வியாழன், 29 மே, 2025

வேடன் பாடிய 'ஆனேல் எனிக்கொரு மயிருமல்ல' என்ற வார்த்தை!

 குமரிக் கிழவனார் :வேடனின் சாகித்யம் கேள்விக்குள்ளாக்கபட வேண்டியது சமூகத்திற்கு எதிரான அச்சிலேற்றபடக்கூடாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்று கேரள வலதுசாரிகள் மீடியாக்களில் அலைந்து திரிந்து அழுது கொண்டிருக்கிறார்கள்............
எங்கே இருந்து வருகிறது இவர்களுக்கு இந்த திடீர் சமூக சிந்தனை என்று யோசித்து கொண்டிருக்கிறேன். ண்ணூறுகளில் மலையாள சினிமாவில் ரஞ்சித் ஷாஜிகைலாஸ் ரெஞ்சி பணிக்கர் மோகன்லால் சுரேஷ் கோபி போன்ற கொம்பன்கள் அர்மாதித்த காலம்.  அவர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு மொழியாடலும் சமூகத்திற்கு எளிய மக்களுக்கு எதிரானதுதான். ஒடுக்கபட்ட மக்களை நேரடியாக டார்க்கெட் செய்து இவர்கள் எழுதிய பேசிய வசனங்களின் ஆழ்ந்த அர்த்தம் தெரியாது மலையாள இளைஞர்கள் அதை தினமும் பயன்படுத்தும் வார்த்தைகளாக மாற்றிக்கொண்டனர்............
உச்ச குரலில் ஆங்கிரி எங்மேனான கோபியும் சூப்பர்ஸ்டாரான லாலேட்டனும் மெகாஸ்டாரான மம்முக்காவும் பேசி கொண்டாட பட்ட வார்த்தகளை இன்று பயன்படுத்தினால் வழக்கு பாயும்........ 
செற்றே - ஒதுக்குபுறமான குடிசைகளில் வசிக்கும் மக்கள் , பூலோக செற்றை என்பது உலகத்திலயே கேடுகட்டவன் என்று பொருள்......
புல்லே - புல்லுக்கு சமமானஅக்றினை அதாவது அவர்ணர்களை பொருளாக பார்க்கும் வழக்கம் அங்கு உண்டு பெண்களை சாதனம் என்பார்கள் அதற்கு நீண்ட வரலாறு உண்டு........
கோப்பே - சமூக அடுக்குகளின் கீழானவர்களை குறிக்கும் சொல்..... 
புலையாடி மோன - புலையனுக்கு பிறந்தவன் அதாவது புலையனோட உறவு கொண்ட உயர்சாதி பெண்ணுக்கு பெறந்தவன் இதற்கு வேறொரு வரலாறு உண்டு ஏற்கனவே எழுதியிருக்கிறேன்....
பறநாரி - இதுவும் தலித்துகளை குறிக்கும் சொல் (கீழசாதிபொ*டை என்றும் பொருள் படும்) ....... 
கழுவேறி மோனே - இது கழுவேற்றபட்டவனின் மகன்... கழுவேற்றி இறந்தவனுக்கு ஏது மகன்...? இது நேரடியாக ஒரு வனின் தாயை தவறாக குறிக்கும் சொல் இனி சாதிய திருவாங்கூரிலுன்  கழுவேற்றபட்டவர்கள் யாரென தேடிப்பாருங்கள்......
தந்தையில்லாத்தனம் - அப்பன் யாரென தெரியாத இதுவும் பெண்களை குறிக்கும் சொல். கேரளத்தில் ஒரு உயர்சாதி சமூகம் அவர்களின் வாழ்வியல் முறைப்படி தந்தை யாரென அறியாத காரணத்தால் தரவாட்டின் பெயர்களை சூட்டி மகிழ்வார்கள். அவர்கள் தான் பிற்காலங்களில் மற்றவர்களை நோக்கி தந்தையில்லாதவன் என்று வசனங்களை உச்சரித்தவர்கள்.........
இப்படி இதற்கென தனி புத்தகமே போடுமளவிற்கு மலையாள சினிமாக்கள் பேச வாய்க்கூசும் வார்த்தைகளை பஞ்ச் டயலாக்காக வைத்தவர்கள்......
இன்று வேடன் பாடிய 'ஆனேல் எனிக்கொரு மயிருமல்ல' என்ற வார்த்தையை பிடித்து கரைந்து கொண்டிருக்கிறார்கள்.....
போங்கடா மயித்தாண்டிகளா.......
கிழவனார்

கருத்துகள் இல்லை: