ஞாயிறு, 28 ஜனவரி, 2018

காஞ்சி மடத்தில் மத்திய அமைச்சர் கிரண் ர்ஜ்சுசு ...

காஞ்சி மடத்தில் மத்திய அமைச்சர்!
மின்னம்பலம் :காஞ்சி சங்கர மடத்தில் ஜெயேந்திரர், விஜயேந்திரரைச் சந்தித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ ஆசி பெற்றார்.
ஹெச்.ராஜா தந்தையின் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்றனர். காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் அமர்த்திருந்தார். ஆனால், நாட்டுப்பண் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்றார். இது தமிழ் அமைப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விஜயேந்திரருக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டுமென பல்வேறு தமிழ் அமைப்புகளும் காஞ்சி மடத்தின் முன்பு போராட்டம் நடத்தின. திக தலைவர் வீரமணி வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை மன்னிப்பு கேட்க கெடு விதித்துள்ளார். இதையடுத்து காஞ்சிபுரம் மடத்துக்குக் காவல் துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.   சங்கரராமன்  கொலை புகழ்  ஜெயேந்திரன் முன்பாக நிலத்தில் உட்கார்ந்து இருக்கும்  பொன்.ராதாகிருஷன்   பதவிக்காக எந்த லெவலுக்கும் கீழே இறங்குவேன் என்று காட்டுகிறார் இது பழைய படம்தான் மறக்கவே கூடாத காட்சி .

இந்த நிலையில் நேற்று மாலை காஞ்சிபுரம் சங்கரமடத்துக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜூஜூ வருகை தந்தார். அவர் ஜெயேந்திரரையும், விஜயேந்திரரையும் சந்தித்து ஆசி பெற்றார். தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், மத்திய அமைச்சர் ஒருவர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: