வெள்ளி, 6 செப்டம்பர், 2013

இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி தாலிபான்களால் சுட்டு கொல்லப்பட்டார் !


 

Indian author Sushmita Banerjee was executed by the Taliban late on Wednesday. While the stated reason for the barbaric act was not given, Banerjee had possibly attracted the ire of the fundamentalist outfit for her ceaseless social work, especially for women's healthcare and upliftment  Banerjee’s book Kabuliwalar Bangali Bou (A Kabuliwala’s Bengali Wife), about her escape from the Taliban in 1995, became a bestseller in India and was made into the Bollywood film “Escape From Taliban” in 2003.இந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி, ஆப்கனில் தீவிரவாதிகளால்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த 49 வயதான சுஷ்மிதா பானர்ஜி, ஆப்கன் வியாபாரி ஜான்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டார். ஆப்கனின் பாக்டிகா மாகாணத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு சமீபத்தில்தான் வந்தார். அவரது வீட்டுக்கு வந்த தலிபான் தீவிரவாதிதள் சுஷ்மிதாவின் கணவரைக் கட்டிப்போட்டு விட்டு, சுஷ்மிதாவை வெளியில் அழைத்துச் சென்று சரமாரியாகச் சுட்டுக் கொன்று விட்டு அருகில் உள்ள பள்ளி அருகே உடலை வீசிச் சென்றனர். இச்சம்பவத்துக்கு எந்தத் தீவிரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை.

தலிபான் தீவிரவாதிகளிடம் தப்பிய சம்பவம் தொடர்பாக பானர்ஜி எழுதிய "காபூல்வாலாவின் வங்க மனைவி' என்ற புத்தகம் 1995 ஆம் வெளியாகி பரபரப்பாக விற்பனையானது. இதை மையமாக வைத்து 2003ஆம் ஆண்டு "எஸ்கேப் ப்ரம் தாலிபான்' என்ற பெயரில் ஹிந்தியில் திரைப்படம் எடுக்கப்பட்டது.
இதேபோல் ஆப்கனில் தனது நேர்ந்த அனுபவத்தை "அவுட்லுக்' பத்திரிகையில் எழுதியிருந்தார். 1989 ஆம் ஆண்டு கோல்கத்தா வந்த ஜான்பாஸ் கானை சந்தித்தார். பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார்.
1993ஆம் ஆண்டு தலிபான்கள் பற்றி எழுதிய புத்தகத்தால் அவர்களின் கோபத்துக்கு ஆளானார்.
ஆப்கனில் அவர் நடத்தி வந்த மருத்துவமனையை மூடுமாறு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்திரு

கருத்துகள் இல்லை: