வெள்ளி, 25 செப்டம்பர், 2020

மலையக தோட்டங்களில் சொந்த காணி , தனி வீடு, தமிழ் கிராமங்கள் 13,000 தொடர்மாடி மனைகள்..

Mano Ganesan :எம்மை பொறுத்தவரை "மலையக தோட்டங்களில் 7 பேர்ச் காணி, சொந்த தனி வீடு, தமிழ் கிராமங்கள், வட கொழும்பில் சேரிபுறங்களை ஒழித்து கட்டப்பட்ட 13,000 தொடர்மாடி மனைகள், அங்கே, வெளியாட்களை குடியேற்றாமல், அந்நிலத்து சேரிகளில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களையே குடியேற்றியமை, மலையக புதிய பிரதேச சபைகள், மலைய அதிகார சபை" என நீண்ட சாதனை பட்டியல் உண்டு. வடகிழக்கில், நாம் "பதவியேற்ற போது இருந்த அரசியல் கைதிகள் தொகை சரிபாதியாக குறைந்தது, 60% க்கு மேற்பட்ட காணிகள் விடுவிப்பு, மரணித்தோரை நினைவுக்கூறும் உரிமை, கடத்தல், கொலை, கைதுகளற்ற சமாதான சூழல்" என்ற பட்டியல் உண்டு. வடகிழக்கில், நாம் "பதவியேற்ற போது இருந்த அரசியல் கைதிகள் தொகை சரிபாதியாக குறைந்தது, 60% க்கு மேற்பட்ட காணிகள் விடுவிப்பு, மரணித்தோரை நினைவுக்கூறும் உரிமை, கடத்தல், கொலை, கைதுகளற்ற சமாதான சூழல்" என்ற பட்டியல் உண்டு.

எமது நல்லாட்சி அரசாங்கத்தை இன்னமும் கரித்து கொட்டும் சிங்கள பேரினவாத முகநூலர்களின் பதிவுகளை அப்படியே காப்பியடித்து, எனது முகநூலுக்குள் உள்நுழைந்து, அவ்வப்போது மறுபதிவு செய்யும், ஒருசில "அறிவாளி" தமிழ் எழுதும் நண்பர்கள் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

நல்லாட்சி கால "மத்திய வங்கி பிணைமுறி" ஊழல் தொடர்பாக என்னிடம் கேள்வி எழுப்பி பிரயோஜனம் இல்லை.
அவை பற்றி ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அர்ஜுனா மகேந்திரன், அலோசியஸ் ஆகியோரின் நண்பர்களிடம் கேட்க வேண்டும்.
சிங்கள அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கவோ, பொறுப்பேற்கவோ முடியாது.
நல்லாட்சி அரசு என்பது ஒரு கூட்டணி அரசாங்கம். அதில் அங்கம் வகித்த தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், வெளியில் இருந்து ஆதரவளித்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இருந்த முன்னுரிமை (Priority) தேவைகள் வேறு என்பதை அறிவாளி நண்பர்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
நல்லாட்சியின் ஐதேக உட்பட்ட சிங்கள அரசியல்வாதிகளின் முன்னுரிமைகள் வேறு.

இவற்றுக்கு மேலதிகமாக எனது அமைச்சின் சமூக மேம்பாடு பிரிவு, தம்பி திகாவின் அமைச்சு, நிதி அமைச்சின் ஊரெழுச்சி (கம்பெரலிய) ஒதுக்கீடுகள் மூலமான அபிவிருத்திகள்.
இன்னமும் ஆற்ற வேண்டிய பணிகள் கணிசமாக இருந்தாலும், கணிசமாக செய்துள்ளோம்.
இவற்றில் ஒரு 10 விகிதத்தையாவது இப்போதைய செளபாக்கிய அரசாங்க தமிழ் அமைச்சர்களை செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம்..!
இப்படி ஆழமாக சிந்தித்து, இந்த பேரினவாதம் புரையோடி போயிருக்கின்ற ஸ்ரீலங்கா நாட்டின் "நடப்பு வரலாற்றை" ஆய்ந்தறிய வேண்டும்.
எந்த அரசு வந்தாலும் ஆட்சியதிகாரத்தை கொண்டிருக்கும் சிங்கள முகநூல் போராளிகளின் facebook பதிவுகளை அப்படியே இங்கே கொண்டு வந்து மறுபதிவு செய்ய கூடாது.

 

கருத்துகள் இல்லை: