சனி, 3 செப்டம்பர், 2022

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சயா நாடு திரும்பினார்!

hirunews.lk  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சயா நாடு திரும்பினார்!  
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை வந்தடைந்துள்ளார்.
நேற்று நள்ளிரவு அவர் தாய்லாந்தில் இருந்து இலங்கையை வந்தடைந்தார்.
இந்தநிலையில் அவர் கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இல்லத்துக்கு இன்று அதிகாலை 12.50 அளவில் அவர் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்த அவரை வரவேற்பதற்காக அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மக்களின் எதிர்ப்புக் காரணமாக கோட்டாபய ராஜபக்ச ஜூலை 13ஆம் திகதியன்று இலங்கையில் மாலைத்தீவுக்கு தப்பிச்சென்றார்.
இதன் பின்னர் சிங்கப்பூருக்குசென்ற அவர், அங்கிருந்து இறுதியாக தாய்லாந்து சென்றார்.
எனினும் அங்கு நீண்ட நாள் அங்கு  தங்கியிருக்க முடியாத நிலையில் அவர் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை: