சனி, 3 ஆகஸ்ட், 2013

பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி காலமானார்

பழம்பெரும் இசை அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி நேற்று சென்னையில்
மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர் போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணா மூர்த்தி.இவர் இளையராஜா, பி.சுசீலா, ஜேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 3 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார்.இன்று மாலை 6–30 மணிக்கு தட்சிணா மூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவர் மலையாளப்பட உலகில் ‘சாமி’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர்.இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 125 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.தட்சிணா மூர்த்தியின் இறுதிச்சடங்கு இன்று(சனிக்கிழமை) நடக்கிறது

கருத்துகள் இல்லை: