வெள்ளி, 25 அக்டோபர், 2019

திருச்சி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை -மீட்பு பணிகள் தீவிரம் வீடியோ


தினத்தந்தி :  திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை -மீட்பு பணிகள் தீவிரம் திருச்சி அருகே மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பதிவு: அக்டோபர் 25, 2019 18:34 PM திருச்சி, திருச்சி அருகே மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 30 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுர்ஜித் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் உதவியுடன் குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை: