செவ்வாய், 27 மே, 2025

இலங்கை திரையுலகின் மகாராணியாக மின்னிய மறைந்த மாலினி பொன்சேகா

 பி பி சி : சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்த சிங்கள நடிகை மாலினி பொன்சேகா காலமானார்
இலங்கை  சிங்கள சினிமாவின் மகாராணி என அழைக்கப்பட்ட மாலினி பொன்சேகா தனது 78வது வயதில் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த 24ம் தேதி காலமானார்.
சினிமாத்துறையில் மாத்திரமன்றி, அரசியலிலும் மாலினி பொன்சேகா கடமையாற்றியிருந்தார்.
கில்பர்ட் பொன்சேகா மற்றும் சீலாவதி பொன்சேகா ஆகியோருக்கு 1947ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி மாலினி பொன்சேகா பிறந்தார்.



மாலினி பொன்சேகா பிறந்த 1947ம் ஆண்டே, இலங்கையின் முதலாவது திரைப்படம் தயாரிக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

கடவுனு பொறந்துவ என்ற திரைப்படம் எஸ்.எம்.நாயகம் என்பவரினால் 1947ம் ஆண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படமே இலங்கையின் முதலாவது திரைப்படமாகும்.

புஞ்சி பபா திரைப்படத்தின் ஊடாக 1968ம் ஆண்டு தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார் மாலினி பொன்சேகா.
அதனைத் தொடர்ந்து, தேசிய நாடக விழாவில் 1969ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதை மாலினி பொன்சேகா வெற்றிக் கொள்வதன் ஊடாக, இலங்கையின் தலைசிறந்த நடிகை என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டார்.

அதன்பின்னர், 1980ம் ஆண்டு ஹிங்கனா கொல்லா, 1982ம் ஆண்டு ஆராதனா, 1983ம் ஆண்டு யசா இசுறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தததன் ஊடாக சரசவியாவின் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றுக்கொண்டார்.
சுமார் 7 தசாப்த திரைப்பட வாழ்க்கையை தொடர்ந்த மாலினி பொன்சேகா, நூற்றுக்கணக்கான விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: