செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி தங்கள் குற்றங்களை மறைத்த ...
சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.
4. திருவருட்பா
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!
ஊர் பேசிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ... இன்று நடப்பது .. மௌனமாக கடந்து செல்லும் ஊடகங்கள் ..
அயோத்தி ராமர் கோயில் அடுக்கல் நாட்டு விழா 170 பேர்கள் மட்டுமே அனுமதி
திங்கள், 3 ஆகஸ்ட், 2020
மதன் மீது வழக்கு தொடர்ந்த உதயநிதி .. மதனின் மான்கறி கதை...
சவுக்கு சங்கர் : உனது வீழ்ச்சி எனக்கு வருத்தமளிக்கவில்லை .. நீ விழவேண்டியவன்
Shankar A : அன்புள்ள மதன், உனது வீழ்ச்சி எனக்கு வருத்தம் அளிக்கவில்லை. நீ வீழ வேண்டியவன்.
சுயநலத்துக்காக எதையும், எத்தகைய பஞ்சமா பாதகத்தையும் செய்யத் துணிபவன்.
வருடக்கணக்காக உழைத்து, பல்வேறு தடைகளை கடந்து, இருபது இருபத்தைந்து
ஆண்டுகளாக பணியாற்றும் ஊடகவியலாளர்களை இழிவாக பேசுகிறாய். ஏளனம்
செய்கிறாய். கட்சி சார்பானவர்கள் என்று அபாண்டம் பேசுகிறாய். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார்.. வீடியோ
வடக்கு லடாக் பகுதியில் ராணுவத்தை பலப்படுத்தும் இந்தியா

மாலைமலர் : சீன ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும்
வகையில இந்தியா வடக்கு லடாக் பகுதியில் ராணுவ பலத்தை அதிகரிக்க
தொடங்கியுள்ளது.
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில்
கடந்த மாதம் இந்தியா - சீன ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில்
20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்டோர்
காயம் அடைந்தனர்.அதன்பின் இருநாட்டு ராணுவ
கமாண்டர்கள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வெளியுறவுத்துறை
மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு ஆலோசகரும்
சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இருநாட்டு படைகளும் தங்களது
பழைய இடத்திற்கு திரும்ப ஒத்துக்கொண்டன.லடாக்
பகுதியில் சீனா 2 கி.மீட்டர் தூரத்திற்கு பின் வாங்கினாலும் மற்ற பகுதியில்
இருந்து பின் வாங்க தயங்குகின்றன. நேற்று ராணுவ கமாண்டர்கள் நிலையிலான
பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும்
மறுமுனையில் இந்தியா பொருளாதார நெருக்கடி கொடுத்து வருகிறது, மேலும்
லடாக்கின் பல பகுதிகளில் ராணுவத்தை குவித்து வருகிறது.
மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி கிடையாது... முதல்வர் திட்டவட்டம்!
அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள
நிலையில், அதில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல அம்சங்கள்
சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன. இது சனாதன கல்வி முறையை புகுத்த
முயல்வதாகவும், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கிறது என்றும்
தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின்
நிலைப்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும் என திமுக தலைவர்
ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
மாணவி கீர்த்தனா தற்கொலை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால்.... பெரம்பலூர் மாணவி ...
![]() |
| n |
கர்நாடாக முதல்வர் எடியுரப்பாவுக்கும் கொரோனா தொற்று உறுதி ...


விஜயலட்சுமி தர்ணா போராட்டம் நடத்த வீட்டுக்கு வெளியே வந்தார் .. - தடுத்து நிறுத்திய போலீஸ்.. வீடியோ
இதனை தொடர்ந்து விஜயலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,பாஜக மகளிர் அணி மாநில செயலாளர் ஜெயலட்சுமி தனக்கு உதவி செய்கிறேன் என தொடர்ந்து தொந்தரவு செய்கிறார். எனக்கு பா.ஜ.க வினர் யாரும் உதவிட வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து என்னை தெரியாது என்று சொல்லும் சீமான், என்னை திருமணம் செய் வேண்டியதில்லை. ஆனால் என்னுடனான தொடர்பை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும். சீமானுக்கும் எனக்குமான உள்ள உறவு இயக்குநர் அமீருக்கு தெரியும் அவர் ஏன் மவுனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை.
கோவையில் இலங்கை தாதா சடலம் எரிப்பு .. இரு பெண்கள் உட்பட மூவர் கைது
தினமலர்: கோவை: போலி ஆவணங்களின் மூலம், இலங்கை தாதாவின் சடலத்தை எரித்த இரு பெண்கள் உட்பட மூவரை கோவை போலீசார் இன்று கைது செய்தனர்.; மதுரை
மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி, 36. இவர், 'கோவை சேரன் மாநகர்
கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங், 35,
என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார்' என, பீளமேடு போலீசாரிடம் புகார்
செய்தார்.
இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை
வழங்கினார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார்,
பிரேதப்பரிசோதனைக்கு பின் சடலத்தை ஒப்படைத்தனர். சிவகாமி சுந்தரி மற்றும்
உயிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, 27,
இருவரும் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர். இந்நிலையில்,
இவ்வழக்கு குறித்து சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்தவரின் உண்மையான பெயர், அங்கொட லொக்கா எனத் தெரிந்தது.
இவர், இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர்,
ராமர் கோவில் பூமி பூஜைக்கு ராஜ்நாத் சிங், பாபா ராம்தேவுக்கு அழைப்பு எல்.கே.அத்வானி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்
தினத்தந்தி : ராமர் கோவில் பூமி பூஜைக்கு ராஜ்நாத் சிங், பாபா
ராம்தேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர்
எல்.கே.அத்வானி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்.
அயோத்தி,
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு
வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும்
நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்
பகவத், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இவர்களை தவிர்த்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கடியார் உள்ளிட்டோர் பா.ஜனதா சார்பில் பங்கேற்கிறார்கள். கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள்.
வடக்கு மக்களும் இராணுவத்தினரும் ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். இராணுவம் வெளியேற வேண்டியதில்லை! கே.பி
இலங்கைநெட் : வடக்கில்
முகாமிட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களின் குடும்ப அங்கமாக
வந்துள்ளதாகவும் அவர்களிடையேயான உறுவு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும்
குறிப்பிட்டுள்ள புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கேபி
எனப்படும் குமரன் பத்மநாதன் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறவேண்டுனெ
அரசியல்வாதிகள் மாத்திரமே விரும்புவதாகவும் மக்கள் அல்லவென்றும் தெரிவித்துள்ளார்.
Daily FT என்ற இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள செவ்வியில் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளதுடன் அச்செவ்வியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
புலம்பெயர் தமிழர் தாம் வாழும் நாடுகளில் தொடர்ந்தும் இருப்பை
தக்கவைத்துக்கொள்வதற்காக இலங்கை பாதுகாப்பற்ற நாடு என காண்பிக்க
முனைகின்றனர். அதற்காக இங்குள்ள மக்களை வன்செயலுக்கு தூண்டுகின்றனர்.
பயனற்ற யுத்தமொன்றில் தமது வாழ்வை தொலைத்த பெரும்பாலான முன்னாள் புலிகள்
அமைதியான வாழ்வையே விரும்புகின்றனர். ஆனாலும் தொழில்வாய்புகள் இன்றி
வறுமையிலிருக்கின்ற சில முன்னாள் புலி உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழரின்
வலையில் சிக்குகின்றனர். இதனூடாக இலங்கையில் பிரச்சினை உண்டு என காண்பிக்க
நினைக்கும் புலம்பெயர் தமிழரது தேவைநிறைவேறுகின்றது.
ஆ.ராசா : 3ம் வகுப்பு , 5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு வைத்திருந்தால் நானே படிச்சு வழக்கறிஞராகி இருக்கமாட்டேன்...
: அண்ணன்
ஆ.ராசா அவர்கள் 2ஜி வழக்கில் வாதாடியதை பார்த்து இந்தியாவின்
மிகப்பிரபலமான சீனியர் வழக்கறிஞர்களே மிரண்டுபோனார்கள். சிபிஐ
வழக்கறிஞர்கள் ராசாவின் வாதங்களை எதிர்கொள்ளமுடியாமல் வாய்தா மேல் வாய்தா
வாங்கினார்கள். ஒரு கட்டத்தில் அவரை எதிர்கொள்ளமுடியாமல் “யாருக்கு
அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர் இந்த வழக்கில் வெற்றி பெறட்டும்” என
நீதிமன்றத்திலேயே பதிவு செய்தார் சிபிஐ வழக்கறிஞர். எம் எஸ் செல்லசாமி காலமானார்! மலையக தோட்ட நிர்வாகங்களை உலுக்கிய தொழிற்சங்கவாதி..!
அன்று தி.மு.க. வில் அண்ணாவுக்கு கலைஞர் கருணாநிதி எவ்வாறு துணையாக நின்று கழகத்தை வளர்த்தாரோ… அதே போன்று அமரர் தொண்டமானுக்கு செல்லசாமி அவர்கள் துணையாக நின்று காங்கிரசை வளர்த்தார். அன்று இ.தொ.கா.வின் அதீத வளர்ச்சிக்கு அமரர் செல்லசாமி… துடிப்பு மிக்க…. துணிவு மிக்க… கட்சி விசுவாச மிக்க தொண்டனாக விளங்கினார். எங்களது கல்லூரி காலத்தில் அட்டன் நகரில் காங்கிரஸ் கூட்டம் நடந்தால்¸ செயலாளர் செல்லசாமியின் மேடைப் பேச்சை கவனித்து வரும்படி எங்களது ஆசிரியர்களான இர.சிவலிங்கம்¸ எஸ்.திருச்செந்தூரன் இருவரும் அனுப்பி வைப்பார்கள்.
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020
ஊழல் நீதிபதிகளுக்கு பிரசாந்த் பூசண் ஒரு சிம்ம சொப்பனமாகத் தான் ...
பெண் என்ஜினீயர் தற்கொலை... சீதனம் கேட்டு சித்திரவதை .. சென்னை
நக்கீரன் :
சென்னை சிந்தாதிரிப்பேட்டை பள்ளித் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா.
என்ஜினீயங் படிப்பு முடித்த இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம்
காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமா
ர் என்பவருக்கும் கடந்த
ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. சாஃப்ட்வேர் என்ஜினீயரான நிரேஷ்குமார்
ஐதராபாத்தில் பணியாற்றி வந்ததால், இருவரும் அங்கு வசித்து வந்தனர். திருமணமான சில வாரங்களிலேயே கணவன்- மனைவி
இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பிரியங்கா தனது கணவரைப்
பிரிந்து, பெற்றோருடன் சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வந்தார். திருமணமான 3
மாதங்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வீட்டுக்கு
வந்தததால், மன அழுத்தத்தில் காணப்பட்ட அவர் கடந்த 29-ஆம் தேதி வீட்டில்
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரியங்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார்
வந்தனர். துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர் அசோகன் ஆகியோர்
மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன்
தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் ஆகியோருக்கு கொரோனா தொற்று
நாணயத்தை விழுங்கிய 3 வயது குழந்தை- மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் உயிரிழப்பு ... கேரளா
மாலைமலர் : கேரளாவில் நாணயத்தை விழுங்கிய 3 வயது
குழந்தையை, மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், பரிதாபமாக உயிரிழந்த
சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரிதாஸ் வீட்டில் போலீசார் 5 மணிநேரம் சோதனை.. மதுரையில் ..
ரஷ்யாவில் அக்டோபரில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்
இதையொட்டி அவர் கூறுகையில், கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார்.
வைரமுத்து : தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம்
அதிமுக என்கின்ற எம் எல் எம் ( MLM ) கம்பனி! ... ஆதாரங்களோடு ஒரு அலசல்
இரு கட்சிகளும் உண்மையில் நேரெதிர் திசையில் உள்ளவை..
அதிமுக என்ற அமைப்பு உண்மையில் ஒரு அரசியல் கட்சிக்கு உரிய எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்கவில்லை .
ஆனால் அதில் எம்ஜியார் உட்பட பல பிரமுகர்கள் .இருந்தமையால் அதுவும் இன்னொரு திமுக போன்ற ஒரு திராவிட கட்சியே என்ற தோற்றத்தை கொடுத்தது.
அதிமுகவின் தோற்றம் என்பது எம்ஜியார் என்ற நடிகரின் ரசிகர்களின் சங்கம் என்ற அளவிலேயே பெரிதும் இருந்தது..
எப்போது எம்ஜியார் தனது ரசிகர் மன்றங்களை ஒரு வலுவான நிறுவனமாக கட்டமைக்க தொடங்கினாரோ அன்றே எம்ஜியாரின் அமைப்பு தொடங்க பட்டுவிட்டது .
இந்த ரசிகர் அமைப்புக்களின் தலைமை பொறுப்புக்களில் இருந்தவர்கள் எல்லாம் ஒரு அசல் கம்பனி இயக்குனர்கள் போல செயல்பட்டனர்.
அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அல்ல சி இ ஒ போன்று ஆர் எம் வீரப்பனோ அல்லது முசிரிபுத்தனோ இருந்தார்கள்.
பலரும் எம்ஜியாரின் ரசிகர்கள்தான். அவர்களில் பலருக்கும் செலவு மட்டும்தான் இருக்கும் . வேறு ஒரு இலாபமும் இருக்காது .
ஆனால் ரசிகர் மன்றங்களின் பொறுப்புக்களின் இருப்பவர்களுக்கு அது பல சமயங்களிலும் அது ஒரு வருவாய் தரும் தொழிலாக இருந்திருக்கிறது.







