செவ்வாய், 1 நவம்பர், 2022

சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்கு - நடிகைகள் பற்றி தரக்குறைவான பேச்சு

தினமலர் : சென்னை: சமீபத்தில் சென்னை, ஆர்.கே.நகரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில்
அக்கட்சி மாநில பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜ.,வில் இருக்கும் நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்தார்.
இரட்டை அர்த்தம் தரும் வகையில் மோசமான வார்த்தைகளால் விமர்சித்த சைதை சாதிக்கிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ., மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சைத சாதிக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்,
கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல்,
பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: