திங்கள், 30 செப்டம்பர், 2019

மாபா பாண்டியராஜன்: கீழடி ஆராய்ச்சி தமிழர் நாகரிகம் அல்ல பாரத நாகரீகம்.. .இவர் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராம்?

Muralidharan Pb : தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரே, கீழடி ஆராய்ச்சி தமிழர்
நாகரிகம் அல்ல பாரத நாகரிகம் என்று கூறியுள்ளாரே?
எவ்வளவு சென்ஸிடிவான ஒரு கருத்து, இதைச் சொல்ல எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்? அதுவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரே கூறுவது பொழுது போக்கோ வேடிக்கையோ அல்ல.
அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருத்தர் பேசுவது எல்லாமே இயல்பானது என்று நினைத்தால் நீங்களும் ஏமாளியே.
எல்லோரையும் பேச வைத்து எவ்வளவு பெயரைக் கெடுக்க முடியுமோ அவ்வளவு செய்வது தான் பாஜகவின் உத்தியாக நான் பார்க்கிறேன்.
அந்த அளவிற்கு இவர்களை ஆட விட்டுவிட்டு பின்பு கிடுக்கி பிடி போட்டுள்ளதாக கருதுகிறேன்.
ஏனெனில், ஒரே நாளில் சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் என்ற ஊழல்வாதியை நல்லவராக காட்டிய பாஜகவின் கைப்பொம்மையாக செயல்படும் தேர்தல் ஆணையம் அவரது 6 ஆண்டு தண்டனையை ஒரே ஆண்டாக அவரது ஊழல் தண்டனையை குறைத்துவிட்டு அவரை நல்லவராக ஆக்கியது. (ஊடகங்களில் இது பற்றி பேசினார்களா எனத் தெரியவில்லை)
எனவே தனக்கு ஒத்து வந்தால் அதிமுகவினர் நல்லவர்கள் இல்லையேல் சசிகலாவின் நிலைமை தான் இப்போது ஊழலுக்கு துணை போன அதிமுகவினர் அனைவருக்கும்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாகிஸ்தான் அழைப்பு ...


BBC :பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் உள்ள குருத்வாராவில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் சென்று வழிபட, இருநாடுகளின் எல்லையில் அமைக்கப்படும் புதிய சாலை மற்றும் நுழைவிட திறப்புவிழா நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இது குறித்து கூறுகையில், கர்தார்பூர் நுழைவிட திறப்புவிழாவுக்கு முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர் சீக்கிய மதத்தின் பிரதிநிதியாக உள்ளார். அவருக்கும் நாங்கள் முறையாக அழைப்பிதழ் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார்.
 இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின்போது, சீக்கியர்களில் பெரும்பான்மையினர் இந்தியாவில் உள்ள பஞ்சாபில் வசித்தனர்.
கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா (கோப்புப்படம்) கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் உள்ளது. சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தனது கடைசி 18 ஆண்டுகளை இங்குதான் கழித்தார்.

பேருந்தில் நடத்துனரை தாக்கிய போலீஸார்.. டிக்கெட் வாங்க மறுத்து ... வீடியோ !


tamil.indianexpress.com ;நெல்லை மாவட்டத்தில் இருந்து கைதிகளை நாகர்கோவிலுக்கு அரசுப் பேருந்தில் அழைத்துக் கொண்டு சென்றனர் ஆயுதப் படை காவல்துறையினர். அப்போது அவர்களிடம் பயண வாரண்டினை கேட்டிருக்கிறார் அப்பேருந்தின் நடத்துனர். காவல்துறையினர் அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்காக வழங்கப்படும் வாரண்ட் அதுவாகும். அதை கேட்டுவிட்டு, மற்ற பயணிகளிடம் டிக்கெட் கலெக்ட் செய்ய சென்றார் நடத்துனர் ரமேஷ்.  பின்பு மீண்டும் வந்து காவலர்களிடம் வாரண்டை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், நடத்துனரை தாக்கினர்.
மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளார். அந்த நிகழ்வினை செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர் அதை சமூக வலைதளங்களில் பதிவேற்ற தற்போது வைரலாக பரவி வருகிறது இந்த வீடியோ.  நடத்துனரை தாக்கிய ஆயுதப்படை காவலரை சட்ட ஒழுங்கு காவல்துறை கைது செய்துள்ளது.

நீதிபதி தஹில் ரமணி மீது பாயும் சிபிஐ ! அடுக்குமாடி குடியிருப்புக்கள் வாங்கியதில்...

சென்னை ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி மீது புகார்- சிபிஐ விசாரணைக்கு உத்தரவுமாலைமலர் : சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மீது அளிக்கப்பட்டுள்ள புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக தஹில் ரமானி இருந்து வந்தார். அவரை கடந்த 2-ந்தேதி நீதிபதிகளின் நியமன அமைப்பான கொலிஜியம் மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது.
சென்னை ஐகோர்ட்டை ஒப்பிடும் போது மேகாலயா கோர்ட்டு சிறியது. அதனால் தனக்கு ஏற்பட்ட அவமதிப்பாக கருதி கோர்ட்டுக்கு செல்ல மறுத்து விட்டார். இதனால் செப்டம்பர் 6-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதன்பிறகு தஹில் ரமானிக்கு ஐகோர்ட்டு வக்கீல்கள் சார்பில் பிரிவுசார விழா நடத்தப்பட்டது. அப்போது தஹில் ரமானி குடும்பத்துடன் சென்னையில் வசிக்க போவதாக கூறினார்.

நாங்குநேரியில் போட்டியிட பாஜ முடிவா? அதிமுக கூட்டணியில் கடும் மோதல் ... ராதாகிருஷனர்கள் பரபரப்பு பேட்டி

தினகரன் :  நாங்குநேரி: நாங்குநேரியில் பாஜவின் முக்கிய நிர்வாகிகள் வேட்புமனு விண்ணப்பம் வாங்கிச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிமுக கூட்டணியில் கடும் மோதல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து அதிமுக, பாஜ இரு கட்சிகளுமே ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதிலிருந்து இரு கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. நாங்குநேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென பாஜ நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.

கச்சா எண்ணெய் விலை எக்கசக்கமாக உயரும் .. சவூதி எச்சரிக்கை

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும்; சவுதி அரேபியா எச்சரிக்கை தினத்தந்தி :  ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும் என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரித்துள்ளார். துபாய், சவுதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது கடந்த 14ஆம் தேதி அன்று வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஏமனில் இருந்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.

Gobackmodi நரேந்திர மோதி கிளம்பிய பிறகும் உலகளவில் டிரெண்டாகும் ஹாஷ்டேக் BBC

    BBC : சென்னைக்கு இன்று (திங்கள்கிழமை) வருகைதந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக இணையத்தில் பதிவு செய்யப்பட்ட #gobackmodi என்ற
ஹாஷ்டேக் சுமார் ஒருலட்சம் ட்வீட்களை கடந்து உலகளவில் டிரெண்டிங் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது.
சென்னை ஐ ஐ டி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதி இன்று காலை 9.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அதற்கு முன்னதாக, நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில், ஐ ஐ டி
மெட்ராஸ் பட்டமளிப்பு விழாவில் தான் கலந்துகொள்ள இருப்பதாகவும், தான் வழங்கவிருக்கும் உரைக்கு யோசனைகள் வழங்குமாறும் நரேந்திர மோதி பதிவிட்டிருந்தார்.
இன்று (திங்கள்கிழமை) காலை சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்த உடனே அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் முன்னிலையில் உற்சாகமாக உரையாற்றினார் நரேந்திர மோதி.
>'வணக்கம்' என்று பேசத் தொடங்கிய மோதி, சென்னை மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தமிழில் தெரிவித்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்த பிறகு, முதன்முதலாக சென்னைக்கு வருகைத் தரும் நரேந்திர மோதி, ''இங்கே நீங்கள் பெருமளவில் வந்திருப்பதால் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்றார்.

காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறானது -அமித் ஷா!

காஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறானது -அமித் ஷா!zeenews.india.com/ : ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐநா-வுக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கொண்டு சென்றது இமாலய தவறு என உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா விமர்சித்துள்ளார்! ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐநா-வுக்கு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கொண்டு சென்றது இமாலய தவறு என உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா விமர்சித்துள்ளார்!
புது டெல்லியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அமித்ஷா இதுகுறித்து தெரிவிக்கையில்., பாகிஸ்தானுடனான யுத்தத்தின் போது நேரு ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்ததால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது, 1948-ஆம் ஆண்டு காஷ்மீர் விவகாரத்தை நேரு ஐநாவுக்கு கொண்டு சென்றது இமாலயத் தவறு. அது இமயமலையைவிட மிகப் பெரும் தவறு என தெரிவித்துள்ளார்.

காஸ்மீரை இந்தியா ஆக்கிரமித்து உள்ளது .. ஐ நாவில் மலேசியா பிரதமர் Mahathir hits out at India for invading, occupying Kashmir

NEW YORK: Malaysian Prime Minister Mahathir Mohamad on Friday said despite UN resolutions on held Jammu and Kahsmir, the territory has been invaded and occupied.
வீரகேசரி : ஐக்கியநாடுகள் சபையில் உரையாற்றியவேளை மலேசிய பிரதமர் மஹாதீர் முகமட் இந்தியா காஸ்மீரை ஆக்கிரமித்தது என பொருள்பட கருத்து வெளியிட்டமைக்கு சமூக ஊடகங்களில் இந்தியர்கள்  கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்
ஐநாவில் உரையாற்றிய  மாஹாதீர் முகமட் ஐநா தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள போதிலும் காஸ்மீர் படையெடுப்பிற்கு உள்ளாகியுள்ளது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைக்கு சில காரணங்கள் நோக்கங்கள் இருக்கலாம் எவ்வாறாயினும் இது பிழையான செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபடுவதை தடுப்பதற்கான அமெரிக்காவின் முயற்சியையும் அவர் சாடியுள்ளார்.

சர்வதேச தடைகள் குறித்தும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

நாங்குநேரி: அதிமுக ஜாதி கணக்குகள் .. வருத்தத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி ..

மின்னம்பலம் : நாங்குநேரி: அதிமுகவின் சாதிச் சடுகுடு!நாங்குநேரி. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக அணியில் லேசாகத் தொடங்கிய சலசலப்பு இப்போது முற்றி முதிரத் தொடங்கியிருக்கிறது.
எங்களை சந்தித்து ஆதரவு கேட்டால் முடிவு செய்வோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறிய பிறகே விஜயகாந்தை அமைச்சர்கள் சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். அதேபோல பாஜகவோ, அதிமுகவுக்கான ஆதரவு பற்றி முடிவு செய்யவில்லை என்று நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக அறிவித்துள்ளது.
இந்த வரிசையில் அதிமுக கூட்டணியில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இதுவரை இடைத்தேர்தல் விவகாரத்தில் அமைதியாகவே உள்ளார். அவரையும் அதிமுக தலைவர்கள் தேடிச் சென்று சந்திக்கவில்லை.
இதுபற்றி நாங்குநேரி தொகுதியில் விசாரித்தபோது,

நடுநிசி சுடுகாட்டில் நிர்வாண பூஜை.. 3 மணிக்கு காதலிக்காக கணவன் கொலை... சிக்கிய ராமேஸ்வரம் சாமியார்..!!!

incident in sivakangai incident in sivakangai incident in sivakangai nakkheeran.in - nagendran: பில்லி சூனியம், செய்வினை மாந்தீரீகத்தால் ஏற்பட்ட தகாத தொடர்பு பழக்கத்தால் நடுநிசியில் சுடுகாட்டில் நிர்வாண பூஜையை முடித்துவிட்டு, அதற்கடுத்த இரண்டு மணி நேரத்தில் காதலி, கூட்டாளிகள் துணையுடன் கணவனை கொலை செய்த சாமியாரை ஆறே மணி நேரத்தில் கைது செய்து அசத்தியுள்ளது காரைக்குடி துணைச்சரக காவல்துறை.;
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பாப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவிற்காக வரும் செவ்வாய்க்கிழமையன்று மாநில ஆளுநர் வருகை தரும் நிலையில், அவருக்காக காரைக்குடியில் பாதுகாப்பை பலப்படுத்தி கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த காரைக்குடி துணைச்சரகப் போலீசாருக்கு அவ்வளவு எளிதாக பொழுது புலரவில்லை ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே அலறிய தொலைபேசியால் காரைக்குடி தந்தை பெரியார் 4 வது வீதியிலுள்ள ஒரு வீட்டின் முன் ஆஜரான காரைக்குடி டி.எஸ்.பி.அருண், வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தினேஷ் உள்ளிட்டபோலீசாரை மொட்டை மாடியில் குப்புற கிடந்த பிணம் தான் வரவேற்றியிருக்கிறது. 

இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7 லட்சம் கோடி முதலீடு

மாலைமலர் : இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7 லட்சம் கோடி முதலீடு செய்யும் என்று இந்தியாவுக்கான அந்த நாட்டின் தூதர் தெரிவித்தார். புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடு சவுதி அரேபியா இந்த நாட்டின் இந்திய தூதர் டாக்டர் சவுத் பின் முகமது அல் சதி, டெல்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியா, சவுதி அரேபியாவின் கவர்ச்சிகரமான முதலீட்டு மையம் ஆகும். எரிசக்தி, எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், உள்கட்டமைப்பு, விவசாயம், தாதுக்கள், சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் 100 பில்லியன் டாலரை (சுமார் ரூ.7 லட்சம் கோடி) இந்தியாவில் சவுதி அரேபியா முதலீடு செய்ய பார்க்கிறது.
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் அரம்கோ, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர உத்தேசித்து உள்ளது. இது, எரிசக்தி துறையில் இரு நாடுகளிடையே வளரும் உறவின் தன்மையை பிரதிபலிக்கிறது.
இந்தியாவில் எண்ணெய் வழங்கல், சந்தைப்படுத்துதல், பெட்ரோகெமிக்கல், உய்வுப்பொருட்கள் (லூப்ரிகேண்ட்ஸ்) ஆகியவற்றில் முதலீடு செய்வது அரம்கோவின் உலகளாவிய திட்டத்தின் ஒரு பகுதி ஆகும்.

காஷ்மீரில் திடீர் வட்டார தேர்தல்... இம்ரான் கான் . Effect in UN?


காஷ்மீரில் திடீர் தேர்தல்!மின்னம்பலம் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தடைச் சட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வட்டார வளர்ச்சி கவுன்சில்களுக்கான தேர்தல் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் அலுவலர் சைலேந்திர குமார் நேற்று (செப்டம்பர் 29) இதை அறிவித்துள்ளார்.
பஞ்சாயத்துகளும் துணை பஞ்சாயத்துகளும் இணைந்து வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அதன்பிறகு வட்டார வளர்ச்சி கவுன்சில் தலைவர்கள் இணைந்து மாவட்ட வளர்ச்சி ஆணையத்தை அமைப்பார்கள். இவர்கள் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்துவார்கள். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி இந்தத் தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஆர் எஸ் எஸ் ...வந்தேறிகள் என்பது மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற பயத்தில் தொடங்கப்பட்டதே RSS

Vinayaga Murugan : தொல்லியல் துறையில் பணிபுரிபவர்கள். படத்தின் முதல்காட்சியே அவர்கள் இருவரும் ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்வதாக தொடங்கும்.
பிறகு ஒரு வசனம் வரும். ஷாருக்கான் சொல்வார். ஐயாயிரம் வருஷம் முன்னாடி வாழ்ந்த சிவிலைசேஷன். பசங்க பொம்மை வச்சு விளையாடணும்ன்னு நினைச்ச சிவிலைசேஷன். நம்மளை மாதிரி பெரியவங்க சாமியை வச்சு விளையாடணும்ன்னு நினைக்காத சிவிலைசேஷன். அதற்கு கமல் சொல்வார். அதெல்லாம் சரி. ஆனா நாம அந்த சிவிலைசேஷன்ல இல்லையே. இந்தக்காட்சிக்கு பிறகு படம் வேறு வேறு சம்பவங்களுக்கு நகர்ந்துவிடும். 
இந்த படத்துல கமல் ஏன் ஆர்க்கியாலஜி துறையில வேலை செய்பவரா இருக்கணும்? ஒரு போஸ்ட்மேனாகவோ, போலீசோ, இராணுவத்தை சேர்ந்தவராகவோ இருந்திருக்கலாம்.
இங்குதான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வரலாறு பற்றி பார்க்கவேண்டும். ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்திய சுதந்திர போராட்டத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இல்லை.
ஏனெனில் ஏற்கனவே காங்கிரசும், நேதாஜியும் இருந்தார்கள். ஆர்எஸ்எஸ் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்துவர்களுக்கு எதிராகவோ இந்துக்களை பாதுக்காக தொடங்கப்பட்ட இயக்கமும் இல்லை.
அப்படி என்றால் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆரம்பிக்க என்ன தேவை? 1925 -ல் ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1924-ல்தான் ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழ்வுகள் கண்டுப்பிடிக்கப்பட்டு உலகமெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது.
உண்மையில் இந்த அகழ்வாராய்ச்சிகள்தான் அவர்களை தொந்தரவு செய்திருக்கவேண்டும்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

திராவிட மொழிக்குடும்பம் இந்தியா முழுவதும் ... ஆரிய ஆதிக்கவாதிகளின் கருத்துக்கள் தவிடு பொடி!


திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவை தாண்டி பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வரைக்கும் பரவி இருக்கிறார்கள்.
அவர்களின் மூலாதாரமாக இருப்பது தமிழ் மொழியும் தமிழ்நாடும்தான். ஆரியர்களின் / பார்ப்பன பனியாக்களின் மிகபெரும் பயம் இதுதான்!
தமிழ் மொழிக்கும் இதர திராவிட மொழிக் குடும்பத்திற்கும் இடையில் உள்ள தாய் சேய் உறவு என்பது தங்களின் ஆரிய ஆத்திகத்துக்கு அடிக்கப்படும் ஆப்பு என்பது அவர்களுக்கு புரிகிறது.
தமிழ் மொழியை இதர திராவிட மொழிக்குடும்ப தொடர்பில் இருந்து வெட்டிவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் தற்போதைய நிகழ்ச்சி நிரல்.
அதை நோக்கித்தான் ஆரியர்களின் முழு வேலைத்திட்டமும் தற்போது இருக்கிறது.
தமிழகத்தின் ஜாதி அமைப்புக்கள் தமிழ் தேசிய போர்வையில் இருக்கும் கூலிப்பட்டாளங்கள், விலை போன ஊடகங்கள் . கோயில்கள் இதர மதவழிபாட்டு நிறுவனகள் எல்லாமே தற்போது ஆர் எஸ் எஸ் இனி சந்தா பணத்தை கை நீட்டி வாங்குகிறார்கள் . தமிழுக்காக ஓவர் டைம் கூவும் கோஷ்டியில் இனி பாஜகவும் முழு மூச்சுடன் இயங்கும் .
 ஏனெனில் தமிழ் மொழியானது இதர திராவிட மொழிக்குடும்பதுடன் ஓரணியில் சேர்ந்து விடக்கூடாது என்பதுதான் அவர்களது கவலை.

திராவிட மொழிக் குடும்பமானது கருத்தியல் ரீதியாக ஒரு மானுட்டவியல் வளர்ச்சி தரத்தில் ஒரு உயர்ந்த இடத்தில இருக்கிறது. மாறாக ஆரிய மொழிக்குடும்பம் என்று கூறப்படும் பார்ப்பனீய கருத்தியலானது மக்களை ஜாதி ரீதியாக பிரித்து ஒரு ஆண்டான் அடிமை கலாசாரம் சார்ந்ததாக இருந்திருக்கிறது.

சட்டப்பிரிவு 370 நீக்கம்: அரசியல் சாசன அமர்வு அமைப்பு!

சட்டப்பிரிவு 370 நீக்கம்: அரசியல் சாசன அமர்வு அமைப்பு!
minnambalam.com : நீதிபதி என்.வி.ரமணா
தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 28ஆம் தேதி தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இதனால் தற்போது வரை காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுத் துறை வட்டாரங்கள் இயல்பு நிலை திரும்பி வருவதாகத் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகவும்,
வீட்டுக் காவலில் உள்ள தலைவர்களை விடுவிக்கவும், பத்திரிகையாளர்களைக் காஷ்மீரில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
தேசிய மாநாட்டு எம்.பி.க்கள் பாரமுல்லாவைச் சேர்ந்த முகமது அக்பர் லோன், அனந்த்நாக்கைச் சேர்ந்த ஹஸ்னைன், காஷ்மீர் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

350 கோடி ஊழல்.. காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்கியதில்...

dmk stalin report dmk stalin report நக்கீரன்:    'காவல் துறைக்கு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ஊழல்''-திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு தமிழகக் காவல்துறைக்கு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், காவல்துறை சம்பந்தப்பட்ட இந்த ஊழலையாவது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை முறைப்படி நியாயமாக விசாரித்து, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,
“தமிழ்நாடு காவல்துறைக்கு கேமிரா, சி.சி.டி.வி., டிஜிட்டெல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள்” கொள்முதல் செய்யும் 350 கோடி ரூபாய் டெண்டரில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது, கடும் கண்டனத்திற்குரியது. ஏற்கனவே 88 கோடி ரூபாய்  வாக்கி டாக்கி ஊழல் குறித்து உள்துறைச் செயலாளரே 11 விதிமுறை மீறல்களை சுட்டிக்காட்டி கடிதம் எழுதினார். அப்போதே, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில்,  “உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் வாக்கி டாக்கி ஊழலை விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் ஊழலில் புரையோடிப் போயிருக்கும் அ.தி.மு.க. அரசு, அந்த வாக்கி டாக்கி விவகாரத்தை மூடி மறைத்ததன் தொடர்ச்சியாக, தற்போது 350 கோடி ரூபாய் ஊழல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

BBC : 1000 சௌதி படைகளை சிறைப்பிடித்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் .பலர் கொல்லப்பட்டனர் .. வீடியோ


செளதி அரேபிய படைகளை பிடித்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்: ஏமன் போர் - விரிவான தகவல்கள் பெரும் எண்ணிக்கையிலான செளதி படைகளைப் பிடித்து வைத்துள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். செளதி ஏமன் எல்லையில் நடந்த பெரும் தாக்குதலை அடுத்து ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து இந்த தகவல் வந்துள்ளது.
செளதி அரேபியா படைகள் சரண் நஜ்ரான் எனும் செளதி நகரத்தின் அருகே செளதி அரேபிய படைகள் சரண் அடைந்ததாக பிபிசியிடம் பேசிய ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான செளதி படைகளை தாங்கள் பிடித்ததாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் கூறினார்.
ஆனால், செளதி அரசாங்கம் இதனை உறுதிப்படுத்தவில்லை.
இரு தரப்பிடையே சண்டை தொடங்கியதிலிருந்து, இப்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைதான் பெரியது என ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் கூறுகிறார்.
பெரிய அளவில் உயிர்ச்சேதத்தையும், ஆயுதங்களையும் செளதி படைகள் இழந்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.
செப்டம்பர் 14ஆம் தேதி செளதியின் அரம்கோ எண்ணெய் வயல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் கோரினர்.
இந்த தாக்குதலானது உலக எண்ணெய் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கீழடி .தமிழர் திராவிடர் ..... இந்தியா முழுமையும் பரவியிருந்த திராவிட நாகரீகத்தின் ... முனைவர் சுபாஷினி ..வீடியோ


முனைவர் சுபாஷினி : கீழடி என்பது தமிழர் நாகரீகமா திராவிடர் நாகரீகமா என்ற சர்ச்சை ஓடிக்கொண்டு இருக்கிறது , உங்களை பொறுத்தவரை இது தமிழர் நாகரீகமா   திராவிடர் நாகரீகமா?
நம்முடைய தமிழ் சிந்தனையில் இப்போது என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் எது முக்கியம் என்ற கேள்வி அவர்களுக்கு இல்லை!
அவர்களுக்கு எதாவது ஒரு சென்சேஷன் ஆக்கி கொண்டு உடனே அதைப்பற்றி உணர்ச்சி பூர்வமாக பேசிக்கொண்டு அதில் மகிழ்ச்சி அடையலாம் என்ற வகையில் அவர்கள் தமிழுக்கு தொண்ட்டாற்றி விடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்பொழுது வைகை நதிக்கரை நாகரீகம் என்று சொல்லும்பொழுது .
அதாவது இந்த 293 இடங்களை அவர்கள் அடையாளம் செய்திருக்கிறார்கள்.
இந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் யாரென்று சொல்லும்பொழுது .தமிழர்கள்தான் என்பதால் நாம் நிச்சயம் இதை தமிழ் வைகைக்கரை நாகரீகம் என்பதில் நிச்சயம் எந்த ஐயப்பாடும் இன்றி ஏற்றுகொள்ளலாம் .
ஆனால் இந்தியா முழுமைக்குமான குறியீட்டை அல்லது ஒரு கருது கோளை வைக்கும் பொழுது எந்த வகையில்  நாம் ஆரியத்தை எதிர்க்கவேண்டும் .. அல்லது ஆரியத்துக்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்க வேண்டும் என்று யோசிக்கும் பொழுது அதற்கு சான்றாக நமக்கு கிடைப்பது .. அல்லது அதற்கு துனையாக நமக்கு கிடைப்பது திராவிடம் என்ற சொல்தான்!
ஏனென்றால் தமிழ் மட்டுமல்லாது திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்த பல மொழிகள் இன்று தமிழ் சொற்களை அல்லது தமிழ் அடிசொற்களை கொண்டவையாக இயங்குகின்றன.

பிரித்தானியா தமிழர் மலேசியாவில் சுட்டு கொலை ..

Family demands answers after British resident shot dead by police in Malaysia During holiday, Janarthanan Vijayaratnam was killed with two other men and his wife is now missing
காரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான மனைவி- காவல்துறையினர் பொய்சொல்வதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு screenshot 2019 09 23 17 27 47 057111994691217020019வீரகேசரி : காரை துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் செய்த மலேசிய காவல்துறையினர்- கொல்லப்பட்ட இலங்கை தமிழர்- மாயமான மனைவி-
காவல்துறையினர் பொய்சொல்வதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு இலங்கையை சேர்ந்த பிரித்தானிய பிரஜை மலேசியாவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரித்தானிய பிரஜையான ஜனார்த்தனம்  விஜயரட்ணம் 40  என்பவர் 14 ம் திகதி மலேசியாவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவர் பயணம் செய்துகொண்டிருந்த காரை மலேசிய காவல்துறையினர் துரத்திச்சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவேளை ஜனார்த்தனனும் அவரது உறவினரும் மலேசிய பிரஜையொருவரும் கொல்லப்பட்டனர்.
ஜனார்த்தனன் தனது மனைவி குழந்தைகளுடன் மலேசியாவிற்கு சுற்றுலா சென்றிருந்தவேளையே இந்த சம்பவம் இடம்பெற்றது.
இதேவேளை அவரது மனைவி காணாமல்போயுள்ளார்.

தி.மு.க., - கம்யூ., கூட்டணி, எந்த நேரத்திலும் முறியலாம் என தினமலர் நாளிதழ் எதிர் பார்க்கிறது.

 தினமலர் :  தேர்தல் செலவுக்கு பணம் வாங்கியதை, தி.மு.க., காட்டிக் கொடுத்ததால், கம்யூனிஸ்ட்கட்சிகள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்த விவகாரத்தால், தி.மு.க., - கம்யூ., கூட்டணி, எந்த நேரத்திலும் முறியலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆலோசனையில்,கம்யூனிஸ்ட் கட்சிகளின், தேசிய தலைமை ஈடுபட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.லோக்சபா தேர்தல் முடிந்த பின், அனைத்து கட்சிகளும், தேர்தல் செலவு கணக்கை, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தன. அந்த வகையில், தி.மு.க., சார்பிலும், தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது.அதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது, தி.மு.க.,விடம், 148.50 கோடி ரூபாய் இருப்பு இருந்தது. நன்கொடையாக, 50.30 லட்சம் ரூபாய் பெறப்பட்டது. அதிலிருந்து, 79.26 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு, தலா, 15 கோடி ரூபாய்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 10 கோடி ரூபாய், நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது என, தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது.தேர்தலில், அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதும், கோடிக்கணக்கில் செலவிடுவதும் வழக்கமானது. அதேபோல், பெரிய கட்சிகள், தங்களுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு, தேர்தல் செலவுக்காக, பெரும் தொகையை வழங்கும்.

லைகா Vs கருணாமூர்த்தி: நடப்பது என்ன?

லைகா Vs கருணாமூர்த்தி: நடப்பது என்ன?  மின்னம்பலம்: ஐங்கரன் கருணாமூர்த்தி நிதி மோசடி செய்ததால் லைகா நிறுவனத்துக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்பட்டது என அந்த நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கருணாமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
செப்டம்பர் 26ஆம் தேதி லைகா நிறுவனத்தில் ஆலோசகராகப் பணிபுரிந்த ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குநர் கருணாமூர்த்தி மற்றும் அவரது உதவியாளர் பானு மீது லைகா நிறுவனம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தது. லைகா நிறுவனர் நீலகண்ட் நாராயண்பூர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
லைகாவின் புகார்
‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ கருணாமூர்த்தியும் அவரது உதவியாளர் பானுவும் இணைந்து லைகா நிறுவனத்துக்கு ரூ.120 கோடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளனர். லைகா நிறுவனத்தின் ஆலோசகராக ஐங்கரன் கருணாமூர்த்தி கடந்த 2014ஆம் ஆண்டில் இணைந்தார். அவர் ஓர் இலங்கைத் தமிழர், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர். ஏற்கெனவே சினிமா தயாரிப்பில் அனுபவம் உள்ளவர் என்பதால் அவர் மீது லைகா பெருமதிப்பும் முழு நம்பிக்கையும் கொண்டிருந்தது. லைகா நிறுவனத்துக்காக கதை கேட்பது, கதையை உறுதி செய்வது, நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களை முடிவு செய்வது, அவர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பது என அனைத்துப் பணிகளையும் கருணாமூர்த்தி செய்துவந்தார். அவருக்கு பானு உதவியாக இருந்தார்.

இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறதா?

dmkdmkdmknakkheeran.in - athanurchozhan : இடைத்தேர்தல் என்றாலே, ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்ற பிம்பம் அப்படியே இருக்கிறது. கடந்த மக்களவைப் பொதுத்தேர்தலின் போது நடைபெற்ற 22 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 தொகுதிகளை திமுக கைப்பற்றினாலும், 9 தொகுதிகளை ஆளுங்கட்சி கைப்பற்றி திமுக கூட்டணிக்கு தனது பலம் பறிபோய்விடவில்லை என்பதை நிரூபித்தது.
மக்களவைத் தேர்தலில் குறைவான வாக்குகளைப் பெற்ற தொகுதிகளில் கூட அதிகமான வாக்குகளைப் பெற்றே அதிமுக இந்த 9 பேரவைத் தொகுதிகளையும் கைப்பற்றியது என்பது அந்தச் சமயத்திலேயே குறிப்பாக பேசப்பட்டது. அதாவது, ஆளுங்கட்சியின் இடைத்தேர்தல் வேலைப்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்றும், திமுகவினரின் சொதப்பலுக்கு கிடைத்த தோல்வி என்றும் விமர்சிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் 2 லட்சம் முதல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, நான்கு மாத இடைவெளியில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தனித்து நடைபெற்ற தேர்தலில் வெறும் 8 ஆயிரத்து சொச்சம் வாக்குகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதாவது வெறும் நான்கு மாதங்களிலேயே இந்தச் சரிவு ஏற்பட்டது.

நாங்குநேரி , விக்கிரவாண்டி கடந்த தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்குகள் ..ஒரு அலசல்

Chozha Rajan : இடைத்தேர்தலில் திமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறதா?
2016 சட்டப்பேரவை தேர்தலில் நாங்குனேரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் 74,932 வாக்குகளையும், அதிமுக சார்பில் போட்டியிட்ட 57,617 வாக்குகளையும், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் போட்டியிட்ட சுரேஷ் அலி 14,203 வாக்குகளையும், ம.ந.கூ. சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ஜெயபாலன் 9,446 வாக்குகளையும், பாஜக சார்பில் தனித்து போட்டியிட்ட 6,609 வாக்குகளையும் பெற்றனர்.
அதாவது பொதுத்தேர்தலுடன் நடந்த தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு இது. ஆனால், இப்போது நடக்கப்போவது இடைத்தேர்தல் என்பதை கவனிக்க வேண்டும்.
அதுபோலவே, 2016 பேரவைப் பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் 63,757 வாக்குகளையும், அதிமுக வேட்பாளர் 56,845 வாக்குகளையும், பாமக சார்பில் போட்டியிட்ட அன்புமணி 41,428 வாக்குளையும், ம.ந.கூ. சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் 9,981 வாக்குகளையும் பெற்றனர். பாஜக தனித்து போட்டியிட்டு 1,291 வாக்குகளை மட்டுமே பெற்றது.
இதுவும் பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் என்பதையும், இப்போது நடக்கப்போவது இடைத்தேர்தல் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேராசிரியர் சுபவீரபாண்டியனை அவமானப்படுத்திய கலைஞர் டிவி ? ஒன்றே சொல் நன்றே சொல் ...திடீரென நிறுத்திய நிர்வாகம்

பிந்திய செய்தி : திரு ஸ்டாலின் கவனத்திற்கு இந்த செய்தி சென்று தற்போது பேராசிரியர் சுப.வீரபாண்டியனின் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் .நேரத்தில் சிறு மாற்றத்துடன் ...

கலைஞர் தொலைக்காட்சி தொடங்கிய காலத்திலிருந்து, காலை நிகழ்ச்சியான விடியலே வா பகுதியின் ஒரு பகுதியாக, நான் உரையாற்றும் 'ஒன்றே சொல் நன்றே சொல்' என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. 17.09.2007அன்று தொடங்கிய அந்த நிகழ்ச்சி 26.09.2019 அன்றுடன் நிறுத்தப்பட்டு விட்டது. என் உரை மட்டுமின்றி, விடியலே வா என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டு விட்டன என்று அறிந்தேன்.
எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஓரே நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருக்க முடியாது. அது பார்வையாளரிடையே சலிப்பை ஏற்படுத்தும். புதிய புதிய மாற்றங்கள் வந்துகொண்டே இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் இந்த நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இனி ஒவ்வொரு நாளும் அந்த நேரத்தில், மக்கள் விரும்பும் திரைப்படம் ஒளிபரப்பாகக்கூடும் என்று கூறினார்கள்.
பார்வையாளர்களுக்கு அது ஒரு நிகழ்ச்சி மட்டுமே. ஆனால் 12 ஆண்டுகள் அந்த நிகழ்ச்சியோடு தொடர்ந்து பயணித்த எனக்கு, அது வாழ்வின் ஒரு பகுதி! அந்தப் பகுதிதான் என்னை மிகப் பலருக்கு அறிமுகப்படுத்தியது. எனக்குள் இருக்கும் செய்திகளையும், சிந்தனைகளையும் நான் உலகினரோடு பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தது. நான் படிக்கும் நூல்களை, அவற்றின் சிறப்பை அனைவரோடும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்தது.
கலைஞர் தொலைக்காட்சிக்கு என்றும் நான் நன்றி உடையவனாக இருப்பேன்!
அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுவிட்ட இந்தப் பொழுதில், அந்தப் பனிரெண்டுஆண்டுப் பயணம் குறித்த ஓர் அசைபோடலே இந்தப் பதிவின் நோக்கம்.