செவ்வாய், 16 செப்டம்பர், 2014

சொல்வதெல்லாம் உண்மைக்கு கொலை மிரட்டல் ! நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆபத்து ?

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் ! இவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பலரின் தில்லு முல்லுகளை அம்பலத்திற்கு கொண்டு வந்துள்ளார். எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் உண்மையை வெளிக்கொண்டுவரும் இவரது டாக் ஷோ பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது, யாரும் கவனிக்காத ஜீ டிவியை மக்கள்  பார்க்க வைத்த ஒரு  நிகழ்ச்சியாக இது வெற்றி நடை போடுகிறது, முதலில் இந்த நிகழ்ச்சியை நிர்மலா பெரியசாமியே நடத்தினார் , என்ன காரணமோ அவர் விலகி விட அந்த இடத்தில லட்சுமி ராமகிருஷ்ணன் வெளுத்து வாங்குகிறார்
 இவர் தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிரிவோம் சந்திப்போம், திருதிரு துறுதுறு, ஈரம், நாடோடிகள், பாஸ் என்கிற பாஸ்கரன், ரவுத்திரம், சென்னையில் ஒருநாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.ஆரோகணம்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார்.
தற்போது ‘நெருங்கிவா முத்தமிடாதே’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். சொல்வதெல்லாம் உண்மை என்ற டி.வி. நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இதில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து பேட்டி எடுத்து ஒளிபரப்பி வருகிறார்.இந்த நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்மஆசாமி கொலை மிரட்டல் விடுத்துள்ளான். டி.வி. நிகழ்ச்சியில் சர்ச்சையான விஷயங்களை அவர் அலசுவதால் மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்க அவரது கணவர் ராமகிருஷ்ணன் நேற்று கமிஷனர் அலுவலகம் வந்து இருந்தார். கமிஷனரை சந்திக்க முடியவில்லை. இன்று நேரில் புகார் அளிக்கிறார்nakkheeran,in

கருத்துகள் இல்லை: