சனி, 21 மார்ச், 2015

பணிந்தார் ரஜினி ! லிங்கா விநியோகஸ்தர்களுக்கு 10 கோடி கொடுக்க சம்மதம்!


when Rajinikanth filed a counter affidavit at the Madurai Bench of the Madras High Court claiming the petitioners' allegations false. He said that the case against "Lingaa" tarnished the name, fame and the repute enjoyed by him.சென்னை,மார்ச் 20:  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘லிங்கா’ படம் தோல்வியடைந்ததை தொடர்ந்து, அப்படத்தினால் எற்பட்ட நஷ்ட்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று, வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த அவர்களுக்கு தயாரிப்பு தரப்பு குறிப்பிட்ட தொகையை வழங்க முன் வந்தது. ஆனால், அதை ஏற்க மறுத்து வினியோகஸ்தர்கள், தங்களுக்கு ரூ.30 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு தயாரிப்பு தரப்பு மறுப்பு தெரிவித்ததால், மீண்டும் போராட்டம், உண்ணாவிரதம் என்று நடத்தியவர்கள், இறுதியாக ரஜினிகாந்துக்கு எதிராக பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தார்கள்.இதையடுத்து, இந்த விவகாரத்தில் தலையிட்ட நடிகர் ரஜினிகாந்து, தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி, இறுதியாக ரூ.10 கோடி வழங்க சம்மதம் தெரிவித்தார். இதை வினியோகஸ்தர்களும் ஏற்றுக்கொண்டதால், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வந்த லிங்கா பட பிரச்சினை முடிவடைந்தது.  tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: