திங்கள், 3 மே, 2021
கோயில்கள் தோறும் வெற்றி பெற்ற திமுக கூட்டணி
தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவே முதல்முறை..” - திருமாவளவன் பெருமிதம்!
![]() |
திமுக மீது அவதூற்றை பரப்பிய பத்திரிகையாளர் கே ஆர் அதியமான் மீது சட்ட நடவடிக்கை?
![]() |
கார்த்திக் புகழேந்தி :காலை ஏழுமணியளவில் பத்திரிகையாளர் அதியமான் ஒரு பதிவு எழுதுகிறார். புதிதாக அமையவுள்ள அரசு பற்றித் தன் தொழிலதிபர் நண்பருடனான செல்போன் உரையாடல் குறித்தது அந்தப் பதிவு. ;"கேள்விப்பட்டேன். சொன்னேன்" என்கிற ரீதியிலான புறணி பேசும் பதிவு அது.48 நிமிடங்கள் கழித்து அது என் கண்ணில்பட்டபோது, அதை நான் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனது பக்கத்தில் "Fiction writer எல்லாம் பிச்சை வாங்கணும்" என்று பதிந்திருந்தேன்.
அதில் ஏன் தன்னை Tag செய்யவில்லை என்று கேட்ட அதியமானுடன் உரையாடல் முற்றியது.
அந்த உரையாடலிலே நான் அவருடைய பதிவினை Cooked Up Story என்றேன். (கற்பனைக் கதை என்ற சொல்லாடல் அப்போதுதான் எழுந்தது. ) அவர் அதனை மறுத்தார்.
கோபமடைந்தார். என் முட்டாள்தனம் என்றெல்லாம் வார்த்தைகளைச் சிதறவிட்டார். அதன்பிறகே, அதிமுக எஸ்.பி.வேலுமணி அரசு நிலத்தை அபகரித்த பதிவை புகைப்படத்துடன் பதிந்தேன்.
தொடர்ச்சியாக அதியமானின் கருத்து ட்விட்டர் - ஃபேஸ்புக்கில் விமர்சனத்திற்கு உள்ளானது. பிறகு தான் எழுதிய பின்னூட்டங்களை நீக்கத் துவங்கிய அதியமான் இறுதியாக, எழுதிய பதிவையும் நீக்கிவிட்டார்.
திமுக மேல் அவதூறு பரப்புவோர் மீது ஏன் வழக்கு போடுகிறார்கள்
சக்தி ராஜேஸ்வரி : KSR பொறியியல் கல்லூரியை கனிமொழி அவர்கள் எழுதிவாங்கியதாக 2013 வாக்கில் ஒரு புரளி கிளம்பியது... அப்போது நான் அங்கே படித்ததால் சில பேர் என்னிடமே கனிமொழி காலேஜா எனக் கேட்டார்கள்..
நான் அப்படி எல்லாம் இல்லை எனச் சொன்னாலும் யாரும் நம்பத் தயாரில்லை.. இதோ நான் அங்கே படித்து முடித்து ஏழு வருடங்கள் ஆகிறது. அதன் நிறுவனர் ரங்கசாமிதான் இப்போதும் தலைவர்.
இதேப் போலத்தான் அன்றைய காலங்களில் திமுக அந்த மெடிகல் காலேஜ் பிடிங்கிடுச்சு, இந்த இன்ஜினியரிங் காலேஜ் பிடிங்கிடுச்சு, சரவண பவனை வாங்கியாச்சு எனப் பேசினார்கள்.. யாரும் அது பொய் என நினைக்கவில்லை..தங்கள் விருப்பப்படி அதைப் பேசி பரவலாக்கினார்கள். அதனால் திமுக மீது ஒரு பயமும் எதிர்ப்பும் வந்தது.
இன்று பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அதனால் திமுக இழந்தது அதிகம்.. எதைப் பொது வெளியில் பேச வேண்டும், எதை சமூக வலைத்தளங்களில் பேச வேண்டும், கேட்ட செய்தியை எப்படி எழுத வேண்டும், உண்மை செய்தியை எப்படி எழுத வேண்டும் என வரையறை உள்ளது..
A.R.ரஹ்மான் சமூகநீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சி அடைய வாழ்த்துகள்
![]() |

மின்னம்பலம் :தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக முதல்அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் சமூகநீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சி அடைய இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அது சார்ந்த வெற்றி தோல்வி சம்பந்தமாக இதுவரை ரஹ்மான் வாழ்த்து செய்திகள் தெரிவித்தது இல்லை. முதல்முறையாக தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதல் முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் சார்ந்து வாழ்த்து செய்தியை வெளியிட்டிருப்பது திரையுலகில் மட்டுமல்லாது அகில இந்திய அரசியல் வட்டாரத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனக்கு என்று தனித்துவமான அரசியல் நிலை இருந்தாலும் பொதுவெளியில் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதில் நடிகர் ரஜினிகாந்த் எல்லா அரசியல் கட்சியினருக்கும் பொதுவானவராக வெளிக்காட்டிக்கொள்ள தவறியதில்லை.
முதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
![]() |
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தி.மு.க. 125 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. வெற்றி பெற்றுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலையில் இருந்து வந்த வண்ணம் இருந்தனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்கும் தலைவர் ஸ்டாலினுக்கும் திரு மனோ கணேசன் வாழ்த்து
![]() |
Mano Ganesan : தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க. ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.-தமுகூ தலைவர் மனோ கணேசன்!
நமக்கு, தமிழக-இந்திய திமுக பற்றி தெரியும். அப்படியே அஇஅதிமுக, பிஜேபி, காங்கிரஸ், நாம் தமிழர், பாமக, மதிமுக, விசிக பற்றியும் தெரியும். அங்கே மாநில கட்சிகளுக்கு இருக்கின்ற அரசியல் அதிகாரம் பற்றியும் தெரியும். இலங்கை முழுக்க செயற்படும் தமிழர், முஸ்லிம் கட்சிகளையும் தெரியும். நமது ராஜ-தந்திர அரசியல்வாதிகளையும் தெரியும் 2005ல் முதன் முறையாக எப்படி மஹிந்த வென்றார் என்றும் தெரியும். ரணில் எப்படி தோற்றார் என்றும் தெரியும். பிறகு, இறுதி யுத்தம் எப்படி நடந்தது என்பதும் தெரியும். அப்பாவி மக்கள், எப்படி கொல்லப்பட்டார்கள் என்றும் தெரியும்.
தமிழ்நாட்டின் மொத்த 38 மாவட்டங்களில் 31 மாவட்டங்கள் திமுக கூட்டணி பக்கமே சாய்ந்திருக்கின்றன .
![]() |
Joe Milton : திமுகவின் வெற்றியை குறைத்து மதிப்பிட களமாடிக் கொண்டிருக்கும் போராளிகள் கவனத்துக்கு ..
தமிழ்நாட்டின் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 31 மாவட்டங்கள் திமுக கூட்டணி பக்கமே சாய்ந்திருக்கின்றன .
சென்னை (16/16)
திருவள்ளூர் (10/10)
திருச்சி (9/9)
காஞ்சிபுரம் (4/4)
ராமநாதபுரம் (4/4)
பிறந்தது புதியதோர் திராவிட சகாப்தம்
![]() |
minnambalam :ராஜன் குறை
நூறாண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி பிரிட்டிஷ் அரசின் கீழ் இரட்டையாட்சி முறையில் அன்று மெட்ராஸ் பிரசிடென்ஸி என்று அழைக்கப்பட்ட ஆட்சிப் பகுதிக்குப் பொறுப்பேற்றது. திராவிட, தமிழ் தனித்துவம் குறித்த சிந்தனை அதற்கு முன்பே பல பெரியோர்களால் முன்மொழியப்பட்டிருந்தாலும், பார்ப்பனதல்லோதார் அறிக்கையை 1917ஆம் ஆண்டு வெளியிட்ட தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பேற்றபோதே திராவிட அரசியல் சகாப்தம் என்பது துவங்கியது எனலாம். நூறாண்டுகளுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்கும் தருணத்தை, திராவிட அரசியலின் புதிய சகாப்தத்தின் துவக்கம் என்றே வரலாறு குறித்துக்கொள்ளும்.
ஸ்டாலினுக்காக நள்ளிரவில் 'விழித்திருந்த' கலைஞர்
![]() |
கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுக தலைவராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2019 minnambalm : நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைப் பெற்றார். அதன்பின் இப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தைத் தாண்டிய பலத்தோடு திமுக வெற்றி பெற்று ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்கிறது.
மே 2ஆம் தேதி இரவு தனது வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட ஸ்டாலின் இரவு 11.55க்கு அங்கிருந்தே கலைஞர் நினைவிடத்துக்குத் திரும்பினார். ஸ்டாலினின் வெற்றிச் சான்றிதழை சேகர் பாபு பத்திரமாக எடுத்துக்கொண்டு பின் தொடர, நள்ளிரவில் கலைஞர் நினைவிடத்தை அடைந்தார்.
தேர்தல் நாளிலும், வாக்கு எண்ணிக்கை நாளிலும் கலைஞர் முற்று முழுதாக உறங்குவதில்லை. அதேபோல நேற்று இரவு நினைவிடத்தில் சிரித்துக்கொண்டிருந்த கலைஞரின் ஓவியம் முன்னே கண்ணீர் கசிய சில நிமிடங்கள் நின்றார் ஸ்டாலின். அப்போது அருகே இருந்த டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் போன்றோர் ஸ்டாலினின் உணர்ச்சிகளைக் கண்டு சிலிர்த்துப் போய் நின்றனர்.
சிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. 10 வருட "வெயிட்டிங்கும்".. 10 "சக்ஸஸ்களும்".. தனிப்பெரும் தலைவரானார்..!
![]() |
Hemavandhana - /tamil.oneindia.com : சென்னை: இது எதிர்பார்த்த ரிசல்ட் என்றாலும், திமுக வரலாற்றில் வைரத்தால் சூட்டப்படும் இன்னொரு மணிமகுடம் ஆகும்..
இந்த வைர கிரீடத்துக்கு சொந்தக்காரர் முக.ஸ்டாலின்..!
10 வருடமாக ஆட்சியில் இல்லை திமுக..சென்ற முறை 1.1 சதவிகித வாக்கு சதவீதத்தை நூலிழையில் தவறவிட்டது..
அந்த கடைசி ஒரு வாரம் ஒருசில தொகுதிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இந்த நிலைமை வந்திருக்காது..
64 ஓட்டுகளில் இருந்து 2000 ஓட்டுகளுக்கு திமுக கூட்டணி 28 இடங்களில் தோல்வியை தழுவியது ஜீரணிக்க முடியாத ஒன்று.
ஆனால், இந்த 5 வருடம் அதிமுக ஆட்சிதான் திமுகவுக்கு பிளஸ் ஆக அமைந்துவிட்டது..
நீட் தேர்வு அமல்படுத்தியதன் விளைவு,
முதல் தலைமுறை வாக்காளர்கள் அதாவது கிராமத்து இளைஞர்கள் அப்படியே அதிமுகவுக்கு எதிராக திரும்பியதுதான் திமுகவின் முதல் சக்சஸ்!
பாஜக பாஜக ஆளும் தரப்பு மீதான அதிருப்தியும், பாஜக மீதான உச்சக்கட்ட கோபமும், திமுகவுக்கு சாதகமான சூழலை பெற்று தந்தது.
அதிலும், லேடியா? மோடியா சவால் விட்ட கட்சியே இன்று, பாஜகவிடம் சரணடைந்ததை அதிமுக தொண்டர்களே ஏற்று கொள்ளவில்லை..
இதுவும் திமுகவின் இரண்டாவது சக்சஸ்..!
நந்திகிராம் முடிவு மமதா பானர்ஜி தோற்றது உண்மையா?
![]() |
தொடக்கம் முதலே ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், மாலையில் மமதா பானர்ஜி 1,200 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக தகவல் வெளியானது. பிறகு இரவு 8 மணியைக் கடந்த வேளையில், மமதா பானர்ஜியை விட சுவேந்து அதிகாரி 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து மறு கூட்டலுக்கு மமதா பானர்ஜி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மார்வாடிகளின் தமிழ்நாட்டு அரசியல்... சமூகவலையில் ஒரு விவாதம்
நேற்று அசந்த நேரம் சேகர் பாபு அண்ணணிற்கே விபூதி அடிக்க பார்த்தார்கள்.இவர்களின் பெருக்கம் மற்றும் இவர்கள் அரசியல் நிலைப்பாடு தமிழ்நாட்டிற்கு நல்லது அல்ல.
எல்லா ஊரிலும் கணிசமான அளவில் இவர்கள் எண்ணிக்கை அதிகமாக ஆகிறது.அதிலும் இவர்களின் சில பண்டிகைகளுக்கு இறைச்சி கடையை சாத்த சொல்லும் நிலைக்கு இவர்கள் தலையீடு இருக்கிறது.இதை எல்லாம் இனி அனுமதிக்கவே கூடாது.1,2 குடும்பங்கள் என்று இருந்தவர்கள் இன்று ஊருக்கு 1000 குடும்பங்கள் என்று வளர்ந்து விட்டார்கள்.
இவர்கள் இங்கு இருக்க கூடாது என்று சொல்லவில்லை அவ்வாறு சொல்வது தவறு.ஏனெனில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் இந்திய ஒன்றிய குடிமகன் ஒன்றியத்தில் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் என அனுமதி அளித்து இருக்கிறது.
ஆனால் இவர்களின் மதவாத அரசியல் சரி செய்யப்பட வேண்டும், இவர்கள் அரசியல்ரீதியாக இந்த மண் சார்ந்த அரசியலில் ஈடுபட செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இவர்களின் வியாபாரத்தையும் நெறிமுறைப்படுத்த வேண்டும்.நிச்சயமாக நம் மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்கும் சில தொழில் வாய்ப்புகள் இவர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள் என்பது உண்மை.
சண்முக நாதன் : இவர்களுக்கு இரட்டை வாக்குரிமை உள்ளது
இங்கு இவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும்
நூர் கா.மு : ஆம் அண்ணா.. இவர்களின் அரசியல் நிலைப்பாடு வருத்தம் அளிக்கிறது.
Md Ibrahim B :நூறு சதவீத உண்மை
ஞாயிறு, 2 மே, 2021
வன்னி அரசு மற்றும் கௌதம் சன்னா ஆகியோரின் தோல்வி... ஒரு விரிவான அலசல்
ஸ்டாலின் வீட்டுக்குப் படையெடுக்கும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்!
முன்னாள் ஐஜி சந்திரசேகர், முன்னாள் டிஜிபி ஜாங்கிட் உள்ளிட்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள் ஒருபக்கம் என்றால்... இன்னொரு பக்கம் தற்போது பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்டாலின் வீட்டுக்கு பொக்கேக்களோடு போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரிகளில் ஏடிஜிபி அந்தஸ்து அதிகாரி சங்கர் ஜியால் ஐபிஎஸ், டிஜிபி ரேங்க்கில் இருக்கும் கந்தசாமி, வருண் குமார் ஐபிஎஸ், ஐஜி சாரங்கன், டிஜிபி ரேங்க்கில் இருக்கும் ஷகில் அக்தர் ஐபிஎஸ், ஐஜி பிரமோத்குமார், டிஜிபி ரேங்க் கரன் சிங், டிஜிபி ரேங்க் சைலேந்திரபாபு ஐபிஎஸ், ஏடிஜிபி ரேங்க் மஞ்சுநாத் உள்ளிட்டோர் ஸ்டாலினை சென்று சந்தித்து அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
மம்தாவின் நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வி என அறிவிப்பு! நீதிமன்றம் செல்கிறர் மம்தா திடீரென மாறிய முடிவுகள்
இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி 213 இடங்களில் முன்னணி வகிக்கிறது.
பாஜக கூட்டணி 77 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸின் வெற்றி உறுதியாகியுள்ளது.
அதுநேரத்தில் 1200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட மம்தா பானர்ஜி, திடீரென தோல்வியடைந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கேரளம் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று திராவிட மாநிலங்களின் எழுச்சி!
![]() |
தமிழ்நாடு கேரளம் மேற்கு வங்காளம் ஆகிய மூன்று திராவிட மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் உலகுக்கு ஒரு உரத்த செய்தியை கூறியிருக்கின்றன!
உபகண்டத்தில் மதவாதிகளுக்கும் பாசிஸ்டுகளுக்கும் இனி இடமில்லை என்ற செய்தியை முரசறைந்து கூறியுள்ளார்கள் ..
கேட்க செவி இருப்போர் கேட்டுக்கொள்வார்கள்!
புரிந்து கொள்ளும் மனமுடையோர் தங்கள் கண்களை அகல திறந்து கண்டு கொள்வார்கள்!
சமூகநீதி பாதையில் பயணிக்க இந்த மண்ணின் மைந்தர்கள் தீர்மானித்து விட்டார்கள்!
இம்மாநிலங்களின் இன்றைய தீர்ப்பை உலகம் எழுந்து நின்று வரவேற்கும்!
இந்த மாநிலங்களின் சமூகநீதி பயணம் இனி எந்த தடைகளையும் உடைத்து ஏறிய தயங்காது.
இவர்களின் பயணத்தை தடுக்க கருதும் எந்த சக்தியும் அடையாளம் இழந்து காலாவதியாகும்.
இன்றைய நாள் இவர்கள் புதிய உலகுக்கு கூறிய செய்தி மானுட மேன்மைக்கானது!
நான் வட அமெரிக்க கண்டத்தில் தற்போது இருக்கிறேன்!
ஆனால் மனதளவில் எப்போதும் இந்த திராவிட மாநிலங்களின் மக்களுக்கு நெருக்கமாகவே இருக்கிறேன்
இம் மூன்று மாநிலங்களும் இன்று முழங்கிய அறைகூவலை நான் எழுந்து நின்று இரு கரம் நீட்டி முழு மனதோடு வரவேற்கிறேன்
வாழ்க சுயமரியாதை!
வாழ்க சமூகநீதி!
வாழ்க திராவிடம்! செல்லபுரம் வள்ளியம்மை
உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தல் பணியில் ஈடுபட்ட 706 ஆசிரியர்கள் கோவிட் காரணமாக உயிரிழப்பா?
சமீராத்மஜ் மிஷ்ரா லக்னெளவிலிருந்து இந்தி பிபிசிக்காக உத்தரபிரதேசத்தில் கொரோனா அலைக்கு இடையே பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்படுவது குறித்து ஆரம்பத்திலிருந்தே கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் இப்போது கொரோனா தொற்று காரணமாக தேர்தல் பணியில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுவது வேறுவிதமான விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டு உயிரிழந்ததாக கூறப்படும் 706 ஆசிரியர்களின் பட்டியலை , மாநில தேர்தல் ஆணையம் மற்றும் உ.பி. முதலமைச்சரிடம் ஒப்படைத்த ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் சங்கம், மே 2ஆம் தேதி நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறும் கோரியுள்ளது. மறுபுறம் எதிர்க்கட்சிகள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கோரியுள்ளன. அதே நேரத்தில் ஆசிரியர் சங்கத்தின் இந்த கூற்று குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
பயிற்சி அளிப்பதிலிருந்து வாக்குப்பதிவு வரை மாநில தேர்தல் ஆணையம் எங்குமே கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுறத்தவில்லை என்று ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக நிலைமை மோசமானது.
ஜெர்மனியில் ஒரு அகதியின் மரணம் ... Hemsbach என்னும் கிராமம்;
![]() |
Martin Jeya : iஓர் அகதியின் மரணம்...!
ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில் 15 நபர்கள் என்று சொல்லலாம்..!
அதில் அண்மையில் அகதியாக வந்த இளைஞனின் பரிதாப மரணம் என்னையும் எமது வீட்டாரையும் மிகவும் பாதித்திருந்தது...!
அவர் வாழும் பொழுது தனக்கு எந்த உறவுகளும் ஜேர்மனியில் இல்லையென்பதை ஒரு முறை எனது மனைவியுடன் உரையாடும் பொழுது தெரிவித்தாராம்..! தனக்கு என்ன வேலையென்றாலும் எடுத்து தரச்சொன்னாராம்..!
அதுதான் முதலும் கடைசியுமாக என் மனைவி அவரை வீதியில் கண்டது.
அதன் பின்னர் துணைவியார் என்னிடம் இது தொடர்பாக கதைத்திருந்தார்; முடிந்தால் அவருக்காக வேலையொன்று பெற்றுக் கொடுக்குமாறு கேட்டிருந்தேன்..!













