

'ஸ்மார்ட் சிட்டி' அதிகளவில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியாவில்தான் மலம் உள்ளிட்ட கழிவுகளை கையால் அள்ளுவது, மனிதர்கள் செய்யும் தொழிலாக, அதிலும் ஒடுக்கப்பட்ட - குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே செய்யும் தொழிலாக இருக்கிறது. இதற்கான தீர்வைக் காணும் வகையில், கேரள மாநிலம் குட்டிபுரத்தில் இருக்கும் எம்.ஈ.எஸ் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர், குழிகளில் இறங்கிக் கழிவுகளை அகற்றும் ரோபோக்களை உருவாக்கியிருக்கிறார்கள். 'ஜென்ரோபாட்டிக்ஸ்' என்னும் நிறுவனத்தை திருவனந்தபுரத்தில் நடத்திவரும் இவர்கள் நால்வரும் ஒன்றிணைந்து, 'பண்டிகூட்' எனப் பெயரிடப்பட்ட அந்த ரோபோக்களை உருவாக்கியுள்ளார்கள். தாங்கள் உருவாக்கிய ரோபோவிற்கு இந்தியக் கண்டுபிடிப்புக்கான உரிமத்தைப் பெற்றுவிட்ட இவர்கள், தற்போது அதற்கான சர்வதேச உரிமத்திற்கும் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
" 'பெங்களுரூவைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள், சாக்கடைக்குள் இறங்கிச் சுத்தம் செய்யும்போது இறந்துபோனார்கள்' என்கிற செய்தி என் சிந்தனையை உறுத்திக் கொண்டிருந்தது. அதற்கு அறிவியல்ரீதியான தீர்வு தேவை என்றால் பொருட்செலவாகும். அதற்காக, மென்பொருள் கம்பெனி ஒன்றில் வேலைபார்த்து பணம் சேர்த்தேன். கல்லூரி நண்பர்கள் நாங்கள் ஒன்பது பேர் சேர்ந்து முதற்கட்ட மாதிரி வடிவத்தை உருவாக்கினோம். அந்த வடிவத்தை மேம்பாடு செய்துதான் 'பண்டிகூட்' உருவாக்கப்பட்டது. வரும் ஃபிப்ரவரி மாதத்தில் முதற்கட்டமாக ஆட்கள் இறங்கும் கழிவுக் குழிக்குள் ரோபோக்களை இறக்கிப் பணிகளைத் தொடங்க இருக்கிறோம்" என்றார்.
யாரும் முன்னெடுக்காத பிரச்னையைக் கையிலெடுத்து, அதற்கான தீர்வுக்காக முயற்சித்துவரும் அந்த இளைஞர்கள் பட்டாளத்திற்கு வாழ்த்துகள். கூடவே அதனைத் தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முன்வந்திருக்கும் கேரள அரசுக்கும் 'அப்ளாஸ்'. ரோபோ 'பண்டிக்கூட்' வெற்றி அடைந்தால் சாக்கடைக் குழியில் இறங்கும் பல மனிதர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்படும்.
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்வு இனி வேண்டாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக