செவ்வாய், 17 மார்ச், 2015

நடிகை பூனம் பஜ்வா : தமிழ் சினிமா இன்னும் திருந்த வேண்டும் !

கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை, துரோகி போன்ற படங்களில் நடித்துவந்த பூனம் பஜ்வா நீண்ட நாட்களுக்கு பிறகு ‘ரோமியோ ஜூலியட்'  படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் ஆடியோ விழாவில் பங்கேற்ற அவர் கூறியது:தமிழ் படங்களில் நடிப்பதில்லையே என்கிறார்கள். தமிழில் சில சென்டிமென்ட் இருக்கிறது. ஹீரோ ஒருவரின் தங்கையாக நடித்தால் அதன்பிறகு அந்த ஹீரோவுடன் ஜோடியாக நடிப்பதை ஏற்க மறுக்கிறார்கள். மலையாளத்தில் அப்படி இல்லை. ஹீரோவுக்கு தங்கையாக நடித்தாலும் பிறகு ஜோடியாக நடிக்கும்போது ஏற்கிறார்கள். அதனால் தமிழ் சினிமா மாற வேண்டும். ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம் ரவி ஹீரோ. ஹன்சிகா ஹீரோயின். நான் 2வது ஹீரோயினாக நடிக்கிறேன்.

வில்லித்தனமான கதாபாத்திரம். இயக்குனர் லக்ஷ்மண் இதை கூறும்போதே வித்தியாசமான வேடம் என்பதால், நிச்சயம் நடிக்கிறேன் என்றேன். ஹன்சிகாவுடன் எனக்கு நிறைய காட்சிகள் இல்லாவிட்டாலும் இருவரும் நல்ல தோழிகளாக பழகுகிறோம். ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடினீர்களே என்கிறார்கள். பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்கள்கூட ஒரு பாடலுக்கு ஆடுகிறார்கள். அவரை குத்து பாடல் நடிகை என்று யாரும் குறிப்பிடுவதில்லை. கோலிவுட்டிலும் அந்த நிலை வரவேண்டும். கவர்ச்சியாக நடிப்பது கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்தது. அப்படி நடிப்பதை தவறாக எண்ணவில்லை.இவ்வாறு பூனம் பஜ்வா கூறினார். - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை: