வெள்ளி, 20 மார்ச், 2015

Jeyamohan! இஸ்லாமியர் ஒருவர் கூட இந்தப்பேரழிவுகளை கண்டிக்கவில்லை ! மத நம்பிக்கை அது’ என்று வாதிடுகிறார்கள்.


அன்புள்ள ஜெ நீங்கள் உங்கள் பயணங்களில் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் இடித்துக்குவிக்கப்பட்ட மாபெரும் கலைச்செல்வங்களைப்பற்றி எழுதும்போது ஒருவகையில் எனக்கு அவநம்பிக்கையே ஏற்படும். அதெல்லாம் போரில் நிகழ்ந்த அழிவுகளே ஒழிய மதத்தால் உருவாக்கப்படும் அழிவுகள் அல்ல என்று தோன்றும் ஆனால் இந்த கலைச்சின்னங்களின் அழிவைக் காணும்போது மனம் பதைத்தது. நூற்றாண்டுகளுக்கு முன் நம் முன்னோர்களின் கனவுகளை அழித்தவர்களும் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என எண்ணிக்கொண்டேன் http://www.dailymail.co.uk/news/article-2970270/Islamic-State-fighters-destroy-antiquities-Iraq-video.html
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது மனம் பதைத்தவன் நான். கடுமையான கண்டனங்களை தெரிவித்தவன். ஆனால் அது ஒரு பழைய வெற்றிச்சின்னம். அதை இத்தனை ஆண்டுகளாக பெரிய வஞ்சமாக மனதில் சுமர்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமியர் ஒருவர் கூட ஒரு பேச்சுக்குக் கூட இந்தப்பேரழிவுகளை கண்டிக்கவில்லை. என் இஸ்லாமிய நண்பர்கள் ‘மத நம்பிக்கை அது’ என்று வாதிடுகிறார்கள வருத்தமாக இருக்கிறது.
செல்வன் சிவலிங்கம் jeymohan.in

கருத்துகள் இல்லை: