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக மனித உரிமைகள் கழகம் நிறுவனர் மற்றும் தலைவர் எம்,ஜெயராமன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
ஆதி சங்கரரால் துவக்கி வைக்கப்பட்ட காஞ்சி சங்கர மடத்தின் தற்போதைய பீடாதிபதியான ஜெயந்திரர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளது. குற்றங்களின் உச்சமான கொலைக் குற்றச் சாட்டு கூட பதிவு செய்யப்பட்டதை அனைவரும் அறிவோம்.

விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பாண்டியன் - அதிர்ச்சியில் உளவுத்துறை!

 Dmdk Mla Arun Pandian Visits Jaffna
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தாக கூறப்படுகின்றது.

மதுரை தி.மு.க: அஞ்சாநெஞ்சரின் ஆறாத நெஞ்சம்!

Viruvirupu
மதுரை தி.மு.க. இன்னமும் சூடாகத்தான் உள்ளது. மதுரையில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில், மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்கள் யாருடைய தலைகளையும் காணவில்லை. காரணம், வெரி சிம்பிள். நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியவர், நகரச் செயலாளர் தளபதி. அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது, அழகிரி தரப்பு.
இந்த தளபதி, முன்பு அழகிரியின் ஆள். அதுமட்டுமல்ல, தளபதியை நகரச் செயலாளர் ஆக்கியதே அழகிரிதான். ஆனால், இப்போது இருவரும் வெவ்வேறு துருவங்கள். காரணம், ஸ்டாலினின் மதுரை விசிட்.
மதுரையில் அண்மையில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. அழகிரியின் அனுமதி இல்லாமல் ஸ்டாலின் மதுரைக்கு வந்தார் என்று கூறி, அதை அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து ‘சிறப்பித்தவர்’ தளபதி. இதுதான், பனிப் போருக்கு காரணம்.