பூனைக்குட்டி_வெளியே_வந்துவிட்டது!எதிர் வரும் டிசம்பர் 23 இல் பெரியார் இயக்கச் செயல்பாட்டாளர்கள் ஒருங்கிணைந்து திருச்சியில் காவி மதவாதக் கூட்டத்திற்கு எதிரான மண் தமிழ் மண்- இது தந்தை பெரியார் மண் என்பதை அறிவிக்கும் பேரணி ஒன்று நடத்தப்படப் போவதாக அறிவிப்பு கண்டதும் பல்வேறு கட்சிகள், இயக்கங்களில் பங்கேற்றுள்ள உணர்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.> தந்தை பெரியாரின் இலட்சியச் சுடர் அணையாது காத்திடவும், அதனை முன் னெடுத்துச் சென்றிடவும் பல்வேறு இடர் களை எதிர்கொண்டு, காவி மதவாதத்தை எதிர்த்து தங்கள்வாழ்நாளை ஒப்படைத்து திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் ஆகிய அமைப்புகளும், மேலும் சில பெரியாரை முன்வைத்து செயல்படும் அமைப்புகளும் இதில் பங்கேற்க உள்ளதாக அறிந்து உற்சாகம்
அடைந்தோம்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வேண்டி, அவரும் ஆதரவளித்து உள்ளதும், இன நலப் போராட்டங்களில் பல துன்பங்களை ஏற்று பெரியாரே எம் சுவாசம் எனச் செயல்படும் தோழர்கள் கொளத்தூர் மணி, கோவை.கு.இராம கிருட்டிணன் உள்ளிட்டோரும், அவர்தம் தோழர்களும், கடுமையான கண்டனத் திற்குப் பிறகு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீ யும், முதுபெரும் தோழர் ஆனைமுத்து அய்யா உள்ளிட்ட சில தமிழர் அமைப்புகளும் இதில் பங்கேற்று மதவாதக் காவிக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் என்றைக்கும் இடமில்லை என அறிவிக்கவுள்ளார்கள்




























