வெள்ளி, 6 ஏப்ரல், 2018

சென்னையில் 2 நாட்கள் மின்சார ரயில்கள் ரத்து!

rayilநக்கீரன்: சென்னை - திருத்தணி மார்க்கத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் 24 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. & வியாசர்பாடி - ஆவடி இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகின்றன.   நாளை காலை 9.50 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகின்றன.  நாளை மறுநாள் காலை 9.50 மணி முதல் மாலை 4.20 மணி வரை ரயில்சேவை ரத்து ஆகின்றன. இதே போல் சென்னை கடற்கரை  - வேளச்சேரி மார்க்கத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அவ்வப்போது சிறப்பு மின்சார ரயில்  இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: