வெள்ளி, 11 நவம்பர், 2022

உச்சநீதிமன்றம் 6 பேரை விடுதலை செய்தது ஏற்கத்தக்கது அல்ல - ஜெய்ராம் ரமேஷ!

மாலைமலர் :  புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம்  இன்று தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின்  இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற எஞ்சிய 6 பேரையும் உச்சநீதிமன்றம்  விடுவிப்பதாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி இதனை தெளிவாக விமர்சிக்கிறது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்ற நிலையை எடுக்கிறது.
உச்சநீதிமன்றத்தின்  இந்த செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது.
இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம்  செயல்பட்டுவிட்டது. 6 பேர் விடுதலை முற்றிலும் தவறானது, துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: