அ.தி.மு.க vs அப்போலோ! சீறும் சசிகலா... பின்வாங்கும் பிரதாப் ரெட்டி
த
மிழக
முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ம் தேதி
அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள்
நிறைவடைந்துவிட்டன. ஆனால், இப்போதும், “அப்போலோ நிலவரம் என்ன? எப்படி
இருக்கிறார் ஜெயலலிதா? அவர் வீடு திரும்பப்போவது எப்போது?” என்ற கேள்விகள்
ஐ.சி.யூ-விலேயே இருக்கின்றன.
அப்போலோ - பொதுமக்கள் - அ.தி.மு.க
ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல் 15 நாட்கள் அவருடைய, உடல்நிலையை மையமாக வைத்து அப்போலோ தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன. அடுத்த 15 நாட்களில் அப்போலோ அரசியல்களமாக மாறித் தகித்தது. தமிழக அரசியலும் இந்திய அரசியலிலும் அப்போலோவை மையமிட்டுச் சுற்றி வந்தன. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைப்பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் வருகைக்குப் பின்னால், அவ்வளவு விஷயங்கள் ஒளிந்திருந்தன. அதன்பிறகு, காவிரிப் பிரச்னை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதும், செய்தி ஊடகங்களில், அப்போலோவின் ஒளிவட்டம் கொஞ்சம் மங்கத் தொடங்கியது.
அப்போலோ - பொதுமக்கள் - அ.தி.மு.க
ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதல் 15 நாட்கள் அவருடைய, உடல்நிலையை மையமாக வைத்து அப்போலோ தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன. அடுத்த 15 நாட்களில் அப்போலோ அரசியல்களமாக மாறித் தகித்தது. தமிழக அரசியலும் இந்திய அரசியலிலும் அப்போலோவை மையமிட்டுச் சுற்றி வந்தன. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைப்பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியின் வருகைக்குப் பின்னால், அவ்வளவு விஷயங்கள் ஒளிந்திருந்தன. அதன்பிறகு, காவிரிப் பிரச்னை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதும், செய்தி ஊடகங்களில், அப்போலோவின் ஒளிவட்டம் கொஞ்சம் மங்கத் தொடங்கியது.















