செவ்வாய், 20 அக்டோபர், 2015

திருச்சி : லாரி மீது பஸ் மோதியதில் 18 பேர் பலி

திருச்சியை அடுத்த சமயபுரம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது அரசுப்பேருந்து மோதியதில் 18 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த பலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசுப்பேருந்து, இருங்களூரில், tn18k6939 என்ற எண் கொண்ட இரும்புத்தகடு ஏற்றியபடி நின்றுகொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் டிரைவர் பக்கம் உட்கார்ந்த பலர் பரிதாபமாக பலியானார்கள். 18 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வருகிறது. விபத்து நடந்ததுமே, பேருந்து - லாரி டிரைவர்கள் தப்பியோடிவிட்டனர் nakkheera,com

கருத்துகள் இல்லை: