சனி, 26 செப்டம்பர், 2020

வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பாதுகாக்காது! - நிரூபித்த அரசு...


vikatan : கு. ராமகிருஷ்ணன் :
வேளாண் சட்ட நகல் எரிப்பு
வேளாண் சட்ட நகல் எரிப்பு
`ஒப்பந்தச் சாகுபடி முறையில் கரும்புக்கே இந்த நிலையென்றால், நெல், கோதுமை உள்ளிட்ட அனைத்து விளைபொருள்களையும் ஒப்பந்தச் சாகுபடி முறையில் கொண்டுவந்தால், விவசாயிகளின் நிலை என்னவாகும்... நினைத்து பார்ப்பதற்கே மனம் பதறுகிறது.'

`மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மைகள் அதிகம்’ எனத் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவும், அந்தத்துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடியும் தெரிவித்திருக்கிறாகள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக ஒப்பந்தச் சாகுபடி முறை கொண்டு வரப்பட்டதாகவும், அதேபோல்தான் மத்திய அரசு விவசாயிகளுக்கு உத்தரவாதமான விலை கிடைப்பதற்கான சட்டத்தை கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள். இது குறித்து கருத்து தெரிவிக்கும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், `கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பணத்தை தமிழக அரசால் பெற்றுத் தர முடியவில்லை. அப்படியென்றால், தற்போது மத்திய அரசு கொண்டுவரும் சட்டமும் தோல்வியில்தான் முடியுமா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.


அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்பு சட்டம், ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை தற்போது மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்படுவதாகவும், இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. தற்போது தமிழ்நாட்டிலும் இந்தச்ச்சட்டங்களுக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. இந்த நிலையில்தான் தமிழக அரசு இந்தச் சட்டங்களுக்கு ஆதரவான நிலை எடுத்தது. இது குறித்து விளக்கமளிப்பதற்காக தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவும், இந்தத் துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடியும் நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். ``இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மைகள் அதிகம். எவ்வித பாதிப்பும் இல்லை” எனத் தெரிவித்தார்கள். ``தமிழக அரசுதான் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒப்பந்ச்த சாகுபடி முறையைக் கொண்டுவந்தது.

அதன்படிதான், தற்போது மத்திய அரசு, விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான உத்தரவாதச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது” என ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். இந்தக் கருத்து விவசாயிகளை குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணைச் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``ஒப்பந்தச் சாகுபடி என்பது விவசாயிகளைச் சுரண்டி ஏமாற்றக்கூடிய சூழ்ச்சித் திட்டம். தற்போது இது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வரக்கூடிய ஒப்பந்தப் பண்ணையச் சட்டம், எந்தவிதத்திலும் விவசாயிகளுக்குப் பயனளிக்காது என்பதைத் தமிழக அரசு மறைமுகமாக ஒப்புக்கொள்கிறது. சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்து கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள், கடந்த பல ஆண்டுகளாகவே வஞ்சிக்கப்பட்டுவருகிறார்கள். விவசாய அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்தத் தொகுதியிலுள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, விவசாயிகளின் பெயரைப் பயன்படுத்தி வங்கிகளில் மோசடியாக 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுவிட்டு ஆலையையும் மூடிவிட்டது.

சுவாமிமலை  சுந்தர விமல்நாதன்

பாவம், விவசாயிகள் தாங்கள் வாங்காத கடனுக்கு கடன்காரர்களாக நிற்கிறார்கள். மேலும், திரு ஆரூரான் மற்றும் அம்பிகா ஆலைக் குழுமம், விவசாயிகள் கொடுத்த கரும்புக்கு, முழு விலையைக் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றிவருகிறது. சுமார் 120 கோடி ரூபாய்க்கும் மேல் விவசாயிகளின் பணம் இந்த சர்க்கரை ஆலைகளிடம் முடங்கிக்கிடக்கிறது. இந்த ஆலைகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான ஆலைகள், விவசாயிகளுக்குத் தர வேண்டிய பணத்தைத் தராமல் ஏமாற்றிவருகின்றன. மொத்தம் 1,850 கோடி ரூபாய் நிலுவை இருக்கிறது. இந்தப் பணத்தை ஏன் தமிழக அரசால் மீட்டுத் தர முடியவில்லை?

விவசாயிகளின் பெயரை முறைகேடாகப் பயன்படுத்தி, வங்கிக் கடன் பெற்ற சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது ஏன் குற்ற நடவடிக்கை எடுக்கவில்லை... ஒப்பந்தச் சாகுபடி முறை என்பது விவசாயிகளை வஞ்சிக்கக்கூடியது என்பது உலகறிந்த உண்மை” என்கிறார் அழுத்தமாக.

 

 இது குறித்து தமிழக வேளாண்மைத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியிடம் பேசியபோது, ``பென்னாடம் அம்பிகா சர்க்கரை ஆலை மற்றும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை மீதும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்த, நியாயமான ஆதரவு விலையை பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் கொடுத்துவிட்டன. மாநில அரசின் பரிந்துரை விலையைத்தான் சர்க்கரை ஆலைகள் கொடுக்கவில்லை. அதைப் பெற்று தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வேளாண் சட்டங்களை தமிழக அரசு ஆதரிப்பதில் எந்த ஓர் அரசியல் உள்நோக்கமும் கிடையாது. விவசாயிகளின் நலன் கருதியே இந்தச் சட்டங்களை ஆதரிக்கிறோம்” என்றார்.

ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி
நா.ராஜமுருகன்
இது குறித்து மீண்டும் சுவாமிமலை விமலநாதனிடம் நாம் பேசியபோது, ``1966-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கரும்பு ஆணைக் கட்டுப்பாட்டுச் சட்டப்படி, விவசாயிகள் கொடுத்த கரும்புக்கு 14 நாள்களுக்குள் சர்க்கரை ஆலைகள் பணம் தர வேண்டும். ஆனால் இதைப் பின்பற்றுவதே இல்லை. தமிழக அரசும் தட்டிக் கேட்பதில்லை. திரு ஆரூரான் மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகள் மீது, ஏற்கெனவே இருக்கும் வருவாய் வசூல் சட்டப்படிதான் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் விவசாயிகளுக்கு எந்தவித நியாயமும் கிடைக்கவில்லை. ஒப்பந்தச் சாகுபடி முறையில் கரும்புக்கே இந்த நிலையென்றால், நெல், கோதுமை உள்ளிட்ட அனைத்து விளைபொருள்களையும் ஒப்பந்தச் சாகுபடி முறையில் கொண்டுவந்தால் விவசாயிகளின் நிலை என்னவாகும்... நினைத்துப் பார்ப்பதற்கே மனம் பதறுகிறது” என்றா

கருத்துகள் இல்லை: