திங்கள், 2 ஏப்ரல், 2012

கடாபியின் ரூ.7500 கோடி சொத்துக்கள் முடக்கம்

லிபியாவில், கடாபியின் ஏராளமான சொத்துக்களை புதிதாக அமைந்துள்ள அரசு கைப்பற்றியுள்ளது. ஆடம்பர மாளிகைகள், தங்க, வைர அணிகலன் கள் மற்றும் கோடிக் கணக்கான பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கடாபி யும், அவரது குடும்பத் தினரும் பல நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். அங்குள்ள வங்கிகளில் பணம் மற்றும் தங்க, வைர அணிகலன்கள் முதலீடு செய்யப்பட்டு உள்ளன. தற்போது அவை யும் கண்டுபிடித்து முடக் கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இத்தா லியில் கடாபியின் சொத் துக்கள் இருப்பது கண் டறியப்பட்டுள்ளது. எனவே அங்குள்ள அவரது ரூ. 7,500 கோடி மதிப்பிலான சொத்துக் கள் முடக்கப்பட்டுள்ளன. நிலங்கள், பல கம்பெனி களில்  செய்யப்பட்டி ருந்த பங்கு முதலீடுகள் போன்றவை இதில் அடங்கும்.
லிபியா நாட்டின் அதிபராக இருந்தவர் மும்மர் கடாபி. சர்வாதிகாரி யான இவரது 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட் டம் நடத்தி இவரை விரட்டி அடித்தனர். இதையடுத்து தலை மறைவாக சாக்கடைக் குழாய்க்குள் பதுங்கி இருந்த அவர் புரட்சிப் படையினரால் கொல் லப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது மனைவி, மகள் மற்றும் மகன்கள் லிபி யாவைவிட்டு வெளி யேறி பல்வேறு நாடு களில் தஞ்சம் அடைந் துள்ளனர்.

கருத்துகள் இல்லை: