ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

வாங்கிய அட்வான்சை திருப்பி தர தயங்கும் நயன்தாரா ! உங்களை ரொம்ப நல்லவர்னு....

இயக்குனர் பூபதி பாண்டியன் படத்துக்கு வாங்கிய அட்வான்சை திருப்பி தர
மறுத்தார் நயன்தாரா. பட புரமோஷனுக்கு வருவதில்லை, பெரிய ஹீரோக்களுக்குத்தான் கால்ஷீட் தருகிறார் என நயன்தாரா மீது பல புகார்களை கூறுகின்றனர். தற்போது வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி தரமறுத்த விஷயம் வெளிவந்துள்ளது. ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் தற்போது புரமோஷன் ஆகி ஹீரோவாகி விட்டார். டோலிவுட் படங்களில் ஹீரோவாக நடிக்கும் அவர் தமிழிலும் ஹீரோவாக நடிக்கிறார். இதில் நயன்தாரா ஹீரோயின். இப்படத்தை தயாரிக்கும் அதே தயாரிப்பாளர், ஏற்கனவே ஒரு படத்தை தயாரிக்க இருந்தார். அதை இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்குவதாக இருந்ததாம். அந்த படத்துக்காக நயன்தாராவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து, அட்வான்ஸ் பணம் தந்தார்கள். ஆனால் பூபதி பாண்டியனுக்கும் பட தயாரிப்பாளருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து இப்படத்தை இயக்குவதிலிருந்து பூபதி பாண்டியன் விலகிக்கொண்டார்.
படம் டிராப் ஆன நிலையில் நயன்தாராவுக்கு கொடுத்த அட்வான்சை திருப்பி கேட்டார் தயாரிப்பாளர். ஆனால் அவரோ, ‘அட்வான்ஸ் என்னிடம் அப்படியே இருக்கட்டும். வேறு ஒரு படம் தயாரியுங்கள் அதில் நடிக்கிறேன் என்றாராம். தயாரிப்பாளருக்கு தர்மசங்கடமாகிவிட்டது.
வேறு இயக்குனரை வைத்து புதிய படம் தயாரிக்க முடிவு செய்தார். அப்படம்தான் தற்போது கோபிசந்த், நயன்தாரா நடிக்க உருவாக உள்ளது. சமீபத்தில் இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தபோது அதில் நயன்தாராவும் கலந்துகொண்டார cinema.dinakaran.com

கருத்துகள் இல்லை: