
கன்னியாஸ்திரியின் பிரார்த்தனையைக் கேட்டு, அவரை பார்க்க வந்தவர்கள் துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டனர்.
‘இதுதாங்க உண்மையான ஆன்ம பலம். இவரைப் போல உண்மையாக ஆன்மிகத்தில்
ஈடுபடுபவர்களின் சிறப்பு இதுதான்’’ என்று கான்வென்ட் பள்ளியில் படிக்கும்
மாணவனின் தந்தை ஒருவர் உணர்ச்சிப் பொங்க கூறினார். ஆனால், இந்தக்
கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து கடும் தண்டனை
வழங்க வேண்டும் என்று ஆவேசமாகிறார்.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு மனநல மருத்துவர்களும் கவுன்சலிங்
கொடுத்தனர். தற்போது அவர் உடலளவிலும் மனதளவிலும் நன்றாக இருக்கிறார்
என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போர் நடக்கும் நாடுகளில்கூட இப்படி நடக்கவில்லை
கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் அடுத்த நாள் காலையில் (கடந்த ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் பரவியது.
ஜீசஸ் மேரி கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஐரீன் மற்றும் மதர்
ஜெனரல் ஆகியோர் ரோம் நகரில் இருந்தனர். அதிகாலை 5 மணிக்குத் தகவல்
அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக விமானத்தில் மேற்குவங்கம்
திரும்பினர். மருத்துவமனையில் இருந்த பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியைச்
சந்தித்தனர்.
இதுகுறித்து ஐரீன் கூறுகையில், ‘‘என்னுடைய வாழ்நாளில் மூத்த கன்னியாஸ்திரி
மீது இதுபோன்ற ஒரு தாக்குதல் நடந்ததாகக் கேட்டதில்லை. போர் நடக்கும் பல
இடங்களில் நாங்கள் சேவை செய்திருக்கிறோம். அந்த இடங்களில் கூட
இப்படிப்பட்ட கொடூரம் நடக்கவில்லை’’ என்றார்.tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக