செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி தங்கள் குற்றங்களை மறைத்த ...

Krish Marudhu -Kathiravan Mayava : கண்டிப்பாரா திருமாவளவன் ? தாழ்<>த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுவதா ? கொடுமை !
கேடயத்தை கத்தியாக உபயோகிக்கும் அயோக்கியர்கள் ....
தாழ்த்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதியினரிடம் இருந்து காப்பதற்காக கொண்டுவரப்பட்டது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் ...
ஆனால் அந்த சட்டம் பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தி தாங்கள் தாக்கப்படாமல் காத்துக் கொள்வதற்கு  உள்ள சட்டம் என்பதை மறந்து அதே சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்தி உயர்சாதியினர் என்று அழைக்கப்படும்
மக்கள் மீது ஒரு சதவீதம் கூட உண்மை இல்லாத பொய்யான புகாரை அளித்து தாங்கள் செய்யும் குற்றங்களை மறைப்பதற்காக அந்த சட்டத்தை ஒரு கருவியாக பயன்படுத்தும் போக்கு நாட்டில் நிலவி வருகிறது ..
இது மிகவும் ஆபத்தான போக்காகும் இந்த சட்டத்தை பயன்படுத்தும்போது பிரிலிமினரி என்கொயரி என்ற முறையில் முதல்கட்ட விசாரணை நடத்தி முடிவெடுத்து அதன்பிறகே தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கு பதியப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருந்தது
ஆனால் அது மாற்றப்பட்டு புதிய சட்டத்தின் வழியாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சம்பந்தமாக புகார் அளித்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் அதை குறித்து உண்மைத்தன்மையை உண்டா என்று விசாரிக்கக்கூடாது வழக்கை பதிவு செய்த பிறகுதான் விசாரிக்க வேண்டும் என்ற ஒரு நிலையை புதிய திருத்த சட்டம் அளித்திருக்கிறது .

சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.

ஞ்சை கோ.கண்ணன் :இது தான் தமிழ் ! அனைத்தையும் ப
டிக்க ஒரு பிறவி போதாது...
1. தேவாரம்

2. திருவாசகம்
3. திருமந்திரம்
4. திருவருட்பா
5. திருப்பாவை
6. திருவெம்பாவை
7. திருவிசைப்பா
8. திருப்பல்லாண்டு
9. கந்தர் அனுபூதி
10. இந்த புராணம்
11. பெரிய புராணம்
12. நாச்சியார் திருமொழி
13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

ஊர் பேசிய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ... இன்று நடப்பது .. மௌனமாக கடந்து செல்லும் ஊடகங்கள் ..

வுமியன் வைத்தியநாதன்; : இது 2ஜி பற்றிய பதிவு அல்ல.... பாஜக பற்றிய பதிவு... தொடர்ந்து முழுமையாக படிக்கவும்..!
2ஜி போன்ற பெரிய ஊழல்கள் இதுவரை பாஜக ஆட்சியில் சொல்ல முடியவில்லையே...
அதனால் தான் தேங்காய் உடைத்தது போல பாஜக ஆட்சியை விமர்சிக்க முடியவில்லை. ஆனா இவிங்க தப்பானவங்க... இவிங்க வேணாம்ங்கறது மட்டும் புரியுதுன்னு சொல்ற அப்பாவி பொதுஜனத்திற்கான பதில் இது தான்.. மிஷ்டர் பொது ஜனம், 2ஜி ஊழல்ன்னு சொன்னீங்களே... உண்மையிலேயே அது ஊழல் தானா சார்?!
அஃப்கோர்ஸ்... பின்ன இல்லியா பின்ன?! ஒரு லட்சத்தி எழுவத்தஞ்சாயிரம் கோடி ஊழல் இல்லியா?! ஓக்கே... நீங்க சொல்றபடியே வச்சிக்குவோம்...
வெறும் 68 கோடி ரூபாய் ஊழல் செஞ்சதா ஜெயலலிதா மேல கலைஞர் கேஸ் போட்டாரு.... போட்டுட்டு... அந்த 68 கோடி ரூவா சொத்தையும் கண்டுபிடிச்சி... இது இதுதான்னு பட்டியல் போட்டு கோர்ட்டுல கொடுத்துட்டாரு.
அவ்ளோ செஞ்சும் அந்தம்மா கோர்ட்டுல பல டகால்ட்டி வேலையை காமிச்சி... வாய்தா மேல வாய்தா வாங்கி... கடேசில குற்றவாளியாத்தான் உச்சநீதிமன்றமே உறுதி செஞ்சு செத்தும் போச்சி...!
ஆனா நீங்க சொல்ற அந்த ஒரு லட்சத்தி எழுவத்தஞ்சாயிரம் ஓவா ஊழல்ல இது வரைக்கும் ஒரே ஒரு நயா பைசா கூட ஊழல் செஞ்சதா சொல்லப்படுற ஆ ராசாக்கிட்டேயிருந்து பழைய காங்கிரஸ் அரசும் சரி, இப்ப ஆறு வருஷமா இருக்குற மோடி அரசும் சரி... கண்டுபிடிச்சி கோர்ட்டுல கொடுக்கவே இல்லியே ஏன் சார்?! கோர்ட்டும் கூட அவரை நிரபராதின்னு விடுதலை செஞ்சிடிச்சே ஏன் சார் இவிங்க மேல் கோர்ட்டுக்கு போகல..?!

அயோத்தி ராமர் கோயில் அடுக்கல் நாட்டு விழா 170 பேர்கள் மட்டுமே அனுமதி

   வெப்துனியா :அயோத்தியில் ராமர் கோவில் அடுக்கல் நாட்டு விழாவில் அத்வானி நேரில் கலந்து கொள்ளவில்லை என்றும், பாபா ராம்தேவ் சிறப்பு
விருந்தினராக கலந்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில் நாளை மறுநாள் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நடும் விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மதன் மீது வழக்கு தொடர்ந்த உதயநிதி .. மதனின் மான்கறி கதை...

m.dailyhunt.in : திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரனுக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
சேனல் விஷன் யூடுப் சேனலில் மதன் ரவிச்சந்திரன் தனது தொடர் விவாதங்கள் மூலம் திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தார், அத்துடன் தான் பணியாற்றிய ஊடகங்களில் திமுக என்னென்ன சித்துவிளையாட்டுகளை செய்துவருகிறது என்றும் அவர்களின் நோக்கம் என்ன என்பது குறித்தும் மதன் டைரி என்ற நிகழ்ச்சியில் தெரிவித்து வந்தார்.
இது மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டாக்கியது, மேலும் கள்ளத்துப்பாக்கி வழக்கில் கைதான திருப்போரூர் எம் எல் ஏ. அந்த பகுதியில் மான் வேட்டை நடத்தி வந்ததாகவும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து அந்த ஊர் நபர் தெரிவித்த கருத்துக்களை பேட்டியாக ஒளிபரப்பினார்

சவுக்கு சங்கர் : உனது வீழ்ச்சி எனக்கு வருத்தமளிக்கவில்லை .. நீ விழவேண்டியவன்

Shankar A : அன்புள்ள மதன்,    உனது வீழ்ச்சி எனக்கு வருத்தம் அளிக்கவில்லை. நீ வீழ வேண்டியவன். சுயநலத்துக்காக எதையும், எத்தகைய பஞ்சமா பாதகத்தையும் செய்யத் துணிபவன். வருடக்கணக்காக உழைத்து, பல்வேறு தடைகளை கடந்து, இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக பணியாற்றும் ஊடகவியலாளர்களை இழிவாக பேசுகிறாய். ஏளனம் செய்கிறாய். கட்சி சார்பானவர்கள் என்று அபாண்டம் பேசுகிறாய்.
இவர்கள் கடுமையாக உழைத்து, பார்ப்பன அழுத்தங்களை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் முன்னேறியவர்கள். ஊடகத்துறைக்கு பெரும்
பங்களிப்பை அளிததவர்கள். உன்னைப்போல ஒவ்வொரு சேனலுக்கு ஒரு டீசர்ட் போட்டு வேலை வாங்கியவர்கள் இல்லை. ஒரே ஒரு கேள்வியால் கூட்டணியை உடைத்த பத்திரிக்கையாளர்கள் இங்கு உண்டு. இரண்டு காலம் செய்தியால், பல அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பியவர்கள் இங்கே உண்டு. தலித்துகள் மீதான தாக்குதலை பதிவு செய்யச் சென்று, சாதி வெறியர்களால் மரத்தில் கட்டிவைக்கப்பட்ட செய்தியாளர்கள் உண்டு. ஜெயலலிதா சட்டப்பேரவையில் சொல்லியதை பொய்யென்று நிரூபிக்க அரசு கொடொவுனுக்குள் சென்று படம் பிடித்து, சிறை சென்ற செய்தியாளர்கள் உண்டு.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார்.. வீடியோ

tamil.news18.com  : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோன தடுப்பு பணிகளை முன்னின்று வழிநடத்தியவர் பீலா ராஜேஷ். தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தததாவல் அதிரடியாக பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந் மாற்ற்ப்பட்டார்.
பீலா ராஜேஷ்க்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகரியாக செயல்பட்டு வந்த ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.
அதன்பின் சில நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மட்டும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பீலா ராஜேஷ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமூக ஆர்வலர் செந்தில் புகார் அளித்துள்ளார். பீலா ராஜேஷ் வாங்கிய சொத்துக்களை குறிப்பிட்டு அவர் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. செந்தில் அளித்த புகாரின் அடிப்படை

வடக்கு லடாக் பகுதியில் ராணுவத்தை பலப்படுத்தும் இந்தியா

வடக்கு லடாக் பகுதியில் ராணுவத்தை பலப்படுத்தும் இந்தியா மாலைமலர் : சீன ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில இந்தியா வடக்கு லடாக் பகுதியில் ராணுவ பலத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளது.  லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் இந்தியா - சீன ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.அதன்பின் இருநாட்டு ராணுவ கமாண்டர்கள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வெளியுறவுத்துறை மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு ஆலோசகரும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இருநாட்டு படைகளும் தங்களது பழைய இடத்திற்கு திரும்ப ஒத்துக்கொண்டன.லடாக் பகுதியில் சீனா 2 கி.மீட்டர் தூரத்திற்கு பின் வாங்கினாலும் மற்ற பகுதியில் இருந்து பின் வாங்க தயங்குகின்றன. நேற்று ராணுவ கமாண்டர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் மறுமுனையில் இந்தியா பொருளாதார நெருக்கடி கொடுத்து வருகிறது, மேலும் லடாக்கின் பல பகுதிகளில் ராணுவத்தை குவித்து வருகிறது.

மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி கிடையாது... முதல்வர் திட்டவட்டம்!

மின்னம்பலம் : மும்மொழிக் கொள்கை முடிவு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.புதிய தேசிய கல்விக் கொள்கை 2020க்கு மத்திய மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியா? முதல்வர் திட்டவட்டம்!அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல அம்சங்கள் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன. இது சனாதன கல்வி முறையை புகுத்த முயல்வதாகவும், இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கிறது என்றும் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
மும்மொழித் திட்டத்தைத் திணிக்கும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை-2020 ஐ தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டுமெனவும் செயல்படுத்திட மறுக்க வேண்டுமெனவும் ஸ்டாலின் தலைமையில் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் முதல்வருக்கு கடிதம் எழுதினர்.இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 3) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

மாணவி கீர்த்தனா தற்கொலை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால்.... பெரம்பலூர் மாணவி ...

n
நக்கீரன் மருத்துவ கல்விக்கான நேர்க்காணல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இறுதி வரை ;காத்திருந்தும் மருத்துவ கல்விக்கு இடம் கிடைக்காத விரக்தியில் பெரம்பலூரில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர்  தீரன் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக நடந்துனர் (TNSTC) செல்வராஜ், இவரது மகள் கீர்த்தனா (19). இவர் கடந்த 2017 - 18 ஆம் கல்வி ஆண்டில் +2 பொதுத் தேர்வில் 1054 மதிப்பெண் பெற்று மருத்துவ கல்விக்காக நீட் தேர்வு எழுதி தோல்வியுற்றார்.   மருத்துவராவதே தனது லட்சியமாக கொண்ட மாணவி கீர்த்தனா,  அதற்காக சென்னையில் நீட் பயிற்சி மையம் ஒன்றில் தொடர் பயிற்சி பெற்று இந்தாண்டு நீட் தேர்வில் 384 மதிப்பெண் பெற்றுள்ளார்.

கர்நாடாக முதல்வர் எடியுரப்பாவுக்கும் கொரோனா தொற்று உறுதி ...

Karnataka Chief Minister BS Yediyurappa tested positive for for the novel coronavirus
Karnataka Chief Minister BS Yediyurappa tested positive for for the novel coronavirus
tamil.oneindia.com - VelmuruganP : பெங்களூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்ந்து, பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான, கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தான் இன்று பிற்பகல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதை ட்விட்டரில் உறுதி செய்தார். அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை சமீபத்தில் தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

விஜயலட்சுமி தர்ணா போராட்டம் நடத்த வீட்டுக்கு வெளியே வந்தார் .. - தடுத்து நிறுத்திய போலீஸ்.. வீடியோ

tamil.news18.com :   பாஜக மகளிர் அணி மாநில செயலாளர் ஜெயலட்சுமி தனக்கு உதவி செய்கிறேன் என தொடர்ந்து தொந்தரவு செய்வதாக விஜயலட்சுமி குற்றச்சாட்டி உள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள தனது தற்காலிக இல்லத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி வெளியே வந்த நடிகை விஜயலட்சுமிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனை தொடர்ந்து விஜயலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,பாஜக மகளிர் அணி மாநில செயலாளர் ஜெயலட்சுமி தனக்கு உதவி செய்கிறேன் என தொடர்ந்து தொந்தரவு செய்கிறார். எனக்கு பா.ஜ.க வினர் யாரும் உதவிட வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து என்னை தெரியாது என்று சொல்லும் சீமான், என்னை திருமணம் செய் வேண்டியதில்லை. ஆனால் என்னுடனான  தொடர்பை அவர் ஒத்துக்கொள்ள வேண்டும்.  சீமானுக்கும் எனக்குமான உள்ள உறவு இயக்குநர் அமீருக்கு தெரியும் அவர் ஏன் மவுனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை.

கோவையில் இலங்கை தாதா சடலம் எரிப்பு .. இரு பெண்கள் உட்பட மூவர் கைது

latest tamil news  தினமலர்:  கோவை: போலி ஆவணங்களின் மூலம், இலங்கை தாதாவின் சடலத்தை எரித்த இரு பெண்கள் உட்பட மூவரை கோவை போலீசார் இன்று கைது செய்தனர்.; மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி, 36. இவர், 'கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங், 35, என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார்' என, பீளமேடு போலீசாரிடம் புகார் செய்தார்.
இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையை வழங்கினார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார், பிரேதப்பரிசோதனைக்கு பின் சடலத்தை ஒப்படைத்தனர். சிவகாமி சுந்தரி மற்றும் உயிரிழந்தவருடன் தங்கியிருந்த இலங்கை கொழும்பை சேர்ந்த அமானி தான்ஜி, 27, இருவரும் சடலத்தை மதுரைக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளனர்.  இந்நிலையில், இவ்வழக்கு குறித்து சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவரின் உண்மையான பெயர், அங்கொட லொக்கா எனத் தெரிந்தது. இவர், இலங்கையில் போதைப் பொருள் கடத்தும் நிழல் உலக கும்பலைச் சேர்ந்தவர்,

ராமர் கோவில் பூமி பூஜைக்கு ராஜ்நாத் சிங், பாபா ராம்தேவுக்கு அழைப்பு எல்.கே.அத்வானி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்

ராமர் கோவில் பூமி பூஜைக்கு ராஜ்நாத் சிங், பாபா ராம்தேவுக்கு அழைப்பு எல்.கே.அத்வானி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்   தினத்தந்தி : ராமர் கோவில் பூமி பூஜைக்கு ராஜ்நாத் சிங், பாபா ராம்தேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். அயோத்தி, உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இவர்களை தவிர்த்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கடியார் உள்ளிட்டோர் பா.ஜனதா சார்பில் பங்கேற்கிறார்கள். கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள்.

வடக்கு மக்களும் இராணுவத்தினரும் ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். இராணுவம் வெளியேற வேண்டியதில்லை! கே.பி

இலங்கைநெட் : வடக்கில் முகாமிட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் தமிழ் மக்களின் குடும்ப அங்கமாக வந்துள்ளதாகவும் அவர்களிடையேயான உறுவு மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறவேண்டுனெ அரசியல்வாதிகள் மாத்திரமே விரும்புவதாகவும் மக்கள் அல்லவென்றும் தெரிவித்துள்ளார்.
Daily FT என்ற இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதுடன் அச்செவ்வியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
புலம்பெயர் தமிழர் தாம் வாழும் நாடுகளில் தொடர்ந்தும் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக இலங்கை பாதுகாப்பற்ற நாடு என காண்பிக்க முனைகின்றனர். அதற்காக இங்குள்ள மக்களை வன்செயலுக்கு தூண்டுகின்றனர். பயனற்ற யுத்தமொன்றில் தமது வாழ்வை தொலைத்த பெரும்பாலான முன்னாள் புலிகள் அமைதியான வாழ்வையே விரும்புகின்றனர். ஆனாலும் தொழில்வாய்புகள் இன்றி வறுமையிலிருக்கின்ற சில முன்னாள் புலி உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழரின் வலையில் சிக்குகின்றனர். இதனூடாக இலங்கையில் பிரச்சினை உண்டு என காண்பிக்க நினைக்கும் புலம்பெயர் தமிழரது தேவைநிறைவேறுகின்றது.

ஆ.ராசா : 3ம் வகுப்பு , 5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு வைத்திருந்தால் நானே படிச்சு வழக்கறிஞராகி இருக்கமாட்டேன்...

Sivasankaran Saravanan : அண்ணன் ஆ.ராசா அவர்கள் 2ஜி வழக்கில் வாதாடியதை பார்த்து இந்தியாவின் மிகப்பிரபலமான சீனியர் வழக்கறிஞர்களே மிரண்டுபோனார்கள். சிபிஐ வழக்கறிஞர்கள் ராசாவின் வாதங்களை எதிர்கொள்ளமுடியாமல் வாய்தா மேல் வாய்தா வாங்கினார்கள். ஒரு கட்டத்தில் அவரை எதிர்கொள்ளமுடியாமல் “யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர் இந்த வழக்கில் வெற்றி பெறட்டும்” என நீதிமன்றத்திலேயே பதிவு செய்தார் சிபிஐ வழக்கறிஞர்.
ஒட்டுமொத்த நாடும் தனக்கு எதிராக திரும்புகிற அளவுக்கு சதி செய்யப்பட்ட வழக்கில் , ஆ.ராசா வாதாடிய விதத்தை வைத்துப்பார்க்கும்போது இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞர் அவர் தான் என தோன்றுகிறது.அப்படிப்பட்ட அறிவுச்சுடர் ஆ.ராசா சொல்கிறார் :
3ம் வகுப்பு , 5 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு வைத்திருந்தால் நான் லாம் படிச்சு வழக்கறிஞராக ஆகியிருக்கமாட்டேன். நாடாளுமன்ற வாசல்படியில் கூட கால் வைத்திருக்க முடியாது.

எம் எஸ் செல்லசாமி காலமானார்! மலையக தோட்ட நிர்வாகங்களை உலுக்கிய தொழிற்சங்கவாதி..!

Murugan Sivalingam
: தோட்ட நிர்வாகங்களை உலுக்கிய தொழிற்சங்கவாதி..! தொழிற்சங்கவாதி அமரர் எம்.எஸ்.செல்லசாமி அவர்களின் மறைவு மலையகத் தொழிற்சங்க வரலாற்றில் ஓர் துயர் நிறைந்த பக்கமாகும். எனது “பெருந் தோட்டத் தொழிற்சங்க வரலாற்று நூலில்” அன்னார் ஒரு முக்கிய பக்கத்தில் பதியப்பட்டுள்ளார். இவர் தொழிலாளர் கூட்டங்களில் மக்களைக் கவரும்படி பேசும் ஆற்றல் மிக்கவர். அவரது பேச்சில் வீரம் நிறைந்திருக்கும். தொழிலாளரின் பிரச்சினைகளை தோட்ட நிர்வாகிகளிடம் தொலைபேசியிலேயே உரையாடி… தீர்த்து வைப்பார். அன்று 20 அல்லது 22 எழுத்துள்ள டைப்ரைட்டரிலேயே யூனியன் பிரதிநிதி¸ தொழிலாளர் பிரச்சினைகளை டைப் செய்து தோட்ட நிர்வாகிக்கு அனுப்பி வைப்பார்….! அந்த டைப் ரைட்டார்கள் தொழிற்சங்கவாதிகள் எம்.பி.யாகி.. மந்திரியாகிய காலத்திலும் இருந்து வந்தன!
அன்று தி.மு.க. வில் அண்ணாவுக்கு கலைஞர் கருணாநிதி எவ்வாறு துணையாக நின்று கழகத்தை வளர்த்தாரோ… அதே போன்று அமரர் தொண்டமானுக்கு செல்லசாமி அவர்கள் துணையாக நின்று காங்கிரசை வளர்த்தார். அன்று இ.தொ.கா.வின் அதீத வளர்ச்சிக்கு அமரர் செல்லசாமி… துடிப்பு மிக்க…. துணிவு மிக்க… கட்சி விசுவாச மிக்க தொண்டனாக விளங்கினார். எங்களது கல்லூரி காலத்தில் அட்டன் நகரில் காங்கிரஸ் கூட்டம் நடந்தால்¸ செயலாளர் செல்லசாமியின் மேடைப் பேச்சை கவனித்து வரும்படி எங்களது ஆசிரியர்களான இர.சிவலிங்கம்¸ எஸ்.திருச்செந்தூரன் இருவரும் அனுப்பி வைப்பார்கள்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

ஊழல் நீதிபதிகளுக்கு பிரசாந்த் பூசண் ஒரு சிம்ம சொப்பனமாகத் தான் ...

சாவித்திரி கண்ணன் ; உச்ச நீதிமன்றத்தின் ஊழல் நீதிபதிகளுக்கு பிரசாந்த் பூசண் எப்போதுமே ஒரு சிம்ம சொப்பனமாகத் தான் இருந்து வந்துள்ளார்! தந்தை சாந்தி பூசன் வழியில் கடந்த 30 ஆண்டுகளாக நீதித் துறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையை உத்திரவாதப்படுத்த அயராது பாடுபட்டு வருபவர் பிரசாந்த் பூசண்!
தற்போது இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டுள்ளது! மூன்று நீதிபதிகள் அமர்வு இதை விசாரிக்கிறது! இதற்கு இவருடைய இரண்டு டிவிட்டர் பதிவுகள் காரணம்! # நான் எம்ர்ஜென்சி காலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற செயல்பாடுகளைப் பார்க்கிறேன்!
தற்போது நமது நீதித் துறை அரசிடம் சரணாகதி அடைந்ததைப் போல எந்தக் காலத்திலுமே நடந்ததில்லை. பெரும்பாலான நீதிபதிகள் அரசியல் சட்டத்தையும்,மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்போம் என்று கூறி உறுதிமொழி எடுத்ததை முற்றிலும் மறந்துவிட்டனர். இந்தியாவின் சமீபத்திய ஆறாண்டுகளை வருங்கால வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் யாரேனும் ஆய்வு செய்யும் போது இந்த காலகட்டத்தில் ஜனநாயகம் சிதைக்கப்பட்டது போல எமர்ஜென்சி காலத்தில் கூட நடக்கவில்லை எனச் சொல்வார்கள்!

பெண் என்ஜினீயர் தற்கொலை... சீதனம் கேட்டு சித்திரவதை .. சென்னை

ddddநக்கீரன் : சென்னை சிந்தாதிரிப்பேட்டை பள்ளித் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா. என்ஜினீயங் படிப்பு முடித்த இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமாdddர் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. சாஃப்ட்வேர் என்ஜினீயரான நிரேஷ்குமார் ஐதராபாத்தில் பணியாற்றி வந்ததால், இருவரும் அங்கு வசித்து வந்தனர்.  திருமணமான சில வாரங்களிலேயே கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பிரியங்கா தனது கணவரைப் பிரிந்து, பெற்றோருடன் சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வந்தார். திருமணமான 3 மாதங்களிலேயே கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வீட்டுக்கு வந்தததால், மன அழுத்தத்தில் காணப்பட்ட அவர் கடந்த 29-ஆம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரியங்கா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர் அசோகன் ஆகியோர் மேற்பார்வையில் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் ஆகியோருக்கு கொரோனா தொற்று

BBC :  இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.`
கொரோனா தொடக்க அறிகுறிகள் தென்பட்டதால் , பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. எனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் மருத்துவர்கள் அறிவுரைக்கேற்ப மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்`` என அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.
இந்தியத்தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அமித் ஷா ஈடுபட்டார்.கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக டெல்லி அரசுடன் இணைந்து தொடர் அலோசனை கூட்டங்கள் நடத்தியது, மருத்துவமனைகளில் ஆய்வு செய்ததது என களத்தில் இறங்கி அமித் ஷா பணிகளை மேற்கொண்டார்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால் தமிழக ஆளுநர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக கடந்த ஜூலை 29-ம் தேதி ஆளுநர் மாளிகை தெரிவித்திருந்தது.தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உள்ளதாக அவருக்கு பரிசோதனை செய்த காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நாணயத்தை விழுங்கிய 3 வயது குழந்தை- மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் உயிரிழப்பு ... கேரளா

நாணயத்தை விழுங்கிய 3 வயது குழந்தை- மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் உயிரிழப்பு   மாலைமலர் :  கேரளாவில் நாணயத்தை விழுங்கிய 3 வயது குழந்தையை, மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
உயிரிழந்த 3வயது குழந்தை
கேரள மாநிலம் ஆலுவாவை சேர்ந்த 3 வயது குழந்தை நாணயத்தை விழுங்கியதால் திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் பெற்றோர் உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு எக்ஸ்-ரே எடுத்த மருத்துவர்கள் நாணயம் சிக்கி இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். இருப்பினும் அவர்கள், கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியில் இருந்து வந்ததால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

மாரிதாஸ் வீட்டில் போலீசார் 5 மணிநேரம் சோதனை.. மதுரையில் ..

tamil.oneindia.com - mathivanan-maran ": மதுரை: யூ டியூப் விமர்சகர் மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபர் கிரைம் போலீசார் நேற்று 5 மணிநேரம் சோதனை நடத்தினர்.நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனல் நிறுவனம் தொடர்பாக யூ டியூப் சேனலில் விமர்சனங்களை முன்வைத்திருந்தார் மாரிதாஸ். இது தொடர்பாக பொய்யான  தகவல்களை மாரிதாஸ் வெளியிட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்திலும் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரையில் உள்ள மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபர் கிரைம் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்மதுரை சூர்யா நகரில் உள்ள மாரிதாஸ் வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 5 மணிநேரம் இந்த சோதனை நடத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ரஷ்யாவில் அக்டோபரில் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்

 தினத்தந்தி :   ரஷியாவில் கொரோனா தடுப்பூசி சோதனை முடிந்தது. அக்டோபரில் பொதுமக்களுக்கு போட திட்டமிடுள்ளதாக அந்நாட்டின் சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார். மாஸ்கோ, உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. இந்த நிலையில், ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளன. இதை அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ அறிவித்தார்.
இதையொட்டி அவர் கூறுகையில், கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார்.

வைரமுத்து : தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம்

nakkheeran.in நக்கீரன் செய்திப்பிரிவு : தேசியக் கொடியை மதிப்போம், திராவிடக் கொடியும் பிடிப்போம் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 34 ஆண்டுகளாக கல்விக்கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த சூழலில், கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் பெயரில், இந்தியக் கல்விக்கொள்கையை மாற்றியமைத்துள்ளது, மத்திய அரசு. அதன்படி புதிய கல்விக் கொள்கை அறிவிப்புகளை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது.
தமிழகத்தில் பிரதான கட்சிகள் இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றன, சிலர் ஆதரிக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அண்ணா - கலைஞர் இறுதி செய்ததும்,  எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான்.
முதலமைச்சர் பழனிசாமி அரசும் அதைத் தாங்கி பிடிக்க தயங்க தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக என்கின்ற எம் எல் எம் ( MLM ) கம்பனி! ... ஆதாரங்களோடு ஒரு அலசல்

செல்லபுரம் வள்ளியம்மை   : திமுகவில் இருந்துதான் அ தி மு க என்ற கட்சி உருவானாலும் 
இரு கட்சிகளும் உண்மையில் நேரெதிர் திசையில் உள்ளவை.. 
அதிமுக என்ற அமைப்பு உண்மையில் ஒரு அரசியல் கட்சிக்கு உரிய எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்கவில்லை .
ஆனால்  அதில்  எம்ஜியார் உட்பட பல பிரமுகர்கள் .இருந்தமையால் அதுவும்  இன்னொரு திமுக போன்ற ஒரு திராவிட கட்சியே என்ற தோற்றத்தை கொடுத்தது.
அதிமுகவின் தோற்றம் என்பது எம்ஜியார் என்ற நடிகரின் ரசிகர்களின் சங்கம் என்ற அளவிலேயே பெரிதும் இருந்தது..
எப்போது எம்ஜியார் தனது  ரசிகர் மன்றங்களை ஒரு வலுவான நிறுவனமாக கட்டமைக்க தொடங்கினாரோ அன்றே எம்ஜியாரின் அமைப்பு  தொடங்க பட்டுவிட்டது .
இந்த ரசிகர் அமைப்புக்களின் தலைமை பொறுப்புக்களில் இருந்தவர்கள் எல்லாம்   ஒரு அசல் கம்பனி இயக்குனர்கள் போல செயல்பட்டனர்.
அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அல்ல சி இ ஒ போன்று    ஆர் எம் வீரப்பனோ  அல்லது முசிரிபுத்தனோ இருந்தார்கள்.
பலரும் எம்ஜியாரின் ரசிகர்கள்தான். அவர்களில் பலருக்கும்  செலவு மட்டும்தான் இருக்கும் . வேறு ஒரு இலாபமும் இருக்காது .
ஆனால்   ரசிகர் மன்றங்களின் பொறுப்புக்களின் இருப்பவர்களுக்கு அது  பல சமயங்களிலும் அது ஒரு வருவாய் தரும் தொழிலாக இருந்திருக்கிறது.