ராதா மனோகர் : கேரளாவில் நம்பூதிரிகளுக்கு ( பார்ப்பனர்) கொஞ்சம் கூட குறையாத அல்லது அவர்களை விட இன்னும் ஒரு படிமேலாக பட்டியல் ஜாதி மக்களை கொடுமை படுத்திய ஆதிக்க ஜாதிகளின் வரலாறு ஒன்றும் பழங்கதை அல்ல
இன்றும் வெளிப்படையாக அம்பலத்தில் அரங்கேறும் கொடுமைகள் அவை.
ஆதிக்க ஜாதியின் முன்னால் கூனி குறுகி நிற்கும் பட்டியலின மக்கள்,
இன்றும்கூட அவர்களின் மேட்டிமையை அங்கீகரித்து விழிக்க வேண்டிய ஒரு கட்டாய சொல்லாகத்தான் :"தம்புரானே" என்ற சொல் பழக்கத்தில் இருக்கிறது!.
வேடன் மேலங்கி அணியாமல் ஆபாசமாக மேடைகளில் தோன்றுவது அசிங்கமாம்.
அடேகளா கேரளாவிலும் யாழ்ப்பாணத்திலும் இன்றும் கூட கோயில்களில் ஆண்கள் மேலங்கி அணிவது தடை செய்யப்பட்டிருக்கிறதே?
(ஒரு கோயிலில் எனது ஷேர்ட்டை பிடித்து இழுத்து கழற்றுமாறு அந்த கோயில் குருக்கள் அடாவடி பண்ணினான் ..அவன் பூசை செய்து முடியும்வரை ஆங்கிலத்திலும் தமிழிலும் அவனை நான் பூசை செய்துகொண்டே இருந்தேன் .. கூடி இருந்தவர்கள் என் மனைவி உட்பட இதுதான் இங்கு வழக்கம் என்று கூறி என்னை வெளியே இழுத்து கொண்டுபோய் விட்டனர் . இது நடந்தது 2012 இல்)
அங்கே அசல் நாயர்வாள் மோகன்லாலும் அசோக்கும் ஷேர்ட் இல்லாமல் டூயட் வேறு பாடுகிறார்கள்
நாயருக்கு ஒரு நீதி வேடனுக்கு ஒரு நீதி!
தம்புரான் என்னிங்கில் நீ எனக்கு ஒரு மயிருமல்ல என்ற வேடனின் வரிகள் தம்புராக்கன்மாரை எவ்வளவு வெத்தனிக்கிறது என்பது மனசிலாயோ?
இந்த பாடல் எனக்கு மிகவும் விருப்பமானது
ரீதிகௌலா ராகம் எப்போதும் இஷ்டமானதுதன்னே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக