தென்மேற்கு பிரான்ஸில் இன்று (23) இடம்பெற்ற கோர விபத்தில் இது வரை 42 பேர் பலியாகியுள்ளனர்.
ஓய்வூதியம் பெறும் வயதானோர் பயணித்த பஸ் ஒன்றுடன் லொறி ஒன்று மோதியதை அடுத்து இரண்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதன்போது இரு வாகனங்களும் தீயினால் கருகியதாக, அவசர பணியாளர்கள் மற்றும் அப்பிரதேசத்தில் இருந்தோர் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் கடந்த 30 ஆண்டுகளில் இடம்பெற்ற கோர விபத்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1982 இல் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று காருடன் மோதியதில் 44 சிறுவர்கள் உட்பட 53 பேர் இறந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக