ராதா மனோகர் : தமிழகம் போராடி நிலை நிறுத்திய இரு மொழி கொள்கையை,
இன்று பல மாநிலங்களும் வலியுறுத்த தொடங்கி உள்ளன.
குறிப்பாக கர்நாடகமும் மகாராஷ்டிரமும் வெளிப்படையாக தங்கள் மாநிலங்களில் மாநில மொழியும் ஆங்கிலமும் மட்டுமே பின்பற்றப்படும் என்று அறிவித்துள்ளன.
மேலும் இந்தி திணிப்பினால் பல மாநில மொழிகள் அழிந்து கொண்டுவருவது எல்லா மாநிலங்களிலும் தற்போது உணரப்படுகிறது.
மாநில மொழிகளுக்கான குரல் ஒலிக்க தொடங்கி உள்ளது.
திமுகவின் ஆதார கொள்கைகளில் ஒன்றான இருமொழி கொள்கையானது,
இன்று துணைக்கண்டம் முழுவதும் அகல கால் பதிக்கிறது என்றால் அது மிகையல்ல!
நீதிக்கட்சி முதலான அத்தனை திராவிட இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் இது ஒரு பிரமாண்டமான வரலாற்று வெற்றியாகும். .
இந்த இடத்தில பேரறிஞர் அண்ணா அன்று,
தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் இருக்கும் வரையில் அண்ணாதுரைதான் தமிழ்நாட்டை ஆள்கிறான் என்று கூறியது நினைவுக்கு வருகிறது!.
மாநில அடையாளங்களை காக்கும் இரு மொழிக்கொள்கை எங்கெல்லாம் ஓங்கி ஒலிக்கிறதோ,
ஆதிக்க மொழிக்கு எதிராக போர்கொடிகள் எங்கெல்லாம் உயர்கின்றனவோ
அங்கெல்லாம் திராவிடம்தான் ஆளப்போகிறது என்று எனக்கு தோன்றுகிறது!
மாநில உரிமைகளை முன்னெடுக்கும் அத்தனை மாநிலங்களும் திராவிட மாநிலங்கள்தான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக