வெள்ளி, 20 மார்ச், 2015

விசாகா சிங்: புது நடிகைன்னா ஓசில நடிக்க வைக்கலாமா?

கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்தவர் விசாகா சிங். அவர் கூறியது:தமிழ், தெலுங்கு என இரு மொழியிலுமே நடித்திருக்கிறேன். இப்படங்களுக்கு பிறகு 40 முதல் 50 படங்கள் வரை நடிக்க வாய்ப்பு வந்தது. சில கதைகள் என்னை கவரவில்லை. சில கதைகளில் இயக்குனர்கள் சொன்ன கேரக்டர் எனக்கு பொருத்தமாக இல்லை. வேறு சில கதாபாத்திரங்கள் வழக்கமானதாக இருந்தது. ஒரு நடிகை பெரிய ஸ்டாராக இருக்கிறாரா, இல்லையா என்பதை பார்க்காமல் அவருக்கு குறிப்பிடத்தக்க ஒரு சம்பளம் தரப்பட வேண்டும். புது நடிகை என்றதும் அவரை ஓசியில் நடிக்க வைக்கலாம் என்று எண்ணுவது சரியல்ல.பல சமயங்களில் இப்படித்தான் சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் புதுமுக நடிகைகளிடம் எதிர்பார்க்கிறார்கள்.
அவர்களின் மனநிலை மாற வேண்டும். இதனால்தான் நிறைய படங்களை நான் ஏற்க மறுத்திருக்கிறேன். அப்படி கைவிட்டு போன படங்கள் பற்றி நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை.இவ்வாறு விசாகா சிங் கூறினார். - See more .tamilmurasu.org

கருத்துகள் இல்லை: