அமரர் ராஜீவ் காந்தியை கொலைசெய்தவர்களை மன்னித்து விட்டதாக திரு ராகுல் காந்தி கூறியது அவரின் மேன்மையை காட்டுகிறது .பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே என்பதற்கு அமரர் ராஜீவ் காந்தி குடும்பம்தான் நிகழ்கால சான்று .
இங்கே ஒரு விடயத்தை கூறவேண்டும் என்று எண்ணுகிறேன் .
ராஜீவ் காந்தியை கொலை செய்தது புலிகள் இயக்கம் அது ஒரு killing machine என்பதை தவிர வேறு சுருக்கமான விளக்கவுரை கிடையாது.
அதன் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் போன்றோர் அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு உடையவர்கள் ஆகிறார்கள்.
குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் புலி ஆதரவு அரசியல் சக்திகள் ராஜீவ் கொலையை கண்டிக்காதவரைக்கும் அவர்களும் இதற்கு பொறுப்பானவர்கள்தான் .
வெறுமனே ஒப்புக்கு கண்டனம் தெரிவித்தால் கூட ஏற்று கொள்ளமுடியுமா என்பது கேள்விக்குறிதான் . ஆனால் பலர் இன்னும் அதை கண்டிக்க கூட இல்லையே?
அது மட்டுமல்ல அதை நியாயப்படுத்தவும்கூட தயாராகவே உள்ளார்களே?
அப்படியாயின் அந்த killing machine இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது என்றுதானே பொருள்?
நடந்த சம்பவத்தை இன்னும் கூட நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிப்பவர்கள் அந்த குற்றத்தை தொடர்ந்து செய்கிறார்கள் என்றுதானே பொருள் ?
வெள்ளி, 19 பிப்ரவரி, 2021
அமரர் ராஜீவ் காந்தியும் ஏழுபேர் விடுதலையும்
வியாழன், 18 பிப்ரவரி, 2021
சசிகலா அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகி உள்ளார் .. தினகரன் திவாகரன் மோதல் வெடித்தது
Veerakumar - tamil.oneindia.com : சென்னை: சசிகலாவை சுற்றியுள்ள சொந்தங்கள், அவருக்கு தலைவலியாக மாறியுள்ளன. சசிகலாவின் தம்பி திவாகரன் எந்த பக்கம் போகப் போகிறார் என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல் முறையாக முதல்வரான காலம் முதல், சசிகலாவின் உறவினர்களால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. ஜெயலலிதாவால் சுதாகரன் தத்துப் பிள்ளையாக்கப்பட்டு நாடே வியக்க ஆடம்பரமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் மக்களிடையே பெரும் அதிருப்தியை சம்பாதித்தது. அடுத்த எம்ஜிஆர் நான்தான் என்று சொல்லும் அளவுக்கு சுதாகரனுக்கு தைரியம் பிறக்க இதுதான் காரணம்.
இப்படி சசிகலா உறவினர்கள் எல்லை மீறி போனதன் காரணமாக, 1996ம் ஆண்டு தேர்தலில் அதிமுக மிக மோசமாக தோற்றது. பிறகு அவ்வப்போது சில உறவினர்களை போயஸ் கார்டன் வீட்டுக்கு வரக்கூடாது என்று உத்தரவிடுவதும், கட்சியில் இருந்து நீக்குவது என்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதும், வாபஸ் பெறுவதும் ஜெயலலிதா வாடிக்கையாக இருந்தது.
பாலியல் ரீதியாக துன்புறுத்தி சிறுவன் கொலை: குற்றவாளிக்கு 3 தூக்கு!
புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
![]() |
நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று ரெயில் மறியல்
![]() |
daiylithanthi : வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. பதிவு: பிப்ரவரி 18, 2021 06:25 AM புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதை தீவிரப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணி முதல் 4 மணி வரை நாடு முழுவதும் 4 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை உறுதி செய்ய ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரெயில் மறியலை தடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்தில் ரெயில் பாதுகாப்புக்காக கூடுதல் படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன.
உதயநிதி ஸ்டாலின் : மருத்துவர் லோகோஷ் குமார் மரணத்தை கொரோனா மரணமாக கணக்கில் கொள்ள வேண்டும்
![]() |
இந்நிலையில், மருத்துவர் லோகோஷ் குமார் மரணத்தை கொரோனா மரணமாக கணக்கில் கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீட்டை வழங்க அடிமைகள் முன்வர வேண்டும் என தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் பயங்கர வெற்றி ! . பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது
துபாய் இளவரசி லதீபா சிறையில். மனித உரிமையாளர்கள் கேள்வி
சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் ரூ.11 கோடி மதிப்புடைய நகைகளை... திருடி இந்தியாவுக்கு அனுப்பிய தமிழக குருக்கள் சிங்கப்பூரில் கைது
Vigneshkumar - /tamil.oneindia.com : சிங்கப்பூர்: கோயில் நகைகளை கையாடியதாக சிங்கப்பூர் நாட்டிலுள்ள மாரியம்மன் கோயிலின் தலைமை குருக்கள் மீது வழக்குப்பிதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாட்டின் சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அந்நாட்டின் மிகவும் பழமையான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. 194 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் அர்ச்சகராக இந்தியவைச் சேர்ந்த கந்தசாமி சேனாபதி தலைமை குருக்களாக இருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை இவர் தலைமை குருக்களாக இருந்த போது கோவிலுக்கு சொந்தமான தங்க நகைகளை கையாடிதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நகைகள் வழக்கமாக கோயில் பூஜைகளின் போது
பயன்படுத்தப்படும். இந்த நகைகளை அடகு வைத்த கந்தசாமி, சுமார் 1.40 லட்சம்
சிங்கப்பூர் டாலர்களை தனது சொந்த காரணங்களுக்கு பயன்படுத்தி உள்ளார்.
இந்தப் பணத்தில் பெரும்பகுதியை அவர் பல்வேறு வங்கிகளை பயன்படுத்தி
இந்தியாவுக்கு அனுப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. Singapore news link
தோடர் பழங்குடியினத்தின் முதல் வழக்கறிஞர் நந்தினி.. பழங்குடிகளுக்கு சட்ட உதவிகள் இலவசம்!'
![]() |
| nandhini with her father |
புதன், 17 பிப்ரவரி, 2021
ரவுடி என்கவுண்டர்- போலீசாரை தாக்கி தப்பி ஓடியபோது அதிரடி . உதயநிதி மன்றத் தலைவர் தலையைத் துண்டித்தவர்
![]() |
| கொல்லப்பட்ட ரவுடி கிருஷ்ணா |
.maalaimalar.com :பண்ருட்டி:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரை சேர்ந்தவர் வீரா என்கிற வீரங்கையன் (வயது 30). பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு கொலை-கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
கடலூர் உழவர்சந்தை அருகே ரவுடி வீராவுக்கு சொந்தமான பழக்கடை உள்ளது. நேற்று
இரவு வழக்கம்போல் கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீரா வீட்டுக்கு
புறப்பட்டார்.
அப்போது 10 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில்
அங்கு வந்தனர். அவர்கள் வீராவை பின்தொடர்ந்து சென்றனர். இதனை வீரா
கவனிக்கவில்லை.
சுப்பராயலு நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் வீரா நடந்து சென்று
கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல்
வீராவை சுற்றி வளைத்தது.
டிக்டாக் பிரபலத்திடம் பணம் பறிகொடுத்த ஆண்கள் .. வேற்று மதம் பொய் பெயர் .. போலி கல்யாணங்கள்
![]() |
மொத்தம் 5 கணவன்கள்.. இந்த விஷயம் தெரிந்ததுமே, அந்த 4வது கணவன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.. ஸ்டிரைட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கே ஓடிப்போய் விட்டார்..!
மயிலாடுதுறையை சேர்ந்தவர் பாலகுரு.. 27 வயசு ஆகிறது.. இவர் ஒரு டிரைவர்.. டிக்டாக் வீடியோவில்தான் முதன்முதலாக மீராவை பார்த்தார்.. மீராவின் அழகில் மயங்கி விழுந்துவிட்டார். நாளடைவில் இது காதலானது.. இருவரும் கல்யாணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தனர்..
அதன்படியே திருமணம் நடந்தது.. அப்போதுதான், மீரா என்பது ஒரிஜினல் பெயர் இல்லை, அவர் பெயர் ரஜபுன்னிஷா என்பதும், அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது இதனால் அதிர்ந்து போன பாலகுரு, மீராவின் மீதுள்ள காதலால் அந்த பொய்யை மறந்து வாழ ஆரம்பித்தார்.
அப்போதுதான் இன்னொரு ஷாக் அவருக்கு வந்தது.. தான் வேலைக்கு போனபிறகு, வீட்டுக்கு யார் யாரோ ஆண்கள் வந்து போவது தெரியவந்தது..
இதை பற்றி கேட்டதற்கு தகராறு வெடிக்க ஆரம்பித்தது.. மீரா எந்த கேள்விக்கும் சரியாக பதில் சொல்லாமல் மழுப்பினார்.. ஒருகட்டத்தில் அம்மா வீட்டுக்கு போவதாக சொல்லி கிளம்பி சென்றுவிட்டார்.
ராகுல் காந்தி: "என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்
![]() |
கனலரசன் கைது ..`ராமதாஸின் தூண்டுதலே காரணம்..!’ -சொல்கிறார் காடுவெட்டி குரு மனைவி
அதிமுக 171, பாமக 21, பாஜக 20, தேமுதிக 14, தமாகா 5, இதர காட்சிகள் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதாக உத்தேச பட்டியல்
Rayar A - tamil.oneindia.com : சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியல் என்று ஒரு பட்டியல் உலா வருகிறது. இந்த உத்தேச பட்டியலில் பாமகவுக்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.செங்கல்பட்டு, காட்பாடி, செஞ்சி, பண்ருட்டி உள்பட 21 இடங்களில் பாமக போட்டியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 171 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக 20 இடங்களில் போட்டியிடுவதாக இந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் களைகட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணியையும் இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது தெரிந்த ஒன்றுதான். வி.சி.,க. இடது சாரி உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெரும் என தெரிகிறது.
பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக, தேமுதிக கூடுதல் சீட் கேட்டு காத்திருக்கின்றன. இந்த நேரத்தில் பாமக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பாமகவுடன் தமிழக அமைச்சர்கள் பலகட்டம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
108 ஆடுகள் வெட்டி சீமான் கறி விருந்து
![]() |
கொரோனாவால் 24 மணி நேரத்தில் 18 மாநிலங்களில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை
கேரள மாநிலத்தில் 5,073 பேரும், மராட்டிய மாநிலத்தில் 3,105 பேரும் கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். நமது நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 33 ஆயிரத்து 25 ஆக உயர்ந்து இருக்கிறது.
தமிழகம் எங்கெங்கும் வட இந்தியர்கள்! அடையாளம் இழக்கும் தமிழ்நாடு!
![]() |
| தமிழகத்தின் வேலைவாய்ப்புகள், வணிகம், நிலம் அனைத்தும் வட இந்தியர் |
சாவித்திரி கண்ணன் : · தமிழகம் தவிர வேறெந்த மாநிலத்திலும் இப்படியான ஒரு சூழல் கிடையாது..! ஜெயலலிதாவும், கருணாநிதியும் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில் – மக்கள் செல்வாக்கோ, ஆளுமையோ இல்லாத ஒ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகியோர் தலைமைக்கு தமிழக அரசின் அதிகாரம் கைமாறியதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 முதல் 99.5 சதவிகிதம் வட மாநிலத்தவர் நியமனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்புகள், வணிகம், நிலம்…அனைத்தும் வட இந்தியர் வசம் சென்று கொண்டுள்ளதை கவனப்படுத்துகிறது இந்த கட்டுரை! ஆனால், இது குறித்த தமிழக மக்களின் அதிர்ச்சி, கவலை, அச்சம் எதையுமே மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவே தயாரற்ற நிலையும் நிலவுகிறது. 2017-ஆம் ஆண்டுமுதல் ரயில்வே, அஞ்சல்துறை,என்.எல்.சி,பாரத மின்மிகு நிலையம், வருமானவரித் துறை,உளவுத் துறை,வங்கிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் பொதுப்பணித்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு கிடைக்காமல் வட மாநிலத்தவர்களுக்கே அதிகம் கிடைத்து வருகிறது.
கொள்கை சார்ந்த அரசியலை மக்கள் புரிந்து கொள்கிறார்களா? Are we deserved for Ideological politics!!
செவ்வாய், 16 பிப்ரவரி, 2021
கிரண்பேடி பதவி நீக்கம் - நாராயணசாமி வரவேற்பு! ..புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை
![]() |
தேவேந்திர குல வேளாளர்கள்- மத்திய அரசு விளக்கத்தின் பின்னணி!
இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 15) மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “ ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கிய சமுதாயத்துக்கு தேவேந்திர குலவேளாளர் என்று பிரதமர் பெயர் சூட்டியதை அடுத்து. அவர்களை பட்டியல் பிரிவு (எஸ்சி) வெளியேற்றப் போவதாகவும் அவர்களை ஓபிசி பட்டியலில் சேர்க்கப் போவதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால் அப்படி ஒரு திட்டமும் அரசிடம் இல்லை. அவர்கள் தொடர்ந்து பட்டியல் வகுப்பிலேயே நீடிப்பார்கள்” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டூல்கிட் என்றால் என்ன? கிரெட்டா துன்பெர்க் ஷேர் செய்த டூல்கிட்டில் என்ன இருந்தது? யார் இந்த திஷா ரவி? இவர் கைதானது ஏன்?
சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்- உயர்நீதிமன்றம்
தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட மூவாயிரத்து 354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை எதிர்த்து ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை இறுதியாக நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்த நிலையில், அனைத்து தரப்பு விசாரணையும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே முடிவடைந்தது. இதையடுத்து இவ்வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, 2009 ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும். மேலும் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி ராஜகண்ணப்பனின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
ப.சிதம்பரத்தை எதிர்த்து வழக்கு... 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பு!
nakkeeran : 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றியை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (16 பிப்.) தீர்ப்பு அளிக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனை விட, 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு, கடந்த 10 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.










