புதன், 7 மே, 2014

கற்பழிப்பு குற்றத்தில் சிக்கிய 848 பாதிரியார்கள் (?) பதவி நீக்கம்: வாடிகன் தகவல்

ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. அப்போது சர்வதேச
நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வாடிகன் நகரின் சார்பில் அதன் ஐ.நா. தூதர் ஆர்ச்பிஷப் சில்வானோ தொமாசி கலந்து கொண்டார். அப்போது, கற்பழிப்பு மற்றும் குழந்தைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்பித்தார்.
அதில், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2572 பேருக்கு சிறிய அளவிலான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன’’ என கூறப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருடம் வாரியாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை: