ஞாயிறு, 20 அக்டோபர், 2019

24 மாணவர்களை பிரம்பால் கடுமையாக தாக்கிய ஆசிரியர் சிவகாமி .. கூகலூர் அரசுப்பள்ளியில்

  வெப்துனியா : கணிதத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற காரணத்திற்காக சிவகாமி என்ற
ஆசிரிசியை மாணவர்களை பிரம்பால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
அதையும் மீறி சில மாணவர்களை ஆசிரியர்கள் தாக்கிவரும் சம்பவங்கள் செய்திகளில் வெளியான வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் அரசுப் பள்ளியில் ஆசிரியரியையாக பணியாற்றி வருபவர் சிவகாமி.

இவர், காலாண்டுத்தேர்வில் கணிதப் பாடத்தில் மாணவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார்கள் என்பதற்க்காக பிரம்பால் அடித்துள்ளார். இதில் 24மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கபட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

கருத்துகள் இல்லை: