மாலைமலர் :
வருகிற ஏப்ரல் மாதத்தில் புதிய கட்சியை
தொடங்கி பொதுமக்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த தயார் ஆகிறார். 8 ஊர்களில்
மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியல் வருகை யை அறிவித்தார்.தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன் பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன.
ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் தீவிரப்படுத்தினார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 ஆண்டுகள் முழுமையாக கடந்த நிலையில் இன்னும் கட்சி அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் இந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளில் பரபரப்புகளை ஏற்படுத்தியே வருகிறார்.


















