சனி, 20 ஜூலை, 2019

ஊடகங்களால் மறைக்கப்படும் உண்மைகள் .. நாடு எங்கே போகிறது? அதிர்ச்சி புள்ளிவிபரங்கள்!

Saravanaperumal Perumal : நம் நாடு மிகுந்த ஆபத்தான பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான உதாரணங்கள் சில:
1- ஜெட் ஏர்வேஸ் இழுத்து மூடப்பட்டது.
2- ஏர் இந்தியா மோசமான இழப்புகளை சந்தித்து வருகிறது.
3- BSNL ஊழியர்கள் 54,000 பேர் வேலை இழக்கும் ஆபத்தில் உள்ளனர்.
4- HAL நிறுவனத்தில் சம்பளம் கொடுக்க பணம் இல்லை.
5- தபால் போக்குவரத்து நிறுவனம் 15 ஆயிரம் கோடி நஷ்டம்.
6- வீடியோகான் நிறுவனம் திவால்.
7- டாடா டொகோமோ அழிந்துபோனது.
8- ஏர்செல் கதை முடிந்து போனது.
9- ஜேபி (Jaypee) குழுமம் உயிர் ஊசலாடுகிறது.
10 - ஓஎன்ஜிசி (ONGC) யின் நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது.
11- வங்கிகளில் இருந்து பெரிய அளவில் கடன் வாங்கிய 36 கோடீஸ்வரர்கள் (பெரிய கடனாளிகள்) நாட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர் (தப்பி ஓடவைக்கப் பட்டுள்ளனர்)
12- பெரிய கோடீஸ்வரர்களின் தள்ளுபடி செய்யப்பட்ட வங்கி வாராக்கடன் தொகை, 35 மில்லியன் கோடி
13 பி.என்.பி தள்ளாடுகிறது.
14- மற்ற வங்கிகளும் பெரும் இழப்புக்களை சந்தித்து வருகின்றன.
15- நம் நாட்டின் மீது உள்ள கடன் 131100 மில்லியன் டாலர்கள்.
16- ரயில்வே தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப் படுகிறது.

17 - செங்கோட்டை உட்பட அனைத்து தேசிய வளங்களும் வாடகைக்கு விடப்படுகின்றன.
18 - பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டிக்கு பிறகு லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
19 - 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்ட விகிதம்.
20 - முந்தைய அரசாங்கங்களைவிட மூன்று மடங்கு அதிகமான ராணுவத்தினரின் உயிரிழப்பு.
21- ஐந்து விமான நிலையங்கள் அதானிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல.
குறிப்பு: இதில் எதுவுமே ஊடகங்களில் காண்பிக்கப்படவில்லை-காண்பிக்கப்படவும் மாட்டாது.

கருத்துகள் இல்லை: