செவ்வாய், 16 செப்டம்பர், 2014

குஜராத்திலும் காங்கிரஸிடம் 2 தொகுதிகளை பறிகொடுத்தது பாஜக! காவியின் சாயம் வெளுக்கிறது !

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 சட்டசபை தொகுதிகளை காங்கிரசிடம் பாரதிய ஜனதா கட்சி பறிகொடுத்திருக்கிறது. நாடு முழுவதும் 33 சட்டசபை, 3 லோக்சபா தொகுதிகளுக்கு செப்டம்பர் 13ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.  இதில் குஜராத்தில் மணிநகர், டீசா, தங்கரா, கம்பாலியா, மங்ரோல், தலஜா, ஆனந்த், மத்தார், லிம்கேடா ஆகிய 9 சட்டசபை தொகுதிகளும் வதோதரா லோக்சபா தொகுதியும் அடங்கும். மணிநகர் சட்டசபை தொகுதி மற்றும் வதோதரா லோக்சபா தொகுதி பிரதமர் மோடி ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தலை எதிர்கொண்டது. மணிநகர் தொகுதியில் தமிழர்கள் பெருமளவில் வசிக்கின்றனர். இடைத்தேர்தலை எதிர்கொண்ட 9 தொகுதிகளுமே பாரதிய ஜனதா வசம் இருந்தவை. தற்போது இதில் 7 ல்தான் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. தங்கள் வசம் இருந்த 2 தொகுதிகளை காங்கிரஸிடம் பாஜக பறிகொடுத்துள்ளது. இது குஜராத்திலும் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: