புதன், 24 ஜூலை, 2019

10 சதவீத இடஒதுக்கீடு மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வேலை வாய்ப்பு பறிப்பு : கி.வீரமணி கண்டனம்

சென்னை : உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்று கூறி
சமூகநீதி குழிதோண்டி புடைக்கப்படுவதாக கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். பாரத ஸ்டேட்
வங்கி எழுத்தர் தேர்வில் பட்டியல் இனத்தவருக்கு கட்ஆப் மதிப்பெண் 61.25, உயர்சாதி எழிகளுக்கு 25.5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதாக தெரிவித்தார்.

எஸ்.சி, ஓ.பி.சி மற்றும் பொதுப் பிரிவினருக்கான கட் ஆப் 61.25 - எஸ்.டி பிரிவினருக்கான கட் ஆப் 53.25 -- அவாளுக்கு கட் ஆப் 28.5 ..

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு குறைந்த கட்-ஆப்!மின்னம்பலம் : ஸ்டேட் பேங்க் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு மற்ற பிரிவினரை விட குறைந்த கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டேட் வங்கியில் கிளாரிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த நிலையில் எழுத்தர் பணித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 23) வெளியாகின. அத்தோடு கட் ஆப் மதிப்பெண்களும் இடம்பெற்றிருந்தது. அதில் எஸ்.சி, ஓ.பி.சி மற்றும் பொதுப் பிரிவினருக்கான கட் ஆப் 61.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.டி பிரிவினருக்கான கட் ஆப் 53.25 ஆக உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், EWS (Economically Weaker Sections] பிரிவினருக்கு மற்ற பிரிவினரை விட கட்-ஆப் மதிப்பெண் மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 28.5 என்ற அளவில் உள்ளது. இது 10 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசுவுக்கு 2 ஆண்டுகள் சிறை, உறுதி செய்த உயர் நீதிமன்றம்

காங்கிரஸ் பிரமுகர் அன்பரசுக்கு சிறை தண்டனை!மின்னம்பலம் : காசோலை மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 24) உறுதி செய்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் எம்பி அன்பரசு, ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளை செலவுக்காக, 2002ஆம் ஆண்டு பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் ரூ.35 லட்சம் கடன் பெற்றிருந்தார். இதனை காசோலையாகத் திரும்ப கொடுத்துள்ளார். ஆனால் இவர் கொடுத்த காசோலை பணம் இன்றி திரும்பி வந்ததால், அன்பரசு, அவரின் மனைவி கமலா அன்பரசு அறக்கட்டளை நிர்வாகி மணி உள்ளிட்டோருக்கு எதிராக முகுந்த் சந்த் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 2008ல் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார்.

பார்ப்பன ஜாதி மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்!... பார்ப்பனர்கள் உயர்ந்த பிறவியாம் ..நீதிபதியின் ஜாதி வெறி

சாதி மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்!
அனிதா சுமந்த டிவி விவாதங்களில் வரும் சுமந்த ராமின் மனைவிதான்

மின்னம்பலம் : இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. தமிழ்
பிராமணர் உலக மாநாட்டில் தற்போது உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்களாக இருக்கும் இருவர் பங்கேற்றுள்ளனர். கூடவே, இந்திய நாட்டுக்கான வெளிநாட்டு தூதர் ஒருவரும் பங்கேற்றுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சி நகரில் "தமிழ் பிராமணர்களின் உலக மாநாடு" (Tamil Brahmins’ Global Meet 2019) ஜூலை 19 முதல் 21 வரை நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் மற்றும் கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர். நெதர்லாந்து நாட்டுக்கான இந்திய தூதர் வேணு ராஜமோனி என்பவரும் இந்த மாநாட்டில் பேசியுள்ளார்.
அரசின் உயர் பதவிகள், அதுவும் அரசியல் சாசன பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஒரு சாதி மாநாட்டில் கலந்துகொண்டு பேசுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் பேசும் போது, 'பிராமணர்கள் இருபிறப்பாளர்கள். அவர்கள் தலைமை பொறுப்பில் தான் இருக்க வேண்டும்

பச்சையப்பா கல்லூரி .. அரை நிர்வாணத்தில் உட்கார வைத்து, சுளீர் அடி.. பதற வைக்கும் மாணவர்கள்

tamiloneindia   :  சென்னை: "டேய்.. 53 ரூட்டுக்கு ஜே-ன்னு 108 முறை எழுதுடா" என்று ஒரு கல்லூரி மாணவனை அரை நிர்வாண கோலத்தில் உட்கார வைத்து, சக மாணவர்கள் சூழ்ந்து தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மாணவர்களிடையே அடிக்கடி மோதல் வலுத்து வருவது வழக்கமாகி விட்டது. ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது போய், கத்திக்குத்து, அரிவாள் வெட்டு அளவுக்கு இந்த கல்லூரிக்குள் வன்முறை புகுந்துவிட்டது.
இந்நிலையில், நேற்று ரூட் தல பிரச்சனை விவகாரம் இரு தரப்பு மாணவர்களுக்குள்ளும் வெடித்தது. காலேஜ் முடிந்து ஒரே பஸ்ஸில் மாணவர்கள் சென்றபோது, ரூட் தல விவகாரம் கிளம்பி இரு தரப்புமே சரமாரியாக மோதிக் கொண்டனர். பஸ்ஸில் இருந்து இறங்கி நடுரோட்டில் ஓடிய மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள் விரட்டி விரட்டி சென்று, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து தாக்கி கொண்டனர். இதில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. மாணவர்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டதை பார்த்து மற்ற பஸ்ஸில் இருந்த பயணிகள், பொதுமக்கள், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் என எல்லாருமே அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

’’சொந்த நாட்டவர்களிடமே போராடக்கூடிய நிலைமைக்கு நாம் வந்திருக்கின்றோம்”-மு.க.ஸ்டாலின் பேச்சு

sநக்கீரன் ;திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (23-07-2019), சென்னை மணவழகர் மன்றத்தின் முத்தமிழ் விழாவில் கலந்துகொண்டு பேசினார். 
’’இந்த மணவழகர் மன்றம் என்பது ஒரு நீண்ட நெடிய வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய மன்றமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. 63 ஆண்டுகளாக தொடர்ந்து சீரோடும் சிறப்போடும் இந்த மன்றம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்னும் உள்ள உணர்வோடு, பூரிப்போடு, வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், எனக்கு 3 வயது இருக்கும் பொழுது பிறந்த மன்றம் இந்த மன்றம். தொடர்ந்து நான் பார்த்து வருகின்றேன் இந்த மன்றத்தின் செயலாளராக இருக்கக்கூடிய கன்னியப்பன் அவர்களை இந்த நேரத்தில் எவ்வளவு பாராட்டினாலும் அது தகுதியாகும். தொடங்கிய காலத்தில் இருந்து இதுநாள் வரையில் தொடர்ந்து 5 வருடமாக இந்த விழாவில் நான் பங்கேற்று வருகிறேன்.
5 வருடங்களாக நானும் பார்த்துக் கொண்டு வருகின்றேன் என்ன அழைப்பிதழ் வருகின்றதோ அதே மாடல் தான். அதே ப்ளாக் தான் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. இதை சிக்கனம் என்று கூட சொல்லக்கூடாது, ஒரு கொள்கை - லட்சியம். சால்வையோ பட்டாடையை பொன்னாடையும் கிடையாது. ஒரு கைத்தறி துண்டு தான்.
அதைக் கூட நான் சிக்கனம் என்று சொல்ல மாட்டேன் அது தான் நாட்டிற்கும் எங்களுக்கும் பயன்படுகின்றது.

தமிழக பாஜக 51 மாவட்டங்களிலும் தலா இரண்டு லட்சம் உறுப்பினர்கள் வீதம் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கவேண்டுமாம்

டிஜிட்டல் திண்ணை: தமிழிசை-ராஜா மோதல்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“தமிழக பாஜகவில் சத்தமில்லாமல் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. ஜூலை 6 ஆம் தேதி வாரணாசியில் பிரதமர் மோடி துவங்கிவைத்த உறுப்பினர் சேர்க்கை அன்று முதல் இந்தியாவெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் பாஜகவின் 51 நிர்வாக மாவட்டங்களுக்கும் தலா ஒரு பொறுப்பாளர் போடப்பட்டு அவர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள்.
100 உறுப்பினர்களை சேர்த்தவர் தீவிர உறுப்பினர் என கருதப்படுவார். அந்தத் தீவிர உறுப்பினராக அந்தஸ்து பெற்றால்தான் பாஜகவில் கட்சிப் பதவி பெற முடியும்.
ஏற்கனவே மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினராக விருப்பம் தெரிவிக்கும் திட்டம் பாஜகவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம் உறுப்பினரானவர்கள் என்று தமிழிசை சொன்ன எண்ணிக்கைக்கும், அதன் பின் நடந்த தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு எண்ணிக்கைக்கும் சம்பந்தமே இல்லை.

டொனால்ட் ட்ரம்ப்பிடம் மோடி கோரிக்கை? .. காஷ்மீரில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து வைக்க வேண்டும்!

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு மோடி கேட்டார்: டிரம்ப் கருத்தால் நாடாளுமன்றத்தில் அமளி - மத்திய அரசு விளக்கம்
dailythanthi.com : காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னிடம் கேட்டார் என டிரம்ப் கூறியதையொட்டி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இதில் மத்திய அரசு விளக்கம் அளித்தது. புதுடெல்லி,காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட பாகிஸ்தானுடனான எல்லா பிரச்சினைகளிலும் மூன்றாவது நாட்டின் தலையீடு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பதுதான் இந்தியாவின் உறுதியான நிலை.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர், ஜப்பானில் ஒசாகா நகரில் ‘ஜி-20’ உச்சி மாநாட்டின்போது தன்னை சந்தித்த பிரதமர் மோடி, காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதில் தனது உதவியை நாடியதாக குறிப்பிட்டு இந்தியாவை அதிர வைத்தார்.

செவ்வாய், 23 ஜூலை, 2019

மருந்தகத்தில் ஊசி போட்ட ஓனர்.. பரிதாபமாக போன உயிர்!

tamil.oneindia :   சென்னை: தோள்பட்டை வலிக்கு மெடிக்கல் ஷாப்புக்கு போன குமாருக்கு, அங்கேயே ஊசி போட்ட கொடுமையால் வாயில் நுரை தள்ளியே இறந்துவிட்டார்.
அம்பத்தூர் அடுத்த மாதனாங்குப்பத்தை சேர்ந்தவர் குமார். இவர் ஒரு டைலர். கல்யாணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.< 4 மாசமாக முதுகுவலி இவருக்கு இருந்து வந்துள்ளது. அதனால் சூரப்பட்டில் உள்ள ஸ்ரீசக்தி மெடிக்கல்ஸ் என்ற மெடிக்கல் ஷாப்புக்கு அடிக்கடி குமார் போவார்.
இங்கு மருந்துமட்டுமில்லை, நோயாளிகளை அங்கேயே உட்கார வைத்து மெடிக்கல் ஷாப் ஓனர் குமார் ஊசியே போட்டு அனுப்புவாராம். இப்படி அடிக்கடி குமார் ஊசி போட்டு கொண்டு வந்துள்ளார்.
நேற்று ராத்திரியும் ஊசி போட்டுக் கொண்டு வீடு திரும்பினார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு வலிப்பு வந்துவிட்டது. திடீரென மயங்கி விழுந்த அவரை புழலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வீட்டில் இருந்தவர்கள் தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால் குமார் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்.

திரு பொரிஸ் ஜோன்ஸன் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவானார்!

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் : இன்று மதியம் கொன்சர்வேட்டிவ்
கட்சி; தலைவராகவும் பிரித்தானியாவின புதிய பிரதமராகவும் திரு. பொரிஸ் ஜோன்ஸன் என்பவரைத் தெரிவுசெய்திருக்கிறது.இவரின் தெரிவு அவர்களின் கடசியினர் மட்டுமல்லாது பிரித்தானிய பொது மக்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டதொன்றாகும்.
இன்று கொன்சர்வேட்டிவ் பாட்டியின் தலைவராகத் தெரிவு செய்யப் பட்ட திரு பொரிஸ் ஜோன்ஸன் அவர்கள்
நாளை (24.07.2019) மதியத்தின்பின் பிரதமர் பதவி ஏற்பார். பிரித்தானிய பாராளுமன்ற சம்பிரதாய நியதிகளின் நிமித்தம்,நாளைக்குப் பிரித்தானிய பாராளுமன்றத்தில் மதிய நேரம் நடக்கும் பிரதமர் கேள்வி நேரம் முடிந்ததும் தற்போதைய பிரதமர் திருமதி திரேசா மே தனது பிரதமார் பதவியைத் துறப்பதாக மேன்மை மிகுந்த எலிசபெத் மகாராணியிடம் தனது பதவி இராஜினாமா விடயத்தைக் கையளித்தததும் மேன்மை மிகுந்த மகாராணியார் திரு ஜோன்ஸன் அவர்களையழைத்துப் புதிய பிரதமராகப் பதவியேற்று நாட்டை நிர்வகிக்கச் சொல்வார்.இவர் பிரித்தானிய இராச்சியத்தின் 77வது பிரதமராகப் பதவி ஏற்பார்;.

Crime of opinion makers .. கருத்து சுதந்திரத்தின் எல்லை ... நம் சமுகம் அறிவதே இல்லை!

Devi Somasundaram : Crime of opinion makers .. கருத்து சுதந்திரம் என்பதன் எல்லை என்ன என்று நம் சமுகம் அறிவதே இல்லை .
சாதி இருக்கு என்பது கருத்து தான் ..ஆனால் அது ஒரு மனிதனை காய படுத்தும் என்றால் அது கருத்து சுதந்திரத்தில் வராது .அது குற்றம் .
இந்த சமுகத்தில் சொல்ல படும் கருத்துகளால் நடந்த உயிரிழப்புகளை கருத்தாளரின் குற்றமா நாம் அறிவதில்லை .
சீதா பத்தினியாவா இருப்பா என்ற துணி துவைப்பவர் கருத்து சீதையை தீயில் இறக்கியது . சீதை தன்னை நிருபித்த்த பின் அந்த துணி துவைப்பவர்க்கு என்ன தண்டனை கிடைத்தது ..எதுவுமில்லை .
இங்க நாம் சொல்லும் கருத்துகள் ஒருவரை அழிக்கின்ற அளவு வலிமை வாய்ந்ததுன்னு நமக்கு தெரியாமலே எனக்கும் வாய் இருக்குன்னு பேசிட்டே போறோம் .
சினிமா தயாரிப்பாளர் ஜீ வி ( மணிரத்னம் சகோதரர் ) தற்கொலை செய்து கொண்டார் . அவர் வாங்கிய கடனை கட்ட முடியாமல் மட்டும் சாகல . இந்த சமுகம் தன்னை கேவலமா பேசுமேன்னு செத்து போய்ட்டார் ..அது கொலை இல்லயா ? .
பொது வெளியில் ஒரு பெண் பேச வருவதே மிக கடினமான சூழலில் அதை எல்லாம் தாண்டி பேச வருவதை முடிந்தால் ஆதரிக்கலாம் ..
முடியா விட்டால் கருத்து கூறாமலாவது இருக்கலாம் .
வாயாடி, வீட்டுக்கு அடங்காதது, கண்டவன் கூட படுத்துப்பா, கால் கேர்ல், அவ அம்மா தேவுடியா, என்று அவள் நிறம், உடல் அமைப்பு, ( மார்பு சின்னதா இருக்குன்னு சப்பைன்னு கலாய்க்க பட்ட சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்டார் ..தற்கொலை தூண்டிய அந்த கருத்துகள் ஏன் முதல் குற்றவாளியா கருதி தண்டிக்கபட வில்லை ?) .

சந்திரசேகர ராவ் அடாவடி ! தான் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 10 லட்சம அரசு பணம் தானம்! !

zeenews.india.comதான் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 10 லட்சம்!!; தான் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு!! தான் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு!!
தான் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சாதி, மத பாகுபாடு இன்றி அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா .. தனியார் நிறுவனங்களில் மாநில மக்களுக்கு 75 வீத இட ஒதுக்கீடு .. ஜெகன் மோகன் அதிரடி!

தினமணி : விஜயவாடா: இந்தியாவிலேயே முதல் முறையாக, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு முறையை  ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும், அது அரசின் நிதியுதவியோடு செயல்படுகிறதோ இல்லையோ, அனைத்திலும், ஆந்திர
மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா ஆந்திர மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறை சினிமா பாணியில் அதிரடி அறிவிப்பினை வெளியிட்ட ஜெகன் மோகன் dinamani முகப்பு இந்தியா இந்தியாவிலேயே முதல் முறை சினிமா பாணியில் அதிரடி அறிவிப்பினை வெளியிட்ட ஜெகன் மோகன் 0 share via email விஜயவாடா இந்தியாவிலேயே முதல் முறையாக தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு முறையை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகப்படுத்தியுள்ளார்

உத்தரகாண்ட் .. பெண் சிசு கொலைகள் .. 3 மாதங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்


தினமலர் : உத்தரகாசி: உத்தரகண்ட் மாநிலத்தில், 132 கிராமங்களில், கடந்த மூன்று மாதங்களில், ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே பார்ப்பனர்கள் அதிகமாக வாழும் உத்தரகாண்ட்  மாநிலத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்திருப்பது அவர்களின் பெண்களுக்கு எதிரான போக்கை உறுதி படுத்துகிறது.
இதையடுத்து , பெண் சிசு கொலை நடப்பதை, அரசு கண்டு கொள்ளவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர், திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, உத்தரகாசி மாவட்டத்தின், 132 கிராமங்களில், மூன்று மாதங்களில், 216 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில், ஒரு குழந்தை கூட பெண் குழந்தை இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கலெக்டர் எச்சரிக்கை இது குறித்து, உத்தரகாசி மாவட்ட கலெக்டர், ஆசிஷ் வுகான், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், எம்.எல்.ஏ., ராவத் பங்கேற்றார். பின், நிருபர்களிடம் பேசிய கலெக்டர், ''ஆண், பெண் விகிதம் சரிந்திருப்பது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. மருத்துவ ரீதியாகவும், சிசுக்கள் கொலை செய்யப்படுகின்றனரா என்பது குறித்து, கிராமங்களில் ஆய்வு நடத்தப்படும்.

பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்திகளுடன் வன்முறை!

மின்னம்பலம் :சென்னை அரும்பாக்கம் அருகே அரிவாள், கத்திகளுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதி கொண்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (ஜூலை 23) மதியம் பிராட்வேயிலிருந்து பூந்தமல்லி நோக்கிச் சென்ற மாநகர பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணித்துள்ளனர். பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ரூட் தல தொடர்பாகப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை அரும்பாக்கம் அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும் போது மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஒரு தரப்பினர், தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்திகளை எடுத்துக் கொண்டு, மற்றொரு தரப்பை தாக்கத் தொடங்கினர். இந்த பதற்றத்தால் பேருந்து சம்பவ இடத்திலேயே நிறுத்தப்பட்டது. ஆயுதங்களுடன் இருந்த கும்பலைப் பார்த்து அஞ்சி மற்றொரு கும்பலைச் சேர்ந்த மாணவர்கள் பேருந்தை விட்டு இறங்கி ஓடியுள்ளனர்.

கர்நாடக குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி!


கர்நாடக குமாரசாமி  அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் குமாரசாமி தலமையில் உள்ள காங்கிரஸ் ம ஜ தள அரசு தோல்வி அடைந்துள்ளது .
நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 105 வாக்குகளும். அதை எதிர்த்து 98 வாக்குகளும் கிடைத்துள்ள நிலையில் எடியுரப்பா தலைமயில் பாஜக அரசு பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கலாம்

நக்கீரன் -பா. சந்தோஷ் : கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாக, சட்டப்பேரவையில் பேசி வரும் முதல்வர் குமாரசாமி. கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும், நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

நெல்லை திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் வெட்டி படு கொலை


நெல்லை, முன்னாள் மேயர், உமா மகேஸ்வரி, வெட்டிக்கொலைதினமலர் :நெல்லை, முன்னாள் மேயர், உமா மகேஸ்வரி, வெட்டிக்கொலை திருநெல்வேலி: நெல்லையில், திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டில், உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன்(65)மற்றும் வீட்டு பணிப்பெண் மாரி ஆகியோர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம், குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 1996 ல் உமா மகேஸ்வரி திமுக சார்பில் நெல்லை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டார். நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

வைகோவின் வரவு சுப்பிரமணியம் சாமிக்கு ஒரு வரப்பிரசாதம்?

சுப்பிரமணியம் சாமிக்கு வைகோவின் வரவு ஒரு வரப்பிரசாதம் என்றே கருத வாய்ப்பு இருக்கிறது.  . சு.சாமியின்
இந்த சிரிப்பு பொய்யில்லை அன்மை காலங்களாக . மோடி மீது சுப்பிரமணியம் சாமி பயங்கர கோபத்தில் இருகிறார் !
இனி பாஜகவால் தனக்கு பெரிய பயன் இருக்காது என்பது அவருக்கு புரிந்து விட்டது .
நிதி அமைச்சு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். வேறு தாவது பொறுப்பான  அமைச்சு பதவியாவது கிடைக்கும் என்று ரொம்பவும் நம்பினார்.
ஆமானப்பட்ட அத்வானியையே தூக்கி குப்பையில் போட்ட மோடி மஸ்தான் கும்பலுக்கு சாமியெல்லாம் ஒரு ஆளே இல்லை. . அவர்களுக்கு ஆட்சிக்கு வருவதற்கு மட்டுமே எல்லோரையும் பயன்படுத்தினார்கள் . இனி சு.சாமி போன்ற  விஷயம் தெரிந்தவர்களை கூட வைத்திருக்கு மோடி கும்பல் தயாரில்லை.
இனி சுப்பிரமணியம்  சாமி  வைகோவுக்கு இரகசியமாக அம்புகள் சப்பிளை பண்ணுவார்.இதுதான் சு.சாமியின் பாரம்பரிய பிளக் மெயில் அரசியல் வரலாறு .. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வித்தையில் கைதேர்ந்தவன் சகுனி

ஆ.ராசா: இது ஜனநாயகத்தின் கறுப்பு தினம்! ஜனநாயகம் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டது.

ஆர்.டி.ஐ சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்ட விதிகளை சுட்டிக் காட்டி கடும் கண்டனங்களை தெரிவித்தார் தி.மு.க எம்.பி. ஆ.ராசா. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வரும் மசோதா இன்று வாக்கெடுப்புக்காக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய சட்ட திருத்தத்திற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
அப்படி என்ன சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது?
புதிய சட்ட திருத்தம், தேசிய மற்றும் மாநில தகவல் ஆணையர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கொடுக்க வழி வகை செய்கிறது.
தேர்தல் ஆணையம் போல தேசிய தகவல் ஆணையமும் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதன் ஆணையர்களின் நியமனத்தையும், சம்பளம் நியமிப்பதையும், பதவிக்காலத்தை நியமிப்பதையும் மத்திய அரசு முடிவு செய்யும் என்பது, அதன் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் செயல். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாட்டின் உரிமைகளும்” - அமெரிக்க உலக தமிழ் மாநாட்டில் ...

மயிலாடுதுறை சிவா : “இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாட்டின் உரிமைகளும்” - ஆழி செந்தில்நாதன்
சூலை 20, 2019 சனி மதியம் உலகத் தமிழ் அமைப்பு நட த்திய கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து வந்து இருந்த திரு ஆழி செந்தில்நாதன் அவர்கள் “இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாட்டின் உரிமைகளும்” என்ற தலைப்பில் உரையாடினார்.
இந்தியா என்பது “மாநிலங்களின் ஒன்றியம்” “ராஜ்ஜயங்களின் சங்கமம்” என்று இந்திய அரசியல் அமைப்பு சட்ட அமைப்பில் இருக்கிறது என்று முதலில் பேச ஆரம்பித்தார். ஒவ்வோரு மாநிலத்திற்கு என்று தனி தனி உரிமைகள் மொழி சார்ந்தும், நிலம் சார்ந்தும் இருக்கிறது என்றார். ஆனால் ஆளும் மோடி அரசின் கொள்கைகள் அனைத்தும் “ஓற்றை இலக்கை” நோக்கி பயணிக்கும் நோக்கத்தில் உள்ளது என்றார்.
தமிழ்நாட்டிற்கு என்று பல அதிகாரங்கள் இருக்கிறது. கல்வித் துறை, சுற்றுலாத்துறை, சுகாதரத்துறை, விளையாட்டுத்துறை இப்படி எத்தனையோ துறைகளில் தனி அதிகாரங்கள் வகுக்க தமிழகத்திற்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் கடந்த 6 அல்லது 7 ஆண்டுகளாக நமது உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது என்பதற்கு நீட், 8 வழி சாலை, நியூட்ரினோ திட்டம், கூடன் குளம் அணு உலை, ஜல்லிக்கட்டு, மீத்தேன் திட்டம் என பல பிரச்சினைகளில் மத்திய அரசின் திட்டங்களை, தமிழக அரசு மீறி எதுவும் செய்ய முடியாமல் போனதிற்கு காரணம், நமது “மாநில சுய நிர்ணயம்” இழந்து இருப்பதே காரணம் என்றார்.

ஹிமா தாஸ் 19 நாள்களில் 5-வது சர்வதேச தங்க பதக்கங்களை வென்ற வீராங்கனை

vikatan.com : தினேஷ்
ராமையா : இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ்,
சர்வதேச தடகளப் போட்டிகளில் கடந்த 19 நாள்களில் 5-வது தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
செக் குடியரசின் நேவே மஸ்டோ நகரில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியின் 400 மீட்டர் பிரிவில் ஹிமா தாஸ் தங்கம் வென்றார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் 400 மீட்டர் பிரிவில் நடந்த போட்டியில், முதுகுவலியால் பந்தய தூரத்தைக் கடக்க சிரமப்பட்டார் ஹிமா தாஸ். அதன்பின்னர், தற்போதுதான் முதல்முறையாக 400 மீட்டர் பிரிவில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், ஹிமா தாஸ் போட்டி தூரத்தை 52.09 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றிருக்கிறார். இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசியப் போட்டிகளின்போது, இதே தூரத்தை 50.79 விநாடிகளில் கடந்தது ஹிமா தாஸின் பெஸ்ட் டிராக் ரெக்கார்டாக இருந்துவருகிறது. இதன்மூலம் அவர், சர்வதேச தடகளப் போட்டிகளில் கடந்த 19 நாள்களில் 5-வது தங்கம் வென்று சாதித்திருக்கிறார்.

திங்கள், 22 ஜூலை, 2019

அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் மறைக்க ஜீயர் எதிர்ப்பு ... வசூல் வேட்டை ருசி !

LRJ   : அந்த காலத்துல சோடாபாட்டில், சைக்கிள் செயினெல்லாம் இல்லே. இப்ப அதையெல்லாம் எப்படி வீசறதுங்கற தாக்குதல் கலையெல்லாம்
கத்துகிட்டவங்க ஜீயரா இருக்கோம். பெருமாளை நாங்க பாதுகாப்போம். இனிமே அவரை வெளிலயே இருக்க விடுங்கோ.”
Jokes apart, அத்திவரதர் பத்தி வேதம், ஆகமம், அப்படி இப்படின்னு இத்தனை நாள் அளந்ததெல்லாம் பச்சைப்பொய்க்கதை என்று சாட்சாத் ஜீயரே பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இந்துக் கோவிலில்களில் புது சிலைகள் நிறுவப்படும் போது பழைய சிலைகள் தண்ணீரில் விடப்படுவது தமிழ்நாடு முழுக்க நடந்த, இன்றும் நடக்கும் கோவில் சார்ந்த ஒரு மதசடங்கு. ஆகமக்கோவில்களில் மட்டுமல்ல ஆகமங்களுக்குள் வராத கோவில்களிலும் இதுவே நடைமுறை.
எங்கள் ஊர் மந்தையில் தெருவின் நடுவில் இருக்கும் ஆளுயர சத்தியம்மாவுக்கு “ஆயுள் தீர்ந்துவிட்டதாக” கூறி பழைய சத்தியம்மா கல்லுக்கு பதில் புதுக்கல் நட்டபோது பழைய சத்தியம்மாவை கொண்டுபோய் மலையோர ஓடையில் விட்டார்கள். இது போன்ற நடைமுறைகள் வேறு பலகோவில்களிலும் இன்றும் நடக்கிறது. குளம், ஏரி, ஓடை, ஆறுகளில் இப்படி பல பழைய சிலைகள் இருக்கின்றன.

பெரிய புராணத்தில் நாயன்மார்கள் ஜாதிவாரியாக : FC 65, - BC 27 , - SC / ST 8 ..முழு விபரம்

Krishnavel T S : பெரிய புராணத்தில் சாதிகள்
பெரிய புராணத்தில் பல சாதிகள் குறிப்பிடப்படுகிறது, இந்த நூல் எழுத்தப்பட்ட காலம் இரண்டாம் குலோத்துங்கன் காலாம் அதாவது கிபி 12ஆம் நூற்றாண்டு. அதாவது ராஜராஜன், ராஜேந்திரன் மற்றும் முதல்லாம் குலோத்துங்கன் காலத்துக்கு பின்னர் எழுதப்பட்டது
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் தோன்றிய சாதிகளை அதற்கு முன்பே வாழ்ந்தவர்கள் காலத்தில் இருப்பது போல கதையில் சித்தரிக்கப்படும்.
சாதிகள் சரியாக நிலை பெறவில்லை என்பதை மகாமாத்திரர் மற்றும் வெளிர் அதாவது மந்திரி பதவி வகித்ததை கூட சாதியாக சொல்கிறார்கள், ஒரு களப்பிரர் தலைவனை களப்பாளர் என்ற சாதி என்று வேறு குறிக்கிறார்கள்
அதில் குறிப்பிடப்பட்டுள்ள சாதிகள் பின்வருமாறு:
அதில் FC
பார்பனர் 17
பல்லவ அரசர் 2
சேரர்-அரசன் 1
சோழர்-அரசன் 1
பாண்டிய அரசர் 2
மந்திரிகள் 4
வேளாளர் 14

காங்கிரஸ் தலவராக பிரியங்கா வராவிட்டால் காங்கிரஸ் பிளவுபடும் .. நட்வர் சிங்

congress leader natwar singh about congress leadership நக்கீரன் : 24 மணி நேரத்தில் கட்சி பிளவுபடும்... அடுத்த தலைவர் பிரியங்கா காந்தி- தலைவர் பதவி விவகாரம் குறித்து மூத்த தலைவர் நட்வர் சிங்... மக்களவை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து ராகுல் காந்தி தன்னுடைய காங்கிரஸ் தலைவர் பதவியை  ராஜினாமா செய்தார். இருப்பினும், ராகுலே தலைவராக தொடர வேண்டுமென அக்கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் உட்பட பலரும் கூறினர். ஆனால் ராகுல் தனது முடிவில் தீவிரமாக இருப்பதையடுத்து, மாற்று தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான நட்வர் சிங், "சோன்பத்ரா விவகாரத்தில் பிரியங்கா காந்தி செய்ததை பார்த்திருப்பீர்கள். அது மிகவும் அற்புதமானது. அவர் கிராமத்திலேயே தங்கி அவர் நினைத்ததை சாதித்துவிட்டார். நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தலைவராக வரமாட்டார்கள் என ராகுல் தெரிவித்துவிட்டார். ஆனால், தலைவர் பதவிக்கு தகுதியானவர் பிரியங்கா காந்திதான் என்று இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது. காந்தி குடும்பத்தாரை தவிர வேறு யாராவது தலைவராக வந்தால் 24 மணி நேரத்தில் கட்சி பிளவுபடும்" என தெரிவித்துள்ளார்

அரசு நீட் பயிற்சி: ஒருவருக்கு கூட சீட் கிடைக்கவில்லையா?

அரசு நீட் பயிற்சி: ஒருவருக்கு கூட சீட் கிடைக்கவில்லையா?மின்னம்பலம் : அரசு நீட் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கவில்லை என்ற தகவலுக்கு அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறி அதனை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இருப்பினும் மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவில்லை. இதனையடுத்து, நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக அரசு நீட் தேர்வு பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த ஆண்டு நீட் தேர்வு பயிற்சி மையங்களில் படித்த 19,355 மாணவர்களில் 2 ஆயிரம் பேருக்கு மேல் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் அவர்களில் ஒருவருக்குக் கூட இடம் கிடைக்கவில்லை என்ற செய்தி வெளியானது.