புதன், 17 ஜூலை, 2019

ஜோதிடர்களின் ஆலோசனைப்படி அரசியல் ? இந்திரா காந்தி ஜெயலலிதா பாணியில் துர்க்கா ஸ்டாலின்?

LRJ : கிளிஜோசியக்காரங்களுக்கு தமிழக அரசியல்ல பொற்காலம் பொறந்திருக்கு போல. அவங்க காலார நடந்து ஸ்டாலின் வீட்டு பக்கம் போனா போதும். அந்தம்மா அவங்களையும் கூப்பிட்டு ஜோசியம் கேட்கலாம். யார் கண்டது?
நகைச்சுவையை தாண்டி அந்தம்மா ஜோதிடத்தை நம்பறது அவங்க தனிப்பட்ட பிரச்சனை. ஆனா ஜோதிடர்களின் ஆலோசனைப்படி அண்ணா உருவாக்கின திமுகவின் கட்சிப்பதவிகளை முடிவு செய்வதும் ஜோதிடர்கள் குறித்துக்கொடுத்த நாட்களில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தறதும் தான் மோசமான பொதுப்பிரச்சனை.
இப்படித்தான் இந்திரா காந்தியும் ஜெயலலிதாவும் ஜோதிடர்கள், பில்லிசூனியக்காரர்களின் பேச்சைக்கேட்டு மூர்க்கமான அரசியல் பண்ணி அவங்களும் கெட்டு நாட்டையும் கெடுத்து நாசம் பண்ணினாங்க.
அரண்மனை ஜோதிடர்களால் விளையும் அரசியல் விபரீதங்களை தெரிந்துகொள்ள வேற எங்கயும் போய் இந்தம்மா தேடவேணாம். அண்ணாவும் கலைஞரும் அதை கதை கதையா எழுதி வெச்சிருக்காங்க. அந்த புத்தகங்கள் எல்லாம் இவங்க வீட்ல வெச்சிருக்க வாய்ப்பு குறைவு. அறிவாலயம் நூலகத்துல எல்லாம் இருக்கும். கட்சிக்காரங்களை அனுப்பி அதையெல்லாம் வீட்டுக்கு கொண்டுவந்து ஒரு தரம் படிச்சி பார்த்தாலே அந்தம்மாவும் விளங்கும். அந்தம்மா ஆட்டிவைக்க முயலும் அந்த கட்சியும் உருப்படும்.

கவிதா சொர்ணவல்லி :  நீங்க சொல்லுறது கரக்ட்தான். ஆனாலும் இந்த ஏசியாநெட்தமிழ் காரனுங்க பக்கா சங்கி நாய்ங்க. அவனுங்க போட்டுருக்க நியூஸ் வச்சு நாம பேசணுமா ?

 LR Jagadheesan  : கவிதா சொர்ணவல்லி இந்த படம் மற்றும் செய்திய வெச்சி மட்டும் சொல்லலம்மா. அந்தம்மாவுக்கு ஜாதக ஜோசியங்கள்ள ஆழமான நம்பிக்கை உண்டு. எங்கம்மாவைப்போலவே. பிரச்சனை அதுவல்ல. அந்த நம்பிக்கையை அவங்க திரும்பத்திரும்ப கட்சியின் மீது திணிப்பது தான் விமர்சனமே. கட்சி என்பது பொது நிறுவனம். அதுவும் திமுகங்கிறது 100% தமிழர்களின் பொது சொத்து. அண்ணா உருவாக்கி தமிழ் சமூகத்தின் அத்தனை பிரிவின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட அரசியல் பொது நிறுவனம். அண்ணாவும்குப்பின் கலைஞர் அதன் தலைமை அறங்காவலர் ஆனார். அதை மேலும் வளர்த்து வலுப்படுத்தினார். அவருப்பின் ஸ்டாலின் அதன் இன்றைய தலைமை அறங்காவலராக வந்திருக்கிறார். எனவே ஸ்டாலின் திமுகவின் தலைமை அறங்காவலர் மட்டுமே. அதைத்தாண்டி திமுக என்பது அவருடைய குடும்ப சொத்தல்ல. அதை அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் உணர்ந்தால் இந்த குழப்பமே  வராது. அவரவர் எல்லை என்ன என்பது எல்லோருக்குமே விளங்கும்.

Mohan Kannaiya மூன்று தலைமுறையாக தி.மு.கழக கடை மட்ட தொண்டர்கள் முற்போக்கு சிந்தனையும், கொண்ட கொள்கை தவறாமல் வாழ்பவர்கள் இன்றும் ஊருக்கு மூன்று குடும்பங்கள் உண்டு. என் தாத்தாவும், அப்பாவும் பிற்போக்குத்தனம் என்றது இன்று தனி மனித உரிமை என்று ஆகிவிட்டது! தலைமையே இப்படி தவறி

கருத்துகள் இல்லை: